Wednesday, November 09, 2005

55 fiction-1

சின்னஞ்சிறுகதை- 55 வார்த்தைகளில்

ஆணா? பெண்ணா?

அரசாங்க ஆஸ்பத்திரியின் பிரசவ வார்ட். வெங்கடராமனும் ஜெயாவும் வாயிலில் கவலையோடு உட்கார்ந்திருந்தார்கள். கடவுளே, இந்த பிரசவத்திலாவது சம்பந்திகள் விருப்பப்படி குழந்தை பிறக்க வேண்டும். அப்போதுதான் புகுந்த வீட்டுக்கு குழந்தையுடன் அழைத்துச் செல்வார்களாம். இல்லாவிட்டால் பிறந்த வீட்டிலேயே இருக்க வேண்டுமாம். சே, என்ன மனிதர்கள். அப்போது, அம்மா " என்ற அலறல் தொடர்ந்து குவா குவா சத்தம். குழந்தை சுத்தம் செய்யப்பட்டு எடுத்துவரப்பட்டது. "மீண்டும் ஆண் குழந்தை நான் என்னம்மா செய்வேன்" படுக்கையில் இருந்த மகன் சீனு ஓவென்று அழுதான்.

No comments: