Thursday, April 03, 2008

தொடரும் புன்னகை

விருந்தினர்
தலை
மறைந்த பின்பும்
வழியனுப்ப வந்த குழந்தை
வாயிலில் நின்று
புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.

போதும் சிரித்தது
அவர்கள் போய்விட்டார்கள்
இவர்கள் சொன்னபோது
சுவிச்சு எங்கே
என்று கேட்டாள்.

2 comments:

துளசி கோபால் said...

nice:-))))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அருமை! அருமை!!

பிளாஸ்டிக் சிரிப்பு சிரிக்கச் சொன்ன பெற்றோர்க்கு சரியான சவுக்கடி.

அன்புடன்,
ஜோதிபாரதி.