Monday, February 25, 2008

இசையும் நடிப்பும்

இசை நிகழ்ச்சிக்குத்
துள்ளி வந்தாள்
இசை கற்றுக்கொள்ளும்
ஏழு வயது மகள்;

மூன்று மணி நேரம்
முழுதாய் முடிந்தபின்னர்
விரும்பும் பாட்டொன்றைச்
சீட்டெழுதிக் கேட்டாள்

நானும் பெரியவளானால்
நிகழ்ச்சி செய்து
குழந்தைகளின்
சீட்டுக்கெல்லாம் பாடுவேன்
என்றாள் என்னிடம்.

தொடர்ந்து பலர் கொடுக்க
அவரும் பாடினார்;

நேரம் பதினொன்றாயிற்று
தூங்கிப்போனாள்.
அவள் கேட்டபாட்டைப்
பாடகர் பாடவேயில்லை

மறுநாள் காலை,
அடடா, பாடினாரா
கேட்டாள்

சீட்டுக் கொடுத்த
சின்னப்பொண்ணுக்குப்
பாடாமல்போவாரா-
நீதான்தூங்கிட்ட கண்ணு
என்றேன்.

Saturday, February 09, 2008

உங்களுக்கு வயதாகிவிட்டது

டப்பாவிலிருந்து

எங்களைத் தூக்கி எறிந்தார்கள்.

ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால்

எலும்புமுறிவு இன்றி

கைக்கோர்த்தவாறு

இறங்கி அமர்ந்தோம்

புள்ளிகளாய்

எங்களைப் பிரித்துக்கொண்டு,

எங்கள் இடைவெளிகளை

நாங்களே தீர்மானித்தோம்

கோடுகளும் வளைவுகளுமாய்

எங்கள் உடல்களைநீட்டிக்கொண்டோம்

வளைத்துக்கொண்டோம்

கைகளால் இணைத்துக்கொண்டோம்

தள்ளாதவர்களைத் தூக்கிக்கொண்டோம்

யாவரும் வியக்கும் வண்ணம்

நாங்கள் பறக்கத் துவங்கினோம்

எங்களுடன் பறந்து வந்தது

நாங்கள் வளர்த்த

அவர்கள் மகிழ்ச்சியும்