சரித்திரத்தின் முதல் ஔவை
சங்ககால ஔவை மூவேந்தரும்
பெரியராய்க் கருதிப் போற்றிட
புறம்அகம் நற்றிணை குறுந்தொகை
அரிய பாடல்களால் சங்கத்தில்
அங்கம் வகித்த பாடினி
தெரிமுகமும் தேவையோ கிமுவில்
தோன்றிய தென்ற லுக்கு
தாமம் தரித்த ஆயுதங்களை
தாமத்துடன் நிறுத்தி வைத்து
யாமே என்று இருமாப்புடன்
எண்ணி இருந்தான் தொண்டைமான்
தொண்டைமானின் செருக்கை அங்கதத்தால்
துண்டாக்கியவர் மழவரின் தூதரானார்
அண்டத்தில் இணக்கம் உண்டானால்
அகிலத்தில் அமைதிஉரு வாகுமென்ற
திண்ணமுடன் பேச்சு தெவிட்டாத
தமிழ்ப்பாட்டு அவர்தம் மூச்சு
வண்ணம் கொண்ட அரியகனி
வெகுமதிக்கு அதியனின் வெகுமதி
வம்பிற்கு வாய்ப்பூட்டினாய்- உன்னை
நம்பியோருக்கும் நல்ல வாய்ப்பு ஊட்டினாய்
நலமறிய நீ நினைத்ததில்லை
மக்களின்நலம் அறியவே நடையாய் நடந்தாய்
நன்னிலை நல்கிய பன்னிரெண்டாம்
நூற்றாண்டின் நலமிகு ஔவையே
மன்னுலகில் யோகத்தில் நிபுணை
மறைதிரு சமயகால ஔவை
பின்னையவள் துதிபாடி அற்புதமாய்
பொன்முடிப்பு இற்றதன் மாயமென்ன
மன்னவன்வியக் கநான்குகோடிபண் பாடிஇரவு
முழுதும் பண்பழகிய பண்பழகி
ஒருகாலில் நாலிலைப்பந் தலடிஎன
உன்னைச் சோதிக்க புதிர்போட
திருமுகம் மலர ஆண்கவியிடம்
சருக்காமல் ஆரையடா சொன்னாய்
சுருக்கமாய் விடுகவிக்கு விடைகூறி
சங்கைத் தீர்த்த அன்பருளே
அருந்தமிழில் அசதிக் கோவையும்
அழகுபந்தன் அந்தாதியும் தந்திட்டாய்
வரும் இன்னலைத்
தீர்க்கவந்தமின்னலே
அன்பருளே
அன்பர் உளே உறையும்
இறைவன் ஒருவனுக்கே
தலைவணங்கி நீ பாடிய
அகவலால்சேரமானுக்கு முன்பே
வேழமுகத்தோனின் ஒருகையால்
கைலாயத்தைமுதலில்
அடைந்ததத்துவஞானியே
தமிழ்பால் கொண்டமுனைப்பால் தன்பால் அன்பால் கட்டுண்டமானிடர்பால் கொண்டதவிப்பால் உருவானமுப்பால் தன்பால் வீட்டுநெறிப்பால் திருவருட்பால் என ஞானப்பால் அருளியஔவைக்குறளைப் படித்தால் புருவங்கள்உயரும் திகைப்பால் யோகத்தின்பால் பெண்களின்அறிவைக் கண்ட களிப்பால் வந்த வியப்பால்
ஒருவனையே வணங்கி
இருவகை அறத்தையே உரைத்து
முக்குற்றம் நீங்க வழி நடத்தி
நானிலம் போற்றஐந்திலக்கணம் அமைய கவிபாடி
அறுவர் உடன் பிறந்த ஐயயே
எழுபிறப்பையும் பாடியுள்ளாய்
எண்வகை யோகங்களை ஏற்றிவைத்தாய்
நவரசம் பொங்க நற்றமிழில் பாடி
பத்துகுற்றம் நீக்கி
பத்தழகு மிளிர பாட்டெழுதி
நூற்றுக்கு ஒருவரேஅவையில் இருக்கத்தக்கவர்
ஆயிரத்தில் ஒருவரேபுலமையுடையவர்
பத்தாயிரத்தில் ஒருவரே வாக்குவன்மையும்பெற்றிருப்பவர் கொடைவள்ளலோகோடியில் ஒருவரே என்று
கம்பரையும்
புகழேந்தியையும்
ஒட்டக்கூத்தரையும்
செயங்கொண்டாரையும்
மன்னரையும்
வைத்துக்கொண்டே
உன்னைத் தவிர வேறு யாரால் கூற இயலும்?
பதியனாய்ப்பிள்ளைகள் மனதில்பதிந்தவர்பதினாறாம் நூற்றாண்டின்புதிய ஔவை
நாவாய்போல் நயமிகு பாக்களைக் நன்றாய்க் கரைசேர்த்தே மக்களிடம்நாவாயை ஆளவும் வேண்டினாய்
தையல் சொல் கேளேல்
தையல் சொல் கேட்காதே என்று தாங்கள்கூறவில்லை
கேள் ஏல் என்றீர்கள்ஏல் என்றால் ஏற்றுக்கொள்வதுஎன்ற நீங்கள் சொல்லியதைநாங்கள் புரிந்துகொள்கிறோம்
வித்தை நன்றாய்விதைத்திட்டால்
வித்தை பலவும்கற்றிடலாம் என்றேஆத்திச்சூடி
கொன்றைவேந்தன்
மூதுரை
நல்வழி என்று நல்வழிகாட்டியநாயகியே
ஆழ அமுக்கி முகக்கினும்
ஆழ்கடல் நீர் நாழி முகவாது நானாழி
என்று நீங்கள் கூறியதை
நாங்கள் உலகுக்குஅறிவிக்காததால்
இன்று இதே இயற்பியல்தத்துவத்தை
பின்னாளில்
வேறொருவர் கண்டுபிடித்ததாகப்
படித்துக்கொண்டு வருகிறோம்
ஔவையேஎங்களைமன்னித்துவிடுக
நீ குறித்ததசம எண்களையும்நாங்கள் விட்டுவிட்டோம்வேறொருவருக்குவிட்டுவிட்டோம்
இருக்கையைத் தேடாமல்இருகைவீசிநடைபயின்றாய்
உடலையும்
உள்ளத்தையும்
ஊரையும் காக்க
உன் கருத்துக்களைக்
காதுகொடுத்துகேட்டாலே போதும்
கேளுங்கள் எப்போதும்.
ஔவைஎன்றபெயரில்ஒவ்வொரு காலகட்டத்திலும்எத்துணைஔவையர்
அத்தனைஔவையருக்கும்
மொத்தமாய்வணக்கங்கள்
Thursday, August 31, 2006
வெண்பா
கரணம் துணங்கை கழல்நிலை பாவை
குரவை உவகை கபாலம்- கருங்கூத்தாம்
ஈர்த்திடும் கூத்துக்கள் ஏற்றம் அடைந்திடச்
சீர்தூக்கிச் செய்க சிறப்பு
அமுதசுரபி 2006
குரவை உவகை கபாலம்- கருங்கூத்தாம்
ஈர்த்திடும் கூத்துக்கள் ஏற்றம் அடைந்திடச்
சீர்தூக்கிச் செய்க சிறப்பு
அமுதசுரபி 2006
Monday, August 28, 2006
பலி - நாடகம்
திரை விலகுகிறது
இடம்: பேரரசி கைகேயி பெண்கள் கலாசாலை
பொழுது: பகல் பொழுது.
பாத்திரங்கள்:
பேரரசி கைகேயி, கலாசாலை தலைமையாசிரியர் மற்றும் மேலாண்மைக்குழுவினர்.
காட்சி ஒன்று
கலாசாலையின் நடவடிக்கைகள் முழுதும் ஆராய்ந்து முடித்து திருப்தியுறுகிறாள் கைகேயி.
கைகேயி: "பெண்களுக்கு வாள், வேல்பயிற்சி, தேரோட்டுதல் முதலிய வீர கலைகளை கற்பிக்கும் இக்கலைகோவிலுக்கு பெயரில் மட்டும் மாற்றம் தேவை; இராமன் என்று மாற்றி விடுங்கள்"
மேலாண்மைக் குழுவினர்: "அப்படியே செய்கிறோம் தாயே"
கைகேயி: "நல்லது, மான்யங்கள் தொடர்ந்து வரும்"
கம்பீரத்துடன் தன் ரதத்தில் ஏறி புறப்படுகிறாள் கேகயன் தனயை.
காட்சி இரண்டு
இடம்: அரண்மனை அந்தப்புரம்
பொழுது : பிற்பகல்பாத்திரங்கள்: கைகேயி, மந்தரை
கைகேயியின் அந்தபுரத்தில் அந்தரங்க அறை வாயிலில் மந்தரை நின்றுகொண்டிருக்கிறாள்.
அந்தபுர வாயிலில் தயாராக காத்துக்கொண்டிருந்த சாரதியிடன் ரதத்தை ஒப்படைத்துவிட்டு கைகேயி வருகிறாள்.
கைகேயி: "இப்படியே எத்தனை நேரமாக நின்று கொண்டிருக்கிறாய்; அப்படி என்ன தலை போகிற செய்தி, உன் உடம்பை ஏன் வருத்திக்கொள்கிறாய் மந்தரை?'
மந்தரை: {பதட்டத்துடன்} "தலை போகிற செய்திதான் கண்ணே"
அந்தரங்க அறைக் கதவு சார்த்தப்படுகிறது.கைகேயியும் மந்தரையும் தனிமையில் இருக்கிறார்கள்.
