<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-17566523</id><updated>2011-12-02T17:52:00.662-08:00</updated><title type='text'>பெரிதினும் பெரிது கேள்</title><subtitle type='html'></subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>78</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1063212169462220406</id><published>2011-10-20T17:55:00.000-07:00</published><updated>2011-10-20T17:57:48.859-07:00</updated><title type='text'>விளையாட்டு</title><content type='html'>பூங்காவில் விளையாட&lt;br /&gt;அப்பாவுடன் கிளம்பிய சிறுமி&lt;br /&gt;வழியில் ஒரு மரவட்டையைப் பார்க்கிறாள்&lt;br /&gt;அதன் பின்னோடு அவளும் போகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;தன் குட்டிக்கால்கள் அருகில் தன்&lt;br /&gt;தலை வருமளவுக்குக் குனிந்து&lt;br /&gt;அதனுடன் பேசுகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;நடைபாதையை விட்டு அது&lt;br /&gt;ஒரு செடியருகில்&lt;br /&gt;சென்றவுடன்&lt;br /&gt;கண்முன் பறந்து சென்ற&lt;br /&gt;ஆந்துப்பூச்சியின் பின்&lt;br /&gt;மூச்சிரைக்க ஓடுகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;கட்டடத்தின் சுவரில்&lt;br /&gt;ஒரு நத்தையைக் காண்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;பாத்தியா அது&lt;br /&gt;தன் வீட்டை&lt;br /&gt;போகுமிடமெல்லாம்&lt;br /&gt;தூக்கிக்கொண்டு போகிறது&lt;br /&gt;அப்பா சொல்லச் சொல்ல&lt;br /&gt;அவள் புன்னகையுடன்&lt;br /&gt;திறந்த வாயுடன்&lt;br /&gt;கண்கள் விரியப்&lt;br /&gt;பார்க்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;தன் சிறு விரலால்&lt;br /&gt;அதன் வீட்டைத் தொடுகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;அது அதன் சாமானையெல்லாம்&lt;br /&gt;எங்கே வச்சுக்கும்&lt;br /&gt;அப்பாவைக் கேட்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் எங்கே வச்சுக்கும்&lt;br /&gt;அப்பா திருப்பிக் கேட்டார்&lt;br /&gt;&lt;br /&gt;பந்தைக் கண்முன் நீட்டி&lt;br /&gt;வா போலாம்&lt;br /&gt;அதோ சறுக்குமரம் என்றார் அப்பா&lt;br /&gt;&lt;br /&gt;சரி இதுகிட்ட&lt;br /&gt;ஒரு ரகசியம் சொல்லிட்டு வருவேன்&lt;br /&gt;என்று ரகசியம் ஒன்றைச் சத்தமாகச் சொல்லிவிட்டு&lt;br /&gt;அப்பா பின்னால் ஓடுகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஊஞ்சலும் சறுக்குமரமும் பொருத்தப்பட்ட&lt;br /&gt;ரப்பர் தரைக்கு அப்பால்&lt;br /&gt;உள்ள மண்தரையைப் பார்த்துவிட்டு&lt;br /&gt;அங்கே விரைகிறாள்&lt;br /&gt;நத்தைக்கு வீடு கட்ட&lt;br /&gt;கல் எடுக்கப்போறேன்&lt;br /&gt;என்று வேகமாக&lt;br /&gt;கைவிரல்களை மண்ணில் விட்டுக்குடைகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;அய் ஒரே டர்ட்டி,&lt;br /&gt;கையை குத்திக்கப்போற என்று&lt;br /&gt;அப்பா சொல்வது அவள் காதில் விழவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை இப்பவே கல் எடுக்கப்போறேன்&lt;br /&gt;என்று அவள்&lt;br /&gt;விடாப்பிடியாகத் தோண்டுகையில்&lt;br /&gt;அப்பா சுற்றும்முற்றும் பார்க்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;சட்டை, கன்னம் கை கால் என்று&lt;br /&gt;எங்கும் மண்தீற்றல்களுடன்&lt;br /&gt;இரண்டு கற்களை எடுத்துக்கொண்டு வந்து&lt;br /&gt;இப்பவே வீட்டுக்குப்போய் பச்சை அட்டையை&lt;br /&gt;எடுத்துவரவேண்டும் என்கிறாள் பொறுப்பு வழியும் குரலில்&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்குப்போனதும் அம்மாவிடம்&lt;br /&gt;அப்பா சொன்னார்&lt;br /&gt;இவள் இன்று விளையாடவேயில்லை&lt;br /&gt;&lt;br /&gt;அவள் பெரிதாகத் தலையை ஆட்டி&lt;br /&gt;மறுத்துச் சொன்னாள்&lt;br /&gt;இன்றுதான் தான் நன்றாக விளையாடியதாக&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Nandri solvanam&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1063212169462220406?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1063212169462220406/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1063212169462220406' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1063212169462220406'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1063212169462220406'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2011/10/blog-post.html' title='விளையாட்டு'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-5139092078199315258</id><published>2011-04-02T05:28:00.000-07:00</published><updated>2011-04-02T05:30:08.342-07:00</updated><title type='text'></title><content type='html'>சிங்கப்பூரின் ஐந்து முக்கிய சுற்றுலா இடங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாக்காஷிமயாவுக்குப் பின்புறம்&lt;br /&gt;முச்சந்தியில்&lt;br /&gt;பச்சைவிளக்குக்குக் காத்திருந்த&lt;br /&gt;அவசரமான நேரத்தில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரின்&lt;br /&gt;சிறந்த சுற்றுலா இடங்கள்&lt;br /&gt;ஐந்தை உடனே கூறுங்கள்&lt;br /&gt;தொலைக்காட்சிக்காக&lt;br /&gt;சில அவசரக் கேள்விகளை&lt;br /&gt;எங்கள் நிறுவனம்&lt;br /&gt;சிங்கப்பூரர்களிடம் கேட்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றவாறு&lt;br /&gt;இருவர்&lt;br /&gt;குட்டிக்கருவிகளுடன்&lt;br /&gt;திடீரென்று தோன்றினார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கம்போங் புவங்காக்&lt;br /&gt;&lt;br /&gt;புக்கிட் கோம்பாக் ஆமைகுளம்&lt;br /&gt;&lt;br /&gt;அறிவியல் மையக்கூடத்திற்கு வெளியே&lt;br /&gt;இருக்கும் மரவீடும் அங்குள்ள&lt;br /&gt;அரிநெல்லிக்காய் மரங்களும்&lt;br /&gt;&lt;br /&gt;(எம்பி குதித்து&lt;br /&gt;பறித்துத் தின்றதைப் பற்றிச் சொல்லவில்லை)&lt;br /&gt;&lt;br /&gt;புக்கிட் தீமா மலை&lt;br /&gt;&lt;br /&gt;முதலைப் பண்ணை&lt;br /&gt;&lt;br /&gt;இதுதானா&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம் இவைதான் என்றேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;solvanam 25.3.2011&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-5139092078199315258?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/5139092078199315258/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=5139092078199315258' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5139092078199315258'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5139092078199315258'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2011/04/solvanam-25.html' title=''/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-914469990463650439</id><published>2010-12-05T20:10:00.000-08:00</published><updated>2010-12-05T20:12:25.890-08:00</updated><title type='text'>அன்புள்ள நண்பர்களே</title><content type='html'>என்னுடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு ' மலைகளின் பறத்தல் ' விரைவில் வெளிவர இருக்கிறது என்பதை உங்களிடம் பகிர்ந்துகொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அன்புடன்&lt;br /&gt;மாதங்கி&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-914469990463650439?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/914469990463650439/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=914469990463650439' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/914469990463650439'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/914469990463650439'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2010/12/blog-post.html' title='அன்புள்ள நண்பர்களே'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-2774048558082447569</id><published>2010-11-30T17:49:00.000-08:00</published><updated>2010-11-30T17:50:31.282-08:00</updated><title type='text'>தாமரைப்பழம்  - கவிதை</title><content type='html'>தாமரைப்பழம் போல் இருக்கிறது&lt;br /&gt;தாத்தாவின் முதுகு என்கிறாள்&lt;br /&gt;சாக்கி &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;எதையுமே கண்டுபிடிக்கமுடியாத&lt;br /&gt;என் முகக்குறிப்பையும்&lt;br /&gt; என் உடல் மீதுள்ள&lt;br /&gt;கொப்புளங்களையும்&lt;br /&gt;கணக்கிட்டுக்கொண்டே&lt;br /&gt;வருகிறான்&lt;br /&gt;கற்பாறை இடுக்கில்&lt;br /&gt;பூத்த துளிரில் குடிவந்து&lt;br /&gt;பல நூறு ஆண்டுகளுக்குப்பின்&lt;br /&gt;மாபெரும்  விருட்சம் ஆன பிறகும் &lt;br /&gt;அதிலேயே வசித்து&lt;br /&gt;அருகிலிருக்கும்&lt;br /&gt;மலையின் குறும்பாறைகளை&lt;br /&gt;உண்டும் வாழும்&lt;br /&gt;ஒரு கிம்புருடன்&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அவன் மனித முகத்தையும்&lt;br /&gt;குதிரை உடலையும் கண்டு&lt;br /&gt;குதூகலம் அடைகிறாள் சாக்கி&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;உன் முதுகில் ஏறிக்கொண்டு &lt;br /&gt;வியாபாரம் செய்தால்&lt;br /&gt;நான் ஒப்பிக்கும்&lt;br /&gt;ஆங்கில வாக்கியங்களையும் &lt;br /&gt;அமெரிக்க வெள்ளியில் நான் போடும்&lt;br /&gt;கணக்குகளையும் விடவும்&lt;br /&gt;வேகமாக வெளிநாட்டுப்பயணிகளைக்&lt;br /&gt;கவர்ந்துவிடலாம்,&lt;br /&gt; முடிவில்லா&lt;br /&gt;டோன்லெ சாப் நதிஏரியை விடவும்&lt;br /&gt;பெரிதான கூட்டம் வந்தாலும்&lt;br /&gt;கவலையில்லை&lt;br /&gt;அண்டை வீட்டுத் தோழர்கள்,&lt;br /&gt;தம்பி தங்கைகள் புடைசுழ&lt;br /&gt;அவரவர் பொருள்களுடன்&lt;br /&gt;சேர்ந்துதான் வாடிக்கையாளரிடம்&lt;br /&gt;செல்வோம்&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மூன்று தலையளவு &lt;br /&gt;பெரிய தலையுடன் பிறந்த&lt;br /&gt;என் கடைசித் தம்பியை&lt;br /&gt;அங்கோர் தோம் &lt;br /&gt;நுழைவாயிலோரம் கிடத்திக்கொண்டு&lt;br /&gt;மரச்சாமான்கள் விற்று வரும்&lt;br /&gt;அம்மா இனி கவலைப்பட வேண்டாம்&lt;br /&gt;தாத்தா என்கிறாள்&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;படகு வலித்த கைகளால்&lt;br /&gt;சாக்கியின்&lt;br /&gt;தலையைத் தடவிக்கொண்டே&lt;br /&gt;பார்க்கிறேன்&lt;br /&gt;தாமரைப்பழங்களின் &lt;br /&gt;முத்துக்களைத் தோண்டித்தின்பதைப்போல்&lt;br /&gt;கொப்புளங்களைத் தின்று கொண்டிருக்கிறான்&lt;br /&gt;இந்த கிம்புருடன்&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;சாக்கி எல்லோருக்கும்&lt;br /&gt;ஓரு வியப்பைத்தர தன்னை&lt;br /&gt;ஆயத்தப்படுத்திக்கொண்டு&lt;br /&gt;அமர்கிறாள்&lt;br /&gt;படகுவீட்டிலிருந்து &lt;br /&gt;நீரில் இறங்கி&lt;br /&gt;படகுப்பள்ளிக்கு&lt;br /&gt;இவன் நீந்தி வருவதை&lt;br /&gt;எண்ணி சிரித்தவளாய்&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;(அங்கோர் தோம்- கம்போடியக் கோவில்) &lt;br /&gt; அகநாழிகை&lt;br /&gt;2009.12.01&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-2774048558082447569?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/2774048558082447569/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=2774048558082447569' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2774048558082447569'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2774048558082447569'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2010/11/blog-post_30.html' title='தாமரைப்பழம்  - கவிதை'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1685024361547591162</id><published>2010-11-29T18:01:00.000-08:00</published><updated>2010-11-29T18:02:05.093-08:00</updated><title type='text'>உன்,..</title><content type='html'>உன் காசோலையை&lt;br /&gt;உன்னிடமே திருப்பி அனுப்புகிறேன்&lt;br /&gt;வழிச்செலவுக்கு&lt;br /&gt;சிலவார்த்தைகள்&lt;br /&gt;&lt;br /&gt;முடிந்தால்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1685024361547591162?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1685024361547591162/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1685024361547591162' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1685024361547591162'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1685024361547591162'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2010/11/blog-post_29.html' title='உன்,..'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-248396864667984549</id><published>2010-11-28T16:44:00.000-08:00</published><updated>2010-11-28T16:47:50.785-08:00</updated><title type='text'>அந்த மலர்க் கூட்டம்</title><content type='html'>வீட்டிற்குக் கிளம்பிய தோழியை ஜூரொங் பேருந்து நிலையம் வரை சென்று வழியனுப்ப  என் புளோக்கை விட்டு கீழே இறங்கி பேசியவாறு வந்து கொண்டிருந்த போது,  "குட் ஆப்டர்நூன் ஆண்ட்டி, ஹவ் ஆர் யூ?"   மலர்ந்த முகத்துடன் ஒரு குட்டி மலர்கூட்டம் என்னைப் பார்த்து கேட்க, ஹலோ யங் லேடீஸ், ஐ ஆம் பைன்,  என்று உற்சாகத்துடன் நான் உரைக்க, அவர்களைக் கடந்து சென்ற பிறகு என் தோழி வசந்தி, என்ன மீனா,  இவர்கள் யார், என்று புதிராக வினவினாள். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"இவர்கள் எல்லாம் எனக்குத் தெரிந்த குழந்தைகள், இதோ அருகில் உள்ள உயர்நிலைப்பள்ளியில் படிப்பவர்கள்," என்றேன்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;நான் ஒன்றும் பள்ளி ஆசிரியரோ  பள்ளியில் பெற்றோர் உதவிக்குழுவின் உறுப்பினரோ கிடையாது.  என் குழந்தைகளும் வேறு பள்ளியில் படித்துவந்தார்கள்.  பின் எப்படி இத்தனை பள்ளி மாணவிகள் எனக்கு நட்பாயினர்.  அது ஒரு சுவையான கதை.  சில மாதங்களுக்கு முன் நான் முதுகலைப் பட்டப்படிப்பிற்குச் சேர்ந்து தேர்வுக்காகப்  படித்துக் கொண்டிருந்தேன். வீட்டிலே அறையில் படித்துப் படித்து சற்றே சலிப்பு ஏற்பட்டது.  சிறிது நேரம் எங்கள் அடுக்ககத்தின் கீழ்தளத்தில்  சிமெண்ட்டில் செய்து வைக்கப்பட்டிருந்த மேசை நாற்காலியில் அமர்ந்து காற்றாடப் படிக்கலாம் என்று கீழே புத்தகமும் கையுமாக நான் கீழே வந்திறங்கி வசதியாக அமர்ந்து பாடங்களைப் படிக்கத் துவங்கினேன்.  மணி மதியம் நான்கு இருக்கலாம்.  என் பிள்ளைகள் மாலை ஆறு மணிக்குத்தான் வீடு திரும்புவார்கள்.  &lt;br /&gt;நான் படிக்கத் துவங்கி பத்து நிமிடங்கள் கூட ஆகியிராது, திடீரென்று ஒரு சிறு ஆரவாரம்;  நிமிர்ந்து பார்த்தேன்; ஏழெட்டுப் பெண்குழந்தைகள்,  பள்ளிச் சீருடையில் என்னை நோக்கி,  புத்தகப்பையுடன் வந்து கொண்டிருந்தனர். மலாய், சீன, இந்திய மாணவிகள் என்று கலந்திருந்த நட்பு வட்டம் போலிருந்தது அது.&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;நான் உட்கார்ந்திருந்த பெஞ்சு ஒரு பெரிய அரை வட்டத்தினதாக இருந்தது. அதன்  நடுவில் நான்  அமர்ந்துகொண்டிருந்தேன். நான் தொடர்ந்து படிக்கத்துவங்கினேன். அடுத்த இரண்டாவது நிமிடம் ஓர் அதிசயமான சம்பவம் நிகழ்ந்தது.  உரத்த குரலில் ஏதோ பேசியவாறு என் இரு புறமும் அப்பெண்கள்  சூழ்ந்து அமர்ந்து கொண்டனர்.  ஒரு வேளை அவர்கள் பள்ளி விட்டவுடன் தினமும் இங்கு வந்து அமர்ந்து பேசுவார்கள் போலிருக்கிறது;  சரி, வேறு &lt;br /&gt;எங்காவது  போகலாம் என்று நினைத்தேன்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஹேய், வாட் ஆர் யூ ரீடிங்?" என்று அலட்சியமாக கேட்ட பெண்குழந்தைக்கு பதிமூன்று அல்லது பதினான்கு வயது இருக்கலாம்.  அடுத்த வினாடி மற்றொரு சிறுமி  ஒரு வெண்சுருட்டைப்  பையிலிருந்து எடுத்து என்னவோ மிகவும் பழக்கமானது போல் பற்றவைத்து என் முகம் அருகில் புகையை விட்டாள்.  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அடுத்த வினாடி அங்கிருந்து எழுந்து சென்று &lt;br /&gt;விட வேண்டும் என்ற எண்ணத்தை முதலில் விடுத்தேன்.&lt;br /&gt;மனமே சற்று நிதானமாக இரு என்று பரபரத்த என் மனதிற்கு ஒரு சிறு கடிவாளம் போட்டேன். முகத்தில் ஒரு சிறு புன்னகையை வரவழைத்துக்கொண்டேன்.  எங்களுக்குள் &lt;br /&gt;நிகழ்ந்த உரையாடல் முழுக்க ஆங்கிலம் என்பதால் அதைக் கூடுமானவரையில் தமிழில் உங்களுக்குத் தருகிறேன்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;நான் உற்சாகமான குரலில், "ஹாய் யங் லேடீஸ்,  நான்  பரிட்சைக்குப் படித்துக்கொண்டிருக்கிறேன்; காற்றாடப் &lt;br /&gt;படிக்கலாம் என்றுதான் இங்கு வந்தேன்," நட்போடு புன்னகைத்தேன்.  &lt;br /&gt; &lt;br /&gt;"அலோ,  நான் வின்னி,"  என்றாள்  முதலில் என்னை அதட்டலுடன் விசாரித்த சிறுமி. &lt;br /&gt;&lt;br /&gt;சிறுமிகளில் ஓரிருவர் தத்தம் பெயர்களைச் சொல்லி என்னிடம் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனர். சிலர் ஏதும் &lt;br /&gt;பேசாது இருந்தனர்.  &lt;br /&gt; &lt;br /&gt;"என்ன, பள்ளி விட்டதும் தோழிகளுடன் சந்தோஷமாக அரட்டையா, " வேடிக்கையாகக் கேட்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt; அப்போது என் முகம் அருகில் புகை ஊதிய சிறுமி சற்று நகர்ந்து கொண்டு வெட்கத்துடன் நெளிந்ததை கவனித்தாலும் பார்க்காததுபோல் இருந்தேன்.  &lt;br /&gt; &lt;br /&gt;அடுத்து சில நிமிடங்களில் அவர்கள் ஏழு பேரும் தத்தமது பெயரைக் கூறி, தங்கள் வகுப்பு, தங்கள் வீடு எங்கிருக்கிறது என்றெல்லாம் சொல்லி, தங்களை அறிமுகப்படுத்திக்கொண்டனர். &lt;br /&gt;உயர் நிலை ஒன்று படிக்கிறார்களாம்.  பள்ளி நேரம் முடிந்த பின் இங்கு அல்லது எதாவது ஓர் இடத்தில் அரட்டை அடித்துவிட்டுத் தான் போவார்களாம்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;என்ன படிக்கிறீர்கள் ? &lt;br /&gt; &lt;br /&gt; இலக்கியம்&lt;br /&gt; &lt;br /&gt;உங்களுக்குத் திருமணமாகி விட்டதா, கணவர் என்ன செய்கிறார், வேலைக்கு போகிறீர்களா,  சரமாரியான கேள்விகள்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"எங்களுக்குத்தான் வேறு வழியில்லை,  நீங்கள் எதற்கு படித்துக் கஷ்டப்படுகிறீர்கள். வேலைநேரத்திற்குப் பின் &lt;br /&gt; ஷாப்பிங், டி.வி. என்று நேரத்தைச் செலவழிக்கலாமே?" இது கேத்தி&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"இந்த வயதில் எதற்குப் படிக்கிறீர்கள்"- இது அனிதா&lt;br /&gt; &lt;br /&gt;"நான் புகைப்பதை நீங்கள் ஆட்சேபிக்கப் போகிறீர்களா?- செல்வி ஐயத்துடன் கேட்டாள்.  அவள் பின்னால் இருந்த&lt;br /&gt; ரீகா அடுத்த வெண்சுருட்டை எடுத்துக்கொண்டிருந்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"கட்டாயம் ஆட்சேபிக்க மாட்டேன்.  ஏனென்றால் நீங்கள் உடலுக்கு கேடு விளைவிக்கும் என்பதை அறியாதவர்கள் அல்ல;  உங்களுடன் பேசியதில் நீங்கள் புத்திசாலிக் குழந்தைகள் என்பதை அறிந்து கொண்டேன்;  நீங்கள் ஏதோ ஒரு விதத்தில் உங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க விரும்பித்தான்  இப்படிச் செய்கிறீர்கள் என்று எனக்குத் தோன்றுகிறது, " சிறு புன்னகையுடன் நிதானமாகக் கூறினேன். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஆம், சரிதான், நீங்கள் கண்டுபிடித்து விட்டீர்கள் ஆண்ட்டி, என்றார்கள் ரிகானாவும் பர்வீனும்.  எங்கள் வீட்டில் இன்று காலை பெரிய சண்டை,  என்னை அவர்கள் தங்கள் இஷ்டப்படி &lt;br /&gt;நடந்துகொள்ளவேண்டும் என்று கூறுகிறார்கள்;  என்ன அநியாயம் &lt;br /&gt;தெரியுமா?"  ஒருத்தி பொருமத்துவங்கினாள்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அவள் மேலே பேசியதிலிருந்து நான், அவர்கள் என்ற அவள் அருமைத்தாயையும் தந்தையையும் குறிப்பிடுகிறாள் என்பதை அறிந்துகொண்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"நீ சுதந்திரத்தை எதிர்பார்க்கிறாய் இல்லையா?"&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஆமாம்," என்று அவள் மட்டுமன்றி எல்லோரும் ஒட்டுமொத்தமாக தலையாட்டினார்கள்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"எப்போதுபார்த்தாலும் படி, படி, படி,  இன்னும் கூடுதல் மதிப்பெண் வாங்கு-   தொலைக்காட்சிப் பார்க்காதே,  கணினியில் விளையாடிக்கொண்டே இருக்காதே,  என்று சதா ஒரு தொணதொணப்பு;  அவர்கள் மட்டும் நன்றாக பார்க்கிறார்கள்,  நாங்கள் துறவி மாதிரி இருக்க வேண்டுமாம்."