Thursday, June 19, 2008

ஜுரோங் பறவைப்பூங்காவில் பொதுக்கூட்டம்

அன்னம் எழுந்தது
குயிலின் பாட்டுத்தான் பாட்டு,
வானம்பாடி
எங்கோ வானத்தில் பாடுவது
யாருக்குப் புரிகிறது?

புறா சிலிர்த்தது
வானம்பாடியின் கவிதை உயிர்விதை

குயில்நல்லதொருபாடகி
அவ்வளவே

கூக்குரல்கள் நெருக்க
தீப்பொறி பறந்தது

குயிலும் வானம்பாடியும்
பேசிக்கொண்டே
தண்ணீர்குடிக்கப் போனதை
யாரும்கவனிக்கவில்லை



யுகமாயினி 2008 மே


Saturday, June 14, 2008

அனைவருக்கும் நன்றி

என் முதல் கவிதை நூல் (நாளை பிறந்து இன்று வந்தவள் ) வெளியீடு 1.6.2008 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நல்லபடியாக நடந்தது.

வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும்,

வர இயலாமல் போனாலும் வாழ்த்து தெரிவித்த உள்ளங்களுக்கும், அறிவிப்பை வெளியிட்ட இணையதளங்கள்,
சிங்கப்பூர் தமிழ் முரசு ஆகியவற்றிற்கும்,

நூல் வெளியீட்டு நிகழ்வை படம்பிடித்து
விவரங்களுடன் வெளியிட்ட
தினமலர், தினமணி நாளிதழ்களுக்கும்

என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்
அன்புடன்
மாதங்கி