பொன்னாலாகிய அழகிய இரு பதுமைகள் விளக்கு ஏந்தியவாறு நிற்க, மந்திரை உதவியுடன் விளக்குகளை ஏற்றிவிட்டு, வேலைப்பாடுகள் மிகுந்த அழகிய இருக்கையில் அமர்கிறாள்.
கைகேயி: "இப்போது சொல் மந்திரை"
மந்தரை: "கண்மணி, இராமனுக்கு நாளை பட்டாபிஷேகமாம்"
கைகேயி: "மந்தரை என்ன உளறுகிறாய்?"
மந்தரை: "உண்மைதான் மகளே, திடீரென்று இன்று மதியம் அரசவையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது"
கைகேயி: "தசரத சக்ரவர்த்தி என்னைக் கலந்தாலோசிக்காமல் எந்த புதிய அரசாங்க காரியம் நடந்ததில்லையே"
மந்தரை: "கடந்த ஒரு மாதகாலமாக உன்னிடம், மன்னனிடன் சொல்லிவிடு என்று நச்சரித்து கொண்டே இருந்தேன்; உடனே அவசர ஆலோசனை செய்து இந்த வைபவத்தை நிறுத்து".
கைகேயி: "இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக் கூடாது என்பதற்காகத்தானே நல்லதோர் சந்தர்ப்பத்தில் மன்னரிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று காத்திருந்தேன், மந்தரை;"
மந்தரை: "சரயூ நதிக்கரை சோதிடர் கூறிய செய்திகளை மீண்டும் நினைவு கூரவா மகளே?"
கைகேயி: "வேண்டாம், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; குழந்தை இராமனின் ஜாதகம் மிக அற்புதமானது; தெய்வீகமுடையது. சித்திரை மாதம் நவமி திதி, புனர்வஸ¤ நட்சத்திரம். சூரியன், குரு, சுக்ரன், அங்காரகன், சனீஸ்வரன் என்று ஐந்து கிரகங்கள் உச்சம் கடகத்தில் சந்திரன் சுவட்சேத்திரம். ஒரு கிரகம் உச்சத்தில் இருக்கையில் பிறந்தவன் எல்லா ஆபத்துகளையும் அழிக்கிறான்; இரண்டு கிரகம் உச்சத்தில் பிறந்தவன் சிற்றரசன்; மூன்று கிரகம் உச்சத்தில் பிறந்தவன் அரசன்; ஐந்து கிரகம் உச்சத்தில் இருக்கையில் பிறப்பது அபூர்வம். சக்ரவர்த்திகளுக்குகெல்லாம் மேற்பட்டவன்; உலகநாயகன்; உலகிலேயே முதன்மையானவன்; அனைவரது அன்பையும் பெற்றவன், பொறுமைசாலி, தேவர்களும் போற்றும் இயல்பினன், அரிய பெரிய சாதனைகள் படைக்க அவதரித்தவன்,......."..
மந்தரை: "எல்லாமே உண்மை; இதையே எத்தனை முறை சொன்னாலும் உனக்குத் திகட்டாது மகளே; ஆனால் இறுதியில் அவர் விடுத்த எச்சரிக்கை?"
கைகேயி: "ஆம், மந்தரை இப்போது அயோத்தி மாநகரத்திற்கு நேரம் சரியில்லை; அயோத்தியின் அரசருக்கு உயிருக்கு ஆபத்து; அதை இறைவன் அருளால் வென்றாலும் இன்னும் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் மன்னராக இருப்பவர் யாராக இருந்தாலும் துறவியாகத் தான் இருப்பார்; என் மனதுக்கினிய மன்னரை லௌகீகபாதையிலிருந்து திருப்பி நம் ஜனக மன்னரைப் போல் ராஜரிஷியாக மாற்றவேண்டும். விதியை மதியால் வென்று விடலாம் என்று நினைத்தேனே"
மந்தரை: "இப்போது ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை எப்படியாவது இந்த வைபவத்தை நிறுத்த வேண்டும்".
கைகேயி பதில் கூறாது தன் அறையில் வரிசையாக ஓவியரால் வரையப்பட்ட இராமனின் சிறுவயது லீலைகள், சாதனைகள் ஓவியமாக வரையப்பட்டிருந்ததைக் கண்களால் பருகினாள் ; அடுத்து தானே வரைந்த ஓவியச் சுருளை ரகசியப் பேழையிலிருந்து எடுத்துப் பார்த்தாள்
இதோ ஸ்ரீராமன் பட்டாபிஷேக கோலத்தில். அருமை மகள் ஜானகியுடன்; அவளே எழுதியது;
கைகேயி: "என் கனவு நனவாக இன்னும் பல ருதுக்கள் உள்ளன மந்தரா"
கைகேயியை பரிவுடன் ஏறிட்டாள் மந்தரை.
கைகேயி: "மந்தரா நான் சிறிது நேரம் த்யானம் செய்கிறேன்; நீ இங்கேயே இரு".
கைகேயி அந்தரங்க அறையின் மறுபக்கத்தில் மறைவாக சென்று அமர்கிறாள்.
மந்தரைக்கு இருப்பு கொள்ளவில்லை; அங்குமிங்கும் நடக்கிறாள்.
தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள்:
" மன்னர் மேல் அளவு கடந்த அன்பு இந்த கைகேயிக்கு; குடும்ப வாழ்வோ, குழந்தை வளர்ப்போ, ஆன்மீகமோ, தேச பரிபாலனமோ, அரசியல் சதுரங்கமோ போரில் வீரமோ கைகேயிக்கு நிகரில்லை. தலைசிறந்து விளங்கும் இந்த குழந்தைக்கு எதையும் தாங்கும் இருதயத்தையும் நீண்ட ஆயுளையும் நீ தரவேண்டும், இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி வேண்டிக்கொள்கிறாள்.
"இந்தச் சிறுவன் இராமனுக்கு பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன. சரயூ நதிக்கரை சோதிடர், ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். அயோத்தியின் அரசராக இருப்பவருக்கு பெரிய கண்டம் இருக்கிறது. ஒரு துறவிதான் பதினான்கு வருடங்கள் அயோத்தியை ஆளப்போகிறார். இராமன் இப்பூவுலகையே ஆளுவான். அதில் எந்த வித ஐயமில்லை ஆனால் அதற்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
கடவுளே யார் அந்தத் துறவி? வசிஷ்டரா? அவர் எந்த அரசாங்க காரியத்திலும் தலையிடுவதில்லையே; ஒரு வேளை சுமந்திரரா? இல்லை திடீரென்று விஸ்வாமித்திரர் ராமனையும் இலட்சுமணனையும் காட்டுக்கு என்னுடன் அனுப்பு என்று சிறு குழந்தைகளை கூட்டிச் சென்றது போல், வேறு ஏதேனும் துறவி தீடீரென்று
எனக்கு உன் ராஜ்ஜியத்தைத் தா நான்தான் இனி அயோத்தியின் அரசன் என்று தானம் கேட்பார்களோ.சரி, இந்த அரசருக்கு அரண்மனை ஜோதிடரோ, இல்லை அடிக்கடி ஆசீர்வதிக்கும் எல்லாம் அறிந்த துறவிகளோ ஏதும் சொல்லமாட்டார்களா? விதி அவர்கள் கண்ணை மறைத்துவிட்டதா? தலை சுற்றியது மந்தரைக்கு.
கைகேயி தெளிவுடன் வந்து தன் இருக்கையில் அமர்கிறாள். மந்தரை ஒரு காலை ஒருக்களித்தவாறு தன் கம்பளி ஆசனத்தில் அமர்ந்துகொள்கிறாள்.
கைகேயி: "மந்தரை, சம்பாசுர யுத்தத்தில் நான் செய்திட்ட உதவிக்கு மன்னர் எனக்கு இரு வரங்களை அளித்தார். நினைவிருக்கிறதா?
மந்தரை: "இருக்கிறது தாயே ஆனால் நீதானே எனக்கு எந்த குறையுமில்லை; அதனால் வரங்கள் இப்போது தேவையில்லை என்று கூறிவிட்டாயே".
கைகேயி: "ஆம் மந்தரை; இப்போது என் மகன் இராமனைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக நான் அந்த வரங்களை அளிக்குமாறு மன்னரிடம் வேண்டப்போகிறேன்;
"ஒன்று- எனக்கு முடிசூட்டி நான் பேரரசியாக்கிவிடவேண்டும். அப்போது அரசருக்கு உயிர்பலி என்பதால் நான் ஜோதிடர் கூற்றுப்படி இறந்துவிடுவேன்.இரண்டு- ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குப் போகவேண்டும். ஆரண்யத்தில் அரசனாகவும் இருப்பான். தசரதரும் அவரின் உயிருக்கு உயிரான மனைவியாக நான் இறந்துவிடுவதால் மனதளவில் துறவறம் பூண்டு விடுவார். இராமன் வரும்வரை அவரே ஆளட்டும். என்ன சொல்கிறாய் மந்தரை?".
மந்தரை: "இரண்டாவது வரம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏனெனில் உன் முதல் வரத்தால் நீயே மன்னரின் உயிருக்கு உலை வைத்துவிடுவாய்; உனக்கோ இராமனுக்கோ உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் உயிரைத் துறப்பார் மன்னர்; நாட்டில் குழப்பம் ஏற்படும். இராமனுக்கு உடனே முடிசூட்டிவிடுவார்கள். அவன் துறவு வாழ்க்கை வாழ்வான். இது சரி வராது வரத்தை மாற்று ; நீ பேரரசியாக ஆனாலும் பின்விளவுகளை நீ எதிர்பார்த்தபடி நடக்காது".