&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"வீட்டில் இருக்கும் நேரம் முழுதும் ஒரே டார்ச்சர்;  அவள் இப்படி படிக்கிறாள்,  இவன் இவ்வளவு  மதிப்பெண் &lt;br /&gt;வாங்குகிறான்,  உனக்கு என்ன கேடு- இன்னும் நிறைய பயிற்சித் தாள் செய்து பழகு; ஆயிரம் கணக்கு போட்டால் தான் நூற்றுக்கு நூறு வாங்கலாம்-   இது கேத்தி, வின்னி, செல்வி, பர்வீன், அனிதா, ரீகா, ரீகானா என்று எல்லோரும்  ஒட்டு மொத்தமாக மூக்கால் அழுதார்கள்".  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"கொஞ்சம் படிப்பைப் பற்றி பேசுவதை நிறுத்தி விட்டு வேறு எதாவது பேசலாமா?"&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;சட்டென்று எல்லார் முகமும் பிரகாசம் அடைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;"உங்களுக்கு பள்ளிக்கூடம் போகும் குழந்தைகள் இல்லையா ஆண்ட்டி?-" ஒரு துடுக்குக்காரியின் கேள்வி.  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"இருக்கிறார்கள். உங்கள் வயதுதான்,  அதனால் தான் உங்களுடன் பேச எனக்கு ஆர்வம் இருக்கிறது" &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அதற்குள் இரண்டு இளசுகள் களுக்கென்று சிரித்துக்கொண்டனர். " ஏ, சொல்லாதே, சொல்லாதே",  அனிதா &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;கண்சாடைகாட்டினாள்.  மற்றொருவள் " ஆண்ட்டி, உங்களை இந்த பெஞ்சில் பார்த்தவுடன், இங்கிருந்து உங்களை அனுப்பிவிட்டுத்தான் &lt;br /&gt;மறு வேலை என்று பேசிக்கொண்டாள் இவள்," &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"அப்படியா?  சரி உங்களில் யார் யாருக்கு படிப்பைத் தவிர வேறு விஷயங்களில் அதாவது விளையாட்டு,   நாடகம், பாட்டு, ஓவியம் &lt;br /&gt;முதலியவற்றில் ஆர்வமுள்ளது; அதெயெல்லாம் சொல்லுங்கள் பார்க்கலாம்"&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"எனக்கு சீன டிபேட்( சொற்களம்) என்றால் உயிர்" -துள்ளினாள் வின்னி.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"இவள் சென்ற ஆண்டு இறுதிச் சுற்று வரை போனாள்,  கடைசியில் பரிசு கிடைக்கவில்லை தோற்றுவிட்டாள்," என்றாள் பக்கத்திலிருந்த கேத்தி;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; பளிச்சென்றிருந்த வின்னியின் முகம் உடனே வாடிச் சோர்ந்து போனது.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"என்ன இறுதி சுற்று வரை சென்றாளா?" குரலில் குதூகலத்துடன் வியப்பையும் வரவழைத்துக்கொண்டேன்.  வரவழைத்துக்கொண்டேன் என்று சொல்லுவதுகூட சரியன்று, உண்மையிலேயே எனக்கு வியப்பாக இருந்தது;  &lt;br /&gt;மேடையில் ஏறினாலே எனக்கு கைகால்கள் மிகவும் உதறல் எடுக்கும்.  பரவாயில்லை இந்த சிறுமிக்கு நல்ல துணிவுதான். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; "மேடையில் ஏறி  பேச முதலில் மேடைதைரியம், வார்த்தைகளை சரியாக பயன்படுத்தும் திறன் எல்லாம் வேண்டும்.  &lt;br /&gt;அதிலும் சொற்களம் போன்ற தொடர் பேச்சுப்போட்டியில் நீ இறுதிச்சுற்று வரை வந்துள்ளாய் ,  நீ பெரிய திறமைசாலிதான் வின்னி; இந்த சிறு வயதில் மூன்று சுற்றுகளில் வென்றிருக்கிறாய் ".&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஊம்,  என்ன செய்வது எல்லாம் என் விதி, உங்களைப் போன்ற அம்மா எனக்கு கிடைத்திருக்கக்கூடாதா; நான்  &lt;br /&gt;தோற்றுவிட்டு வந்தவுடன் என் அம்மா என்ன சொன்னார்கள் தெரியுமா?  எனக்கு தெரியும், நீ சொற்கள பயிற்சி  வகுப்புக்குச் சென்றதெல்லாம் வீண்வேலை;  முதலில் இந்த வெட்டித்தனத்தை நிறுத்து, படிப்பை ஒழுங்காகப் படி,  &lt;br /&gt;என்றார்கள், "  என்று கூறி நான் சற்றும் எதிர்பாராத வண்ணம் அழத்துவங்கினாள்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;பதினான்கு வயதுச் சிறுமி பேசுவதைக் கேட்டு நான் முதலில் அதிர்ந்து போனாலும் என் மனம் அந்தக்குழந்தைகாக வருந்தியது நிஜம். தோற்றதற்காக அல்ல, அந்த தோல்வியில் குழந்தைக்கு தோள் கொடுக்க பெற்றோர் தவறலாமா?  என்றாலும்,  நினைத்ததை  நான் உடனே சொல்லவில்லை;  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;சில வினாடிகள்  கழித்து நான், "வின்னி, நீ,  பரிசு வாங்காத ஏமாற்றத்தில்தான் அம்மா திட்டினார்கள் என்று நினைத்துக்கொண்டு நீ சற்று நேரம் வேறு வேலையில்  உன்னை ஈடுபடுத்திக்கொண்டிருப்பாயே, " என்று மென்மையாக கேட்டேன்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;வின்னி தலையை குனிந்துகொண்டாள்;  "இல்லை ஆண்ட்டி, நான்  அறைக்கதவை அறைந்து சார்த்திவிட்டு, கோபத்தில் கத்திக்கொண்டிருந்தேன்;   அப்புறம் என்ன அடிக்கடி சண்டை வருகிறது, இது இல்லை என்றால் அது  மொத்தத்தில் எப்படியோ சண்டை எதற்காகவோ வந்துவிடுகிறது ".&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஊருக்குத்தான் உபதேசம்,  நான் பல் விளக்காமல் காபி குடித்ததற்கு உடல்நலக்கேடு வரும் என்று  என் அப்பா என்னை கன்னத்தில் அறைந்தார்.  அவர் சங்கிலித்தொடர்போல் புகை பிடிக்கிறார். இது தவறில்லையா?  இப்போது நான் &lt;br /&gt;புகைபிடிக்கிறேன், என் அப்பாவால் எதுவும் செய்ய இயலாது"  இது ரீகா&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஒருநாள் ஜாக்கிசான் படத்தின் திரைக்கதையை இவளுடன் பேசிக்கொண்டே இருந்ததால்  வீட்டிற்கு நேரம் கழித்துப் போனேன்;  நான் ஆனமட்டிலும் கெஞ்சியும் என் அம்மா நம்பவில்லை எவ்வளவு கேவலமாக பேசினார்கள் தெரியுமா நான்  ஆண் சினேகிதனுடன் சுற்றிவிட்டு வந்து பொய் சொல்கிறேனாம் ;  நட்பு என்றால் என்ன என்பதே, இவர்களுக்குத் &lt;br /&gt;தெரியாது, அப்புறம்தானே ஆண்பெண் வித்தியாசமெல்லாம் " -செல்வியின் கண்ணில் கண்ணீர்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;மாறி மாறி அந்த குழந்தைகள் தங்கள் குமுறல்களை கொட்டக் கொட்ட நான் அதிர்ந்து போனேன். பால்வடியும் இந்த முகங்களுக்குள் இத்தனை போராட்டமா?&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஆண் நண்பர்களிடம் பழகுவது தவறா ஆண்ட்டி?"&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஆணோ பெண்ணோ, உங்கள் நெருங்கிய நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களையும் முடிந்தால்  அவர்கள் &lt;br /&gt;குடும்பத்தினரையும்  உங்கள் பெற்றோருக்குத் தெரிந்திருந்தால் நலம் "&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஆண்ட்டி எங்களையெல்லாம் கெட்டகாரியம் செய்யும் பெண்கள் என்றுதானே &lt;br /&gt;நினைக்கிறீர்கள் உண்மையைச் சொல்லுங்கள்".&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;நான் என் முகத்தில் புன்சிரிப்பைத் தவழவிட்டேன்; " உண்மையைச் சொல்லுகிறேன்.    நான் சொல்லி முடிக்கும் வரை நீங்கள் பொறுமையாக கேட்க வேண்டும்".&lt;br /&gt;&lt;br /&gt;"நீங்கள் எல்லோரும் டீசண்டான குழந்தைகள்; புத்திசாலிகள், குறிப்பாக எதையாவது செய்ய வேண்டும் சாதிக்க வேண்டும் என்ற வேகம் இருப்பவர்கள், " என்றவாறு மெதுவாக நிறுத்தினேன்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அவர்கள் முகத்தில் ஆச்சரியம் மட்டுமின்றி ஒரு கெஞ்சுவதுபோல் பார்வை, பாருங்கள் மூன்றாம் மனிதரான நீங்கள்கூட எங்களை சரியாகப் புரிந்துகொண்டுவிட்டீர்கள்,  என்பது போல்...&lt;br /&gt; இந்தக் கதையை கேட்கும் நீங்கள் நிச்சயம் நம்புவீர்கள் என்று நினைக்கிறேன். அந்தக் குழந்தைகளின் கண்களில் புத்தொளியைப் பார்த்தேன். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; "உங்கள் சாதனைக்காக காத்திருப்பது உங்கள் பெற்றோர் மட்டுமல்ல குழந்தைகளே,...".&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"நீங்களா ஆண்ட்டி?" -அதே துடுக்குக்காரியின் குறும்பு விடவில்லை&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஆமாம் பின்னர் இல்லையா?  நீங்கள் என் நண்பர்கள் அல்லவா;  என்னை விட  இன்னும் பெரியது"  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"வேறு யார் ஆண்ட்டி, எங்களுக்காக காத்திருப்பது?"&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"தோழிகளே நம்நாடுதான் அது.  வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்;  உங்களைப் போன்ற துடிப்பும் ஆர்வமும் உள்ள இளையர்கள் கையில்தானே நாம் சிங்கப்பூர் இருக்கிறது," &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"நான் என்ன செய்துவிட முடியும் ஆண்ட்டி?"&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;'சொற்களம் என்ற சக்கர வியூகத்துக்குள் நுழைந்த வின்னி நாள் ஒரு பெரிய வழக்கறிஞர் ஆகலாம்.  பூப்பந்தைப் &lt;br /&gt;பொழுதுபோக்கிற்காக விளையாடும் கேத்தி அதில் தனிக்கவனம் செலுத்தினால், நாடு ஒரு பூப்பந்து தாரகையைப் பெறலாம், மேலும் பூப்பந்து பயிற்றுவிப்பாளராகலாம், இதோ இடையிடையே நகைச்சுவையோடும் &lt;br /&gt;சாதூர்யமாகவும்  கேள்வி கேட்கும் அனிதா பத்திரிகை நிருபராகவோ  ஆசிரியராகவோ வரலாம்.  ரீகா மருத்துவராகலாம், செல்வி ஓவியராகலாம் கணிப்பொறியில் கேலிசித்திரங்கள் வடிவமைத்து சிறந்த கலைப்படம் உருவாக்கி விருது வாங்கலாம்,&lt;br /&gt;குறும்படங்கள் எடுக்கலாம்,  பாட்டில் ஆர்வமுள்ள ரீகானா காராவோக்கே முறையில்   இன்னும் பயிற்சிசெய்து பாடகி ஆகலாம், எழுத்திலும் வாசிப்பிலும் ஆர்வமுள்ள பர்வீன் &lt;br /&gt;சிறந்த எழுத்தாளராகி பல புத்தகங்கள் எழுதலாம்'&lt;br /&gt;அவர்கள் என் மதிப்பீட்டைக் கேட்டு வியந்து போய் பேச்சடைந்து போய்விட்டார்கள். &lt;br /&gt;"தனித்திறமை என்பது ஒவ்வொரு குழந்தைக்கும்  கட்டாயம் இருக்கும்.  உங்களது  தனித்திறமைகள் உங்களுக்கு தெரிந்திருப்பது உங்கள் கெட்டிக்காரத்தனத்தைக் காட்டுகிறது. அதை வளர்த்துக்கொள்ளுங்கள்.  படிப்பு என்பது அடித்தளம்;  தேவையானால் கூடுதல் பயிற்சிக்குச் செல்ல ஆசிரியர் பெற்றோர் உதவியை &lt;br /&gt;நாடுங்கள், அது உங்களுக்கு ஏற்ற  பாதையைத் தேர்ந்தெடுக்க  வழிகாட்டும்".  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"இதோ  நான் பார்க்கத்தான் போகிறேன்.  உங்கள் ஒவ்வொருவரிடமும் &lt;br /&gt;ஒரு சாதனையாளர் இருக்கிறார்.  அது நமது நாட்டுக்குத் தேவை.  சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை படித்துப்பாருங்கள்,  அவர்களுக்கும் பல தடைகள், அவமானங்கள், கஷ்டங்கள் ஏற்பட்டிருக்கின்றன.  சரித்திரம் &lt;br /&gt;படியுங்கள் சரித்திரம் படைப்பீர்கள் இது நிச்சயம்.  எனக்கு உங்கள் மீது நம்பிக்கை இருக்கிறது.&lt;br /&gt;  எந்த இடர் வந்தாலும் அறிவையும் மனதையும் கலந்து ஆலோசித்து முடிவுக்கு வர வேண்டும் ".  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"நாங்கள் சாதாரண மாணவிகள் ஆண்ட்டி, நாங்கள் பாடங்களில் தொண்ணூறு நூறு எல்லாம் வாங்கியதில்லை;  எழுபது அறுபது சில சமயம் ஐம்பது, சில சமயங்களில் தோற்றுக்கூட இருக்கிறோம் "-இது செல்வி&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"சாதனை மாணவி அல்லது மாணவன் என்று யாரும் பிறப்பதில்லை குழந்தைகளே;    சாதாரண மாணவிதான் சாதனை மாணவி ஆகிறாள்;  என்னால் முடியும், எங்களால் முடியும், நம்மால் முடியும் என்று &lt;br /&gt;நம்புங்கள்;   உங்களால் எதுவும் முடியும்.  மாணவர் சக்தி மகத்தான சக்தி".   "நாட்டுக்கு உங்களைப்போன்ற துடிப்பான இளம் கைகள் தேவை தெரியுமா.  ஒரு நல்ல  நட்பு வட்டத்துள் இருக்கிறீர்கள்;  உங்கள் திறமைகளை வளருங்கள். வருங்கால  சிங்கப்பூருக்கு நீங்கள் வளம் சேர்க்க வேண்டும்"  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"கட்டாயம் ஆண்ட்டி, நான் நாட்டுக்கு பயனுள்ளவர்களாக இருப்போம்",  என் கைகளைப் பிடித்துக்கொண்டு கண்ணீர் சொரிந்த அந்த மலர்கூட்டத்தில் நானும் கண்கலங்கிப் போனேன்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"ஆண்ட்டி,  வீட்டில் தினசரி சண்டை வராமல் இருக்க வேண்டும் என்று நினைத்தாலும் வருகிறது, அதற்கு நாங்கள் என்ன செய்வது?"&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;நிமிர்ந்து பார்க்கிறேன்,  வாஸ்தவமானக் கேள்விதான்.&lt;br /&gt;இந்தக் குழந்தைகள் என்னிடம் கொட்டிய தங்கள் வாழ்க்கைப் பிரச்சனைகளை மனதினுள் நினைவு கூர்ந்தேன். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"உங்கள் அம்மாவும் அப்பாவும் உழைப்பது நீங்கள் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்குத்தான்,  வேலைப் பளு காரணமாக அவர்கள் எதாவது கோபத்தில் சொன்னால் பெரிதாக எடுத்துக்கொள்ளாதீர்கள்.  பெற்றோரிடம் உங்கள் அன்பை அடிக்கடித்  தெரிவியுங்கள்.  உங்கள் அம்மா அப்பாவிற்கு எதாவது ஆபத்து என்றால் எப்படி துடித்துப்போவீர்கள்?"&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"சரியாக சொல்கிறீர்கள், ஆண்ட்டி, என் அம்மாவிற்கு சென்ற ஆண்டு விடுமுறையில் ஒரு சிறு அறுவைச்&lt;br /&gt;சிகிச்சை நடந்தபோது நான்தான் பொறுப்பாக வீட்டில் இருந்து தம்பிப்பாப்பாவைப் பார்த்துக்கொண்டேன்.  என் அம்மா &lt;br /&gt;வீடு திரும்பியவுடன் என்னைக் கட்டிக்கொண்டு அழுதார்கள்-" இது கேத்தி&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;"உன் அம்மா உங்கள் வீட்டிற்குத் தானே இரவு ஷிப்ட்டை ஏற்றுக்கொண்டு அயராது உழைக்கிறார்.  உன் தந்தை இரண்டு இடங்களில் பணிபுரிவதாகச் சொன்னாய் ரீகா;  உங்களுக்கு கைச்செலவுக்குக் கூட பணம் தாராளமாகக் கொடுக்கப்படுகிறது.  அதை புகைப்பதற்கு செலவழிப்பதா, அல்லது நல்ல வழியில் செலவழிப்பதா என்பது உங்கள் கையில் உள்ளது.  வளமான விதைகளே வளமான விருட்சங்களைத் தரும்"  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;"ஆண்ட்டி, இனி நாங்கள் ஒரு குறிக்கோளை வைத்துக்கொண்டு செயல்பட போகிறோம்" என்று என்னிடம் உறுதி கூறியது மட்டுமல்லாமல் அடுத்து சில நாட்கள் கழித்து அவர்களை நான் பூங்காவில் சந்தித்த போது ஓடி வந்து தங்களது சிறு சிறு முன்னேற்றங்களைக் கூட தெரிவித்தார்கள்.   வளமான விதைகள் வளமான விருட்சங்களைத் தரும் என்பது உண்மை ஆண்ட்டி; சரித்திரம் படைப்போம்;  சாதனை புரிவோம்  என்று அவர்கள் ஒருமித்த குரலில் கூறிய போது அவர்கள் கண்களிலும் அந்த உறுதியைக் கண்டு மனம் பூரித்தேன். இதுதான் நடந்த கதை.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;தோழியை அனுப்பிவிட்டு வீட்டுக்குள் விரைந்தேன்.  என் மகள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தாள்.  தோழி வந்தபோது பார்க்கத் துவங்கியவள்  இன்னுமா அணைக்காமல் இருக்கிறாள்,  எனக்கு கோபம் சுறுசுறுவென்று தலைக்கு ஏறியது.  இத்தனை நேரமா தொலைக்காட்சியா, இதுல காட்டுற அக்கறைய படிப்புல காட்டு, என்று கோபத்துடன் இரைந்துவிட்டு பட்டென்று தொலைக்காட்சியை அணைத்தேன்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-248396864667984549?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/248396864667984549/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=248396864667984549' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/248396864667984549'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/248396864667984549'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2010/11/blog-post_5257.html' title='அந்த மலர்க் கூட்டம்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-4825862062117135431</id><published>2010-11-28T03:28:00.000-08:00</published><updated>2010-11-28T03:29:26.111-08:00</updated><title type='text'>இருப்பது என்று நினைப்பதூஉம்</title><content type='html'>நான் இருக்கிறேன்&lt;br /&gt;உனக்கு என்கிறேன்&lt;br /&gt;நான் இருக்கப்போவதில்லை&lt;br /&gt; &lt;br /&gt;நீயிருக்கிறேன் என்கிறாய்&lt;br /&gt;நீயும் இருக்கப்போவதில்லை&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;நமக்கு இன்னென்ன&lt;br /&gt;இருக்கின்றன&lt;br /&gt;சொல்லப்படுகிறது&lt;br /&gt;அவையும் இருக்கப்போவதில்லை&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;இருந்துகொண்டிருக்கும்&lt;br /&gt;இந்தக் கணம்&lt;br /&gt;இல்லாததை&lt;br /&gt;இருப்பதாக்குகிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-4825862062117135431?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/4825862062117135431/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=4825862062117135431' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4825862062117135431'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4825862062117135431'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2010/11/blog-post_28.html' title='இருப்பது என்று நினைப்பதூஉம்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-5514657327528018644</id><published>2010-11-21T15:51:00.000-08:00</published><updated>2010-11-21T15:55:20.673-08:00</updated><title type='text'>சாதாரண மனிதன்</title><content type='html'>இளநீர்க்காயை அப்படியே ஒருபக்கம் வைத்துவிட்டு தேவி ஆயாசத்துடன் உட்கார்ந்துகொண்டாள். வீட்டிலிருந்த மூன்று கத்திகளையும் ஒவ்வொன்றாகப் பயன்படுத்தி, குத்திக்குத்திப் &lt;br /&gt;பார்த்தாகிவிட்டது.  எதற்கும் மசியாமல் இருக்கிறது இந்த இளநீர்க்காய். &lt;br /&gt; &lt;br /&gt;டுயிட் , டுயிட்&lt;br /&gt;முன்னறை சன்னலில் மைனாவின் குரல் கேட்டது.  வேறொரு சமயமாக இருந்தால் இரண்டு வயது  குழந்தை தூரிகா, அம்மா அம்மா என்று மெல்ல விரலை  வாய்மேல் வைத்து அவளை எச்சரித்தபடி மெதுவாக அழைத்து வந்து காட்டியிருப்பாள். இல்லை கலகலவென்று சிரித்துக்கொண்டும் பேசிக்கொண்டும் இருக்கும் சமயம் என்றால், அம்மா உன்னைப் பாக்க மைனா வந்திருக்கு என்பாள்.  இரண்டுக்கும் ஆன சமயம் இது இல்லை.  குழந்தை&lt;br /&gt; இத்தனை நேரம் அவள் மடியை விடாமல், அனத்திக்கொண்டிருந்துவிட்டு சிறிது பொழுதுக்கு முன்னர்தான் தூங்கியது.  அலுங்காது அதன் சிறிய படுக்கையில் கிடத்தியவள் இப்போது இந்த இளநீருக்காக ஒரு சிறு போராட்டம் நடத்திக்கொண்டிருந்தாள். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; விடியற்காலையிலேயே சோர்வுடனும் லேசான காய்ச்சலுடன் இருந்த குழந்தையை அவள் வழக்கமாக செல்லும் வீட்டுக்கருகில் இருந்த மருத்துவர் வாங்'கிடம் பிராம் வண்டியில் குழந்தையை வைத்து அழைத்துக்கொண்டு போனாள்.  மணல்வாரியாக&lt;br /&gt;இருக்குமோ என்று தோன்றியது. மருத்துவர் பொது சோதனைகள் எல்லாம் செய்துவிட்டு ரோசியோலா தொற்று என்று சொல்லிவிட்டு  இரண்டொரு நாளில் தானாக சரியாகிவிடும் என்றவாறு மருந்தை கையோடு கொடுத்திருந்தார்.  இளநீர் கொடுக்கலாமா என்று கேட்டதற்கு தாராளமாக கொடுங்கள், முடிந்தவரை திரவங்களை சிறு இடைவேளைகளில்&lt;br /&gt;குழந்தை விரும்பும் அளவு கொடுங்கள், இச்சமயத்தில் திடஉணவை குழந்தை அவ்வளவாக &lt;br /&gt;விரும்பாது என்று சொல்லிவிட்டு சில பொதுவான அறிவுரைகளைக் கூறியிருந்தார்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;குழந்தையைத் தனியாக  வீட்டில் விட்டுவிட்டு கடைக்குச் செல்ல முடியாது என்பதால் வரும்வழியிலேயே 'ஷாப் அண்ட் சேவ்' இல் நான்கைந்து இளநீர்க்காய்க்களை வாங்கி அப்படியே குழந்தைவண்டியின்  அடிக்கூடையில் வைத்துத் தள்ளிக்கொண்டு வந்துவிட்டாள்.  நாராயணன்  வீட்டுக்குத்தேவையான காய்கறி பழங்கள் முதலியவற்றை வாங்கிப்போட்டுவிட்டுதான் அலுவலக வேலையாக கொரியா சென்றிருந்தான்.  பொதுவாக ஷாப் அண்ட் சேவ் இல் 'டாப் ஆ·ப் கோகனட்' என்ற வகை கிடைக்கும் அதில் இளநீர்க்காயின் மேல்பகுதியில் உள்ளங்கையளவில் ஒரு சிறு வட்டக்குறி காணப்படும்.  ஒரு சாதாரணக்கத்தியால் அதை கீறினாலே திறந்துகொண்டுவிடும். சோதனையாக இன்று அந்த வகை இல்லை எப்போதும் கிடைக்கும் மற்றொரு வகையே இருந்தது. எப்படியும் வீட்டில் இருக்கும் கத்தியால்    திறந்துவிடலாம் என்று எண்ணியே அதை வாங்கி வந்திருந்தாள். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;குழந்தை காலையில் பாலைக் கண்ணில் பார்த்தாலே வேண்டாம் வேண்டாம் என்றது.  பாதி ரொட்டி சாப்பிட்டுவிட்டு போதும் என்றுவிட்டது. அவள் எப்படியோ தாஜா பண்ணி சிறிது குளூக்கோஸ் கலந்த &lt;br /&gt;நீரை புகட்டிவிட்டாள்.  சிறிது நேரம் கழித்து கண்விழிக்கும்போது எப்படியாவது இளநீரைக் கொடுத்துவிடவேண்டும் என்று அவளும் படாதபாடு பட்டாள், ஒரே இடத்தில் குத்திப்பார்த்தாள், வேறு மென்மையான இடம் தேடி குத்திப்பார்த்தாள் ஒன்றும் பலிக்கவில்லை.  யாரிடமாவது கேட்கலாம் என்றால் யாரிடம் கேட்பது, அவர்கள் தங்கியிருந்த அடுக்ககத்தின் பதினொரு தளங்கள் மட்டுமல்ல அருகில் இருக்கும் அடுக்ககங்களிலும் காலை பத்துமணிக்கு ஒரு பயங்கரமான மௌனம் கவ்வி விடும். ஒரு தளத்திலாவது மனித நடமாட்டம் காணப்படாது.  சிங்கப்பூரில் பெரும்பான்மையான வீடுகள் இப்படித்தானோ என்று தோன்றியது.  