தளும்பி நிற்கும்
ப்ரியங்களின் கலயத்தைக்
கொணர்ந்தது
பிசாசுகளின் இருள்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருக்கக் கேட்டுக்கொண்டு
இக்குவனங்களில்
சேகரித்த ப்ரியங்கள் அவை
கொடுபல்லியாய் நீண்ட
நேசத்தின் கரங்கள்
உன்னை நானாகவும்
என்னை நீயாகவும்
ஆக்கத் துடித்துப்
பிணைத்துக்கொண்ட
தருணங்களில்
தள்ளாடிய கலயங்கள்
காலியாகிவிட்டன
வேறு இடங்களில்
வேறு வனங்களில்
ப்ரியங்களை
சேகரித்துக்கொண்டிருக்கின்றன
பிசாசுகள்
வடக்குவாசல் டிசம்பர் 2008
இக்குவனம்-கரும்புத்தோட்டம்
6 comments:
நல்லா இருக்கு. 'இக்குவனம்' - இதுதான் முதல்முறை கேள்விப்படுவது; நல்லவேளை நீங்களே பொருள் தந்துவிட்டீர்கள் :)
அனுஜன்யா
சிகப்பு நிறத்தை தவரிக்கவும். தளத்தின் நிறத்தினால் சிகப்பு எழுத்துகள் படிப்பதில் தடைஏற்படுத்துகிறது. தலைப்பின் நிறம் அல்லது வெள்ளை நிறம் சிறப்பாக இருக்கும்
நல்லாயிருக்கு. ஆனால் சிரம்பட்டு படிக்கிறேன்ன்
நிறத்தை மாற்றவும்.
வாழ்த்துக்கள்
இக்குவனம் புதுசு எனக்கு
/இக்குவனம்/
முதல் முறையாக கேள்விப்படுகிறேன்!
கொடுபல்லியும்,பிசாசுகளின் இருளும் சிறிது சுவையைக் குறைப்பதாகத் தோன்றுகிறது...(எனக்கு)
இக்குவனம்....ஏதாவது தொடர்பான சுட்டி தர இயலுமா? நன்றி.
Post a Comment