கைகேயி: "சரி அப்போது இப்படி வைத்துக்கொள்கிறேன்; பரதன் நாட்டை ஆள வேண்டும்; இராமன் காட்டிற்கு போக வேண்டும்".
ஆசனத்திலிருந்து மந்தரை திடுக்கிட்டு எழுந்துகொள்கிறாள்.
மந்தரை: "கைகேயி, உனக்கென்ன பைத்தியமா. பரதனின் உயிரை பணயம் வைக்கிறாயே"
கைகேயி: "ஆம் பைத்தியம்தான் மந்தரை; என் மூத்த மகன் இராமன் தீர்காயுளோடு இருக்கவேண்டும். அவனது பிறப்பின் குறிக்கோளை வருங்காலத்தில் நிறைவேற்ற வேண்டும். பூவுலகில் அநீதி பெருகி அழிந்துவிடாதிருக்க என்றால் என் இளைய மகனை பலி கொடுக்கத்தான் வேண்டும்"
.
மந்தரை: "கைகேயி! அப்பாவி பரதன் உயிரை பணயம் வைக்கிறாயே உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா?. பெற்ற மகனை பாழும் கிணற்றில் தள்ளுகிறாய்"
கைகேயி: "பெற்ற மகனைக் காட்டிலும் எனக்கு உற்ற மகன் இராமன் என்பதை உலகே அறியும் மந்திரை".
மந்தரை: "தெரியுமடி என் கண்ணே".
கைகேயி: "இதுதான் சரியான முடிவு மந்திரை இல்லையென்றால் இராமன் காட்டுக்கு போனால் அடுத்து இருப்பவரின் மூத்தவன், இலக்குவன், அவனே முடிசூடத்தகுந்தவன் என்ற வந்துவிடக்கூடாது; அந்தக்குழந்தையும் தீர்காயுளோடு இருக்க வேண்டும்".
மந்தரை: "நீ இராமனுக்காக உயிரையும் கொடுப்பாய் என்று நான் அறிவேன் ; ஆனால் உன் உயிரினும் மேலான உன் குழந்தையின் உயிரையும் பறித்துக்கொடுப்பாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை; அயோத்திக்கு உன்னுடன் வந்ததுமுதல் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உன் புத்திர பாசத்தை எந்த எல்லையைத் தொடும் என்பதை இன்று அறிகிறேன்".
கைகேயி: "மந்தரை நேர அவகாசம் குறைவாக இருக்கிறது; விரைவில் அரசரை இங்கு வரவழைத்து வரங்களைக் கேட்டுவிடவேண்டும்".
மந்தரை: "கைகேயி உலகில் எந்தத் தாயும் செய்யத் துணியாத தியாகத்தை செய்யப்போகிறாய். ஆனால் உன்னை வளர்த்த அன்னை என்ற முறையில் சொல்கிறேன். உன் தியாகத்தை உலகம் மெச்சாது".
கைகேயி: "மெச்ச வேண்டாம்"
மந்தரை: "உன்னைத் தூற்றும்"
கைகேயி: "தூற்றட்டும்".
மந்தரை: "சான்று கூற சரயூநதிக்கரை ஜோதிடர் இல்லை; பின் விளைவுகளை எண்ணி நதியில் சங்கமமாகி விட்டார்".
கைகேயி: "சாட்சி தேவையில்லை"
மந்தரை: "நானே போய் ஜோதிடர் கூற்றை மன்னரிடம் உன்னை மீறிச் சொல்லிவிட்டால்?"
கைகேயி: "என் மணாளர் உடனே உயிர் துறப்பார்".
மந்தரை: "சுயநலத்துடன் உன் புதல்வனை அரசனாக்கினாய்; சாமர்த்தியமாக வரங்களை தக்க சமயத்தில் பயன்படுத்தினாய் என்று உலகம் பழி சுமத்தும்".
கைகேயி: "பழிசொல்லட்டும்; மந்தரை: "நீ இதுவரை இராமன் இராமன் என்று கொட்டிய பாசம் பொய் என்று உன் தாய்ப்பாசத்திற்கு மாசு கற்பிக்கும்".
கைகேயி: "கற்பிக்கட்டுமே; நான் அஞ்சா நெஞ்சத்தினள் மந்தரை; முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்".
மந்தரை: "கணவனின் அன்பை தவறாகப் பயன் படுத்தினாள் என்றும், கணவனுக்கு இவள் சதி செய்தாலும் செய்வாள் என்று சொல்லும் ".
கைகேயி: "சொல்லட்டுமே;
மந்தரை: "பதினான்கு ஆண்டுகள் கழித்து இராமன் அரசனானபிறகும் கூட இந்த உலகம் உன் தியாகத்தை அறியாது தூற்றுவதை நிறுத்தாது".
கைகேயி: "நிறுத்தவேண்டாம்; என் ஆயுள் முழுக்க அத்தனை தூற்றுமொழிகளையும் கேட்கத் தயாராக உள்ளேன்".
மந்தரை கண்களில் கண்ணீர் பெருகுகிறது; துடைத்துக்கொள்கிறாள்.
கைகேயி: "வைரநெஞ்சம் கொண்ட நீயா அழுகிறாய் மந்தரை?"
மந்தரை: "நீதான் தீரநெஞ்சுடையவள் கண்ணே; அதுதான் துணிவுடன் முடிவுகள் எடுக்கிறாய்""இந்த யுகமட்டுமல்ல கைகேயி, அடுத்துவரும் துவாபர யுகம், கலியுகம் எல்லாம் உன்னைக் கொடியவள், சூனியக்காரி, பாபி என்று சொல்லும். சின்னக்குழந்தைக்கூட உன்னைப் பொல்லாதவள் என்று சொல்லும்".
கைகேயி: " என் மீது கொண்ட அன்பு ஒன்றன் காரணமாகவே நீ சூனியக்காரி, பழிகாரி என்ற பட்டம் சுமக்கப்போகிறேயே".
மந்தரை: "கையேயி"
கைகேயி: "ஆமாம் என் அருமைத் தாயே நீ என்னைக் காண அவசரமாக வந்ததையும் நாம் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டதையும் வெளியே காத்திருக்கும் சேடியர், காவல் மகளிர் அனைவரும் அறிவார். நீ தவறாகச் சொல்லிக்கொடுத்துதான் நான் மதிகெட்டுப் போனேன் என்ற பழியும் உன்னை வந்து அடையப் போகிறது;
மந்தரை: "எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை என்னைப் பொருத்தவரை நீ நினைத்தது நடக்கவேண்டும். நான் சற்று வெடுக்வெடுக் என்று பேசுவதால் என்னுடன் யாரும் அதிகம் வைத்துக்கொள்ளமாட்டார்கள்".
கைகேயி: "மந்தரா, இன்னொன்று, குழந்தைகள் விளையாடும்போது தெரியாமல் உண்டைகள் பட்டால் நீ இரு இரு உன்னை வேட்டு வைக்கிறேன் என்று மிரட்டுவாயே".
மந்தரை: "சீச்சீ அது சும்மா ஒரு மிரட்டு போடுவேனே தவிர, என் மனதில் வேறு எந்த எண்ணமும் கிடையாது உனக்குத்தான் என் சுபாவம் தெரியுமே கைகேயி".
கைகேயி: "அதையெல்லாம் மக்கள் வருங்காலத்தில் நினைவுகூர்ந்து நீ சதி செய்து விட்டாய் என்ற பழி ஏற்படுத்துவார்கள்".
மந்தரை: "நீ இராமனுக்காக பழி சுமக்கப் போகிறாய்; நான் உனக்காக சுமந்துவிட்டுப் போகிறேன்".
கைகேயி அவசரமாக ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதன் பேழையில் வைத்து அரக்கால் மூடியை இறுக்க மூடி மந்திரையிடம் கொடுக்கிறாள்.
கைகேயி: "மந்தரை இந்த ஓலையை உடனே சேவகரிடம் கொடுத்து மன்னரிடம் சேர்ப்பிக்கச் சொல்லு அவரை இங்கு வரச்சொல்லி எழுதியிருக்கிறேன்".
மந்தரை வணங்கி விடைபெறுகிறாள்.
கைகேயி தனக்குள் பேசிக்கொள்கிறாள்:
" சிறுவயதில் ராமன் விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு தம்பியுடன்
போனபோது கூட நான் கலங்கவில்லை; என் மகன் வீரவித்தைகளை கற்கப்போகிறான் என்று பெருமிதத்துடன் இருந்தேன். ஆனால் அது சிலகாலம்தான். அதன் பிறகு நான் இராமனை விட்டு பிரிந்ததேயில்லை. அம்மா அம்மா என்று ஒரு நாளைக்கு பத்து முறை ஓடி வந்து விடுவான். என் குழந்தை காட்டில் பதினான்கு ஆண்டுகள் வாழ வேண்டுமே. பதினான்கு ஆண்டுகள் ஆண்டுகள் மரவுரி தரித்து காய்கனி உண்ணப்போகிறான். குழந்தைக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி இருக்கிறது. புது மனைவியுடன் சொர்க்கபுரியான அயோத்தியில் உல்லாசமாய் வாழ முடியாதே. நான் என் கண்மணியை எப்படி பதினாங்கு ஆண்டுகள் பார்க்காமல் இருப்பேன். என் குழந்தையை ஆரண்யத்திற்குப் போகப் போகிறான்; எனக்கு எதற்கு வைரக் குண்டலங்கள், பொன் அணிகள், ரத்தின ஆரங்கள். வீசி எறிகிறாள். பின்னிய கூந்தலில் சூரிய சந்திர பில்லைகள். கூந்தலை அவிழ்க்கிறாள். பட்டாலான ஆடையை கழற்றி பருத்தி ஆடை அணிகிறாள்.