காலை அவரவர் அலுவலகம், பள்ளிக்கூடம் என்று விடியற்காலையில் கிளம்பிவிட்டால் அவர்கள் அடுக்ககத்தின் மின்தூக்கிக்கு வேலையே இல்லை.  மதியம் இரண்டு அல்லது மூன்று மணிக்கு ஏதேனும் பள்ளிக்குழந்தைகள் தென்படுவர்.  வீட்டில் முதியவர்களோ, பணிப்பெண்களோ இருக்கும் வீடுகளைத் தவிர வேறெல்லாம் வெறிச்சோடிக்கிடக்கும்.  நான்கைந்து ப்ளோக் தாண்டி நாராயணனின் நண்பர்கள் ராமு மற்று பெஞ்சமின் வீடு உள்ளது. ஆனால் &lt;br /&gt;இந்நேரத்தில் அவர்கள் வீட்டிலும் யாரும் இருக்கமாட்டார்கள். அவளுடைய வேறு சில&lt;br /&gt; நண்பர்கள் சிங்கப்பூரில் வெவ்வேறு வட்டாரங்களில் இருப்பவர்கள்.  இளநீரைத் திறக்க எங்கு எடுத்துக்கொண்டு ஓடுவது.  இதுபோல் சொகுசுக்கடைகளில் வாங்கினால் எங்கு&lt;br /&gt; திறப்பது.  ஒருவேளை  வீட்டில்  பெரிய கத்தி அல்லது அரிவாள் போல் ஏதேனும் இருந்திருந்தால் திறக்க முடியுமோ. என்ன செய்வது, இரண்டு உள்ளங்கை விரல்களையும் நேருக்கு நேராக பொருத்தி வளைத்து நெட்டி முறித்தாள்.  குத்திக்குத்திப் பார்த்து  கைவலிதான் மிச்சம். வேலை ஆகவில்லை. ஒருவேளை கோகனட் ஜூஸ் என்ற பெயரில் கடையில் அலுமினிய டின்களில் அடைத்துவைத்திருந்த இளநீரை வாங்கியிருக்கலாமோ, சே சே, முடிந்தவரை டின்னில் அடைக்கப்பட்ட உணவுகள் பானங்கள் இதெல்லாம் வாங்குவது வேண்டாம் என்று வைத்திருக்கிறாள். திடீரென்று பக்கத்து ப்ளாட்டின் இரும்புக்கம்பிக்கதவு சாவியால் வேகமாகத் திறக்கப்படும் ஓசை கேட்டது, தொடர்ந்து மரக்கதவு திறக்கும் ஒலியும் பின் கதவு அறைந்து சார்த்தப்படுவதும் அந்த துல்லியமான அமைதியைக் கிழித்துக்கொண்டு கேட்டது.  தேவி சட்டென்று எழுந்து நேராக படுக்கையறைக்குச் சென்று தூங்கும் குழந்தை அருகில் அமர்ந்துகொண்டாள்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அவன்தான், அவனேதான். அவளுக்கு எரிச்சலும் கோபமும் சேர்ந்து வந்தது.  அவர்கள் இந்த வீட்டுக்கு வந்தபுதிதில் பக்கத்துவிட்டில் குடியிருந்த சீனக்குடும்பத்துடன் ஓரளவும் முகமன் சொல்லும் அளவுக்கும் ஓரிரு வாக்கியங்கள் வாரயிறுதியில் பேசுவதுமாக இருந்தாள். பெரும்பான்மையான சீனர்கள் குறைவாகப் பேசிக் கடுமையாக உழைப்பவர்கள் என்று ஒரு கருத்தும் அவளுக்கு இருந்தது. இரு மாதங்களுக்கு முன் அந்தக்குடும்பம் வீட்டைக்காலிசெய்துவிட்டு காண்டோமினியத்திற்குச் சென்றபின் திடீரென்று ஒரு நாள் பக்கத்துவீட்டு முன்வாயிலில் ஒரு சீன இளைஞனைப் பார்த்தாள், அப்படியே ஹாங்காங்கில் இருக்கும் அவள் தம்பி கணேசனின் வயது இருக்கும். முழுக்கை சட்டையும் முழுகால்சட்டையும் கழுத்துப்பட்டையும் அணிந்துகொண்டு அலுவலகத்திற்குக் கிளம்பிக்கொண்டிருந்தான்.  வேறு யாரும் வீட்டிலிருப்பதாகத் தெரியவில்லை. அவளே சற்று அமைதியான சுபாவம், பார்த்தவரை சினேகம் செய்துகொண்டு கலகலப்பாகிவிடும் சுபாவம் என்று சொல்லமுடியாது ,  நாராயணன் அவளைவிட இன்னும் குறைவாகவே பேசுபவன்.  இதற்கு ஏற்றாற்போல் இங்குள்ள பெரும்பான்மையான வீட்டுமனிதர்களும் தானுண்டு தன்வேலை உண்டு என்று இருப்பவர்கள். மின்தூக்கியில் கூட வெவ்வேறு திசைபார்த்துக்கொண்டு பயணம் செய்யும் அளவிற்குத் தலையிடாதவர்கள்.  மின்தூக்கியில் ஏறுவதும் இறங்குவதும் கூட பயணம்போல்தான், ஏதேனும் குட்டிக்குழந்தையின் கையசைப்பு இறுக்கத்தைக் குறைக்காதவரை, கனத்த மௌனம் கவ்வும் போதும் ஒவ்வொரு நொடியும் நீண்டதாகத்தோன்றுவது இயல்புதானே. அவனைப்பற்றி கிட்டத்தட்ட மறந்துவிட்டிருந்தாள்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;  ஒரு ஞாயிறு இரவு, அவள் வாரயிறுதியில் செல்லும் பகுதிநேர முதுகலைவகுப்பு &lt;br /&gt;முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தாள். வீட்டில் தூரிகாவுடன் நாராயணன் இருந்தான்.  அவர்கள் அடுக்ககத்தின் கீழ்த்தளத்தில் நின்றுகொண்டு,  மின்தூக்கியில் அவர்கள் வீடு இருக்கும் பத்தாம் தளத்திற்கு ஏற அவள்  உள்ளே நுழைந்தபோது பக்கத்துவிட்டு &lt;br /&gt;இளைஞனும் வேகமாக நுழைந்துகொண்டான்.   அது மறக்கமுடியாத ஒரு நினைவைத் தரப்போகிறது என்று அவள் அப்போது அறியவில்லை.  ஏதோ ஒரு பனியனும் பெர்முடாசும் அணிந்திருந்தான். பெரிய முதுகுப்பை ஒன்றை சுமந்துகொண்டிருந்தான்.  கதவுகளை மூடச்செய்யும் பொத்தானை அவள் அமுக்க கைநீட்டும்போது தற்செயலாக அவனும் கைநீட்ட, அவன் கையைப் பார்த்த தேவி திடுக்கிட்டுப்போனாள்.  அவனோ அவளை கவனிக்காமல்  அதை அமுக்கிவிட்டு, மின் தூக்கியில் அவர்கள் இருவர் மட்டுமே இருந்ததால் பத்து என்று பொறிக்கப்பட்டிருந்த பொத்தானையும் அடுத்து அழுத்தியபோது இன்னும் நன்றாக  கவனித்தாள்.  அவளுக்கு நெஞ்சு படபடவென்று அடித்துக்கொண்டது. உமிழ்நீரை இரண்டுமூன்று முறை விழுங்கிக்கொண்டாள். &lt;br /&gt;அவன் வலது உள்ளங்கையின் வெளிப்புறத்தில் பெரிய நட்சத்திர வடிவில் ஒரு பெரிய புடைப்பு இருந்தது.  அதே கையில் மணிக்கட்டுக்குக்கீழ் சாய்வாக  அடுத்தடுத்து மூன்று&lt;br /&gt;நீள் கோடுகள் இருந்தன.  கோடுகளா அவை இல்லவே இல்லை.  காய்ந்த சுண்டை வத்தல்&lt;br /&gt;அல்லது கோலிகுண்டைவிட ஓரிரு சுற்று சிறிய உருண்டை அளவில் நான்கு உருண்டைகள் வரிசையாக இருந்தன.  இதைப்போல் மூன்று வரிசைகள்.  சிங்கப்பூரில் இளையர்கள்  உடலில் வெவ்வேறு விதங்களில் பச்சை குத்திக்கொள்ளுவதை அவள் அறியாதவளல்ல.  அவள் வகுப்புத் நண்பர்களுடனான பேச்சு ஒரு முறை இதுபக்கம் திரும்பியபோது, அவள் தோழி இப்போது சிலர் ·பேஷன் என்ற பெயரில் உடலை சிதைத்துக்கொள்ளும் அளவிற்கு கிறுக்காகிவிட்டனர் என்றாள்.    இது ஏதோ கையில் புண், அல்லது கொப்புளம் அல்ல என்றே அவள் மனதுக்குப் பட்டது.  இவன் ஏதோ ஒரு வம்புக்குழுவைச் சேர்ந்தவனாயிருந்தால் என்ன செய்வது என்ற புதிய பயம் அவளைத் தொற்றிக்கொண்டது. அவன் வீட்டில் பெரியவர்கள் யாருமில்லை.  இப்போது யோசித்துப்பார்த்தால் ஏதோ ஓரிரு முறை இரண்டு மூன்று இளையர்கள் வாரயிறுதியில் வந்துபோனதுபோல் தோன்றியது.  திடீரென்று அவளுக்கு தான் எங்கிருக்கிறோம் என்பதே மறந்துவிட்டது. பத்தாம் தளம் வந்து, அவன் மின் தூக்கியிலிருந்து இறங்கி போய்விட்டிருக்கிறான்.  இவளோ பொத்தானைக்கூட அமுக்கத் தோன்றாமல் திக்கித்திருக்க வேறு தளத்தில்  யாரோ மின் தூக்கி பொத்தானை அமுக்கியிருப்பார்கள் &lt;br /&gt;போலிருக்கிறது, மின்தூக்கி மீண்டும் தரைத்தளத்தை அடைந்து கதவுகள் திறந்துகொண்டன.  அவளுக்கு அறிமுகமில்லா வேறு ஒரு குடும்பத்தினர் தரைத்தளத்தில் நின்றுகொண்டிருந்தனர்.  மின்தூக்கி திறந்தபோதுதான் அவள் தன்னினைவு பெற்றவளாய் திடுக்கிட்டாள்.  &lt;br /&gt;வெளிவரப்பார்த்தவள் மீண்டும் குழம்பி உள்ளே நுழைந்தாள்.  அவர்கள் ஏழாம் பொத்தானை அமுக்கவும், அவள் மெதுவாக பத்தாம் எண்ணை&lt;br /&gt;வெட்கத்துடனும் படபடப்புடனும் அமுக்கினாள்.  வழக்கம்போல் யாரும் யாருடனும் பேசவில்லை. வீடு அடைந்ததும் வீட்டுச்சாவி தன்னிடமும் இன்னொன்று இருக்கிறது என்பதையும் மறந்தவளாய் அழைப்புமணியை வேகமாக அழுத்தினாள். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;பக்கத்துவீட்டு வாயில் கதவு பூட்டியிருந்தது. சன்னல்கள் வழக்கம்போல் அடைக்கப்பட்டிருந்தன.&lt;br /&gt;நாராயணன் அவள் பேசியதை வழக்கம்போல் பாதிகாதுகொடுத்து கேட்டுவிட்டு, யாரெப்படி இருந்தால் நமக்கென்ன எப்போது வீட்டைப்பூட்டிவைத்திரு, மின்தூக்கியில் யாராவது தெரியாதவர் இருந்தால் ஏறாதே என்று அவளுக்குத் தெரிந்ததையே மீண்டும் சொன்னான். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;அன்றிலிருந்து அவள் நடவடிக்கையில் சில மாற்றங்களை அவளே தெரிவு செய்து கடைபிடித்தாள். &lt;br /&gt;தூரிகாவுடன் அடுக்ககம் அருகில் இருக்கும் விளையாட்டுப்பூங்காவிற்குச் செல்லும்போதோ,  அருகில் கடைக்குச்செல்லும்போதோ, அடுத்தவீட்டு வாயில் பூட்டப்பட்டு வெளியில் யாருமில்லாமல் இருக்கிறதா என்று சன்னல் வழியாக உறுதிசெய்துகொண்டபின் &lt;br /&gt;கிளம்பத்துவங்கினாள். நாளாவட்டத்தில் இதைப்பற்றி அதிகம் கவலைப்படுவதையும் சிந்திப்பதையும் அவளே உணர்ந்துகொண்டாள்.  எல்லாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டுமே என்று தனக்குத்தானே சமாதானம் செய்துகொண்டாள்.  வேறு என்ன செய்வது என்று தெரியவில்லை.  அவள் தோழியோ ஏதேனும் வம்பர் கும்பல்காரனாக இருந்துவைக்கப்போகிறான், எதற்கும் விழிப்போடு இரு என்று தன்பங்குக்கு அக்கறையுடன் கூறியிருந்தாள். &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; இதன் பின் ஒரு நாள் வீட்டு வாயிலில் சிறு துணி ஸ்டாண்டில் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்தபோது தூரிகா துணியை பிடித்துக்கொள்ளும் கவ்விகளுடன் விளையாடிக்கொண்டிருந்தாள், பக்கத்துவீட்டு இளைஞன் வெளியே வருவதைப் பார்த்து தூரிகா, ஹாய் என்று கையசைக்க , திடீரென்று கவனித்த தேவி அவனும் ஹாய் என்று கையசைப்பதைக்கண்டு தூரிகாவுக்கு  ஓர் அதட்டுப் போட அவள் அம்மாவை சற்று கவனிக்காதவளாய் இன்னும் இரண்டடி முன்வைத்து ஓட தேவி அவளை இழுத்துப் பிடிக்க முன்னகர, அவன்  இட்ஸ் ஓகே, என்றவாறு தூரிகாவைப்பார்த்து அகலப் புன்னகைத்தான்.  அவன் பற்கள் கண்களில் பட்டபோது தேவி திடுக்கிட்டுப்போய் லேசாக கத்திவிட்டாள், அவன் சாரி என்றவாறு உள்ளே போய்விட்டான்.  அவனுடைய பல்மேல்வரிசையின் இரண்டு ஓரங்களிலும் ஆங்கில டிராகுலா படங்களில் வருவதுபோது வாயோர இரண்டு பற்கள் உலோக நிறத்திலும் அளவில் பெரியதாயும் நீட்டிக்கொண்டிருந்தன.  அவ்வளவுதான். தேவியின் கெடுபிடிகள் அதிகரித்தன.  தூரிகா யாரிடமும் குறிப்பாக பக்கத்துவிட்டு இளைஞனும் ஹாய் சொல்லவோ பார்க்கவோ தடை செய்தாள்.  வாம்பயர் வாம்பயர் (பிசாசு) என்று அது கத்திக்கொண்டு சிரித்தது. முன்னிலும் அதிகமாக இப்போது அவனைச்சந்திக்கும் சூழலைத் தவிர்க்கத் துவங்கினாள். அடுத்தடுத்த &lt;br /&gt;வீடுகளில் வசித்துக்கொண்டு  எவ்வளவுதான் தவிர்க்க  முடியும்; ஒரு நாள் அவள் &lt;br /&gt;சாமான்களைத் தூக்கிவரும் தள்ளுவண்டியுடன் வந்தபோது, அவன், அவன் வீட்டு வாயிலில் நிற்பதைப்பார்த்துவிட்டு, பதினொன்றாம் தளத்தில் இறங்கி அவன் வீட்டைக்கடக்காமல் ஓரத்து மாடிப்படிகளைப் பயன்படுத்தி ஒருதளம் இறங்கி சாமான்களைப் படாதபாடுடன் தூக்கி தன் &lt;br /&gt;வீட்டுக்கு எடுத்துவந்தாள்.  மற்றொருநாள் வீட்டைவிட்டு அவள் வெளியே கிளம்பும்போது அவன் மின்தூக்கியிலிருந்து நடந்து வந்துகொண்டிருந்ததைப்பார்த்துவிட்டு விருட்டென்று உள்ளே சென்று பூட்டிக்கொண்டுவிட்டாள். வீட்டையாவது மாற்றித்தொலைக்கலாம் என்றால் நினைத்தபோது &lt;br /&gt;மாற முடியுமா.    இப்படியா பக்கத்து வீட்டுக்காரர் வந்து அமைய வேண்டும்.  அவளுக்கு கோபம் கோபமாக வந்தது. கடந்த ஒரு மாதமாக அவனை முற்றிலும் தவிர்த்துவிட்டோம் என்று நினைத்துக்கொண்டிருந்தாள்.  திடீரென்று இதுநாள்வரை யாரையும் இப்படி நினைத்ததோ வெறுத்ததோ இல்லை என்று தோன்றியது.  உண்மையில் பள்ளி கல்லூரி காலங்களில் கூட கேலிசெய்பவர், அல்லது அலட்டிக்கொள்பவர்களிடம் கடுமையாகக்கூட பேசியதில்லை. சற்று ஒதுங்கி அமைதியாக ஒரு சிறுபுன்னகையுடன் கடந்துபோய்விடுபவளாய் இருந்திருக்கிறாளேயன்றி  இப்படி நிஷ்டூரமாக ஒதுக்கியதோ தவிர்த்ததோ இல்லை. &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;அதன்பின் சில நாட்கள் அவள் கனவுகளில் பயங்கர பிசாசுகள் கோரப்பற்களுடன் இடம்பெற்றன.  வெளியிடம் செல்லும்போதெல்லாம் மனிதர்களின் கைகளையும் பற்களையும் கவனிக்கத்துவங்கினாள்.  பழுப்பு பற்கள், வெள்ளைப்பற்கள், மஞ்சள் குளித்த பற்கள், வரிசையாக, வரிசை தப்பி, சிலசமயம் கோணலாக, ஆனால் வேறு யாரும் டிராகுலா பற்கள் கொண்டிருக்கவில்லை என்பதை அறிந்து கொஞ்சம் சமாதானம் அடைந்தாள்.  பற்கள் மட்டுமன்றி கைகள், புறங்கைகள், மணிக்கட்டுக்குக் கீழ் இதில்தான் எத்தனை விதம், மஞ்சள் தோல்கைகள், செம்பழுப்பு, அடர்பழுப்பு, இளம்பழுப்பு கைகள், விதவிதமாக பச்சை குத்தப்பட்ட கைகள், பல வித கைக்கடிகாரங்கள், பிரேஸ்லெட்டுகள், அணிந்த கைகள், &lt;br /&gt;திடீரென்று எல்லாக்கைகளும் அவளை நோக்கி பாய்வதுபோல் தோன்றியது.  கைகள் வெடித்து கோலிகுண்டுகள் சிதறி ஓடின.  என்ன பயங்கரக்கனவு.  சிங்கப்பூரில் இத்தகைய சிதைக்கும் விளையாட்டிற்கு அனுமதி இல்லை என்பதால் ஏதேனும் அண்டைநாட்டில் இதற்கு அறுவைச்சிகிச்சை செய்து உலோக அல்லது சிலிக்கோன் உருளைகளை வைத்து தைக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு இன்னும் திடுக்கிட்டதுதான் &lt;br /&gt;மிச்சம்.&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;குழந்தை லேசாக மீண்டும் அசையத் துவங்கிவிட்டது.  இந்த இளநீரை எப்படியாவது உடைத்துத் தயாராக வைத்துக்கொண்டால் குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அவ்வப்போது கொடுக்கலாம்.  சரியான சமயத்தில் நாராயணன் வேறு ஊரில் இல்லை. பக்கத்துவீடும் சரியில்லை.  சரியாக இருந்தால் திறந்துதரச் சொல்லியாவது கேட்டிருக்கலாம்.     தூரிகா விழித்துக்கொண்டு கழிவறைக்குச் செல்லவேண்டும் என்றதும் அவளுக்கு மீண்டும் கவலை தொற்றிக்கொண்டது.  &lt;br /&gt;சிறிது தண்ணீர் கொடுத்தாள், வேண்டாம் என்றது.  பழம் எதுவும் தின்னமாட்டேன் என்று சொல்லியும் விட்டது. வாழைப்பழத்திற்கும் ஸ்ட்ராபெரி பழத்திற்கும் பதில் ஆரஞ்சுகளையாவது வாங்கி வைத்திருக்கலாம். பிழிந்து சாறெடுத்தாவது கொடுத்திருக்கலாம்.    சாதம் கொஞ்சம் தரட்டா என்று அவள் பேசத்துவங்கும் முன்னே வேண்டாம் வேண்டாம் என்று முனகியது. பசியில்லை என்றது.  சிறிது க்ளூக்கோஸ் நீரை குடிக்கவைத்தாள்.  ஒரு பிஸ்கட் தின்றது.  மருந்து சாப்பிடவேணுமில்லையா என்று நைச்சியம் செய்து ஒரு இட்லியை எப்படியோ தின்னவைத்தாள். ஜூஸ் குடு என்றது.  குளிர்சாதனப்பெட்டியில் தக்காளிப்பழச்சாறு சில்லென்று இருந்தது, அதை லேசாக வெதுவெதுப்பாக்கி தரட்டா என்று கேட்கவும் வேண்டாது தாகமாயிருக்கு ஜூஸ்தா என்று அழத்துவங்கியது.  அம்மாவுக்கு இப்ப எப்படி உன்னை விட்டுட்டு கடைக்குப் போக முடியும், வெய்யில் கொளுத்துதுபார் என்றெல்லாம் சொல்லிப்பார்த்தாள். இளநீர் குடிக்கிறயா என்று கேட்டாள் , சொல்லிவைத்தாற்போல் வேகமாக தலையை ஆட்டியது.  பெரிதாக கேட்டுவிட்டோம் எப்படி கொடுக்கப்போகிறோம், என்று குழப்பம் வேறு தலைவிரித்தாடியது. அம்மா இளநீர், இளநீர் தா என்று கொஞ்சம் கொஞ்சமாக மீண்டும் மீண்டும் கேட்கத்துவங்கியது.  &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;பக்கத்துவீட்டுக் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.  ஓடிப்போய் ஒரு கையில் இளநீரை எடுத்துக்கொண்டு மறுகையால் சாவியைக்கொண்டு கதவைத்திறந்தாள். பக்கத்துவீட்டு இளைஞன்தான், அலுவலக உடையில் நின்றுகொண்டிருந்தான். எங்கோ ஊருக்குக் கிளம்புகிறான் போலிருக்கிறது.  கீழே சூட்கேஸை வைத்துவிட்டு பூட்டத்துவங்கினான்.  தேவி மின்னலைபோல் வேகமாக ஓடினாள், இளநீரைக்காட்டி, திறக்கமுடியவில்லை என்பதையும், குழந்தைக்கு காய்ச்சல் என்றும் சொன்னாள்.  அவன் பதில் பேசாமல் தலையை மெல்ல ஆட்டியவாறு கதவை மீண்டும் திறந்து அதை வாங்கிக்கொண்டு  உள்ளே சென்றான்.  &lt;br /&gt;வெளியே படபடப்புடன் நின்றவள் சட்டென்று தோன்றியவளாய்  வீட்டுக்குள் ஓடிச்சென்று ஒரு என்.டியூசி பையில் மீதம் இருக்கும் இளநீர்க்காய்களைப் போட்டு எடுத்துக்கொண்டு ஓடிவந்தாள்.  பெரிய கத்தி அல்லது அரிவாள் வைத்திருப்பான் போலிருக்கிறது.   &lt;br /&gt;கச்சிதமாக சீவியதை எடுத்துவந்தான். அதை வாங்கிக்கொள்வதற்கு முன் மற்றவற்றைத் தான் எடுத்துவந்திருப்பதையும் அதையும் கொஞ்சம் சீவித்தருமாறு கேட்டுக்கொண்டாள்.  சீவிய இளநீரை தன் வீட்டு முன்னறை மேசையில் அலுங்காமல் வைத்துவிட்டு மீண்டும் ஓடி வந்தாள்.  இப்போது அவர்கள் அடுக்ககத்தின் கீழ்த்தளத்தில் ஒரு வாடகை டாக்சியின் மின்கொம்பு சத்தம் ஒரு முறை கேட்டது.  பொதுவாக சிங்கப்பூரில் மின்கொம்புகளை காடி ஓட்டுனர்கள் ஒலிக்கச்செய்வதில்லை.  தீராது என்றால்தான் எப்பவாவது ஒலிக்கச்செய்வார்கள். இந்த &lt;br /&gt;நான்கு ஆண்டுகளில் அவள் ஓரிருமுறையே கேட்டிருக்கிறாள்.&lt;br /&gt;இப்போது இளைஞன் கைத்தொலைபேசியில் அவன் தாய்மொழியில் பேசினான்.   பின்னர்&lt;br /&gt;அதை கால்சட்டைப்பையில் வைத்துவிட்டு, அவள் கொடுத்த பையை எடுத்துசென்று ஒவ்வொரு இளநீர்க்காயாக சீவிக்கொண்டுவந்து கொடுத்தான்.  தேவிக்குப் புரிந்துவிட்டது, &lt;br /&gt;வெளியூருக்குச் செல்கிறான் போல, ஒருவேளை விமானநிலையமாகக்கூட இருக்கலாம், அதற்குவந்த கால்டாக்சியின் ஓட்டுனர் தான் அவனைக் காணாததால் அழைத்திருக்கிறார்.  இதோ வந்த டாக்சியும் போய்விட்டது.  இனி அவன் வேறு ஒன்றை அழைக்கவேண்டும். குழந்தை எங்கே என்று கேட்டான். அதற்கு பதில் சொல்லத்தோன்றாதவளாய் &lt;br /&gt;தேவி அவன் கண்களை நேருக்குநேர் பார்க்காமலேயே நன்றி என்றாள்.    மீண்டும் கைத்தொலைபேசியை எடுத்தான். திரும்பிப்பார்க்காமல் வீட்டினுள் சென்று வழக்கம்போல் பூட்டிக்கொண்டாள். &lt;br /&gt;தூரிகா ஆவலுடன் இளநீரைக் குடித்தது, அவளை ஒரு கதை சொல்ல கேட்டுவிட்டு, அவள் பாதி சொல்லும்போதே மடியிலேயே தூங்கிப்போனது.  குழந்தையை மெல்ல எடுத்து படுக்கையில் படுக்க வைத்தாள்.  திடீரென்று காலையில் தான் பழச்சாறு தவிர ஏதும் சாப்பிடாதது நினைவுக்கு வந்தது.  குழந்தையின் உடல்நிலையைப் பற்றிய கவலை திடீரென்று போய்விட்டது போலத்தோன்றியது.  எல்லாம் சரியாகிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.  குளிர்சாதனப்பெட்டியில் பத்திரப்படுத்திய இளநீரை ஒரு முறை பார்த்தாள்.  தொலைபேசி அழைத்தது.  அவர்களுடைய குடும்ப நண்பர், அவள் படிக்கும் கல்விச்சாலைப்பற்றி அவருக்கு வேண்டியவர் யாரோ விவரம் ஏதோ கேட்க இவளை அழைத்திருக்கிறார்.  அவரிடம் பேசி முடித்தபின்,  ஒரு கையால் தொலைபேசியை வைத்துவிட்டு மறுகையில் வைத்துக்கொண்டிருந்த  பால்பாயிண்ட் பேனாவை எடுத்துவைத்துக்கொண்டாள். சிறிது நேரத்தில் அவள் இடது மணிக்கட்டுக்குக்கீழ் ஒரு சிறிய  பூவின் உருவம் வரையப்பட்டிருந்தது.&lt;br /&gt;  &lt;br /&gt;&lt;br /&gt;உயிரெழுத்து &lt;br /&gt;2010 அக்டோபர்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-5514657327528018644?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/5514657327528018644/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=5514657327528018644' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5514657327528018644'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5514657327528018644'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2010/11/blog-post_21.html' title='சாதாரண மனிதன்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-7837616171310490962</id><published>2010-11-12T02:15:00.000-08:00</published><updated>2010-11-12T02:16:54.016-08:00</updated><title type='text'>நான் தொலைத்த தேன்சிட்டு</title><content type='html'>நான் யார் என்று அறிமுகப்படுத்திக் கொண்டவுடன்&lt;br /&gt;முகம் சுளிக்காதவர் யாருமில்லை &lt;br /&gt;என்று&lt;br /&gt;வாம்போவா சாப்பாட்டுக்கடையில்&lt;br /&gt;உன்னிடம் சொன்னேன்&lt;br /&gt;சலசலக்கும் இலைகளின் ஊடே&lt;br /&gt;தீவின் மஞ்சள் கறுப்புத் தேன்சிட்டு&lt;br /&gt;இனிய குரலில் ஆமோதிக்கவும் செய்தது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கவனிக்கவில்லை, .........க்கு&lt;br /&gt;உடல்நலமில்லை அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறேன்&lt;br /&gt;குப்பையைப் போட்டுவிட்டேன்&lt;br /&gt;வெண்சுருட்டைக் கையில் வைத்திருக்கிறேன்&lt;br /&gt;ஊதவில்லை, என் பெயர் சொல்லமாட்டேன்&lt;br /&gt;அபூர்வமாய் என்னை மன்னித்துவிடுங்கள்&lt;br /&gt;அவ்வப்போது முகமன் சொல்லும் தேன்சிட்டுகள்&lt;br /&gt;இவையெல்லாம் சாலையில் நடந்தவாறே பணிபுரியும்&lt;br /&gt;ஒரு சுகாதார அதிகாரிக்குத் தினமும் கிடைக்கும் பரிசுகள்&lt;br /&gt;மறக்கமுடியாத பரிசு என்ன என்பதைத்&lt;br /&gt;தப்பித்தவறிக் கேட்டுவிடாதே&lt;br /&gt;மழை கொட்டும் இந்த விடியலில் அதை மீண்டும் நினைவுகூர&lt;br /&gt;நான் விரும்பவில்லை&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;இருநூறு வெள்ளியைத் தவிர்க்க&lt;br /&gt;ஒருவன் தலைதெறிக்கச் சாலையில் ஓடி&lt;br /&gt;கிரீச்சிட்டு நிறுத்திய கனரக வாகன சக்கரத்தில் சிக்கி&lt;br /&gt;வீறிட்டபோது&lt;br /&gt;அதிர்ந்து கூவிய தேன்சிட்டை&lt;br /&gt;நான் பிறகு பார்க்கவேயில்லை&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;2009 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் அரசு சுய ஆட்சி பெற்று 50 ஆண்டுகள்&lt;br /&gt;நிறைவடைந்ததன் நினைவாக ஐம்பது கவிதைகள் நான்கு தேசிய மொழிகளிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட நூலில் இடம்பெற்றது &lt;br /&gt; (Fifty on 50, NAC Singapore)&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-7837616171310490962?