முன்னொரு நாளில்
தோன்றியபோதெல்லாம்
இறக்கைகளை விரித்துக்கொண்டு
பறந்து கொண்டிருந்த மலைகளைக்
கெஞ்சிக் கேட்டேன்
பறப்பதை நிறுத்திவிடுங்களேன்
நிமித்த காரணம் சொல்லலாமே
அவை கேட்டன
எங்கள் குழந்தைகள்
தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள்
எங்களுக்கே சோறு
பலசமயங்களில்
இறங்குவதில்லை
சில பறவைகள்
உங்களைக் கண்டு
பறத்தலையே மறக்கத் துவங்கிவிட்டன
எங்கள் குழந்தைகள்
வெட்டவெளிகளில்
விளையாட மறுக்கின்றனர்
பயிர்த்தொழில் பாதிப்படைகிறது
எங்கள் நிம்மதி
உங்களால் போய்க்கொண்டிருக்கிறது
தங்களால் யாரும்
உயிரிழக்காத போதும்
எங்களுக்காக
தாமே தம் இறக்கைகளை
இற்றுப்போகசெய்து
பறத்தலை நிறுத்திவிட்டன மலைகள்
இன்று
யுத்த பேரிகைகளும்
போர்ச்சாவுகளும்
உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்
மலைகள் சிரிக்குமோ அழுமோ
வடக்குவாசல் டிசம்பர் 2008
9 comments:
மிகவும் அருமை. வாழ்த்துக்கள் !
தமிழ்மணம் விருதுக்கான வாக்கெடுப்பில், என் படைப்புக்கள் தங்களுக்குப் பிடித்திருந்தால் வாக்களிக்குமாறு வேண்டுகிறேன்.
கவிதை : " கரிசக்காட்டுப் பொண்ணு"
சினிமா விமர்சனம் : விஜயின் "குருவி" படக் கதை - சிரிப்ப அடக்கிகிட்டு படிங்க
உழவர் திருநாள் வாழ்த்துக்களோடு...
உழவன்
கவிதை அருமை !
Jothibharathi said
தங்களின் உணர்வும் ஆதங்கமும் நெகிழ வைக்கின்றன.
கவிதை நன்று!
தங்களுக்கு எனது இனிய பொங்கல் வாழ்த்துக்கள்!!
மறு பிரசுரம் செய்தீர்களா?
கவிதை அருமை !
சிறப்பாக உள்ளது கவிதை.
அனுஜன்யா
இனிய பொங்கல் வாழ்த்துகள்
///
இன்று
யுத்த பேரிகைகளும்
போர்ச்சாவுகளும்
உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்
மலைகள் சிரிக்குமோ அழுமோ
////
நல்லயிருக்கு
கவிதை நல்லாருக்குங்க
Post a Comment