"கண்மணி என் அருமைச் செல்வமே" என்று மஞ்சத்தில் விழுந்து அழுகிறாள்.
{திரை விழுகிறது}
இடம்: பேரரசி கைகேயி பெண்கள் கலாசாலை
பொழுது: பகல் பொழுது.
பாத்திரங்கள்:
பேரரசி கைகேயி, கலாசாலை தலைமையாசிரியர் மற்றும் மேலாண்மைக்குழுவினர்.
காட்சி ஒன்று
கலாசாலையின் நடவடிக்கைகள் முழுதும் ஆராய்ந்து முடித்து திருப்தியுறுகிறாள் கைகேயி.
கைகேயி: "பெண்களுக்கு வாள், வேல்பயிற்சி, தேரோட்டுதல் முதலிய வீர கலைகளை கற்பிக்கும் இக்கலைகோவிலுக்கு பெயரில் மட்டும் மாற்றம் தேவை; இராமன் என்று மாற்றி விடுங்கள்"
மேலாண்மைக் குழுவினர்: "அப்படியே செய்கிறோம் தாயே"
கைகேயி: "நல்லது, மான்யங்கள் தொடர்ந்து வரும்"
கம்பீரத்துடன் தன் ரதத்தில் ஏறி புறப்படுகிறாள் கேகயன் தனயை.
காட்சி இரண்டு
இடம்: அரண்மனை அந்தப்புரம்
பொழுது : பிற்பகல்பாத்திரங்கள்: கைகேயி, மந்தரை
கைகேயியின் அந்தபுரத்தில் அந்தரங்க அறை வாயிலில் மந்தரை நின்றுகொண்டிருக்கிறாள்.
அந்தபுர வாயிலில் தயாராக காத்துக்கொண்டிருந்த சாரதியிடன் ரதத்தை ஒப்படைத்துவிட்டு கைகேயி வருகிறாள்.
கைகேயி: "இப்படியே எத்தனை நேரமாக நின்று கொண்டிருக்கிறாய்; அப்படி என்ன தலை போகிற செய்தி, உன் உடம்பை ஏன் வருத்திக்கொள்கிறாய் மந்தரை?'
மந்தரை: {பதட்டத்துடன்} "தலை போகிற செய்திதான் கண்ணே"
அந்தரங்க அறைக் கதவு சார்த்தப்படுகிறது.கைகேயியும் மந்தரையும் தனிமையில் இருக்கிறார்கள்.
பொன்னாலாகிய அழகிய இரு பதுமைகள் விளக்கு ஏந்தியவாறு நிற்க, மந்திரை உதவியுடன் விளக்குகளை ஏற்றிவிட்டு, வேலைப்பாடுகள் மிகுந்த அழகிய இருக்கையில் அமர்கிறாள்.
கைகேயி: "இப்போது சொல் மந்திரை"
மந்தரை: "கண்மணி, இராமனுக்கு நாளை பட்டாபிஷேகமாம்"
கைகேயி: "மந்தரை என்ன உளறுகிறாய்?"
மந்தரை: "உண்மைதான் மகளே, திடீரென்று இன்று மதியம் அரசவையில் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது"
கைகேயி: "தசரத சக்ரவர்த்தி என்னைக் கலந்தாலோசிக்காமல் எந்த புதிய அரசாங்க காரியம் நடந்ததில்லையே"
மந்தரை: "கடந்த ஒரு மாதகாலமாக உன்னிடம், மன்னனிடன் சொல்லிவிடு என்று நச்சரித்து கொண்டே இருந்தேன்; உடனே அவசர ஆலோசனை செய்து இந்த வைபவத்தை நிறுத்து".
கைகேயி: "இப்படி எடுத்தோம் கவிழ்த்தோம் என்று பேசக் கூடாது என்பதற்காகத்தானே நல்லதோர் சந்தர்ப்பத்தில் மன்னரிடம் சொல்லிக்கொள்ளலாம் என்று காத்திருந்தேன், மந்தரை;"
மந்தரை: "சரயூ நதிக்கரை சோதிடர் கூறிய செய்திகளை மீண்டும் நினைவு கூரவா மகளே?"
கைகேயி: "வேண்டாம், எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது; குழந்தை இராமனின் ஜாதகம் மிக அற்புதமானது; தெய்வீகமுடையது. சித்திரை மாதம் நவமி திதி, புனர்வஸ¤ நட்சத்திரம். சூரியன், குரு, சுக்ரன், அங்காரகன், சனீஸ்வரன் என்று ஐந்து கிரகங்கள் உச்சம் கடகத்தில் சந்திரன் சுவட்சேத்திரம். ஒரு கிரகம் உச்சத்தில் இருக்கையில் பிறந்தவன் எல்லா ஆபத்துகளையும் அழிக்கிறான்; இரண்டு கிரகம் உச்சத்தில் பிறந்தவன் சிற்றரசன்; மூன்று கிரகம் உச்சத்தில் பிறந்தவன் அரசன்; ஐந்து கிரகம் உச்சத்தில் இருக்கையில் பிறப்பது அபூர்வம். சக்ரவர்த்திகளுக்குகெல்லாம் மேற்பட்டவன்; உலகநாயகன்; உலகிலேயே முதன்மையானவன்; அனைவரது அன்பையும் பெற்றவன், பொறுமைசாலி, தேவர்களும் போற்றும் இயல்பினன், அரிய பெரிய சாதனைகள் படைக்க அவதரித்தவன்,......."..
மந்தரை: "எல்லாமே உண்மை; இதையே எத்தனை முறை சொன்னாலும் உனக்குத் திகட்டாது மகளே; ஆனால் இறுதியில் அவர் விடுத்த எச்சரிக்கை?"
கைகேயி: "ஆம், மந்தரை இப்போது அயோத்தி மாநகரத்திற்கு நேரம் சரியில்லை; அயோத்தியின் அரசருக்கு உயிருக்கு ஆபத்து; அதை இறைவன் அருளால் வென்றாலும் இன்னும் ஏறத்தாழ பதினான்கு ஆண்டுகள் அயோத்தியின் மன்னராக இருப்பவர் யாராக இருந்தாலும் துறவியாகத் தான் இருப்பார்; என் மனதுக்கினிய மன்னரை லௌகீகபாதையிலிருந்து திருப்பி நம் ஜனக மன்னரைப் போல் ராஜரிஷியாக மாற்றவேண்டும். விதியை மதியால் வென்று விடலாம் என்று நினைத்தேனே"
மந்தரை: "இப்போது ஒன்றும் கெட்டுப்போய்விடவில்லை எப்படியாவது இந்த வைபவத்தை நிறுத்த வேண்டும்".
கைகேயி பதில் கூறாது தன் அறையில் வரிசையாக ஓவியரால் வரையப்பட்ட இராமனின் சிறுவயது லீலைகள், சாதனைகள் ஓவியமாக வரையப்பட்டிருந்ததைக் கண்களால் பருகினாள் ; அடுத்து தானே வரைந்த ஓவியச் சுருளை ரகசியப் பேழையிலிருந்து எடுத்துப் பார்த்தாள்
இதோ ஸ்ரீராமன் பட்டாபிஷேக கோலத்தில். அருமை மகள் ஜானகியுடன்; அவளே எழுதியது;
கைகேயி: "என் கனவு நனவாக இன்னும் பல ருதுக்கள் உள்ளன மந்தரா"
கைகேயியை பரிவுடன் ஏறிட்டாள் மந்தரை.
கைகேயி: "மந்தரா நான் சிறிது நேரம் த்யானம் செய்கிறேன்; நீ இங்கேயே இரு".
கைகேயி அந்தரங்க அறையின் மறுபக்கத்தில் மறைவாக சென்று அமர்கிறாள்.
மந்தரைக்கு இருப்பு கொள்ளவில்லை; அங்குமிங்கும் நடக்கிறாள்.
தனக்குத்தானே பேசிக்கொள்கிறாள்:
" மன்னர் மேல் அளவு கடந்த அன்பு இந்த கைகேயிக்கு; குடும்ப வாழ்வோ, குழந்தை வளர்ப்போ, ஆன்மீகமோ, தேச பரிபாலனமோ, அரசியல் சதுரங்கமோ போரில் வீரமோ கைகேயிக்கு நிகரில்லை. தலைசிறந்து விளங்கும் இந்த குழந்தைக்கு எதையும் தாங்கும் இருதயத்தையும் நீண்ட ஆயுளையும் நீ தரவேண்டும், இரண்டு கைகளையும் மேலே உயர்த்தி வேண்டிக்கொள்கிறாள்.
"இந்தச் சிறுவன் இராமனுக்கு பெரிய சோதனைகள் காத்திருக்கின்றன. சரயூ நதிக்கரை சோதிடர், ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறார். அயோத்தியின் அரசராக இருப்பவருக்கு பெரிய கண்டம் இருக்கிறது. ஒரு துறவிதான் பதினான்கு வருடங்கள் அயோத்தியை ஆளப்போகிறார். இராமன் இப்பூவுலகையே ஆளுவான். அதில் எந்த வித ஐயமில்லை ஆனால் அதற்கு இன்னும் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.