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/7837616171310490962/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=7837616171310490962' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/7837616171310490962'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/7837616171310490962'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2010/11/blog-post.html' title='நான் தொலைத்த தேன்சிட்டு'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-6192163915429560404</id><published>2010-08-31T19:32:00.000-07:00</published><updated>2010-08-31T19:34:14.498-07:00</updated><title type='text'>வெளிச்ச இடுக்கில் இந்த ரோஜாச்செடி</title><content type='html'>மண்சட்டியில்&lt;br /&gt;பத்து பதினைந்து ரோஜாப்பூக்கள்&lt;br /&gt;ஒரே நேரத்தில் பூத்திருந்தன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்கொட்டாமல் பார்த்து வருகையில்&lt;br /&gt;எல்லா சாமி படங்களுக்கும்&lt;br /&gt;போதுமானதாக இருக்கும்தான்&lt;br /&gt;வாங்க வேண்டாம்&lt;br /&gt;குரல்&lt;br /&gt;பின்னணியில் ஒலிக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாமிக்கு வைக்கலாம்தான்&lt;br /&gt;ஆனால் அங்கிருப்பதைக்காட்டிலும்&lt;br /&gt;இங்கு இன்னும் பொலிவோடு&lt;br /&gt;இருக்கின்றனவே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடுக்கு வெயில், தண்ணீர்&lt;br /&gt;வேர்ச்சத்து, காற்று&lt;br /&gt;எதற்கும் இணையாகாதே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்துவீட்டுக்குக்&lt;br /&gt;கொடுக்கலாம்தான்&lt;br /&gt;அவர்கள் வாங்கிக்கொள்பவர்களாக இல்லை&lt;br /&gt;கொடுப்பவர்களாக அண்மையில்&lt;br /&gt;மாறிவிட்டார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலைகளுக்கும் மலர்களுக்கும்&lt;br /&gt;இலவச நிகோட்டின் படலங்கள்&lt;br /&gt;அவ்வப்வோது அளித்துவரும்&lt;br /&gt;உபயதாரர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பறித்துவிட வேண்டாம்&lt;br /&gt;வேண்டிக்கொண்டாள்&lt;br /&gt;இவைஎதுவும் அறியாத&lt;br /&gt;என் வீட்டிலிருந்த குழந்தை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பூ&lt;br /&gt;பள்ளிவளாக காவலருக்காம்&lt;br /&gt;எடுத்துத்துப்போயிருக்கிறாள்&lt;br /&gt;அவருக்கு&lt;br /&gt;நிறைய நேரம் இருக்கிறது&lt;br /&gt;என்றவாறே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்று &lt;br /&gt;கருத்த மகரந்தமும்&lt;br /&gt;வெளிறிய இதழ்களும்&lt;br /&gt;காணக்கிடைக்கையில்&lt;br /&gt;பறித்திருக்கலாமோ&lt;br /&gt;சஞ்சலமடைகிறது மனம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பழுத்த ஜீவரசம்&lt;br /&gt;நாசியில் இனிக்க&lt;br /&gt;உன்மத்தம்&lt;br /&gt;கொள்ளச்செய்கின்றன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைவில்&lt;br /&gt;கண்ணாடி உடலுடன்&lt;br /&gt;சீனத்தாத்தா&lt;br /&gt;பேசிக்கொண்டிருக்கிறார்&lt;br /&gt;மௌனமாய்க்&lt;br /&gt;கேட்டுக்கொண்டிருக்கும்&lt;br /&gt;பூங்கா பெஞ்சுகளுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி: நாம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-6192163915429560404?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/6192163915429560404/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=6192163915429560404' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6192163915429560404'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6192163915429560404'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2010/08/blog-post.html' title='வெளிச்ச இடுக்கில் இந்த ரோஜாச்செடி'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-3267130018337684042</id><published>2010-07-03T07:50:00.000-07:00</published><updated>2010-07-03T07:54:53.644-07:00</updated><title type='text'>கவிதை - தொடர்மழை பெய்ந்து ஓய்ந்த ஓரிரவில்</title><content type='html'>தினமும்&lt;br /&gt;இரவு எட்டுமணிக்கு&lt;br /&gt;அடுக்ககங்களின் இடையே உள்ள&lt;br /&gt;தரைப்பகுதியில்&lt;br /&gt;மூன்று சக்கர வண்டியை நிறுத்தி&lt;br /&gt;மணி அடிக்கும்&lt;br /&gt;இந்த ஐஸ்கிரீம் விற்பவள்&lt;br /&gt;இன்று முதல்வேலையாக&lt;br /&gt;வண்டியிலிருந்து இறங்கியதும்&lt;br /&gt;கம்பளிச்சட்டையைக் கழற்றி&lt;br /&gt;மடித்து கவனமாக பையினுள்&lt;br /&gt;பொத்துகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு தொடர் கொம்பொலிக்கும்&lt;br /&gt;ஒவ்வொரு அடுக்ககமாக&lt;br /&gt;பதினைந்தாவது தளத்திலிருந்து&lt;br /&gt;பரவலாக கீழ்த்தளம் வரை&lt;br /&gt;பார்வையை ஓட்டுகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;நடுங்கிக்கொண்டும்&lt;br /&gt;ஈரம் சொட்டும் உடைகளோடு&lt;br /&gt;மின்தூக்கியருகில்&lt;br /&gt;விரைபவர்களை&lt;br /&gt;அவள்&lt;br /&gt;தொந்தரவு செய்வதில்லை&lt;br /&gt;&lt;br /&gt;இன்றைய எதிர்ப்பார்ப்பை&lt;br /&gt;பூஜ்ஜியத்தில் நிறுத்தினாலும்&lt;br /&gt;ஏதோ ஒரு வீட்டில்&lt;br /&gt;யாரேனும் ஒருவர்&lt;br /&gt;தான் வரவில்லை என்று&lt;br /&gt;நினைத்து&lt;br /&gt;ஏமாற்றம் அடைந்துவிடக்கூடாதே&lt;br /&gt;என்பதனால்&lt;br /&gt;இன்றைக்குமட்டும்&lt;br /&gt;கூடுதலாக&lt;br /&gt;சிலமணித்துளிகள் நிற்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;மொழியற்ற மொழியை&lt;br /&gt;உதிர்த்தவாறு&lt;br /&gt;மேலேயிருந்து கையசைக்கும் நபர்&lt;br /&gt;தென்பட்டதும்&lt;br /&gt;சுத்தமாக இருக்கும் வண்டியில்&lt;br /&gt;முன்மேடையை மீண்டும் சுத்தம் செய்கிறாள்&lt;br /&gt;கையுறையை கவனமாக அணிந்துகொண்டு&lt;br /&gt;குளிர்பெட்டகத்தில்&lt;br /&gt;எல்லா வகைகளும் தயாராக இருப்பதை&lt;br /&gt;மீண்டும் உறுதி செய்கிறாள்&lt;br /&gt;வேண்டியதைக்கொடுத்த கையோடு&lt;br /&gt;கைதுடைக்கும் காகிதக் கைக்குட்டையை&lt;br /&gt;ஒன்றுக்கு இரண்டாகத் தருகிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;எந்தவித இருமலோ தும்மலோ&lt;br /&gt;இவர்களுக்கு வராதிருக்கவேண்டும்&lt;br /&gt;என்று ரகசியமாக வேண்டிக்கொள்கிறாள்&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் சாப்பிட்டதும் தூக்கிப்போடத்&lt;br /&gt;தயாராக குப்பைப்பையை நீட்டுகிறாள்&lt;br /&gt;நல்ல துணியால்&lt;br /&gt;அழுத்தித் துடைத்து குளிர்ச்சியைப்போக்கிவிட்டு&lt;br /&gt;நீட்டுகிறாள் அவர்கள் கொடுக்கும் பணத்துக்கான&lt;br /&gt;சில்லரைக்காசுகளை&lt;br /&gt;&lt;br /&gt; 02-04-2010 சொல்வனம்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-3267130018337684042?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/3267130018337684042/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=3267130018337684042' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/3267130018337684042'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/3267130018337684042'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2010/07/blog-post.html' title='கவிதை - தொடர்மழை பெய்ந்து ஓய்ந்த ஓரிரவில்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-6685473460689910328</id><published>2009-12-06T17:24:00.000-08:00</published><updated>2009-12-06T17:28:55.647-08:00</updated><title type='text'>ஒவ்வொரு விடுமுறையில் உன்னை நேரில் சந்திக்க வரும் போதெல்லாம்,....</title><content type='html'>&lt;em&gt;ஒரு குற்ற உணர்வு &lt;br /&gt;உன் நரம்புகளில் ஊடுறுவதைக் காண்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;கால்பாவ நினைத்து&lt;br /&gt;தள்ளாடி விழும் ஒரு கைக்குழந்தையைப்போல&lt;br /&gt;நான் விழுந்துவிடுவேனோ&lt;br /&gt;என்று அச்சம் கொள்கிறாய்&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;உன்னையே சொல்லிக்கொண்டிருப்பேன்&lt;br /&gt;எழுத நினைத்தேன்&lt;br /&gt;அழைக்க நினைத்தேன்&lt;br /&gt;என்று நீ&lt;br /&gt;தடுமாறித் தடுமாறி&lt;br /&gt;கரகரத்த குரலுடன்&lt;br /&gt;இமைகளின் ஈரம் கனக்க&lt;br /&gt;சொற்களால்&lt;br /&gt;என்னைத் தூக்கிவிடப்பார்க்கிறாய்&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;ஒவ்வொரு புதிய நிகழ்வில்&lt;br /&gt;தோய்ந்து வரும்&lt;br /&gt;என் ஒவ்வொரு கடிதத்தையும்&lt;br /&gt;நீ வாசிப்பதை மட்டுமல்ல,&lt;br /&gt;'ம்' கொட்டுவதையும்&lt;br /&gt;தலையசைப்பதையும்&lt;br /&gt;புன்னகைப்பதையும்&lt;br /&gt;நானிருக்கும் இடத்திலிருந்தே&lt;br /&gt;காண்பதால்தான்&lt;br /&gt;உற்சாகத்துடன் என்னால்&lt;br /&gt;தொடர்ந்து எழுத முடிகிறது&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;சங்கடங்களைத் தூக்கி எறிந்துவிட்டு&lt;br /&gt;வா &lt;br /&gt;ஒரு சின்ன நடனம் ஆடுவோம்&lt;br /&gt;நான் வேறுபலவும் சொல்வேன்&lt;br /&gt;என் பாடலில்&lt;br /&gt;சொற்களைக் கோர்ப்பது&lt;br /&gt;என் கோப்புகளில் இருக்கும்&lt;br /&gt;உன் நீண்ட மயிலிறகுக்கடிதங்கள்&lt;br /&gt;போடும் குட்டிகள்தான்&lt;br /&gt;என்பதையும் சேர்த்து&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; சொல்வனம் 2-10-2009&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt; &lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-6685473460689910328?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/6685473460689910328/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=6685473460689910328' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6685473460689910328'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6685473460689910328'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/12/blog-post.html' title='ஒவ்வொரு விடுமுறையில் உன்னை நேரில் சந்திக்க வரும் போதெல்லாம்,....'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-6739827203990801382</id><published>2009-09-28T06:23:00.000-07:00</published><updated>2009-09-28T06:26:33.249-07:00</updated><title type='text'>சொக்கட்டான்</title><content type='html'>சொற்களை தாயமாக்கிவிட்டாய்&lt;br /&gt;குரலிழந்த நான்&lt;br /&gt;என் பங்கு நியாயத்தை இறக்க&lt;br /&gt;முடியாமல்போனேன்&lt;br /&gt;பழமெடுத்து&lt;br /&gt;உன் வெற்றியைப்&lt;br /&gt;பறையறைகிறாய்&lt;br /&gt;இதற்கு&lt;br /&gt;என்னை&lt;br /&gt;அழைத்திருக்கவே&lt;br /&gt;வேண்டாம்&lt;br /&gt;நீ மட்டுமே&lt;br /&gt;நாள் முழுதும் &lt;br /&gt;விருத்தம் எடுக்க&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;uyirosai 21-9-2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-6739827203990801382?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/6739827203990801382/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=6739827203990801382' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6739827203990801382'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6739827203990801382'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/09/blog-post_28.html' title='சொக்கட்டான்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-2847381975840181461</id><published>2009-09-23T00:56:00.000-07:00</published><updated>2009-09-23T01:33:11.257-07:00</updated><title type='text'>பச்சைப்பாம்பு</title><content type='html'>அசலா நகலா&lt;br /&gt;எதையும் கண்டுபிடிக்க&lt;br /&gt;முடியாதபடி இருக்கிறது&lt;br /&gt;குளிரூட்டப்பட்ட இந்த&lt;br /&gt;நிலவறைப் பேரங்காடியில்&lt;br /&gt;அங்கங்கே தொட்டிகளில் அமர்த்தப்பட்டிருந்த&lt;br /&gt;மலர்ச்செடிகள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சென்ற வாரம் &lt;br /&gt;காலியாக இருந்த&lt;br /&gt;மரீன் பரேட்&lt;br /&gt;அலுவலக வரவேற்பறையில்&lt;br /&gt;இன்று திடீரென்று&lt;br /&gt;வீற்றிருக்கிறது&lt;br /&gt;ஒரு திப்பிலிப்பனை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகமனுடன்&lt;br /&gt;வரவேற்று&lt;br /&gt;ஐயங்களைத் தீர்த்துவைக்கும்&lt;br /&gt;தொலைபேசிக்குரல்&lt;br /&gt;ஏற்கனவே&lt;br /&gt;பதிவுசெய்யப்பட்ட&lt;br /&gt;பதில்களை உடைய&lt;br /&gt;நிரலியால்தான்&lt;br /&gt;என்பது &lt;br /&gt;வேறு ஒரு நாள்&lt;br /&gt;தெரியவருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலைச்சுற்றிவரும்&lt;br /&gt;செல்ல நாய்க்குட்டியை&lt;br /&gt;என்னிடம் காட்டி மகிழும்&lt;br /&gt;பக்கத்துவீட்டுச் சிறுவன்&lt;br /&gt;உணவு வில்லைகளை&lt;br /&gt;அதன் வாயில் இட்டு&lt;br /&gt;விசையை அழுத்துகிறான் &lt;br /&gt;வாரத்திற்கு ஒரு முறை&lt;br /&gt;சேமக்கலத்தில்&lt;br /&gt;மின்னேற்றினால் போதும்&lt;br /&gt;என்கிறான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாவரவியல் தோட்டத்தில்&lt;br /&gt;லோர்னி பாதையில்&lt;br /&gt;செண்பகச் செடிகளைப்&lt;br /&gt;பார்த்துக்கொண்டிருந்தபோது&lt;br /&gt;புதரடியில்&lt;br /&gt;பச்சை வண்ண ரப்பர்குழாயின்&lt;br /&gt;ஒருபகுதியைப் பார்த்துவிட்டு&lt;br /&gt;கையில் எடுத்தேன்&lt;br /&gt;இந்தக் கவிதை உறைந்துவிட்டது&lt;br /&gt;என்னைப்போல&lt;br /&gt;&lt;br /&gt;uyirosai 21-9-2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-2847381975840181461?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/2847381975840181461/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=2847381975840181461' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2847381975840181461'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2847381975840181461'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/09/blog-post_23.html' title='பச்சைப்பாம்பு'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-2737449588614795681</id><published>2009-09-16T06:07:00.000-07:00</published><updated>2009-09-16T06:08:21.595-07:00</updated><title type='text'>வகுப்பறைகளைச் சுத்தம் செய்யும் மூதாட்டி</title><content type='html'>மாற்று ஆடையும்&lt;br /&gt;ஈரமா என்று &lt;br /&gt;ஆயாசத்துடன்&lt;br /&gt;கண்களை மூடினால்&lt;br /&gt;போதும்&lt;br /&gt;செங்குத்தாக அடுக்கப்பட்ட&lt;br /&gt;புத்தகங்களிலிருந்து&lt;br /&gt;கழன்று விழும்&lt;br /&gt;எழுத்துகள்&lt;br /&gt;ஒழுங்கு வரிசையின்றி&lt;br /&gt;முட்டிமோதிக்கொண்டு&lt;br /&gt;தம்தனித்த வாசத்துடன்&lt;br /&gt;மூளைக்குள் &lt;br /&gt;நுழைந்துவிடுகின்றன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனித்த இரவுகளில்&lt;br /&gt;வரும்&lt;br /&gt;கனவுகளில்&lt;br /&gt;வினாத் தாள்கள்&lt;br /&gt;மீண்டும் மீண்டும் வருகின்றன&lt;br /&gt;அதிலிருக்கும் எழுத்துகள்&lt;br /&gt;அவரிடம்&lt;br /&gt;கமுக்கமாகப் பேசுகின்றன&lt;br /&gt;அவற்றின் நிறம்&lt;br /&gt;ஆழமான&lt;br /&gt;பித்தவெடிப்புகளால்&lt;br /&gt;பிளவுண்ட தன் குதிகால்களில்&lt;br /&gt;காணப்படும் குருதியின்&lt;br /&gt;நிறத்தில் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமன்பாடுகளின்&lt;br /&gt;விளக்கங்களும்&lt;br /&gt;வரைபடங்களும்&lt;br /&gt;அதில்&lt;br /&gt;கேட்கப்படுகின்றன&lt;br /&gt;ஐநூறு சொற்களாலான&lt;br /&gt;நீண்ட கட்டுரை&lt;br /&gt;எழுதுமாறு &lt;br /&gt;பணிக்கப்படுகிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கையெழுத்து மட்டுமே&lt;br /&gt;போடத் தெரியும் என்று&lt;br /&gt;அவர் மன்றாடுவது&lt;br /&gt;அவருக்கே கேட்பதில்லை&lt;br /&gt;எழுத்துகள் முகமூடி &lt;br /&gt;அணிந்துகொண்டுவிட்டதைக்&lt;br /&gt;கண்டு&lt;br /&gt;மை நிரம்பிய&lt;br /&gt;பேனாவை நடுக்கத்துடன்&lt;br /&gt;சுருக்கம் நிறைந்த விரல்களால்&lt;br /&gt;பிடிக்கிறார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாக் கேள்விகளுக்கும்&lt;br /&gt;விடை தெரிந்திருப்பது&lt;br /&gt;அதிகமாக்குகிறது&lt;br /&gt;அச்சத்தை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உயிரோசை 7.9.2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-2737449588614795681?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/2737449588614795681/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=2737449588614795681' title='0 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2737449588614795681'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2737449588614795681'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/09/blog-post_16.html' title='வகுப்பறைகளைச் சுத்தம் செய்யும் மூதாட்டி'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>0</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-6601187151456415557</id><published>2009-09-13T21:33:00.000-07:00</published><updated>2009-09-13T21:35:40.563-07:00</updated><title type='text'>நாகரிக விருந்துகளில்,....</title><content type='html'>&lt;strong&gt;நாகரிக விருந்துகளில்,....&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்றுமே இல்லாத &lt;br /&gt;பதற்றம் &lt;br /&gt;பதுங்கிப்பதுங்கி&lt;br /&gt;வந்தமர்ந்துவிடுகிறது&lt;br /&gt;சாப்பாடு உள்ள&lt;br /&gt;காகிதத் தட்டுகள்&lt;br /&gt;ஏந்திய&lt;br /&gt;புதிய பச்சை நிறக்கோடு போட்ட சட்டை&lt;br /&gt;மாட்டிக்கொண்டுள்ள&lt;br /&gt;தாத்தாவின்&lt;br /&gt;கைகளில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நூறுபேர் உள்ள இடத்தில்&lt;br /&gt;இருக்கும்&lt;br /&gt;பத்துநாற்காலிகளுக்குப்&lt;br /&gt;போட்டிப்போட &lt;br /&gt;முடிவதில்லை&lt;br /&gt;தனக்கென முதலில்&lt;br /&gt;எடுத்துக்கொள்வது&lt;br /&gt;பழக்கமாகாததால் &lt;br /&gt;இருக்கலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காலி இருக்கைகள் நிறைந்த&lt;br /&gt;நிகழ்ச்சி நடக்கும் அரங்கு&lt;br /&gt;சுவருக்கு அடுத்தபக்கம்தான்&lt;br /&gt;என்றாலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கெல்லாம்&lt;br /&gt;சாப்பிடக்கூடாது&lt;br /&gt;அழுக்காகிவிடும்&lt;br /&gt;ஒரு சிறுமியை&lt;br /&gt;அவள் குடும்பத்தினர் யாரோ&lt;br /&gt;மிரட்டிக்கொண்டிருந்ததை வேறு&lt;br /&gt;பார்த்துதொலைத்தாகிவிட்டது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதைபேசிக்கொண்டும்&lt;br /&gt;சிரித்துக்கொண்டும்&lt;br /&gt;நாசுக்காக உண்ணும்&lt;br /&gt;மகனோ மகளோ&lt;br /&gt;சுட்டிக்காட்டுவதற்கு&lt;br /&gt;முன்பே&lt;br /&gt;வாயோரத்து &lt;br /&gt;சோற்றுப்பருக்கையைச் &lt;br /&gt;சரிசெய்யவேண்டியிருக்கிறது&lt;br /&gt;இன்னும் இரண்டு கவளம்&lt;br /&gt;கூட உள்ளே செல்லாவிட்டாலும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குடிநீர் எங்கே இருக்கிறது&lt;br /&gt;என்று கண்டுபிடித்துவிட்டாலும்&lt;br /&gt;அதை வைத்துக்கொள்ள&lt;br /&gt;கூடுதல் கரம் ஒன்று&lt;br /&gt;தேவையாய் இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கிருந்தோ &lt;br /&gt;ஓடிவந்து&lt;br /&gt;பேரனோ பேத்தியோ&lt;br /&gt;தண்ணீர்க் கிண்ணத்தைக் &lt;br /&gt;கொடுக்கும்போது&lt;br /&gt;இதுபோதும் எனத்&lt;br /&gt;தோன்றிவிடுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நளினமாகச் சாப்பிடும்போதே&lt;br /&gt;நாய்க்குட்டிபோல் ஓடிவந்து&lt;br /&gt;இரண்டுபேர் கேட்கும்படியாக&lt;br /&gt;நீ கையாலேயே சாப்பிடு&lt;br /&gt;உனக்கு முள்கரண்டி சரிவராது&lt;br /&gt;என்று&lt;br /&gt;மகன் வந்துபோட்ட மிளகாய்த்துண்டு&lt;br /&gt;விக்கலை நிறுத்தப் போதுமானதாக &lt;br /&gt;இருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரவாயில்லை இதையாவது&lt;br /&gt;கவனித்து பேசுகிறானே&lt;br /&gt;தன்னொத்தவர் கூறுகையில்&lt;br /&gt;கண் வாழ்க்கைத் துணையைத் தேடுகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாட்டிகளுக்கு&lt;br /&gt;முதல் பந்தியில் சாப்பிட&lt;br /&gt;வாய்ப்புக்கிடைத்ததைவிட&lt;br /&gt;தம் பேச்சை உற்சாகத்துடன்&lt;br /&gt;கேட்க மனிதர்கள் கிடைத்த &lt;br /&gt;மகிழ்சிரிப்பு உணவின் மணத்துடன்&lt;br /&gt;கலக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் கொஞ்சம்&lt;br /&gt;இருந்திருக்கலாம்&lt;br /&gt;ஏங்குகிறாள்&lt;br /&gt;சூரியன்&lt;br /&gt;&lt;br /&gt;நிலக்காட்சிகளைக் காண&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சொல்வனம் &lt;br /&gt;4-9-2009&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-6601187151456415557?