தளும்பி நிற்கும்
ப்ரியங்களின் கலயத்தைக்
கொணர்ந்தது
பிசாசுகளின் இருள்
நீ நீயாகவும்
நான் நானாகவும்
இருக்கக் கேட்டுக்கொண்டு
இக்குவனங்களில்
சேகரித்த ப்ரியங்கள் அவை
கொடுபல்லியாய் நீண்ட
நேசத்தின் கரங்கள்
உன்னை நானாகவும்
என்னை நீயாகவும்
ஆக்கத் துடித்துப்
பிணைத்துக்கொண்ட
தருணங்களில்
தள்ளாடிய கலயங்கள்
காலியாகிவிட்டன
வேறு இடங்களில்
வேறு வனங்களில்
ப்ரியங்களை
சேகரித்துக்கொண்டிருக்கின்றன
பிசாசுகள்
வடக்குவாசல் டிசம்பர் 2008
இக்குவனம்-கரும்புத்தோட்டம்
Monday, January 19, 2009
Friday, January 16, 2009
ஒரு தகவல்
அன்புள்ள வலைப்பதிவர்களே
வணக்கம்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் சென்னை
புத்தகக் கண்காட்சியில் என் முதல் கவிதைத் தொகுப்பு இருக்கிறது.
வெளியிட்டுள்ள பதிப்பகம்: உயிர்மை
புத்தகத்தின் பெயர்
நாளை பிறந்து இன்று வந்தவள்
என் மின்னஞ்சல் முகவரி
mathangihere@gmail.com
நன்றி
மாதங்கி
வணக்கம்.
இப்போது நடந்துகொண்டிருக்கும் சென்னை
புத்தகக் கண்காட்சியில் என் முதல் கவிதைத் தொகுப்பு இருக்கிறது.
வெளியிட்டுள்ள பதிப்பகம்: உயிர்மை
புத்தகத்தின் பெயர்
நாளை பிறந்து இன்று வந்தவள்
என் மின்னஞ்சல் முகவரி
mathangihere@gmail.com
நன்றி
மாதங்கி
Wednesday, January 14, 2009
மலைகளின் பறத்தல்
முன்னொரு நாளில்
தோன்றியபோதெல்லாம்
இறக்கைகளை விரித்துக்கொண்டு
பறந்து கொண்டிருந்த மலைகளைக்
கெஞ்சிக் கேட்டேன்
பறப்பதை நிறுத்திவிடுங்களேன்
நிமித்த காரணம் சொல்லலாமே
அவை கேட்டன
எங்கள் குழந்தைகள்
தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள்
எங்களுக்கே சோறு
பலசமயங்களில்
இறங்குவதில்லை
சில பறவைகள்
உங்களைக் கண்டு
பறத்தலையே மறக்கத் துவங்கிவிட்டன
எங்கள் குழந்தைகள்
வெட்டவெளிகளில்
விளையாட மறுக்கின்றனர்
பயிர்த்தொழில் பாதிப்படைகிறது
எங்கள் நிம்மதி
உங்களால் போய்க்கொண்டிருக்கிறது
தங்களால் யாரும்
உயிரிழக்காத போதும்
எங்களுக்காக
தாமே தம் இறக்கைகளை
இற்றுப்போகசெய்து
பறத்தலை நிறுத்திவிட்டன மலைகள்
இன்று
யுத்த பேரிகைகளும்
போர்ச்சாவுகளும்
உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்
மலைகள் சிரிக்குமோ அழுமோ
வடக்குவாசல் டிசம்பர் 2008
தோன்றியபோதெல்லாம்
இறக்கைகளை விரித்துக்கொண்டு
பறந்து கொண்டிருந்த மலைகளைக்
கெஞ்சிக் கேட்டேன்
பறப்பதை நிறுத்திவிடுங்களேன்
நிமித்த காரணம் சொல்லலாமே
அவை கேட்டன
எங்கள் குழந்தைகள்
தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள்
எங்களுக்கே சோறு
பலசமயங்களில்
இறங்குவதில்லை
சில பறவைகள்
உங்களைக் கண்டு
பறத்தலையே மறக்கத் துவங்கிவிட்டன
எங்கள் குழந்தைகள்
வெட்டவெளிகளில்
விளையாட மறுக்கின்றனர்
பயிர்த்தொழில் பாதிப்படைகிறது
எங்கள் நிம்மதி
உங்களால் போய்க்கொண்டிருக்கிறது
தங்களால் யாரும்
உயிரிழக்காத போதும்
எங்களுக்காக
தாமே தம் இறக்கைகளை
இற்றுப்போகசெய்து
பறத்தலை நிறுத்திவிட்டன மலைகள்
இன்று
யுத்த பேரிகைகளும்
போர்ச்சாவுகளும்
உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்
மலைகள் சிரிக்குமோ அழுமோ
வடக்குவாசல் டிசம்பர் 2008
Tuesday, January 13, 2009
சன்னல் இல்லாத வீடு
எலியட்ஸ் பீச் மணலில்
மகனுடன் கோட்டை கட்டும்போது
அருகிலேயே விரலால்
வரைந்தாள் ஒரு சிறுமி,
பக்கத்தில் தங்கை.
வீடு வரைகிறாயா?
ஓம்.
அம்மா அதுக்கு கதவு சன்னல் எதுவுமே இல்லை
இருந்தால் திறந்து சுட்டுவிடுவார்கள்
சிறுமி சொனாள்.
அவள் தங்கை சொன்னாள்
சன்னல் கதவு இல்லாவிட்டால்
தெருவில் செத்துப்போன
அப்பாவைப் பார்த்து
எப்படிக் கூட்டிவார ஏலும்?
மகனுடன் கோட்டை கட்டும்போது
அருகிலேயே விரலால்
வரைந்தாள் ஒரு சிறுமி,
பக்கத்தில் தங்கை.
வீடு வரைகிறாயா?
ஓம்.
அம்மா அதுக்கு கதவு சன்னல் எதுவுமே இல்லை
இருந்தால் திறந்து சுட்டுவிடுவார்கள்
சிறுமி சொனாள்.
அவள் தங்கை சொன்னாள்
சன்னல் கதவு இல்லாவிட்டால்
தெருவில் செத்துப்போன
அப்பாவைப் பார்த்து
எப்படிக் கூட்டிவார ஏலும்?
Subscribe to:
Posts (Atom)