கடவுளே யார் அந்தத் துறவி? வசிஷ்டரா? அவர் எந்த அரசாங்க காரியத்திலும் தலையிடுவதில்லையே; ஒரு வேளை சுமந்திரரா? இல்லை திடீரென்று விஸ்வாமித்திரர் ராமனையும் இலட்சுமணனையும் காட்டுக்கு என்னுடன் அனுப்பு என்று சிறு குழந்தைகளை கூட்டிச் சென்றது போல், வேறு ஏதேனும் துறவி தீடீரென்று
எனக்கு உன் ராஜ்ஜியத்தைத் தா நான்தான் இனி அயோத்தியின் அரசன் என்று தானம் கேட்பார்களோ.சரி, இந்த அரசருக்கு அரண்மனை ஜோதிடரோ, இல்லை அடிக்கடி ஆசீர்வதிக்கும் எல்லாம் அறிந்த துறவிகளோ ஏதும் சொல்லமாட்டார்களா? விதி அவர்கள் கண்ணை மறைத்துவிட்டதா? தலை சுற்றியது மந்தரைக்கு.
கைகேயி தெளிவுடன் வந்து தன் இருக்கையில் அமர்கிறாள். மந்தரை ஒரு காலை ஒருக்களித்தவாறு தன் கம்பளி ஆசனத்தில் அமர்ந்துகொள்கிறாள்.
கைகேயி: "மந்தரை, சம்பாசுர யுத்தத்தில் நான் செய்திட்ட உதவிக்கு மன்னர் எனக்கு இரு வரங்களை அளித்தார். நினைவிருக்கிறதா?
மந்தரை: "இருக்கிறது தாயே ஆனால் நீதானே எனக்கு எந்த குறையுமில்லை; அதனால் வரங்கள் இப்போது தேவையில்லை என்று கூறிவிட்டாயே".
கைகேயி: "ஆம் மந்தரை; இப்போது என் மகன் இராமனைக் காப்பாற்ற வேண்டும். அதற்காக நான் அந்த வரங்களை அளிக்குமாறு மன்னரிடம் வேண்டப்போகிறேன்;
"ஒன்று- எனக்கு முடிசூட்டி நான் பேரரசியாக்கிவிடவேண்டும். அப்போது அரசருக்கு உயிர்பலி என்பதால் நான் ஜோதிடர் கூற்றுப்படி இறந்துவிடுவேன்.இரண்டு- ராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டிற்குப் போகவேண்டும். ஆரண்யத்தில் அரசனாகவும் இருப்பான். தசரதரும் அவரின் உயிருக்கு உயிரான மனைவியாக நான் இறந்துவிடுவதால் மனதளவில் துறவறம் பூண்டு விடுவார். இராமன் வரும்வரை அவரே ஆளட்டும். என்ன சொல்கிறாய் மந்தரை?".
மந்தரை: "இரண்டாவது வரம் சரியாகத்தான் இருக்கிறது. ஆனால் அதை செயல்படுத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏனெனில் உன் முதல் வரத்தால் நீயே மன்னரின் உயிருக்கு உலை வைத்துவிடுவாய்; உனக்கோ இராமனுக்கோ உயிருக்கு ஆபத்து என்றால் முதலில் உயிரைத் துறப்பார் மன்னர்; நாட்டில் குழப்பம் ஏற்படும். இராமனுக்கு உடனே முடிசூட்டிவிடுவார்கள். அவன் துறவு வாழ்க்கை வாழ்வான். இது சரி வராது வரத்தை மாற்று ; நீ பேரரசியாக ஆனாலும் பின்விளவுகளை நீ எதிர்பார்த்தபடி நடக்காது".
கைகேயி: "சரி அப்போது இப்படி வைத்துக்கொள்கிறேன்; பரதன் நாட்டை ஆள வேண்டும்; இராமன் காட்டிற்கு போக வேண்டும்".
ஆசனத்திலிருந்து மந்தரை திடுக்கிட்டு எழுந்துகொள்கிறாள்.
மந்தரை: "கைகேயி, உனக்கென்ன பைத்தியமா. பரதனின் உயிரை பணயம் வைக்கிறாயே"
கைகேயி: "ஆம் பைத்தியம்தான் மந்தரை; என் மூத்த மகன் இராமன் தீர்காயுளோடு இருக்கவேண்டும். அவனது பிறப்பின் குறிக்கோளை வருங்காலத்தில் நிறைவேற்ற வேண்டும். பூவுலகில் அநீதி பெருகி அழிந்துவிடாதிருக்க என்றால் என் இளைய மகனை பலி கொடுக்கத்தான் வேண்டும்"
.
மந்தரை: "கைகேயி! அப்பாவி பரதன் உயிரை பணயம் வைக்கிறாயே உனக்கு புத்தி பேதலித்துவிட்டதா?. பெற்ற மகனை பாழும் கிணற்றில் தள்ளுகிறாய்"
கைகேயி: "பெற்ற மகனைக் காட்டிலும் எனக்கு உற்ற மகன் இராமன் என்பதை உலகே அறியும் மந்திரை".
மந்தரை: "தெரியுமடி என் கண்ணே".
கைகேயி: "இதுதான் சரியான முடிவு மந்திரை இல்லையென்றால் இராமன் காட்டுக்கு போனால் அடுத்து இருப்பவரின் மூத்தவன், இலக்குவன், அவனே முடிசூடத்தகுந்தவன் என்ற வந்துவிடக்கூடாது; அந்தக்குழந்தையும் தீர்காயுளோடு இருக்க வேண்டும்".
மந்தரை: "நீ இராமனுக்காக உயிரையும் கொடுப்பாய் என்று நான் அறிவேன் ; ஆனால் உன் உயிரினும் மேலான உன் குழந்தையின் உயிரையும் பறித்துக்கொடுப்பாய் என்று நான் எதிர்பார்க்கவேயில்லை; அயோத்திக்கு உன்னுடன் வந்ததுமுதல் நானும் பார்த்துக்கொண்டிருக்கிறேன். உன் புத்திர பாசத்தை எந்த எல்லையைத் தொடும் என்பதை இன்று அறிகிறேன்".
கைகேயி: "மந்தரை நேர அவகாசம் குறைவாக இருக்கிறது; விரைவில் அரசரை இங்கு வரவழைத்து வரங்களைக் கேட்டுவிடவேண்டும்".
மந்தரை: "கைகேயி உலகில் எந்தத் தாயும் செய்யத் துணியாத தியாகத்தை செய்யப்போகிறாய். ஆனால் உன்னை வளர்த்த அன்னை என்ற முறையில் சொல்கிறேன். உன் தியாகத்தை உலகம் மெச்சாது".
கைகேயி: "மெச்ச வேண்டாம்"
மந்தரை: "உன்னைத் தூற்றும்"
கைகேயி: "தூற்றட்டும்".
மந்தரை: "சான்று கூற சரயூநதிக்கரை ஜோதிடர் இல்லை; பின் விளைவுகளை எண்ணி நதியில் சங்கமமாகி விட்டார்".
கைகேயி: "சாட்சி தேவையில்லை"
மந்தரை: "நானே போய் ஜோதிடர் கூற்றை மன்னரிடம் உன்னை மீறிச் சொல்லிவிட்டால்?"
கைகேயி: "என் மணாளர் உடனே உயிர் துறப்பார்".
மந்தரை: "சுயநலத்துடன் உன் புதல்வனை அரசனாக்கினாய்; சாமர்த்தியமாக வரங்களை தக்க சமயத்தில் பயன்படுத்தினாய் என்று உலகம் பழி சுமத்தும்".
கைகேயி: "பழிசொல்லட்டும்; மந்தரை: "நீ இதுவரை இராமன் இராமன் என்று கொட்டிய பாசம் பொய் என்று உன் தாய்ப்பாசத்திற்கு மாசு கற்பிக்கும்".
கைகேயி: "கற்பிக்கட்டுமே; நான் அஞ்சா நெஞ்சத்தினள் மந்தரை; முன் வைத்த காலை பின் வைக்கமாட்டேன்".
மந்தரை: "கணவனின் அன்பை தவறாகப் பயன் படுத்தினாள் என்றும், கணவனுக்கு இவள் சதி செய்தாலும் செய்வாள் என்று சொல்லும் ".
கைகேயி: "சொல்லட்டுமே;
மந்தரை: "பதினான்கு ஆண்டுகள் கழித்து இராமன் அரசனானபிறகும் கூட இந்த உலகம் உன் தியாகத்தை அறியாது தூற்றுவதை நிறுத்தாது".
கைகேயி: "நிறுத்தவேண்டாம்; என் ஆயுள் முழுக்க அத்தனை தூற்றுமொழிகளையும் கேட்கத் தயாராக உள்ளேன்".
மந்தரை கண்களில் கண்ணீர் பெருகுகிறது; துடைத்துக்கொள்கிறாள்.
கைகேயி: "வைரநெஞ்சம் கொண்ட நீயா அழுகிறாய் மந்தரை?"
மந்தரை: "நீதான் தீரநெஞ்சுடையவள் கண்ணே; அதுதான் துணிவுடன் முடிவுகள் எடுக்கிறாய்""இந்த யுகமட்டுமல்ல கைகேயி, அடுத்துவரும் துவாபர யுகம், கலியுகம் எல்லாம் உன்னைக் கொடியவள், சூனியக்காரி, பாபி என்று சொல்லும். சின்னக்குழந்தைக்கூட உன்னைப் பொல்லாதவள் என்று சொல்லும்".
கைகேயி: " என் மீது கொண்ட அன்பு ஒன்றன் காரணமாகவே நீ சூனியக்காரி, பழிகாரி என்ற பட்டம் சுமக்கப்போகிறேயே".
மந்தரை: "கையேயி"
கைகேயி: "ஆமாம் என் அருமைத் தாயே நீ என்னைக் காண அவசரமாக வந்ததையும் நாம் கதவுகளைத் தாழிட்டுக்கொண்டதையும் வெளியே காத்திருக்கும் சேடியர், காவல் மகளிர் அனைவரும் அறிவார். நீ தவறாகச் சொல்லிக்கொடுத்துதான் நான் மதிகெட்டுப் போனேன் என்ற பழியும் உன்னை வந்து அடையப் போகிறது;
மந்தரை: "எனக்கு அதைப் பற்றியெல்லாம் கவலையில்லை என்னைப் பொருத்தவரை நீ நினைத்தது நடக்கவேண்டும். நான் சற்று வெடுக்வெடுக் என்று பேசுவதால் என்னுடன் யாரும் அதிகம் வைத்துக்கொள்ளமாட்டார்கள்".
கைகேயி: "மந்தரா, இன்னொன்று, குழந்தைகள் விளையாடும்போது தெரியாமல் உண்டைகள் பட்டால் நீ இரு இரு உன்னை வேட்டு வைக்கிறேன் என்று மிரட்டுவாயே".
மந்தரை: "சீச்சீ அது சும்மா ஒரு மிரட்டு போடுவேனே தவிர, என் மனதில் வேறு எந்த எண்ணமும் கிடையாது உனக்குத்தான் என் சுபாவம் தெரியுமே கைகேயி".
கைகேயி: "அதையெல்லாம் மக்கள் வருங்காலத்தில் நினைவுகூர்ந்து நீ சதி செய்து விட்டாய் என்ற பழி ஏற்படுத்துவார்கள்".
மந்தரை: "நீ இராமனுக்காக பழி சுமக்கப் போகிறாய்; நான் உனக்காக சுமந்துவிட்டுப் போகிறேன்".
கைகேயி அவசரமாக ஒரு ஓலை நறுக்கில் எழுதி அதன் பேழையில் வைத்து அரக்கால் மூடியை இறுக்க மூடி மந்திரையிடம் கொடுக்கிறாள்.
கைகேயி: "மந்தரை இந்த ஓலையை உடனே சேவகரிடம் கொடுத்து மன்னரிடம் சேர்ப்பிக்கச் சொல்லு அவரை இங்கு வரச்சொல்லி எழுதியிருக்கிறேன்".
மந்தரை வணங்கி விடைபெறுகிறாள்.
கைகேயி தனக்குள் பேசிக்கொள்கிறாள்:
" சிறுவயதில் ராமன் விஸ்வாமித்திரருடன் காட்டுக்கு தம்பியுடன்
போனபோது கூட நான் கலங்கவில்லை; என் மகன் வீரவித்தைகளை கற்கப்போகிறான் என்று பெருமிதத்துடன் இருந்தேன். ஆனால் அது சிலகாலம்தான். அதன் பிறகு நான் இராமனை விட்டு பிரிந்ததேயில்லை. அம்மா அம்மா என்று ஒரு நாளைக்கு பத்து முறை ஓடி வந்து விடுவான். என் குழந்தை காட்டில் பதினான்கு ஆண்டுகள் வாழ வேண்டுமே. பதினான்கு ஆண்டுகள் ஆண்டுகள் மரவுரி தரித்து காய்கனி உண்ணப்போகிறான். குழந்தைக்கு இப்போதுதான் கல்யாணம் ஆகி இருக்கிறது. புது மனைவியுடன் சொர்க்கபுரியான அயோத்தியில் உல்லாசமாய் வாழ முடியாதே. நான் என் கண்மணியை எப்படி பதினாங்கு ஆண்டுகள் பார்க்காமல் இருப்பேன். என் குழந்தையை ஆரண்யத்திற்குப் போகப் போகிறான்; எனக்கு எதற்கு வைரக் குண்டலங்கள், பொன் அணிகள், ரத்தின ஆரங்கள். வீசி எறிகிறாள். பின்னிய கூந்தலில் சூரிய சந்திர பில்லைகள். கூந்தலை அவிழ்க்கிறாள். பட்டாலான ஆடையை கழற்றி பருத்தி ஆடை அணிகிறாள்.
"கண்மணி என் அருமைச் செல்வமே" என்று மஞ்சத்தில் விழுந்து அழுகிறாள்.
{திரை விழுகிறது}
Friday, July 21, 2006
55 fiction- 4
கண்காட்சி
"அம்மா, அந்த கண்காட்சி நம் ஊருக்கு வந்திருக்கு ப்ளீஸ் போகலாம்மா" ப்ரீத்தி கெஞ்சினாள். போனார்கள். endangered species என்று அறிவிப்பு பலகை கூறியது. உலகில் மொத்தமே ஐந்துதான் இருக்காம். ஒவ்வொரு கண்டத்திலிருந்து ஒரு சாம்பிள் இருக்கிறது. ஜாக்கிரதையாக ஊர் ஊராக அரசு கொண்டுபோகிறதாம் . "எல்லாவற்றுக்குமே இப்போது மருந்து கண்டுபிடிச்சாச்சு; அப்போதெல்லாம் கிடையாது எங்களுக்கெல்லாம் ரொம்ப தொல்லை கொடுத்தது இது" என்ற பாட்டியிடம் பெயர் என்ன என்றாள் ப்ரீத்தி. பெயர் கிடையாது. ஆண் என்று அழைப்பார்கள் என்றாள் அம்மா. ----------------------------------------
Monday, July 03, 2006
நம்பிக்கை குழுமம் அறிவித்த சிறப்புப் பரிசு
நம்பிக்கைக்கு ஒர் அஷ்டவக்ரன்
(அஷ்டவக்ரன்*- எட்டு கோணல்கள் உடைய உடலைக் கொண்டவன்)
காட்சி ஒன்று
இடம் : மிதிலையில் ஒரு முக்கிய வீதி. பன்னிரண்டு வயது அஷ்டவக்ரன் தன் மாமன் சுவேதகேதுவுடன் நடந்து கொண்டிருக்கிறான். வழியில் எதிர்படுகிறார்கள் அரசன் வரும் வழியைச் சீர்படுத்தும் ஊழியர்கள்.
நேரம்: காலை நேரம்
பாத்திரங்கள்: அஷ்டவக்ரன், சுவேதகேது, ராஜாங்க காவலர்கள், பேரரசர் ஜனகர்
காவலன் ஒருவன்: (எரிந்து விழுகிறான்) அடடா, விரைவாக எல்லோரும் நகர்ந்து வழிவிடுங்கள்; பேரரசர் வந்துகொண்டிருப்பது தெரியவில்லையா; மிதிலையில் இன்று நடக்கப்போகும் மாபெரும் யாகத்துக்கு நாங்கள் செல்ல வேண்டும்.
அஷ்டவக்ரன்: ஐயா, பேரரசரே வந்துகொண்டிருந்தாலும் பாதையில் வயோதிகர், வேதம் கற்றோர், கண்பார்வையற்றோர், மாறுபாடான உடலைக் கொண்டோர், பெண்கள், பாரம் சுமப்போர் இவர்களுக்கு வழிவிட்ட பின்னர்தான் அரசனே செல்லவேண்டும் என்று சாத்திரங்கள் கூறுகின்றன.
ஜனகர்: (வந்துகொண்டே) இந்தச் சிறுவன் கூறுவது முற்றிலும் உண்மையே;
காட்சி இரண்டு
இடம்: யாகசாலையின் வாயில்
பாத்திரங்கள்: வாயில்காப்போன், அஷ்டவக்ரன், சுவேதகேது, ஜனகர்.
வாயிற்காப்போன் உள்ளே நுழைய முயலும் அஷ்டவக்ரனையும் சுவேதகேதுவையும் தடுக்கிறான்.
வாயில்காப்போன்: நில்லுங்கள்! இங்கு அறியாச் சிறுவர்களுக்கு அனுமதி இல்லை; வேதம் கற்ற பெரியவர்கள் மட்டுமே நுழையலாம். உள்ளே உள்ள சான்றோர் உன்னை ஒப்பமாட்டார்கள்.
அஷ்டவக்ரன்: (பணிவாக) ஐயா, நான் அறியாச் சிறுவன் அல்லன்; முறைப்படி வேதாகமத்தைக் கற்றவன். வேதத்தைக் கற்றவர் பிறரின் வயதை வைத்து அவர்கள் திறமையை எடைபோடமாட்டார்கள். எங்களை நீங்கள் தாராளமாக உள்ளே செல்ல அனுமதிக்கலாம்.
வாயில்காப்போன்: (ஏளனத்துடன்) உன் வீண்பெருமையை நிறுத்து. சிறுவனான நீ அதற்குள் வேதங்களைக் கற்றுக்கொண்டுவிட்டாயா? நல்ல வேடிக்கை; நான் தள்ளுவதற்கு முன் நீங்களாகவே வெளியே சென்று விடுங்கள்; பிழைத்தீர்கள் என்று நினைத்துக்கொள்வேன்; வேதம் தெரிந்தவனாம்; உள்ளே செல்லவேண்டுமாம்.
அஷ்டவக்ரன்: ( பொறுமையுடன்) ஐயா, இன்று நான் அரசவைப் பண்டிதரான வந்தி அவர்களைச் சந்திக்க வேண்டும். அரசரிடம் உத்தரவு கேட்டுவிட்டாவது எங்களை நுழையவிடுங்கள்.
வாயில்காப்போன் : (எக்காளத்துடன் சிரிக்கிறான்) அடேய்; ஒரு கூனோ கோணலோ இருந்தாலே பார்க்கச் சகிக்காது; எட்டு கோணல் கொண்ட உடம்புக்கே இந்தத் திமிரா; எல்லோரும் பார்த்துச் சிரிப்பதற்குள் ஓடிவிடு!
அஷ்டவக்கிரன் : என் உடல் அஷ்டகோணலாய் இருக்கலாம்; ஆனால் என் கல்வி நேரானது. நான் உள்ளே,....
அவன் பேசிக்கொண்டிருக்கும்போதே ஜனகர் வருகிறார்; அவனை அடையாளம் கண்டு கொள்கிறார்.