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/6601187151456415557/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=6601187151456415557' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6601187151456415557'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6601187151456415557'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/09/blog-post.html' title='நாகரிக விருந்துகளில்,....'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-6705813197439195409</id><published>2009-07-09T16:31:00.000-07:00</published><updated>2009-08-28T03:08:02.520-07:00</updated><title type='text'>வாழ்த்துகள்!--கவிதை</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000000;"&gt;&lt;br /&gt;&lt;blink&gt;&lt;br /&gt;வாழ்த்து சொல்லத் தோன்றினால்&lt;br /&gt;உடனே சொல்லிவிடு&lt;br /&gt;இல்லையேல்&lt;br /&gt;விட்டுவிடு&lt;br /&gt;ஒரு பாதகமுமில்லை&lt;br /&gt;கயமையும் இல்லை&lt;br /&gt;கோபமில்லை&lt;br /&gt;வஞ்சனையில்லை&lt;br /&gt;பொறாமையில்லை&lt;br /&gt;சூழ்ச்சியில்லை&lt;br /&gt;அதனால்&lt;br /&gt;நேசங்கள்&lt;br /&gt;பட்டுப்போகப்போவதில்லை&lt;br /&gt;தாமதமாய்ச்&lt;br /&gt;சொல்லப்பட்டவாழ்த்துகள்&lt;br /&gt;வாழ்த்துகளாவதில்லை&lt;br /&gt;சில பொழுதுகளில்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவை&lt;br /&gt;வன்முறை வண்ணம்&lt;br /&gt;பூசப்பட்டு&lt;br /&gt;வாழ்த்தப்படுபவரின்&lt;br /&gt;காலடி நிலத்தை&lt;br /&gt;நழுவச்செய்யும்&lt;br /&gt;வல்லமை பெற்றவையாக&lt;br /&gt;ஆகிவிடுகிறன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இடிமின்னலில்&lt;br /&gt;சுழிக்காற்றில்&lt;br /&gt;அமிலமழையில்&lt;br /&gt;எரிகல் வெடித்தலில்&lt;br /&gt;பூமிநடுக்கத்தில்&lt;br /&gt;நதிப்பெருக்கில்&lt;br /&gt;புதைச்சேற்றில்&lt;br /&gt;ஏதோ ஒன்றில்&lt;br /&gt;மாட்டிக்கொண்டு&lt;br /&gt;வாழ்த்தப்படுபவர்&lt;br /&gt;தவிக்கும் நேரத்தில்&lt;br /&gt;போய்ச்சேருகின்றன&lt;br /&gt;தாமத வாழ்த்துகள்&lt;br /&gt;குதூகலத்துடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாம்- ஜூன் 2009 &lt;/span&gt;&lt;br /&gt;&lt;/blink&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-6705813197439195409?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/6705813197439195409/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=6705813197439195409' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6705813197439195409'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6705813197439195409'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/07/blog-post_09.html' title='வாழ்த்துகள்!--கவிதை'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-2415293071486596192</id><published>2009-07-03T19:55:00.000-07:00</published><updated>2009-07-03T20:00:08.377-07:00</updated><title type='text'>இதுவரை,...</title><content type='html'>என்னிலிருந்து&lt;br /&gt;எழுந்தது&lt;br /&gt;என்னுடையதில்லையாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்னுடையதில்லை&lt;br /&gt;ஆனால்&lt;br /&gt;உன்னுடையதாகிக் கொண்டிருக்கிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டபுத்தகங்கள்&lt;br /&gt;கர்ஜிக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கலவரத்தில் நான் தொலைத்தது&lt;br /&gt;உன்னால் கண்டெடுக்கப்பட்டு&lt;br /&gt;நான்கு வருடங்களாக உன்னிடமே&lt;br /&gt; இருந்து வருகிறது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த அமரல் வரை&lt;br /&gt; வாரம் ஒரு முறை&lt;br /&gt;உன்னுடையதாக&lt;br /&gt;பிரகடனப்படுத்தப்பட்ட&lt;br /&gt;என்னுடையதை&lt;br /&gt;தரிசனம் செய்யக்காட்டுவாய்&lt;br /&gt;களவாடப்படும்&lt;br /&gt;அச்சப்பின்னல்கள் ஊடே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அமரல்களாலும்&lt;br /&gt;முகதரிசனங்களாலும்&lt;br /&gt;பரிசுகளாலும்&lt;br /&gt;பெற்றுத்தரவியலாத&lt;br /&gt;ஒரு&lt;br /&gt; சொல்&lt;br /&gt;இன்னும்&lt;br /&gt;ஆழத்தைத் தேடி&lt;br /&gt;பூமிக்கடியில்&lt;br /&gt;போய்க்கொண்டிருக்கிறது&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-2415293071486596192?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/2415293071486596192/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=2415293071486596192' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2415293071486596192'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2415293071486596192'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/07/blog-post.html' title='இதுவரை,...'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-6075839773613335592</id><published>2009-06-11T00:07:00.000-07:00</published><updated>2009-06-11T00:10:45.777-07:00</updated><title type='text'>சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வளரும் மணிப்ளாண்ட்டுக்குப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பக்கத்தில்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சாப்பிட்ட மாம்பழத்தின் கொட்டையைப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பிடிவாதமாக&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒரு  மண்தொட்டியில் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நட்டுவிட்டது குழந்தை. &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்ன செய்வது &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என்று தெரியவில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒன்றரை அடி உயரத்திற்கு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வளர்ந்துவிட்ட மாங்கன்றை&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-6075839773613335592?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/6075839773613335592/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=6075839773613335592' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6075839773613335592'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6075839773613335592'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/06/blog-post.html' title='சன்னல் இடுக்கு வெளிச்சத்தை நம்பி'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-4922340143442386455</id><published>2009-05-29T16:42:00.000-07:00</published><updated>2009-05-29T16:45:55.541-07:00</updated><title type='text'>30-05-2009</title><content type='html'>&lt;span style="color:#3333ff;"&gt;சிவப்பு விளக்கில் ஓடும் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மனிதனைக் கேட்டேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;பச்சை வந்தபின்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;போனால் என்ன&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஓடிக்கொண்டே சொன்னான்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;எனக்கு முன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஓடியவனைக் கேட்கத்தான் ஓடிக்கொண்டிருக்கிறேன்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;உன்னைப்போல&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அநங்கம்  மலேசியா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மே 2009&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-4922340143442386455?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/4922340143442386455/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=4922340143442386455' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4922340143442386455'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4922340143442386455'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/05/30-05-2009.html' title='30-05-2009'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-4713302180766020849</id><published>2009-05-28T04:32:00.000-07:00</published><updated>2009-05-28T04:56:05.842-07:00</updated><title type='text'>தொலைக்காட்சி எதிரில்</title><content type='html'>&lt;a href="http://4.bp.blogspot.com/_Emz0cUO41ZQ/Sh57B4gMn8I/AAAAAAAAAF8/iY_5mE54aN4/s1600-h/tholaikkatchethiril+kavithai.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5340841480385503170" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; WIDTH: 253px; CURSOR: hand; HEIGHT: 127px" alt="" src="http://4.bp.blogspot.com/_Emz0cUO41ZQ/Sh57B4gMn8I/AAAAAAAAAF8/iY_5mE54aN4/s400/tholaikkatchethiril+kavithai.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்&lt;a href="http://4.bp.blogspot.com/_Emz0cUO41ZQ/Sh56aVN2f8I/AAAAAAAAAF0/sRTOZAcc0w4/s1600-h/tholaikkatchethiril+kavithai.jpg"&gt;&lt;/a&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;அருகில் இருப்பவர்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;தோளைத் தட்டுகிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேவிக்கேவி அழுகிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;பக்கத்தில் இருப்பவரைப் பார்த்து&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;கௌளி சொல்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாயைக்குவித்து வியக்கிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்படிப் பார்த்ததே இல்லையெனப்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;பகிர்ந்துகொள்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூரித்துப் போகிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;கைகளைக் கொட்டுகிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்படித்தான் இருக்கவேண்டும்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;அல்லது இருக்கப்போகிறேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;என்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பதறி நடுக்குறுகிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒருவரை ஒருவர் ஆதரவாய்ப்&lt;/span&gt;&lt;span style="color:#000099;"&gt;பிடித்துக்கொள்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீச்சீ என்கிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;லஜ்ஜையுடன் பக்கத்தில் இருப்பவரைப் பார்க்கிறார்கள் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;அல்லது கையை விரிக்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்லைக் கடிக்கிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;நானாய் இருந்தால் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;இப்படிச் செய்திருக்கமாட்டேன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;என்கிறார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;விசையை அணைத்தபின்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;தானியங்கிபோல்&lt;br /&gt;நடக்கிறார்கள்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;தொங்கிய முகத்துடன்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;மௌனித்தவாறே&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;வெவ்வேறு பாதைகளில்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;அநங்கம், மலேசியா &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;span style="color:#000099;"&gt;மே2009 இதழ்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-4713302180766020849?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/4713302180766020849/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=4713302180766020849' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4713302180766020849'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4713302180766020849'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/05/blog-post.html' title='தொலைக்காட்சி எதிரில்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://4.bp.blogspot.com/_Emz0cUO41ZQ/Sh57B4gMn8I/AAAAAAAAAF8/iY_5mE54aN4/s72-c/tholaikkatchethiril+kavithai.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-3516240492808275115</id><published>2009-04-02T19:29:00.000-07:00</published><updated>2009-08-28T01:29:04.504-07:00</updated><title type='text'>இந்த வியாழன்</title><content type='html'>&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;நேர்த்தியான திரைக்கதை, , அண்ணித்தல், எல்லாவற்றிற்கும் ஓடுதானா, இப்படியும் நகைச்சுவை&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;span style="color:#000099;"&gt;Wendy Wu திரைப்படம் பார்த்தேன். வடஅமெரிக்காவில் வாழும் சீனக் குடும்பத்துப் பெண்ணின் பதின்மக்கனவுகளை அசைத்துப்பார்க்கிறது சீனாவிலிருந்து வந்த புத்த புட்சு சொல்லும் ' நீ உலகைக் காக்க போர்வீரராக அவதாரம் எடுத்தவள் என்ற சொற்கள். &lt;/span&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;சீன ஜாலக்குகளையும், மந்திர தந்திரங்களை மட்டுமே நம்பாமல், எளிய நேர்த்தியான திரைக்கதை, நம்பும்படியான உடல்மொழியும், எனக்குப் பிடித்திருந்தது. வழக்கமான டிஸ்னிகதைகளிலிருந்து கொஞ்சம் மாறுபட்டது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மாணிக்கவாசகர் திருவாசகத்தில் அண்ணிப்பான் தாள் வாழ்க என்கிறார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;அகராதியில் அண்ணம்,அண்ணி எல்லாம் இருக்கிறது அண்ணித்தல் இல்லை. தெளிவுரையில் தித்திப்பான் என்று பொருள் தந்திருக்கிறார் சித்பவானந்தர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;மதுரகவியாழ்வார் 'அண்ணிக்கும் அமுதுஊறும் என் நாவுக்கே' ('கண்ணி நுண் சிறுதாம்'பில் )என்கிறார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;இங்கும் தெளிவுரையில் தித்திக்கும் என்று எழுதியிருக்கிறார் ஜெகத்ரட்சகன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;இதுபற்றி எழுதும் போது அருகண்மையில் என்ற பதம் நினைவுக்கு வந்தது. அருகாமை, அருகண்மை, இவற்றைவிட அருகில் போதுமே பேராசிரியர் நன்னன் கூறுகிறார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;அண்மையில் ஜெரால்ட் தூரலின் ' எ நியூ நோவா' படித்தேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆஸ்திரேலியா, நீயூசிலாந்து, கயானா, கெமரூன் (ஆப்பிரிக்கா) , ரஷ்யா, அஸ்ஸாம், அர்ஜெண்டீனா (அர்ஹன்டினாவா? எதுசரி), பராகுவே இன்னும் பல நாடுகளுக்கு சென்று பல விலங்குகள், பறவை இவற்றுடனான தன அனுபவங்களை புத்தகங்களாக எழுதித்தள்ளியிருக்கிறார். விவரணப்படங்கள், பி.பி.சி, திரைப்படம் எதையும் விட்டுவைக்கவில்லை. கைக்குழந்தைக்குக்கூட விலங்குகள் பற்றிய புத்தகங்கள் தயாரித்திருக்கிறார். புதிய நோவா, கெமரூன், கயானா, அர்.. ....பயணங்கள் பற்றியது. சாகசம் நிறைந்த அனுபவங்களுடன் தான் செய்த தவறுகள், தவர விட்டவை, இவற்றையும் ஆவணப்படுத்தி நம்பகத்தன்மைக்கு அருகில் வருகிறார். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt; &lt;a href="http://www.blogger.com/ஜெரால்ட்%20தூரல்"&gt;ஜெரால்ட் தூரல்&lt;/a&gt; ஜம்ஷெட்பூரில் பிறந்தவர். அவருடைய ( கவனிக்க -அவரது- என்று எழுதுவது தவறு) ஆங்கில-ஐரிஷ் பெற்றோரும் இந்தியாவில்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;பிறந்தவர்கள். தூரலின் சாதனைகள், இணையத்தில் இருக்கின்றன.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;குதிரைகள் நடக்கும், ஓடும் வேகத்திற்கு ஏற்ப walk, trot, canter, gallop என்று ஆங்கிலத்தில் சொற்கள் இருப்பதுபோல் தமிழிலும் இருந்திருக்காதா என்ன. அவை என்ன என்று தெரிந்துகொள்ள ஆசை. தமிழார்வலர்கள்தெரிந்தால் சொல்லுங்களேன்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;daft ideas என்ற புத்தகம் நூலகத்தில் படிக்கக்கிடைத்தது. daft என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று அகராதியில் தேடினேன் ( ஆங்கிலம் - தமிழ்) கிடைக்கவில்லை.வினோத சம்பவங்கள் , கொடுநகைச்சுவை வகை சேர்ந்து சில (black jokes என்ற பெயர் என்னவோ எனக்குப் பிடிக்கவில்லை, black க்கு என்ன குறைச்சல்); இருப்பதிலேயே சுவாரசியம் குறைந்த இரண்டை எழுதியிருக்கிறேன். வினோத கண்டுபிடிப்புகள், வினோத வகை சம்பவங்கள், கொள்ளைகள், என்று கண்டபடி எழுதித் தள்ளியிருக்கிறார்கள். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;காட்டுக்கு இரண்டு. (அதான் எடுத்துக்காட்டுக்கு இரண்டு)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விலங்குகளின் உரிமை ஆதரவாளர்கள் இருவர், ஜெர்மனியின் கசாப்பு நிலையத்திலிருந்து பன்றிகளை விடுவிக்கப்பார்த்தார்கள். பாய்ந்து வெளியே வந்த 2000 பன்றிகளின் நெரிசலில் இருவரும் மிதிபட்டு மேலுலகு சென்றார்களாம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒரு கடையில் துப்பாக்கியைக் காட்டி கல்லாவிலிருந்த காசெல்லாம் தர மிரட்டி வாங்கிக்கொண்ட ஒருவன், மதுபான புட்டி ஒன்றைக் கேட்டான். காசாளர் உன்னைப்பார்த்தால் பதினெட்டு ஆகியிருப்பதாகத் தெரியவில்லை, உனக்கு எப்படித்தருவது என்று கேட்க, தன் ஓட்டுனர் உரிமத்தைக் காட்டியிருக்கிறான். உடனே எடுத்துக்கொடுத்த கடைக்காரர் அவன் போனவுடன் அவன் பெயரையும் முகவரியையும் காவல் நிலையத்திற்குத் தெரிவித்தார்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;புத்தகத்தில் என்னைக் கவர்ந்த really daft laws சில&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;1. க்ளௌசெஸ்டர், இங்கிலாந்து:&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;வீட்டுரிமை சட்டத்தின்படி வாடகைக்கு அரசு வீடுகளில் குடியிருப்பவர்கள் 30 நாள்களாவது நோடீஸ் தராமல்இறக்கக்கூடாது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;2.டெக்சாஸ், யு.எஸ்.எ.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;அண்மையில் மொழியப்பட்ட குற்றவியல் சட்டத்தின் படி, குற்றவாளிகள் தாங்கள் செய்யப்போகும் குற்றம்எப்படிப்பட்டது என்பதை வாய்வார்த்தையாகவோ, எழுத்துமூலமாகவோ குற்றம் செய்வதற்கு 24 மணிநேரத்திற்குமுன் கொடுத்துவிடவேண்டும். யாரிடம்- யாரிடம் செய்யப்போகிறார்களோ, அவர்களிடம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;3. டென்னஸ்ஸி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;தவளைகள் இரவு பதினொரு மணிக்கு மேல் கொரகொரப்பது சட்டவிரோதம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;4. நியூயார்க் கட்டடத்திலிருந்து குதித்துவிடுபவர்களுக்கு தண்டனை உண்டு. மரணம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;5. ஆண்கள் ஸ்ட்ராப் இல்லாத கவுன்கள் அணிவது ப்ளோரிடாவில் சட்டவிரோதம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;என் நண்பர் தெரிவித்த ஒரு டாப்ட் ஐடியா:&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விளக்கு, தலைவலி பாம் இவற்றைப் பயன்படுத்தினால்தான் தூக்கமே வரும் என்று %50 உம் , இவற்றின் பெயரைக்கேட்டாலே தூக்கம் போய்விடும் என்று %50 உம் ஆக இரண்டு மனிதக்கூட்டங்கள் இருக்கும்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;கல்யாணம் என்பது எதாவது ஒரு கூட்டத்திலிருந்து ஒரு ஆணும் மறு கூட்டத்திலிருந்து ஒரு பெண்ணும் செய்துகொள்வது ( ஏன் 50% என்று போடவில்லை - யோசிக்கவும்)&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#330033;"&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-3516240492808275115?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/3516240492808275115/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=3516240492808275115' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/3516240492808275115'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/3516240492808275115'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/04/blog-post.html' title='இந்த வியாழன்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-6872178498105955009</id><published>2009-01-19T00:24:00.000-08:00</published><updated>2009-02-13T19:54:14.985-08:00</updated><title type='text'>சேகரிக்கப்பட்ட ப்ரியங்கள்</title><content type='html'>&lt;span style="color:#663366;"&gt;&lt;em&gt;தளும்பி நிற்கும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;ப்ரியங்களின் கலயத்தைக்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;கொணர்ந்தது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பிசாசுகளின் இருள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;நீ நீயாகவும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;நான் நானாகவும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இருக்கக் கேட்டுக்கொண்டு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இக்குவனங்களில்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;சேகரித்த ப்ரியங்கள் அவை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;கொடுபல்லியாய் நீண்ட&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;நேசத்தின் கரங்கள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;உன்னை நானாகவும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;என்னை நீயாகவும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;ஆக்கத் துடித்துப்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பிணைத்துக்கொண்ட&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;தருணங்களில்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;தள்ளாடிய கலயங்கள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;காலியாகிவிட்டன&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;வேறு இடங்களில்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;வேறு வனங்களில்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;ப்ரியங்களை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;சேகரித்துக்கொண்டிருக்கின்றன&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பிசாசுகள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;வடக்குவாசல் டிசம்பர் 2008&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இக்குவனம்-கரும்புத்தோட்டம்&lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-6872178498105955009?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/6872178498105955009/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=6872178498105955009' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6872178498105955009'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/6872178498105955009'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/01/blog-post_19.html' title='சேகரிக்கப்பட்ட ப்ரியங்கள்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1139434804415009466</id><published>2009-01-16T23:28:00.000-08:00</published><updated>2009-02-13T19:55:41.254-08:00</updated><title type='text'>ஒரு தகவல்</title><content type='html'>&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;em&gt;அன்புள்ள வலைப்பதிவர்களே&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;வணக்கம்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இப்போது நடந்துகொண்டிருக்கும் சென்னை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;புத்தகக் கண்காட்சியில் என் முதல் கவிதைத் தொகுப்பு இருக்கிறது.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;வெளியிட்டுள்ள பதிப்பகம்: உயிர்மை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;புத்தகத்தின் பெயர்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;நாளை பிறந்து இன்று வந்தவள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;என் மின்னஞ்சல் முகவரி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;a href="mailto:mathangihere@gmail.com"&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;mathangihere@gmail.com&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/a&gt;&lt;span style="color:#cc33cc;"&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;நன்றி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;மாதங்கி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#009900;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1139434804415009466?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1139434804415009466/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1139434804415009466' title='7 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1139434804415009466'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1139434804415009466'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/01/blog-post_16.html' title='ஒரு தகவல்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>7</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-5087269445520350247</id><published>2009-01-14T23:28:00.000-08:00</published><updated>2009-02-13T19:56:07.974-08:00</updated><title type='text'>மலைகளின் பறத்தல்</title><content type='html'>&lt;span style="color:#ff6600;"&gt;&lt;em&gt;முன்னொரு நாளில்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;தோன்றியபோதெல்லாம்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இறக்கைகளை விரித்துக்கொண்டு&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பறந்து கொண்டிருந்த மலைகளைக்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;கெஞ்சிக் கேட்டேன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பறப்பதை நிறுத்திவிடுங்களேன்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;நிமித்த காரணம் சொல்லலாமே&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;அவை கேட்டன&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;எங்கள் குழந்தைகள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;தூக்கத்தில் எழுந்து அலறுகிறார்கள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;எங்களுக்கே சோறு &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பலசமயங்களில்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இறங்குவதில்லை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;சில பறவைகள் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;உங்களைக் கண்டு &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பறத்தலையே மறக்கத் துவங்கிவிட்டன&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;எங்கள் குழந்தைகள் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;வெட்டவெளிகளில்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;விளையாட மறுக்கின்றனர்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பயிர்த்தொழில் பாதிப்படைகிறது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;எங்கள் நிம்மதி&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;உங்களால் போய்க்கொண்டிருக்கிறது&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;தங்களால் யாரும் &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;உயிரிழக்காத போதும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;எங்களுக்காக&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;தாமே தம் இறக்கைகளை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;இற்றுப்போகசெய்து&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பறத்தலை நிறுத்திவிட்டன மலைகள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;இன்று &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;யுத்த பேரிகைகளும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;போர்ச்சாவுகளும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;உறக்கத்தை கவ்வும் இவ்வேளையில்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;மலைகள் சிரிக்குமோ அழுமோ&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வடக்குவாசல் டிசம்பர் 2008&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-5087269445520350247?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/5087269445520350247/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=5087269445520350247' title='9 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5087269445520350247'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5087269445520350247'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/01/blog-post_5076.html' title='மலைகளின் பறத்தல்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>9</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-5708621282286212156</id><published>2009-01-13T01:48:00.000-08:00</published><updated>2009-01-13T01:53:07.872-08:00</updated><title type='text'>சன்னல் இல்லாத வீடு</title><content type='html'>எலியட்ஸ் பீச் மணலில்&lt;br /&gt;மகனுடன் கோட்டை கட்டும்போது&lt;br /&gt;அருகிலேயே விரலால்&lt;br /&gt;வரைந்தாள் ஒரு சிறுமி,&lt;br /&gt;பக்கத்தில் தங்கை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீடு வரைகிறாயா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓம்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா அதுக்கு கதவு சன்னல் எதுவுமே இல்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இருந்தால் திறந்து சுட்டுவிடுவார்கள்&lt;br /&gt;சிறுமி சொனாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் தங்கை சொன்னாள்&lt;br /&gt;சன்னல் கதவு இல்லாவிட்டால்&lt;br /&gt;தெருவில் செத்துப்போன&lt;br /&gt;அப்பாவைப் பார்த்து&lt;br /&gt;எப்படிக் கூட்டிவார ஏலும்?&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-5708621282286212156?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/5708621282286212156/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=5708621282286212156' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5708621282286212156'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5708621282286212156'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2009/01/blog-post.html' title='சன்னல் இல்லாத வீடு'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-329774833659090538</id><published>2008-07-31T07:54:00.000-07:00</published><updated>2009-01-15T04:58:55.092-08:00</updated><title type='text'>ஓர் உன்னத தினம்</title><content type='html'>வீட்டை மோப் போட்டு முடித்து மோப் ஸ்டிக்கையும் பக்கெட்டையும் கவிழ்த்தி வைத்துவிட்டு மீண்டும் முன்னறைக்கு வந்தபோது சன்னலருகில் ஒரு கரப்பான் பூச்சியைப் பார்த்தேன். சட் இது எங்கிருந்து வந்தது. இப்பவும் நாங்கள் இருக்கும் ப்ளோக்கில் குப்பைத் தோம்புகூட பழைய ப்ளோக்குகளைப் போல வீட்டினுள் இல்லையே, ஒவ்வொரு தளத்திலும் ஓரமாக இடம் ஒதுக்கி வைத்துவிட்டார்களே; ஒருவேளை டவுன் கவுன்சில் ஆட்கள் நீர்த்தாரை இருக்கும் இடங்களை ப்யுமிகேட் செய்வார்களே அதுபோல் செய்துவிட்டார்களோ; வீட்டில் பேகான் கூட இல்லையே. மறு நிமிடம் சே, நாம் ஏன் இந்த விசயத்திற்கு இப்படி அலட்டிக்கொள்கிறோமோ என்று தோன்றியது. பேகான் இருந்தாலும் நான் அதைப் பயன்படுத்துவதில்லை, ஒரு பழந்துணியில் அதை பிடித்து சன்னல் வழியே விட்டுவண்ட்டு, கண்ணு எங்காவது ஓடிப்போய் பொழச்சிக்கோ, நீ எங்களைப் போல இல்ல எங்களை விட பெரிசா இருந்தா மிதிப்போமா, மதிப்போமில்ல, . சேகரைப் போல எனக்கு பயமோ அருவருப்போ அதைப் பார்த்தால் ஏற்படுவதில்லை. என்ன இதே அவர் வீட்டில் இருந்தால் வீட்டை இரண்டு பண்ணிவிடுவார். அவர் அதை எந்த அளவிற்கு வெறுக்கிறாரோ அந்த அளவுக்கு எனக்கு அதை மிகவும் பிடித்தது. அதுவும் இந்த புதிய ப்ளோக் வந்த இரண்டு வருடங்களில் ஒரு கரப்பானைக்கூட நான் பார்த்ததில்லை. அதனால் எனக்கு அதைக் காண ஒரு விதத்தில் மகிழ்ச்சியாகவே இருந்தது. அதுக்கு எதாவது சர்க்கரை கிக்கரை தந்திட்டு, மெல்லத் துணியால தூக்கி வெளியில விட்டுவிடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமையலறைக்குள்ளே போனேன். துணியை ஒரு கையிலும் சர்க்கரையை இரண்டு விரல் இடுக்குகளிலும் எடுத்து முன்னறைக்கு வந்தவள் அப்படியே நின்றுவிட்டேன். முன்னறை சோபாவில் ஒரு கரப்பான் பூச்சி வக்கணையாக ஐந்தடி நீளத்தில் உட்கார்ந்திருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சட்டென்று கண்களை நன்றாக விரித்து உற்றுப்பார்த்தேன். சற்றுமுன் இங்கிருந்த குட்டிக்கரப்பானா, இல்ல இது வேறயா, வாசல் கிராதிகளை வேறு பூட்டியிருக்கிறேனே, இது எப்படி உள்ளே வந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அட யார் சொல்வது, கரப்பானா, ஏன் இப்படி பெரிசாக இருக்கிறது. நேற்று மகள் சொல்லிக்கொடுத்த கணினி விளையாட்டை விடாமல் விளையாடினேனே, கண்ணு கிண்ணு கோளாறு ஆகி, இரண்டிரண்டாக தெரிவதுபோல் ஒருவேளை உருவம் பெரிதாக தெரிகிறதா? இல்லையே காலையிலிருந்து வீட்டுவேலைகளை எல்லாம் ஒழுங்காத்தானே செய்துவந்தேன். இதென்ன கலாட்டா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வணக்கம், நீங்க திருவாட்டி சந்திரிக்கா தானே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரப்பான்பூச்சி விஸ்வரூபம் எடுத்தது மட்டுமன்றி தமிழிலும் பேசுகிறதே. இதை இப்போதே என் தோழி ரங்கமணியிடம் சொல்லாம் போல் தோன்றுகிறதே, இல்லை ஒருவேளை வாசலில் யாராவது நிற்கிறார்களா,கரப்பானை நன்றாகப்பார்த்தேன். ஒருவேளை ஏதேனும் தமாஷ்நிகழ்ச்சிக்காக இப்படி மெஷின் செய்து அனுப்பியிருக்கிறார்களா? ஐயோ வாசல் கதவுதான் பூட்டியே இருக்கிறதே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்களிடம் தான் பேசுகிறேன், வணக்கம் திருவாட்டி சந்திரிக்கா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சே, வணக்கத்திற்கு பதில் வணக்கம் சொல்ல வேண்டாம், நம் பண்பாடு என்ன கலாச்சாரம் என்ன&lt;br /&gt;வணக்கம் கரப்பான், சாரி, திரு....திருமதி....மிஸ் கரப்பான்பூச்சி தட்டுத்தடுமாறி உளறினேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவாட்டி சந்திரிக்கா, இப்படி திடீரென்று வந்ததற்கு முதலில் மன்னிப்பு கோறுகிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீ, .... நீங்கள் உள்ளே நுழைந்ததெப்படி,&lt;br /&gt;தயவுசெய்து நீங்கள் முதலில் அமருங்கள்.&lt;br /&gt;எதிரிலிருந்த நாற்காலியில் உட்கார்ந்தேன், என் கால்கள் வெடவெட என்று நடுங்கியதை என்னாலே பார்க்கமுடிந்தது. மெருகேற்றிய சாக்லெட் ஹாட்டாக் நிறத்தில் இருந்த கரப்பான் பூச்சியை உற்றுப்பார்த்தேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரவாயில்லை, தைரியமாகவே இருக்கிறீர்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாற்காலியில் தொங்கிக்கொண்டிருந்த என் துவைத்த சாரோங்கை எடுத்து முகத்தை தேவையில்லாமல் துடைத்துக்கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரப்பான்பூச்சி பேச ஆரம்பித்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறு நேர்காணலுக்காக உங்களைத் தேடி வந்துள்ளேன். உங்கள் ஒத்துழைப்பு எங்கள் ஆவணங்களைத் தயார் செய்வதற்கு உதவியாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீங்கள் இடமாறி வந்துவிட்டீர்கள். பேட்டி கொடுக்கும்படிக்கு நான் பிரபலமான நபர் இல்லை. ஒரு நடுத்தரக்குடும்பத்து பெண்மணி அவ்வளவுதான்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரப்பான் தன் உடலை லேசாக அசைத்தது. பூமியில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு மனிதரைத் தேர்ந்தெடுத்து, பின் அவரை நேர்காணல் செய்யவேண்டும். எங்கள் குழுவினருக்கு இடப்பட்ட பணி இது. எனக்கு ,சிங்கப்பூரில், உங்களைக் கண்டு பேச உத்தரவு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியானால் நீ.....நீங்கள் பூமியைச்சேர்ந்தவரில்லையா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லை. எனக்கு சுற்றிவளைத்துப் பேசிப் பழக்கமுமில்லை, அது என் அமைப்பிலும் இல்லை. நான் வலாரியாவிலிருந்து வருகிறேன். எங்கள் கப்பல், பூமியின் நிலவான சந்திரனை எடுத்துச்செல்லப்போகிறது. அதற்குமுன் பூமிபுத்திரர்களிடம் சில கேள்விகள் கேட்க நினைத்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எல்லா நாட்டிற்கும் கரப்பான்பூச்சியை அனுப்பியிருக்கிறார்களா,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் ஊரில்&lt;br /&gt;இங்கு இந்த உருவம், அமெரிக்காவிற்கு பருந்து உருவில் என் நண்பர் சென்றிருக்கிறார். மற்றொருவர் மனித உருவில் சென்றிருக்கிறார், வேலையைக்கொடுத்துவிட்டார்கள். சிங்கப்பூரில் உள்ள நான்கு மில்லியன் மக்களில் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள். வெவ்வேறு கல்விநிலை, பொருளாதார நிலை வாழ்க்கை முறை கொண்ட மனிதர்களை இதற்குத் தேர்ந்தெடுத்துள்ளோம். உங்களைப்பற்றிய விவரங்கள் தெரிந்துகொண்டபின் நான் எடுத்த உருவம் இது. நீங்கள் சந்திரனை இழக்கப்போகிறீர்கள். இதைக்கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றுகிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்திரனைக் களவாடப் போகிறார்களா, ஏதேனும் வலுத்த நாட்டின் அதிபரிடம் சொன்னாலும் பலன் இருக்கும். இதைக்கேட்டவுடன் என்ன தோன்றுகிறதா? சந்திரனைப்பற்றி எழுதி எழுதி களைத்த கவிஞர்களிடமும், பேசிப்பேசி களைத்த காதலர்களிடம் கேட்டாலாவது உருப்படியாகட் சொல்வார்கள். நான் என்னத்தைச் சொல்ல, சந்திரன் இல்லாவிட்டால் என்ன, மின்சார வசதி இருக்கிறது, அது ஒரு பெரிய இழப்பாக இருக்காது. வேண்டுமானால் கவிஞர்களும் காதலர்களும் கஷ்டப்படலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடகடவென்ற சிரிப்பொலியுடன் தொடர்ந்து அதன் உடல் அசைவதையுமே நான் கேட்கவும் பார்க்கவும் முடிந்தது. பேசும்போதெல்லாம் அதன் உணர்கொம்புகள் ஆடிக்கொண்டே இருந்தன&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதாவது சாப்பிட குடிக்க கொடுக்கலாமா, என்ன கொடுப்பது, என்ன சாப்பிடுகிறீர்கள், வேறு கிரகம் என்பதால் ஒருவேளை மின்சாரம் அல்லது சூரிய வெளிச்சம் இப்படி எதாவது சாப்பிடுமோ&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எதுவேண்டுமானாலும் கொடுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரைபீனா பழத்தின் சிரப் இருக்கிறது, அதைக் கலந்து கொடுக்கலாம், ஒரு நிமிடம் என்றவாறு எழுந்து போனேன். சமையலறை மேடையின் மேல் இருந்த சிறுப்ளாஸ்டிக் வாங்கில் பிஸ்கட் டப்பாக்களில் ஒன்றைத்திறந்து இரண்டுஎடுத்து ஒரு தாம்பாளத்தில் வைத்துக்கொண்டு வந்தேன். முன்னறைத் தொலைபேசி ஒலித்தது. தோழி ரங்கமணிதான் இந்த நேரத்தில் அழைப்பாள் . வாரம் ஓரிரு முறையாவது நான் பேசிக்கொள்வோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஹலோ, ..... ஓ என் கணவர் சேகர், இரவுச்சாப்பாடு கூட்டாளியுடனா, நோ ப்ராப்ளம், ....... கையில் பிஸ்கட்டும் ரைபீனாவும் வைத்திருக்கிகிறேன்,... முதலாளி கூப்பிட்டிருக்காராம், செல்லை அணைச்சி வச்சிறப்போறாராம். ...... என்.யூ. எஸ்ஸிலிருந்து காஞ்சு நேரா இன்னிக்கு வந்திருவா,... இல்லை நாளைலேந்துதான் ..... சரி வச்சிடறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதேநேரத்தில் என் செல் அடித்தது, .... ரங்கமணியாகத்தான் இருக்கும், கரப்பானிடம் சைகை காட்டிவிட்டு படுக்கையறையிலிருந்து மணி அடித்துக்கொண்டிருந்ததை அமைதிபடுத்தி அங்கேயே பேசத்துவங்கினேன், ரங்காதான், .