Friday, May 24, 2013

விருந்தாளிகள் சென்றுவிட்டனர்



சட்டென்று அமைதியாகின்றன

கண்ணாடி அலமாரியில் உள்ள பொம்மைகள்

இன்னும் கொஞ்சம் அவர்கள் இருந்திருக்கலாம்

என்று மட்டும் சொல்லிவிட்டு




ஆமோதித்தவாறு

புன்னகைத்துக்கொள்கின்றன

தொட்டிகளில் அமர்ந்திருந்த

கறிவேப்பிலை இலைகளும்

மஞ்சள் பூக்களும்



போயி என்று

சொல்லிவிட்டு

வீட்டுவாயிலில்

நின்றுகொண்டிருக்கும் குழந்தை

உள்ளே வந்தவுடன்

ஒரு கணம் திருதிருவென்று விழிக்கிறது




பிறகு சட்டென்று

சோபாவில்

அவர்கள்

உட்கார்ந்திருந்த இடத்தில்

 அமர்கிறது



பின் திருப்தியுடன்

எழுந்து தன் அடுத்த

நடவடிக்கையைத் தொடர்கிறது




நன்றி: மௌனம் சிற்றிதழ்