ஜனகர்: ஓ, சட்டம் பேசும் சிறுவனா? யாரங்கே! இவனுக்கு சாப்பிட பழங்களும் பட்சணங்களும் கொண்டு வாருங்கள்; (அஷ்டவக்ரனைப் பார்த்து) சிறுவா! நீ திண்பண்டங்களை வாங்கிக்கொண்டுச் செல்; நான் சதஸ¤க்குச் (வாதப்போர்) செல்ல வேண்டும்.
அஷ்டவக்ரன்: அரசே! மன்னியுங்கள்! திண்பண்டங்கள் எனக்குத் தேவையில்லை: பண்டிதர் வந்தியுடன் வாதப்போட்டி புரிய வந்திருக்கிறேன்.
ஜனகர்: (அதிர்ச்சியுடன்) என்ன? மகாப்பண்டிதர் வந்தியுடன் வாதப்போர் புரிய வந்திருக்கிறாயா? சுயநினைவோடுதான் பேசுகிறாயா சிறுவனே? வாதப்போட்டியில் தோற்றவர்கள் எல்லாம் கடலில் தூக்கியெறியப்படவேண்டும் என்பது அவர் எண்ணம். தெரியுமா?
அஷ்டவக்ரன் : (தெளிவான பார்வையுடன்) தெரியும். நல்லொழுக்கமுள்ள ஆனால் முழுமையான பண்டிதர் அல்லாதாரோடு வாதப்போர் புரிந்ததால், பண்டிதர் வந்தி அவர்களை எளிதாக வென்றுவிட்டார். வென்றதுமட்டுமன்றி ஆணவமும் அடைந்து விட்டார். அதனால் தோற்றவர்களை கடலில் எறிந்துவிட வேண்டும் என்று இரக்கமின்றி கூறுகிறார். உண்மையான பாண்டித்யமும் ஞானமும் உள்ளவர்களை அவர் சந்திக்க வேண்டும். அவர்களோடு வாதப்போர் புரிய வேண்டும்.
ஜனகர்: ( வேடிக்கையாக ) நீ வென்றால் தோற்றவர்களை கடலில் எறிய மாட்டாயோ?
அஷ்டவக்ரன்: ( நிதானத்துடன்) மமதை கொள்வதும், அதன் காரணமாய் நேர்மையற்ற தண்டனைகள் வழங்குவதும் ஆத்ம ஞானம் அடைந்தவர்கள் செய்வதில்லை அரசே.
ஜனகர்: ஓ. அவ்வளவு பெரிய மனிதனா நீ. உன் பெற்றோர் யார்? உன்னை அனுமதிப்பதற்கு முன் நீ யார், என்ன, அதையாவது நான் தெரிந்து கொள்ளலாமா? இதோ உன் அருகில் இருப்பவர் யார்? இந்த சிறுவனை நல்வழிப்படுத்தி அவன் தாயாரிடம் நீ அழைத்துச் செல்லக்கூடாதா?
அஷ்டவக்ரன்: அரசே, இவர் என் மாமன்; பெயர் சுவேதகேது; இவரால் பேச இயலாது; துணைக்கு இவரை என் தாயார் என்னுடன் அனுப்பியிருக்கிறார். மகரிஷி உத்தாலகரின் மகள் சுஜாதையின் புதல்வன் நான். என் பெயர் அஷ்டவக்ரன் ; என் தந்தை மகரிஷி உத்தாலகரின் சீடரான ககோலர்.
சுவேதகேது: (அரசரைப் பார்த்துப் புன்னகைக்கிறான்)
ஜனகர்: (ஆச்சரியத்துடன்) ககோலனின் மைந்தனா? உன் தந்தை பண்டிதர் வந்தியிடம் தோற்று கடலில் வீசப்பட்டார் தெரியுமா? எந்த தைரியத்தில் இங்கே வந்திருக்கிறாய்? உன் வம்சத்திற்கு வாரிசு இல்லாமல் போகப்போகிறது. ஏற்கனவே உன் உடல்கோணலால் உன் தாய் அழுதுகொண்டிருப்பாள்; இப்போது உன்னையும் இழக்கப்போகிறாள். ஓடிப்போய் அம்மாவிடம் பத்திரமாய் உட்கார்ந்து கொள் பிள்ளாய்! வாதப்போருக்குத் ஊமைத் துணை!
அஷ்டவக்ரன்: அரசே! என் தந்தை தோற்றார் என்பதால் நானும் தோற்கவேண்டும் என்பதில்லையே. நான் கற்ற வேதாகம அறிவு எனக்கு வெற்றியைத் தேடித்தரும். என் தாயாரின் ஆசியும் எனக்கு உள்ளது. தாங்கள் புறத்தோற்றத்திற்கு கொடுக்கும் முக்கியத்தைவிட ஆன்ம அறிவுக்கு முக்கியத்துவம் தாருங்கள். இந்த வாதப்போரில் கலந்துகொள்ள நான் வனத்திலுள்ள ஆசிரமத்திலிருந்து நகருக்கு நடந்தே பயணித்திருக்கிறேன். பத்து நாட்கள் பயணம், என் உடலமைப்பினால் ஒரு திங்களாக நீண்டாலும் வந்திருக்கிறேன். என் நோக்கம் நிச்சயம் நிறைவேறும். எனக்கு என் பாண்டித்யம் மீது நம்பிக்கை இருக்கிறது. வாய் பேச முடியாது என்றாலும் உடல் உழைப்பும், அறிவும், பிறருக்கு உதவும் மனமும், நிறைந்த தன்னம்பிக்கை உடைய என் மாமனை எளிதாய் ஊமை என்று தாங்கள் பேசுவது பொருத்தமின்றி இருக்கிறது. அவர் என் கண்களுக்கு மனிதனாய்த் தென்படுகிறார்.
ஜனகர்: உன் பேச்சில் ஆணவம் இருக்கிறது.
அஷ்டவக்ரன்: அரசே, தன்னம்பிக்கைக்கும் தற்பெருமைக்கும் ஒரு நூலிழையே இடைவெளி. என்னால் நிச்சயம் முடியும் என்பது தன்னம்பிக்கை; என் ஒருவனால் மட்டுமே முடியும் என்பது ஆணவம். ஆணவத்திற்கும் தன்னம்பிக்கைக்கும் நடக்கும் வாதப்போரைத் தாங்கள் காணவேண்டும்.
ஜனகர்: யாரங்கே! வாதப்போர் நடக்கும் இடத்திற்கு இந்தச் சிறுவனை அனுப்புங்கள் நானும் வருகிறேன்.
காட்சி மூன்று
இடம்: வாதப்போர் நடக்கும் அரங்கு.
பாத்திரங்கள்: பேரரசர் ஜனகர், பண்டிதர் வந்தி, அஷ்டவக்ரன், சுவேதகேது.
சுவேதகேது, பார்வையாளர்களுடன் முன் வரிசையில் அமர்ந்துகொண்டு , பேசுபவர்களின் வாயசைப்பைக் கூர்ந்து கவனிக்கிறார்.
ஜனகர் அஷ்டவக்ரனை பண்டிதர் வந்திக்கு அறிமுகப்படுத்துகிறார். வாதப்போர் துவங்குகிறது.
ஜனகர்: அரசவைச் சான்றோரே, என் அருமை மக்களான பார்வையாளர்களே, நீங்களே இந்த வாதப்போரின் நடுவராக இருக்கப்போகிறீர்கள். இந்த வாதப்போரை பொதுமக்களும் கவனித்து வருவதால், அரிய கருத்துக்களை எளிய மொழியில் விளக்கும்மாறு இருதரப்பினர்க்கும் அறிவிக்கிறேன். வாதப்போர் துவங்குகிறது.
பண்டிதர் வந்தியும் அஷ்டவக்ரனும் ஒரு மேடையின் மீது எதிரெதிர் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார்கள். பண்டிதர் வந்தி மிடுக்குடன் அமர்ந்திருக்கிறார்.
உடல் எட்டுக்கோணல்களாக வளைந்து இருந்தாலும் அஷ்டவக்ரன் தன்னம்பிக்கையுடனும் தெளிவுடனும் காணப்படுகிறான். அவன் கண்களில் அமைதியும் கனிவும் தென்படுகிறது.
வந்தி: ஒருவரை எதைக் கொண்டு எடைபோடவேண்டும்? குலமா? குணமா? பொருளா? பதவியா?
அஷ்டவக்ரன்: குணத்தை வைத்துத்தான். காமம், குரோதம் முதலிய தீய குணங்கள் இல்லாமல், எல்லோரிடத்தும் அன்பு செலுத்துபவன், புலனடக்கம், ஒழுக்கம் முதலியவற்றை எளிதாய் பெறுகிறான்.
வந்தி: உன்னைப்போன்ற சிறுவயதினருக்கோ பெண்களுக்கோ ஞானம் இல்லை என்கிறேன். ஞானம் இருப்பவர்களில் சிலரையாவது உன்னால் சுட்டிக்காட்ட இயலுமா?
அஷ்டவக்ரன்: எமதருமராஜனிடம் போக விரும்பி, ஞானத்தை அறிந்து கொண்ட நசிகேதஸ், ஸ்ரீமன் நாராயணனை எங்கும் நிறைந்தவன் என்று நம்பிய பிரகலாதன், தவவாழ்வைத் தேடிய பாலகன் துருவன், சிறு வயதிலேயே ஞானம் பெற்ற வியாசர், விபாண்டகர், சிவபெருமான் அருளைப் பெற்ற மார்க்கண்டேயன் இவர்களில் சிலர். பெண்மணிகளில் உமையம்மை முதலாக, மைத்ரேயி, கார்க்கி, காத்யாயினி, தட்சப்பிரஜாபதியின் மகள் சுதையின் புத்திரிகளான மேதாவி, தரணி, என்று பல பெண்மணிகள் இருக்கிறார்கள்.