ரங்கா, ஒரு அதிசயம்.. இங்க ஒரு அஞ்சடியில ஒரு கரப்பான்பூச்சி விருந்தாளியா வந்திருக்கு, அதுக்கு ஜூஸ¤ம் பிஸ்கட்டும் கொண்டுபோயிட்டிருக்கேன்னு சொல்லுவோமா,.... குரலை சன்னமாக்கிக்கொண்டேன், ரங்கா இங்க ஒரு கரப்பான்பூச்சி ஹால் சோபாவுல,.என்று ஆரம்பித்தேன், அடுத்த வினாடி.... என் கண்ணெதிரில் கொட்டை எழுத்தில் அச்சடிக்கப்பட்ட தாள் நீட்டப்பட்டது.&lt;br /&gt;'தயவுசெய்து நேர்காணல் முடிந்தபின் சொல்லவும், ரகசியம் காக்கவும்' என்று எழுதப்பட்டிருந்தது. .... திடுக்கிட்டுப்போனேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரப்பான்தான், இது என்ன மாயவித்தை தெரிந்ததா, சாக்கிரதையாக இருக்கவேண்டும், ஒரு வேளை போலிசுக்கு நான் தகவல் தெரிவிக்க வேண்டுமோ, சிறையிலிருந்து தப்பி வேறு நாட்டுக்கு ஓடிவிட்டதாகக் கூறப்படும் மாஸ் சலாமத்தைக் கண்டுபிடித்தால் ஒரு மில்லியன் யாரோ பெயர் சொல்லாத நபர் தருவாராம், இதுபோல் நிலாத்திருடன் வருவதை சொன்னால் பைத்தியம் என்பார்களோ, செல்லில் போட்டோ பிடித்து வைக்கலாமென்றால், என் செல்லில் அந்த வசதி இல்லை, காமிராவை இந்த காஞ்சு எங்கே வைத்துத் தொலைத்தாள். சென்ற மாதம் கண்பாதுகாப்பு வாரியத்திலிருந்து வீடுவீடாக அடையாள அட்டையுடன் வந்து கண் பாதுகாப்பு பற்றி குழந்தைகளிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது பற்றி ஒரு சர்வே எடுக்கிறோம் என்றார்கள், எங்கள் தளத்தில் உள்ள பத்து வீடுகளில் வீட்டிலிருப்பது நானும், திருமதி வோங், மற்றும் திருமதி லீலா வீட்டு பணிப்பெண்கள்தான். வேறு எல்லா வீடுகளும் பகலில் பூட்டியே இருக்கும். மற்ற தளங்களில் இந்த அளவு கூட நடமாட்டம் இருக்குமா தெரியவில்லை. அரைமணிநேரம் பேசிய பின் ஐந்து வெள்ளிக்கு நியாயவிலைக்கடை பற்றுச்சீட்டும், ஒரு டார்ச் பேனாவும் கொடுத்தார்கள். என் அரைமணிநேரத்தை எடுத்துக்கொண்டதற்கு ஈடாம். இது எதாவது கொடுக்குமா, பாவம் வேறு கிரகத்திலிருந்துவேறு வந்திருக்கிறது, நான்தான் அதற்கு எதாவது தரவேண்டும். சாப்பாட்டுக்கடையில் வாங்கித்தரலாமா, வீட்டில் இனிப்பைத் தின்றுவிடுகிறேன் என்று இனிப்பு எதையும் வைத்துக்கொள்ளவில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவாட்டி சந்திரிகா, எனக்கு ஏதேனும் தர நீங்கள் விரும்புவதை நினைத்து மிக்க நன்றி. நம் பேச்சைத் தொடர்வோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன யட்சிணியா, டெலிபதி வித்தையா, மனதில் எண்ணுவதை அப்படியே சொல்கிறதே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உங்கள் எண்ணங்கள் படிக்க ஏதுவான மைண்ட் ரீடர் என்னிடம் இருக்கிறது, இதுவே என் முதல் ஆங்கிலச் சொல்லின் ஊடுநுழைவு என்று நினைக்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பேச்சில் ஆங்கில வார்த்தைகள் இருக்கும். தேசிய நூலகத்தையே தமிழ்வாசிப்புக்கு பெரும்பாலும் நம்பியிருக்கும் என் போன்றவர்களுக்கு ஆண்டுக்கு ஒரு முறை நூலகம் நடத்தும் பழைய புத்தக விற்பனையே கதி,&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாதகமில்லை, சரி நம் பேச்சைத் தொடர்வோம்,....சரி நீங்கள் ஒற்றுமையாக இருக்கிறீர்களா? இதற்கு நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒற்றுமையா, யாருடன் , கணவருடனா, இல்லை எங்கள் இருவரின் சொந்தபந்தங்களுடனா, அண்டைவீட்டினருடனா? சே இதெல்லாம் கேட்க வந்திருக்காது, இந்த கரப்பான்பூச்சி. சிங்கப்பூரின் முக்கிய சொலவடையே இனமத ஒற்றுமைதானே, அதைப்பற்றித்தான் கேட்கிறதோ என்னவோ,&lt;br /&gt;ரொம்ப ஒற்றுமையாகவே இருக்கிறோம், யாரும் எந்த மதத்தைப்பற்றியோ இனத்தைப்பற்றியோ தவறாக பேசவோ எழுதவோ கூடாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மன்னிக்கவும் நான் நீங்கள் என்றது பூமிவாசிகள் அனைவரையும்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூமிவாசிகள். சரிதான். ஒரு நாட்டில் வெள்ளம் வந்தால் உடனே பல நாடுகள் உதவிப்பொருள்கள், உதவிக்குழுக்கள் அனுப்பும். இதுபோலத்தான், பூகம்பம் வந்தால், உடனே உதவ எல்லோரும் வருவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படியா, மிக்க மகிழ்ச்சி. ஆமாம் பசி பட்டினி பஞ்சம் உள்ள நாடுகளின் படங்கள் இவை, பாருங்கள் எலும்பும் தோலுமாய் உள்ள மனிதர், உலர்ந்து வெடித்த நிலத்தில் சுருண்டிருக்கிறார். பத்தடி தொலைவில் கழுகு காத்திருக்கிறது. ஒரு பக்கம் அதிக விளைச்சல் என்று பழங்களையும் தானியங்களையும் கொட்டிக்கொண்டிருக்கிறீர்கள், ஆயிரம் கோடிகள், மில்லியன்கள் ஆயுதங்களுக்கும் அணுகுண்டுகளுக்கும் செலவழிக்கிறீர்கள். பாருங்கள், அணுகுண்டு விஷவாயு இவை இரண்டும் இன்னும் பல வினோத ரசாயனங்களால் பாதிப்புக்குள்ளானவர்களின் படங்கள், பஞ்சம் தலைவிரித்தாடும் நாடுகளில் உள்ள குழந்தைகளின் படங்கள்,...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இது என்ன கொடுமை, .... வேண்டாம் தயவு செய்து காட்டாதீர்கள், ..... இது என்ன பயங்கரம் நினைத்தால் சோறுதண்ணி இறங்காது. பொல்லாத பணக்கார நாடுகள் பலவிதக்களில் சுரண்டுகிறார்கள். தனிமனிதர்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனிமனிதர்களைப்பற்றிச்சொல்கிறேன். முன்பு எப்போதும் இல்லாத அளவு மனித உரிமை மீறல், வன்முறை, பாலியல் வன்முறை இதற்கு ஒவ்வொரு நாட்டிலிருந்தும் புள்ளிவிவரங்கள் எடுத்து கடந்த சில ஆண்டுகளாக கண்காணித்து வருகிறோம். இதில் இனவேறுபாடின்றி ஒற்றுமையாக இருக்கிறீர்கள். சிரிக்கமுடியாத நகைச்சுவை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவு சொல்கிறீர்களே, உங்களால் எளியோருக்கு நல்வாழ்வு அளிக்க முடியுமா, முடியும் என்றால் நிலவென்ன, ஏதேனும் நிலத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நிலங்கள், நீர்நிலைகள் எல்லாம் தூய்மையாக வைத்துக்கொண்டிருக்கிறீர்களா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாம், நாங்கள் ரொம்ப சுத்தம் குப்பை போடுவதற்கென்றே ஒரு தீவை ஒதுக்கிவிட்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெகு அழகு. நீங்கள் என்பது சிங்கப்பூரர்கள் மட்டுமல்ல, பூமிவாசிகள் எல்லோரையும் சேர்த்து என்பதை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டவேண்டியிருப்பதற்கு மன்னிக்கவும். நாங்கள் கேள்விப்படும் செய்திகள் வேறு மாதிரி இருக்கின்றனவே. நீங்கள் கூறுவதை நான் மறுக்கவில்லை. ஆனால் ஒரு ஆதிக்கவாதியின் வீட்டின் மின்னணுக்குப்பைகளை ஏமாந்தவர், இளைத்தவர் வீட்டின் கரைப்பகுதியில் கொட்டுவது, அவர்கள் தயாரிப்புகளையும் கண்டுபிடிப்புகளையும் வலுக்கட்டாயமாக மற்றவர் மீது பயன்படுத்துவது இதெல்லாம் நாசகார வேலையில்லையா, நாங்கள் நிலாவை மட்டும் எடுத்துகொண்டுவிடுகிறோம். பூமியின் சீர்கேடுகளை ஒரு முடிவுக்கு கொண்டு வருகிறோம். வருங்காலத்தினர் எல்லோரும் எல்லாம் பெறுவார்கள்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தாராளமாக எடுத்துக்கொள்ளுங்கள். அதன் மூலம் ஏதேனும் நல்லது நடக்குமானால் நடக்கட்டும். என்ன, இனி நாங்கள் நிலவைப்பார்க்க முடியாது. இருக்கட்டுமே. நிலாவையும் நட்சத்திரத்தையும் காட்டி யார் குழந்தைகளுக்கு சோறூட்டுகிறார்கள். அதற்குதான் டிவி வந்துவிட்டதே, நிலாவாவது ஒன்னாவது, நான் சிறுமியாக இருக்கும்போது, வானத்தில் எண்ணமுடியாமல் நட்சத்திரங்கள் இருக்கும். அம்மா புடவையை மடிக்க முடியாது, அப்பா பணத்தை எண்ணமுடியாது என்று என் தாத்தா வானத்தையும் நட்சத்திரத்தையும் விடுகதையில் ஒளித்துவைத்து கேட்பார். மற்ற நாடுகளில் எப்படி என்று தெரியவில்லை சிங்கப்பூரில் நான் இரவெல்லாம், பல ப்ளோக்குகளின் ஊடாக சன்னல் மூலம் வானத்தில் தேடித்தேடி களைத்துப்போகும் முன் போனால் போகிறது என்று வாரம் ஓரிரு நாட்கள் ஒரு நட்சத்திர தரிசனம் கிடைக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி திருவாட்டி சந்திரிக்கா, நேர்காணல் முடிந்தது. இதில் நிலவை எடுத்துக்கொள்ள ஒரு பூமிவாசியாக உங்கள் கையெழுத்தை இந்த விண்ணப்பத்தில் போட்டால் போதும். இதன் ஒளிசிட்டையும், இந்த சீட்டையும் இப்போதே வலாரியாவிற்கு அனுப்பிவிடுவேன். மிக்க நன்றி. பூமிவாசியில் ஒரு குறிப்பிட்ட விழுக்காட்டினரின் ஒப்புதல் கிடைத்தால் இன்னும் எங்களுக்கு மனநிறைவு கிடைக்கும். நாங்கள் தேர்ந்தெடுத்தவர்களில் ஒருவரின் கை ஒப்பம்&lt;br /&gt;இருந்தால்கூட போதும், செயல்படுத்திவிடலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்ன தருவது. என்ன இருக்கு, அவருக்கு ஐம்பத்தைந்து வயதாகிவிட்டதால் மசேம நிதியில் பணம் எடுக்க முடியாது; காஞ்சுவே எங்கள் சமூக நிலையம் தரும் உதவித்தொகையில் படிக்கிறாள். படிப்பு முடிந்த பின் வேலைக்குப்போய் அதன் பாதியை அடைக்கவேண்டும். மகன் தேசிய சேவையில் இருப்பதால் ஏதோ குடும்பம் நடக்கிறது. சாப்பாட்டு கடையில் வேலைபார்த்த காலத்தில் சேர்த்துவைத்ததில் மருத்துவ செலவு போக நூறு வெள்ளி இருக்கிறது. அடுத்த மாதம் ஐம்பதாவது பிறந்த நாளைக்கு பிள்ளைகளுக்கு ஏதேனும் வாங்கிக்கொடுக்கலாம் என்று நினைத்திருந்தேன். நூறு வெள்ளியில் பாதியை ஏதேனும் தர்ம நிதிக்கு கொடுக்கச்சொல்லிவிட்டு, பாக்கி பணத்துக்கு தமிழகத்திலிருந்து நல்ல தமிழ்ப்புத்தகங்கள் வாங்கி அனுப்ப யாரிடமாவது சொல்லலாமா? என்றென்றும் புத்தகங்கள் வீட்டிலேயே இருந்தால் பிள்ளைகள் படிக்க ஏதுவாக இருக்குமே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தங்கள் அன்புக்கு மிக்க நன்றி திருவாட்டி சந்திரிக்கா, நிலவைத்தான் எடுத்துக்கொள்ளப்போகிறோமே. இதைவிட இனி என்ன வேண்டும். புத்தகங்களை அனுப்புவதில் ஏதும் பிரச்சனையில்லை. தர்மநிதிக்கு உடனே சேர்ப்பித்துவிட இயலும், ஆனால் அவை இனி பயன்படாது&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓ, நீங்கள் இதைவிட அதிக அளவில் பண உதவிசெய்வீர்கள், தெரியும்; இருந்தாலும் என்னால் ஆனதைக் கொடுக்கிறேன், தயவு செய்து மறுக்காதீர்கள். சரி, புத்தகங்கள் வேண்டுமானால் நான் தமிழகம் செல்லும் யாரிடமாவது வாங்கிவரச்சொல்கிறேன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவாட்டி சந்திரிக்கா, அவையும் இனி உங்களுக்கு பயன்படா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏன் எனக்கு கண் தெரிகிறது. நான் நிறைய புத்தகங்கள் படித்துவருபவள்தானே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருவாட்டி சந்திரிக்கா, நாங்கள் நிலவை எடுத்துக்கொண்ட பின் ஏற்படும் விளைவுகளை உங்கள் வாழ்க்கையை திசை திருப்பி விடும். சங்கிலித்தொடர் போல் பல சம்பவங்கள் நடக்கும். ஏற்றவற்றங்கள் மறையும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்றவற்றம் என்றால் ,.....&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங்கிலத்தில் tides என்பார்களே, பூமியின் ஏற்றவற்றங்களில் பெரும் பங்கு வகிப்பது நிலவுதான். அதெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் குறைந்துவிடும். பருவநிலை மாறுதல் ஏற்படும், ஆனால் அவை சாதாரண மாறுதலாக இல்லாமல் பயங்கரமான விளைவுகளை ஏற்படுத்தும். ஒரே வாக்கியத்தில் சொல்லவேண்டும் என்றால் பூமி அழிந்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐயோ கடவுளே, நெஞ்சைப்பிடித்துக்கொண்டேன், நாக்கு உலர்ந்தது;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பூமி முழுதும் அழிந்துவிடும்; கொஞ்சம் தண்ணீர் குடித்துவிட்டு வாருங்கள் திருவாட்டி சந்திரிக்கா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமையலறைக்கு ஓடினேன். கைகள் நடுங்கின. அப்படியே மேடையில் ஓரம் சாய்ந்துகொண்டேன். என் நெஞ்சு படபடத்ததை என்னாலேயே கேட்க முடிந்தது. கல்லூரியில் இருக்கும் மகளின் முகம், தேசிய சேவையில் இருக்கும் மகன், கணவரின் பிம்பங்கள் தோன்ற, கூடாது, நான் கையெழுத்து போட்டால்தானே, அந்த பேப்பரையே கிழித்துவிடுகிறேன். நன்றாக இருக்கிறது கதை, வலாரியாவாம், நிலவை மட்டும் எடுப்பார்களாம், பூமியே அழிந்துவிடுமாம் ஆறஅமர சொல்கிறார்கள், பின் பக்கத்தில் துணி உலர்த்தியிருக்கும் காலாக்கம்புகளை எடுத்து இந்த கரப்பானை அடித்து நொறுக்கிவிடட்டுமா, ஐயோ அது மனதை வேறு படித்துத்தொலைக்குமே, கெட்டவர் அழிய அப்பாவிகள் உயிரைவிடவேண்டுமா, இது அநியாயம் அக்கிரமம், கூடாது, கூடவே கூடாது, ஒருத்தர் கையெழுத்துப்போட்டால்கூட செயல்படுத்தி விடுவார்களாம்; என்ன துணிச்சல், இவர்கள் யார் நமக்கு சட்டம் பேச, கையெழுத்து போட மாட்டேன் என்று அடித்துச்சொல்லிவிடலாம். அந்தந்த நாட்டின் தலையெழுத்து யார் மாற்ற முடியும், எனக்கென்ன அதிகாரம் இருக்கிறது, நான் என்ன நாட்டின் பிரதம மந்திரியா, இல்லை அதிபரா, இல்லை அப்படி இருப்பவர்கள்தான், வலிய நாடுகளை பகைத்துக்கொள்கிறார்களா, நானா சொன்னேன், அணுகுண்டு போடு, ரசாயனங்களை அப்பாவிகள் மீது சோதித்து பார் என்று அவரவர் தலையெழுத்து, ஏதோ முடிந்ததைக் கொடுக்கலாம். மறுகணம் அந்த பத்து புகைப்படங்கள், ஐயோ கோரம், பயங்கரம், எனக்கு இங்கு என்ன பிரச்சனை, குழாயைத் திறந்தால் தண்ணீர், தொண்ணூறு விழுக்காட்டினருக்கு அரசே வீட்டுவசதிக்கடன், யாருமற்றவருக்கு ஆதரவு இல்லங்கள், வியாதி வராதவரை ஒன்றும் பிரச்சனையில்லை, ஆனாலும் அந்தப் புகைப்படங்கள் மனதை என்னவோ செய்தன, ஒரு நாடு மட்டுமா, பல நாடுகளில்அணுகுண்டு வீச்சுகள் இப்படியா தலைமுறைகளை பாதிக்கும்; விஷவாயுக்கசிவு இவ்வளவு நாசகரமானதா, அந்த பஞ்சப்பரதேசி மனிதன் எதைத்தேடி போகிறான் தெரியுமா, ஐயோ இதற்கெல்லாம், முற்றுப்புள்ளி வைக்க எனக்கு அதிகாரம் கிடைத்திருக்கிறது, கிடைத்திருக்கிறதே, யாருக்கும் கிடைக்காதது எனக்கு கிடைத்திருக்கிறதே, ஒரு கையெழுத்து ஒரு கையெழுத்து மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தண்ணீரை கடகடவென்று குடித்துவிட்டு, முன்னறைக்கு ஓடி வந்தேன். வெடுக்கென்று கரப்பானிடமிருந்து விண்ணப்பத்தைப்பிடுங்கி எங்கே கையெழுத்து போட வேண்டும் என்று கேட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு பின்குறிப்பு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாலையின் சேகர் மாற்று சாவியை மூலம் வீட்டைத் திறந்துகொண்டு வந்தபோது, முன்னறையில் மயங்கிக்கிடந்த சந்திரிக்காவைதண்ணீர் தெளித்து எழுப்பியவுடன் வானத்துல நிலவு தெரியுதா என்று ஏன் கேட்டாள் என்பது சேகருக்குப் புரியவில்லை.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-329774833659090538?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/329774833659090538/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=329774833659090538' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/329774833659090538'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/329774833659090538'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/07/blog-post_31.html' title='ஓர் உன்னத தினம்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1211007593012702923</id><published>2008-06-19T20:43:00.000-07:00</published><updated>2008-06-19T20:48:01.017-07:00</updated><title type='text'>ஜுரோங் பறவைப்பூங்காவில் பொதுக்கூட்டம்</title><content type='html'>&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;அன்னம் எழுந்தது&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;குயிலின் பாட்டுத்தான் பாட்டு,&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;வானம்பாடி&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;எங்கோ வானத்தில் பாடுவது&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;யாருக்குப் புரிகிறது?&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;புறா சிலிர்த்தது&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;வானம்பாடியின் கவிதை உயிர்விதை&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;குயில்நல்லதொருபாடகி&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;அவ்வளவே&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;கூக்குரல்கள் நெருக்க &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;தீப்பொறி பறந்தது&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;குயிலும் வானம்பாடியும் &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;பேசிக்கொண்டே &lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;தண்ணீர்குடிக்கப் போனதை&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;யாரும்கவனிக்கவில்லை&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6600cc;"&gt;&lt;em&gt;யுகமாயினி 2008 மே&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;/em&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1211007593012702923?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1211007593012702923/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1211007593012702923' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1211007593012702923'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1211007593012702923'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/06/blog-post_19.html' title='ஜுரோங் பறவைப்பூங்காவில் பொதுக்கூட்டம்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-7937798491897161</id><published>2008-06-14T16:52:00.001-07:00</published><updated>2008-06-14T17:01:16.893-07:00</updated><title type='text'>அனைவருக்கும் நன்றி</title><content type='html'>&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;என் முதல் கவிதை நூல் (நாளை பிறந்து இன்று வந்தவள் ) வெளியீடு 1.6.2008 அன்று சிங்கப்பூர் தேசிய நூலகத்தில் நல்லபடியாக நடந்தது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும், &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;வர இயலாமல் போனாலும் வாழ்த்து தெரிவித்த உள்ளங்களுக்கும், அறிவிப்பை வெளியிட்ட இணையதளங்கள், &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;சிங்கப்பூர் தமிழ் முரசு ஆகியவற்றிற்கும், &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;நூல் வெளியீட்டு நிகழ்வை படம்பிடித்து &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;விவரங்களுடன் வெளியிட்ட&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;தினமலர், தினமணி நாளிதழ்களுக்கும்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;அன்புடன்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#cc6600;"&gt;மாதங்கி&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-7937798491897161?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/7937798491897161/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=7937798491897161' title='8 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/7937798491897161'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/7937798491897161'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/06/blog-post.html' title='அனைவருக்கும் நன்றி'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>8</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-2544463839111847465</id><published>2008-05-28T03:02:00.000-07:00</published><updated>2009-11-20T00:24:01.080-08:00</updated><title type='text'></title><content type='html'>&lt;a href="http://bp0.blogger.com/_Emz0cUO41ZQ/SD0u3YsgdEI/AAAAAAAAAEI/nvA9sP77F0E/s1600-h/Scan10002.JPG"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5205368273366971458" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp0.blogger.com/_Emz0cUO41ZQ/SD0u3YsgdEI/AAAAAAAAAEI/nvA9sP77F0E/s320/Scan10002.JPG" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;a href="http://bp3.blogger.com/_Emz0cUO41ZQ/SD0ugIsgdDI/AAAAAAAAAEA/KDnomBuTm8M/s1600-h/Scan10002.JPG"&gt;&lt;/a&gt;&lt;div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-2544463839111847465?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/2544463839111847465/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=2544463839111847465' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2544463839111847465'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2544463839111847465'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/05/blog-post_28.html' title=''/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp0.blogger.com/_Emz0cUO41ZQ/SD0u3YsgdEI/AAAAAAAAAEI/nvA9sP77F0E/s72-c/Scan10002.JPG' height='72' width='72'/><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-3008856858128111992</id><published>2008-05-13T02:25:00.000-07:00</published><updated>2008-05-15T21:14:24.488-07:00</updated><title type='text'>எ·ப். கெ. லிம்மின் மூன்றாவது கண்</title><content type='html'>&lt;strong&gt;சிறுகதை&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜேனட்டின் முன்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையில் வரும் எ·ப்.