Saturday, November 05, 2005

ஒரு காலை வேளையில்

காலை வேளையில்
காப்பி போட்டு
குழந்தைகளை எழுப்பி
குளிக்க வைத்து
கருத்தாய்ச் செய்த சிற்றுண்டியை
சிரிப்புக் கதையுடன் ஊட்டி
தானும் உண்டு
சீருடை அணிவித்து
பள்ளிக்கு அனுப்பி
இரவு ஷிப்டின் அயர்வுடன்
இல்லம் வந்த வாழ்க்கைத் துணைக்கு
வரவேற்பு கொடுத்து
கண்ணயரச் சொல்லிவிட்டு
கடமைக்குக் கிளம்புகிறான்
கண்ணியம் மிக்க
கணவன் ஒருவன்.

2 comments:

வாசகன் said...

Enna maadangi irau shiftunnu nalla thmizhudan aangilaththai kalakkureengale irau velainnu ezhuda koodatha....

மாதங்கி said...

ஜமாலுதீன் தங்கள் கருத்தை கவனத்தில் கொண்டேன். பின்னூட்டமிட்டதற்கு நன்றி. என் மற்ற படைப்புகளையும் படித்து தாங்கள் கருத்து தெரிவிக்கலாம்.