வந்தி: ஆத்மாவின் அழிவுக்குக் காரணமான செயல்கள் என்ன?
அஷ்டவக்ரன்: பேராசை, அகந்தை மற்றும் பிறர் வருந்தும்படியான செயல்களைச் செய்தல்- இவையே ஆத்மாவின் அழிவுக்குக் காரணமாகின்றன.
வந்தி: புலனடக்கத்தின் சிறப்பு என்ன?
வந்தி: புலனடக்கத்தின் சிறப்பு என்ன?
அஷ்டவக்ரன்: புலனடக்கம் உடையவன் தன் குற்றங்களை இனங்கண்டு அவற்றைக் களைவதில் முனைவான். புலனடக்கம் உடையவன் பிறர் பொருளுக்கு ஆசைப்படுவதில்லை. நேர்வழி அவனுக்கு மிக எளிதாக இருக்கும். இப்படிப்பட்டவனை எதைக்காட்டியும் கவர முடியாது. சக மனிதன் மட்டுமன்றி சகல ஜீவராசிகளையும் சமமாக பாவிக்கிறான். தன் கடமை அது எதுவாக இருந்தாலும் செவ்வனே செய்ய முயல்வான். தன்னை மேம்படுத்திக்கொள்ளும் முயற்சியில் இறங்குவதால் ஞானம், நீதி நெறிகள் அவனைத் தேடி வருகின்றன. அவன் எங்கு இருந்தாலும் அவ்விடம் தபோவனத்திற்குச் சமமாகும். புலனடக்கம் இருப்பவன் எந்தக் கஷ்டத்தையும் எளிதாகக் கடந்துவிடுவான்.
வந்தி: பெரிய யாகங்களைச் செய்வதைக் காட்டிலும் சிறந்த புண்ணியங்கள் ஐந்தைக் கூறு.
அஷ்டவக்ரன் : பெற்றோரைப் பேணுதல், கணவனும் மனைவியும் ஒருவரிடம் ஒருவர் தூய அன்பு கொண்டிருத்தல், சகல ஜீவராசிகளிடமும் அன்பைச் செலுத்துதல், நண்பர்களுக்கு உண்மையாய் இருத்தல் மற்றும் பலன் எதிர்பாராது உதவி செய்தல் இவையே சிறந்த ஐந்து புண்ணியங்கள்.
வந்தி: ஆன்மாவின் உள்ளொளியாய் விளங்குவது என்ன?
அஷ்டவக்ரன்: ஆன்மாவின் உள்ளொளியாய் விளங்குவதும் தத்துவங்களின் உட்பொருளாய்த் திகழ்வதும் இந்த உலகத்தை இயக்கும் பரம்பொருளே ஆவார். காலம், நேரம், யாகம், பஞ்சபூதங்கள், சத்தியம், தர்மம் எல்லாம் அவரே. ஆதியும் அந்தமும் இல்லாதவர்.
வந்தி: மந்திர ஜபத்திற்குச் சமமானது எது?
அஷ்டவக்ரன்: எல்லோரிடமும் அன்பு காட்டுவது மந்திர ஜபத்திற்கு ஈடானது.
வந்தி: செல்வத்தில் சிறந்த செல்வம் எது?
அஷ்டவக்ரன்: மன அமைதியும் நிறைவும்.
வந்தி: ஒரு வர்த்தகன் இருக்கிறான். மனநிறைவுடன் வாழ்க்கை நடத்தி வருகிறான். தூர தேசங்களுக்குச் சென்று வியாபாரம் செய்தால் லாபம் வரும் என்று நினைக்கிறான். அவன் எதற்கு இன்னும் பொருள் ஈட்ட வேண்டும்? இதற்கு நீ என்ன சொல்கிறாய்?
அஷ்டவக்ரன்: ஒரு வர்த்தகன் செல்வம் எளிதாய் கிடைக்கிறது என்பதால் ஊதாரித்தனமாக இருக்கக்கூடாது; அதே சமயம் தன்னிடம் உள்ள செல்வம் போதும் என்று நினைத்து செல்வத்தை அலட்சியப்படுத்தத் தேவையில்லை. தானதர்மங்கள், புண்ணிய காரியங்கள் செய்ய செல்வம் அவசியமாகிறது. பொருள் தேடும் முயற்சியை அவன் தாராளமாக தூரதேசங்களில் மேற்கொள்ளலாம்.
வந்தி: பூஜைகளில் சிறந்த பூஜை எது?
அஷ்டவக்ரன்: அதிதி பூஜை
வந்தி: இதோ இவன் கையில் ஒரு சங்கைக் கொடுங்கள். அஷ்டவக்ரா நீ இப்போது பாரம் சுமக்கிறாய் என்கிறேன். நீ என்ன சொல்கிறாய்?
அஷ்டவக்ரன்: நிலத்தில் இரண்டு பாதங்கள் இருக்கின்றன; அதன்மீது இரண்டு கணைக்கால்கள் இருக்கின்றன. அவற்றின் மேல் இரண்டு தொடைகள் இருக்கின்றன. அந்த ஆதாரத்தின் மீது வயிறு இருக்கிறது. மார்பு, கைகள், தோள்கள் இவை வயிற்றின் மேல் இருக்கின்றன. அந்தக் கைகளில் ஒன்றில் ஒரு சங்கு வைக்கப்பட்டுள்ளது. இந்த மேடையில் நீங்கள் என்று உங்களால் நினைக்கப்படும் தேகம் இருக்கிறது. அதே போல் நான் என்று நினைக்கப்படும் தேகத்தில் நான் இருக்கிறேன். நீங்களும், நானும், தேகங்களாய் மாறி நிற்கும் பிறரும், பூமி முதலிய பஞ்சபூதங்களால் சுமக்கப்படுகிறோம்.
சான்றோர்: (ஒருமித்தக் குரலில்)அஷ்டவக்ரருக்கு கேள்வி கேட்க சந்தர்ப்பம் தர வேண்டும்.
பார்வையாளர்கள்: ஆமாம் ஆமாம் ; அவர் மட்டும் ஒரு கேள்வி கேட்டு இந்தப் பண்டிதர் விடை தெரியாமல் விழிக்கட்டும், வாதப்போட்டியில் அஷ்டவக்ரரே வென்றார் என்பது எங்கள் முடிவு.
ஜனகரும் சான்றோரும் ஆமோதிக்கிறார்கள்.சுவேதகேது மகிழ்ச்சி அடைகிறான்.
வந்தி: தாராளமாக; எனக்கு விடை தெரியவில்லை என்றாலோ அல்லது தவறான விடை என்றாலோ அஷ்டவக்ரன் வென்றான் என்று ஒப்புக்கொள்கிறேன். அஷ்டவக்ரா, உனக்கு என்னிடம் கேள்வி கேட்க ஒரு சந்தர்ப்பம் அளிக்கப்படுகிறது. உம் கேள்.
அஷ்டவக்ரன்: ஒரு போட்டியில் வென்றவர் தோற்றவரிடம் நடந்துகொள்ளும் முறை என்ன? நட்புணர்வுடன் பழக வேண்டும் என்பது என் விடை. தங்கள் விடை என்னவோ?
வந்தி: (முதலில் பதட்டமடைகிறார் பின் தலைகுனிகிறார்)
அஷ்டவக்ரன்: (நிதானத்துடன்) தாங்கள் அவசியம் வனத்தில் உள்ள ஆசிரமத்திற்கு வாருங்கள். தங்கள் குடும்பத்தினரையும் சீடர்களையும் அழைத்து வாருங்கள்; நான் இப்போது விடைபெறுகிறேன்.
சான்றோர்: அன்பு மயமான உலகத்தை தன்னம்பிக்கையுடன் எடுத்துச்சொன்ன அஷ்டவக்ரர் வாழ்க!
சுவேதகேது: (கரவொலி எழுப்புகிறான்)
பார்வையாளர்கள்: வாழ்க! வாழ்க! அஷ்டவக்ரர் வாழ்க!
அஷ்டவக்ரன் தலைநிமிர்ந்து மேடையிலிருந்து மெதுவாக இறங்குகிறான்.
சில நாட்களுக்குப் பின்னர் ஜனக மன்னர் அஷ்டவக்கிரரின் சீடராகிறார். அஷ்டவக்ரரின் உபதேசங்கள் அஷ்டவக்ரகீதை என்று அழைக்கப்படுகிறது. உலகில் பிறந்த ஒவ்வொருவரும் தத்தம் கடமைகளை சுறுசுறுப்புடன் செய்ய வேண்டும். ஆசைகளை விட்டொழிக்க வேண்டும். நேரத்தை வீணாக்கக் கூடாது. நேர்மை, அன்பு, சகிப்புத்தன்மை முதலிய பண்புகள் ஆன்ம உள்ளொளியை அளிக்கும். அஷ்டவக்ரகீதையின் தனிச்சிறப்பு இதில் எந்த ஒரு மதம், கலாச்சாரம், பிரிவினர் பற்றித் தனியாகக் குறிப்பிடப்படவில்லை.
*அஷ்டவக்ரன் தாயின் கருவில் இருந்த போது, தந்தை ககோலர் மந்திரங்கள் கூறுகையில் ஏற்பட்ட தவறான உச்சரிப்பால் சங்கடம் அடைந்து நெளிந்ததான உடல் கோணல்களுடன் உருவாயிற்று என்று கூறப்படுகிறது.
Subscribe to:
Posts (Atom)