Wednesday, March 19, 2014

சுரண்டல் -- கவிதை







உன்னிடம் 
எத்தனை முறை சொல்வது
நான் வடிதாள் இல்லையென்று


உன்னிடம்
எத்தனை முறை சொல்வது
நான் உதைசுவர் இல்லையென்று


உன்னிடம்
எத்தனை முறை சொல்வது
நான் ஒரு தூதர் மட்டுமென்று


உன்னிடம்
எத்தனை முறை சொல்வது
நான் இறந்துவிட்டேன் என்று


இனி கொட்டாப்புளிக்கு வேலையில்லை



உயிரோசை
2009 .09.15