கெ. லிம் அவர்களை நான் நேர்காணலுக்காகச் செல்லும்வரை அவர் யார் என்றே எனக்குத் தெரியாது. நேரில் பார்த்தபோது அவர் எல்லோரையும் போலவே இருந்தார். மத்திம உயரம், சுத்தமாக வெட்டப்பட்ட தலைமுடி, சிறிய ஆனால் ஊடுறுவும் கண்கள், சுத்தமான கசங்கலில்லா ஆடைகள் ,பளபளக்கும் காலணிகள். அவர் வீட்டில் உரையாடினோம். அவர் நடத்தும் பேக்கரியின் கிளமெண்ட்டிக் கிளையைச் சுற்றிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரா·பிள்ஸ் கல்விக்கூடத்தின் முன்னாள் மாணவர், பள்ளி,கல்லூரி படிப்பில் தங்கப்பதக்கங்கள் வாங்கியவர். சிங்கப்பூரின் பிரபல பெரிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பத்தாண்டுகள் இருந்த பின் கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்தமாக பேக்கரி நடத்துகிறார். அவரை நேர்காணல் செய்ய வேண்டும் - என் தலைமையதிகாரி எனக்கு இவ்வளவே கூறியிருந்தார். நான் உற்சாகத்துடன் திரு எ·ப்.கெ.லிம்மைத் தொடர்பு கொண்டபோது, மிகுந்த தயக்கத்திற்குப்பின்னர்தான் ஒப்புதல் தந்தார். மிக மிக நிதானமாகப் பேசினார். நிதானம் என்றால் இதுவரை இத்துணை நிதானத்தை நான் பார்த்ததில்லை. நானும் பத்திரிகைக்கு கொடுக்கவேண்டிய நேர்காணலின் ஒரு நகலை மின்மடல் மூலம் அனுப்பியிருந்தாலும் என்னை ஒரு கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது. அவருடன் நான் நடந்து சென்றபோது, அவர் பெரும்பாலும் தன் காலணியைப் பார்த்தவாறு நடந்தார். ஒருவேளை அதன் பளபளப்பை உறுதி செய்துகொள்கிறாரோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் காரணம் அதுவன்று வேறு ஏதோ ஒன்று என்று மனதில்பட்டது. அதுகுறித்து தனியாக அவரிடம் பேசநினைத்து மீண்டும் அவரைச் சந்தித்தேன். இதை அவர் விரும்பினால் ஒழிய வெளியேசொல்லமாட்டேன் என்று சொன்னேன்.என் கைபேசியை அணைத்துவிட்டு கைப்பையில் வைக்கும்போது என் வாலட் (பர்ஸ்) கீழே விழுந்தது. இது உங்கள் ஆண்ட்டி கொடுத்தது அல்லவா என்றார். யு.எஸ்ஸில் லாரா ஆண்ட்டி எனக்கு பரிசளித்த வாலட் அது. ஆண்ட்டி இப்போது உயிரோடு இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு சென்றவாரம்தான் அதை உள்ளிருந்து எடுத்துப் பயன்படுத்தத் துவங்கியிருந்தேன்.&lt;br /&gt;அவரிடம் கேட்டேன். நீண்ட மௌனத்திற்குப் பின் பேசத்துவங்கினார்.&lt;br /&gt;இனி கதைக்குச் செல்லலாம்: இதோ அவர் வார்த்தைகளில்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இளமைக்காலம், அச்சம், குழப்பம், துணிவு, தனிமை,பாசம் இவற்றின் கலவையாகவே இருந்தது. அப்பா அரசுப்பணியில் முதனிலை அதிகாரி, அம்மா சட்டம் பயின்று சொந்தமாக சட்ட ஆலோசனை நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தார். என் ஆ-மா தான் (பாட்டி) வீட்டில் என்னைப்பார்த்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;வீட்டில் பணிப்பெண் யாருமில்லை. பெற்றோர் இரவு உணவு மட்டும்தான் வீட்டில் உண்பார்கள், அதுவும் சில நாட்கள் மட்டுமே. படிப்பில் முதல் மாணவன், பாட்டியின் செல்லப்பேரன், வெரி கொயட் என்று பள்ளியிலும், அக்கம்பக்கத்தினரும் சொல்வார்கள். மிகக் குறைவான நண்பர்கள். இப்படித்தான் என் இளம் பருவம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அப்போது பத்து வயது இருக்கும். ஒரு முறை என் ஆமாவுடன் அவர் தோழி ஒருவர் வீட்டிற்கு போயிருந்தேன். அவர் வீட்டிற்கு ஆமா பலமுறை சென்றிருந்தாலும் நான் அவர்கள் வீட்டிற்குப்போவது அதுவே முதல் முறை. நான் ஒரு புத்தகத்தைக் கையில்எடுத்துக்கொண்டு நகர்ந்தேன்.ஆ-மா தோழியுடன் மாஜோங் விளையாட்டு ஆடத் துவங்கியிருந்தார். இனி சில மணி நேரங்களுக்கு அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுவார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். அவர்கள் வீட்டு பின்புறத்தில் தோட்டம் இருந்தது. வேலி போட்டு வைத்திருந்த அந்த தோட்டத்தைப் பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது. சிறிய இடமாயிருந்தாலும் ஆமாவின் தோழி அதை மிகச் சுத்தமாக வைத்திருந்தார். பப்பாளி மரத்தில் பல காய்கள் கொத்தாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றை எண்ணத்துவங்கினேன். ஏதோ பேச்சுக்குரல் கேட்க, ஆமா அழைக்கிறாரோ என்று திரும்பினேன். பழுப்பு நிற 'சியோங்சாம்' அணிந்த இரு பெண்மணிகள் ஏதோ சுருக்குப் பைகளைக் காணோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். என் அம்மா வயது இருக்கலாம். அவர்கள் தலையலங்காரம் மிகவும் பழங்காலத்ததாக எனக்குத் தோன்றியது. இருவரில் இடது பக்கம் நின்றிருந்த பெண்மணி மிகவும் கவலையுடன் இருந்தார், என்னைப் பார்த்து, கொஞ்சம் தேடித் தருமாறு வேண்டிக்கொண்டார். சரியென்று, நானும் தேடுகிறேன் என்று கூறியவாறு பின்புறம் இருந்த துடைப்பான், முறம் இவற்றையெல்லாம் திருப்பிப் பார்த்து நானும் தேடத்துவங்கினேன். செடிகளுக்கு உரமிடும் உரக்கூடை, வீடு கழுவும் உதவும் பக்கெட்டுகள், துடைக்கும் துணிகள், தட்டுமுட்டுபொருள்களை போன்றவைதான் அங்கங்கே தட்டுப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாவிடன் கேட்டு உதவச்சொல்லலாமே என்று தோன்றியது. ஓடிப்போய் ஆமாவிடம் சொல்ல ஆமா, தோழியுடன் வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தப் பெண்மணிகள் இன்னும் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களைச் சுட்டிக்காட்டினேன். நான் பப்பாளிகளை எண்ணிக்கொண்டிருநதபோது பார்த்தேன் என்றேன். ஆமாவும் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர். என்னை உள்ளே அழைத்துச்சென்று ஆமாவின் தோழி உள்ளிருந்து ஒரு தட்டில் துரியான் பழங்களையும், ஒரு கச்சாங் (கடலை) பொட்டலத்தையும் வைத்துக்கொடுத்தார். ஆமா என்னை தன் பக்கத்திலேயே இருத்திக்கொண்டார். என்னிடம் சில கேள்விகள் கேட்டார். ஆமாவிற்கு விளையாட்டில் கவனம் செல்லவில்லை. என்னை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்ணுக்குத் தெரிந்த பெண்மணிகள் ஆமாவிற்கு அவர்தோழிக்கும் தெரியவில்லை என்பதை பின்னர் அறிந்து கொண்டேன். அதன் பின் இரண்டொருமுறை அந்த தோழி வீட்டிற்குப் போகும் வழியில் சில நேரங்களில் முழு உருவமாகவோ, நிழல் உருவமாகவோ, சில மனிதர்கள் என் கண்ணில் தென்படத் துவங்கினர்.&lt;br /&gt;சில நாட்களுக்குப் பின்னர், என் ஆமா என்னை ஒரு சோதிடரிடம் அழைத்துச் சென்றிருந்தார். நான் மருத்துவர் ஆவேனா, ( என் தாத்தா அந்த காலத்து சீன பாரம்பரிய மருத்துவராம்) என் வருங்காலம் எப்படி இருக்கும், எனக்கு எத்தனை பிள்ளைகள், மனைவி, எப்படிப்பட்டவளாக அமைவாள், என்று பற்பல கேள்விகளை தயார்செய்துகொண்டு, என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நான் அணிந்திருந்த உடை எனக்கு நினைவில்லை, ஆனால் ஆமா மூங்கில்தண்டு நிறத்தில் 'கெபயா' அணிந்திருந்தார். அவருக்குப் பாசாரில் (சந்தையில்) வாங்கிய வேலைப்பாடுகள் கொண்ட மரத்தாலான கொண்டை ஊசியை ஓடிவந்து எடுத்துக்கொடுத்ததுகூட நினைவிருக்கிறது. அந்த சோதிடர் கிரேட்டா ஆயர் பகுதியில் இருந்தார். போகும் வழியில் ஆமா வுடன் பேசிக்கொண்டே வந்தேன். முன்பு அந்த இடத்தில், தூய்மையான தண்ணீர் ஊற்றுக்கள் நிறைய இருந்ததால் சுற்றுவட்டாரத்தில் நிறைய பல இனத்தவரின் வழிபாட்டுத்தலங்கள் இருந்தன என்றும், வண்டியோட்டிகள், மாட்டுவண்டிகளில் நீர் நிரம்பிய அண்டாக்களை ஏற்றி, மற்ற பகுதிகளில் இருந்த மக்களுக்கு விநயோகித்தனர், என்று ஆமா சொல்லிக்கொண்டே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங், சோதிடர் என்ன சொன்னார் என்று சொல்கிறேன், அவர் ஒன்றும் சொல்லமுடியாது என்று கூறி, கிட்டத்தட்ட எங்களை விரட்டிவிட்டார். ஆமா சோர்ந்து போகவில்லை, என்னை இன்னொரு சோதிடரிடம் அழைத்துச்சென்றார். அவர் ஆமாவிடம் அன்பாகப் பேசினார். ஆனால் எனக்கு சோதிடம் பார்க்க பணிவுடன் மறுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா, மௌனமாக என்னை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். இரவு அம்மா அப்பாவிடம் சொன்னேன். அவர்கள் நாத்திகர்கள் என்றபடியால் இது அவர்களை பாதிக்கவேயில்லை. ஆனால் அன்பின் காரணமாக அவர்கள் ஆமாவிடம் இதுகுறித்து ஏதும் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கோ அப்போதே பள்ளிக்கு ஓடிப்போய் என் யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போதோ என் அவசரத்தை நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது.&lt;br /&gt;நீண்டதூரம் காரோட்டிக்கொண்டு செல்வது என் அன்னைக்கு மிகவும் பிடிக்கும். ஆமாவும், நானும் என் பெற்றோருடன் எங்கள் வீட்டு காரிலேயே அண்டை நாடுகளுக்கு போய் வருவோம். கல்லூரி சென்றபின் நானும் ஓட்டத்துவங்கினேன். ஆமா என் பக்கத்திலும் என் பெற்றோர் பின்பக்கமும் அமர்ந்துகொள்வர். என் அம்மா, அப்பா, நான் என்று மாற்றி மாற்றி ஒட்டுவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலாக்கா, சிங்மாய், டோக்கியோ, எங்கு சென்றாலும் இறந்தவர்கள் என் கண்களில் பட்டுக்கொண்டேதான் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்ணுக்குப் புலப்பட்ட எந்த ஆவியுமே என்னை எந்த விதத்திலும் இதுநாள்வரை தொந்தரவு செய்ததில்லை. நான் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் எங்கள் மூத்த அதிகாரி ஒருவர்மூலம், ஆமாவின் தோழி குடியிருந்த பகுதிக்குச் செல்லும் வழி, சிங்கப்பூர், ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், பிணக்கிடங்காக இருந்தது என்ற செய்தியைத் தெரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அவதானிப்புகள் அதிகமாக ஆக , என் நண்பர்கள் குறைந்துகொண்டே வந்ததுதான் நடந்தது. ஏற்கனவே எனக்கு மிக மிக குறைவான நண்பர்களே, பல்கலையில் இருந்தனர். போததற்கு, முதுகலை இறுதியாண்டில் பயிலும்போது உடன் பயின்ற மாணவனின் தந்தை மாண்டு போனார். விடுப்பு எடுத்துக்கொண்டு அவனுடனே அன்று முழுவதும் இருந்தேன். முக்கியமான சில பத்திரங்களின் தகவல்களும் அவை எங்கே வைக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியாமல் அவன் தாயார் திண்டாடுவதாகக் கூறினான். மறுநாள் பின் அவன் தந்தையாரை நான் என் சோதனைகூட அறை முகப்பில் பார்த்தேன். அவர் பெட்டகச்சாவி இருக்கும் இடத்தை என்னிடம் கூறியதால், என் நண்பனை உடனே அழைத்து விவரத்தைச் சொன்னேன். நான் சொன்னது சரியான விவரமே என்று அவன் வீடு சென்றதும் உறுதி செய்து எனக்கு நன்றி தெரிவித்தான். அதன் பின் அவன் தந்தையாரின் வேக் நிகழ்விற்குக்கூட (இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கில் உறவினர் நண்பர் கலந்துகொள்ளும் நிகழ்வு) என்னை அழைக்கவில்லை. நான் தொலைபேசியில் ஓரிருமுறை அழைத்தபோது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை என்னுடன் நட்பு பாராட்டுவது அவனுக்கு அச்சமாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ்சாலையோரம் நிற்பவர்களையோ, நடப்பவர்களையோ கொஞ்சம் போக்குவரத்தை கவனித்துச்செல்லுமாறு கூறியிருக்கிறேன். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படப்போகும் விபத்துக்களைக்கூடத் தவிர்த்திருக்கிறேன். மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதுகூட என் கண்களில் நிழல் உருவங்கள் தென்பட்டுக்கொண்டே இருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் தாங்கள் இறந்ததைக்கூட அறியாமல் இருந்தனர். சிலர் ரோட்டிப்பராட்டா சாப்பிட்டுக்கொண்டோ, பீர் அருந்திகொண்டோ இருப்பார்கள். உனக்கு எதாவது சாப்பிட வேண்டுமா என்றுகூட கேட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று எனக்கு சலிப்போ, பெருமிதமோ ஏற்பட்டதில்லை. எனக்கு எப்படி இப்படி ஆகிறது என்றோ, மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்றோ , நான் நேரம் செலவழித்து ஆராய்ந்ததுமில்லை. இதை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்றோ புகழுக்கோ, பணத்துக்கோ நான் ஆசைப்பட்டதுமில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக நான் படைக்கப்பட்டிருக்கிறேன். என் பிறந்த தேதி 6-6-1966 மாலை ஆறு மணி ஆறு நிமிடங்கள், நிறைய ஆறு வருகிறது. பதினைந்து வயதிலிருந்து யோகப்பயிற்சி செய்கிறேன். தனியாக நடக்கும் போது சிலசமயம் எனக்குள் நான் பேசிக்கொள்வேன். இப்போது சின்னஞ்சிறு கைபேசியை வைத்துக்கொண்டு பலர் தனியே பேசிக்கொண்டே நடப்பதால், என்னையும் அவ்வாறே எண்ணிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஒரு பெண் டேட் செய்தாள், எங்கள் பணியிடத்தின் வேறொரு பிரிவில் வேலை செய்து வந்தாள். முதல் சந்திப்பு ஒரு உணவகத்திலும், அடுத்த சந்திப்பு புக்கிட் திமா பூங்காவிலும் நிகழ்ந்தது. என் அமைதியான குணம் தன்னைக் கவர்ந்ததாகச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் புத்திசாலித்தனமான ஒரு காரியம் செய்தேன். என் முன் தென்படும் நிழல்மனிதர்களைப் பற்றிஅவளிடம் சொன்னேன். அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யாவிட்டாலும், அவர்களைத் தவிர்க்க தரையைப் பார்த்து நடக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறேன் என்றும் இன்னும் சில நற்செய்திகளையும் சொன்னேன். அந்த சந்திப்பிற்குப்பின் அவள் என்னோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 2008 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களில் உச்சப்பயன்பாட்டை அறிந்து வைத்து பயன்படுத்தும் சிங்கப்பூரில் இப்படியும் ஒரு பிரகிருதியா என்று நினைத்தாளோ என்னவோ. அவள் ஜூரோங் அறிவியல் பூங்கா வளாகத்தில் வேறு வேலைக்குப் போய் விட்டாள் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எந்தப் பெண்ணையும் பார்த்து காதல் உண்டாகவில்லை. காதல் என்பதே ஹார்மோன்களின் சேட்டை என்று ஒரு எழுத்தாளர் கூறியிருந்ததாகப் படித்தேன். மேலும், முழுக்க முழுக்க பாட்டியின் கவனிப்பிலும், வெளியுலகில், ஆம் , இல்லை போன்ற அத்தியாவசியமான பேச்சுக்களிலும், தனிமையிலும் இருந்ததாலோ என்னவோ, பெண்களிடம் பழகும் முறையை நான் அறியவில்லையோ என்னவோ.&lt;br /&gt;ஐந்து ஆண்டுகளுக்கு முன், பாட்டி இறந்தபின்னர், ஆராய்ச்சித்துறை வேலையிலிருந்து விலகிக்கொண்டு, பேக்கரி ஒன்றைத்துவங்கினேன். அதன் ஆரம்பக் காலகட்ட பணிகளில் நான் சந்தித்த ஒரு பெண் நல்லதொரு தோழியானாள். அவள் என்னைத் திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினாள். என்னைப் பற்றி சொன்னபோது அவள் குதூகுலம் அடைந்தாள்.அவள் பெயர் ஆ ஹ¤வே. என் ஆமாவின் பெயர். என் கண்களுக்கு அவள் என் ஆமாவைப்போலத் தோன்றினாள். அதனால் அவளை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பேக்கரியின் ஏழு கிளைகளிலும் பணிபுரிய அனுபவமுள்ள பணியாளர்களுக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுத்தபோது, ஆட்டிசம், உடல் ஊனம், முதலியவற்றால் பாதிக்கப்பட்ட இளையர் சிலரையும் பணியில் சேர்க்கபோகிறேன் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி கொடுத்து வாழ்வில் காலூன்றவைக்க ஆசைப்படுகிறென் அவர்களுடன் இணைந்துபணிபுரிய வேண்டும் என்றபோது பெரும்பாலானோர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னப்பையனாக நான் வாழ்ந்த காலத்தில் ஆ-மா அவர்கள் அங் கூ குவே, நிலவப்பம் போன்ற பலகாரங்களைச் செய்யும்போது கூட இருந்து, கழுவுவது, பொடிப்பது, அரைப்பது போன்ற வேலைகளை கூடமாட ஒத்தாசை செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பெற்றோர் எப்படி இறந்தார்கள் என்று கேட்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விடுமுறை நாளில் பெற்றோருடன் ஜொஹ¤ருக்குக் கிளம்பினேன். நான் தான் ஓட்டினேன். பின் இருக்கையில் என் பெற்றோர் அமர்ந்திருந்தனர். சிங்கப்பூர் எல்லையைக் கடக்கும் முன் கனரக லாரி ஒன்று எங்கள் காரை மோத எனக்குச் சில சிராய்ப்புக்கள். காரின் பின்புறம் நொறுங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் இலக்கிய இதழ் 'நாம்' 2008 மார்ச்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-3008856858128111992?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/3008856858128111992/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=3008856858128111992' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/3008856858128111992'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/3008856858128111992'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/05/blog-post.html' title='எ·ப். கெ. லிம்மின் மூன்றாவது கண்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1126916414741190012</id><published>2008-04-25T03:24:00.000-07:00</published><updated>2008-04-25T03:29:47.424-07:00</updated><title type='text'>சின்னஞ்சிறுகதை ஒன்று</title><content type='html'>&lt;div align="center"&gt;&lt;span style="color:#cc0000;"&gt;அழகுப்பொருள் &lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="center"&gt; &lt;/div&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;"நம்ம குழந்தை கழுத்துக்கு இந்த அழகுசாமான் ரொம்ப பொருத்தமாக இருக்கும்,  என்ன வாங்கிடுவோமா "அவன் அவளைக் கேட்டான். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;"சுமாராத்தான் இருக்கு; வேணா குழந்தை ஆசைப்பட்டால் வாங்கிக்கொடுத்து விளையாடச்சொல்லலாம்.   இப்பெல்லாம் எல்லா பசங்களும் இதைத்தான் கழுத்தில் கோத்துகிட்டு விளையாடறாங்களாம்". &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;வாங்கினார்கள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;அம்மா அதை அவன் கழுத்தில் மாட்டினாள். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;"அம்மா அம்மா ரொம்ப ஜோரா இருக்கு என் ப்ரெண்ட் கூட இதே மாதிரி போட்டிருக்கான், இது எதுலமா பண்ணினது?" &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000066;"&gt;"மனுசனோட பல்லு கண்ணு", அம்மா தும்பிக்கையால் மகனைத் தடவிக்கொடுத்தாள். &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1126916414741190012?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1126916414741190012/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1126916414741190012' title='11 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1126916414741190012'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1126916414741190012'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/04/blog-post_25.html' title='சின்னஞ்சிறுகதை ஒன்று'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>11</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-4463899785098502442</id><published>2008-04-24T05:46:00.000-07:00</published><updated>2008-04-24T06:05:44.407-07:00</updated><title type='text'>வியாழன் விசிட்- ஒன்றேகால் திரைப்படங்கள், புக்கர்விருது, கரீபியன் கடலும் கயானாவும்,  கொளபொ</title><content type='html'>&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;ஒரு திரைப்படம்&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வேகம்= தொலைவு/ நேரம்&lt;br /&gt;&lt;br /&gt;இந்த விதி மாறாது.&lt;br /&gt;கதாநாயகி = ஒரு தாதா அல்லது அரசியல்வாதி (நாயகியின் தந்தை)/ ஏழையான கதாநாயகன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்னும் யாரும் இந்த விதியை பயன்படுத்துவதை தடைசெய்யவில்லை போலிருக்கு, குறைந்த பட்சம் சம்பவங்களையாவது கொஞ்சம் மாற்றி யோசிக்கலாம். மக்களை கொஞ்சம் நெனச்சுப்பாருங்க.&lt;br /&gt;&lt;br /&gt;கூடல் நகர் படம் பார்த்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக்கதை தெரிந்தவர்கள் நான் சரியாகச் சொல்கிறேனா என்று பார்க்கலாம் அல்லது 'ஒரு ஆறுதல்' பத்திக்குத் தாவி விடலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பரத்துக்கு இரட்டைவேடம் முதல்முறையாக, சட்டை நிறத்தைத் தவிர வேறு வித்தியாசங்கள் இல்லை. அது கதைக்குத் தேவையாக இருக்கிறது. அதனால் மெய்ப்பாடு வேற்றுமையைக் காட்டவில்லை என்று யாரும் குறை சொல்லமுடியாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி பரத், அரசு மருத்துவமனை பிணக்கிடங்கு ஊழியர் கம் அரசியல்வாதியின் அடியாள் குழு உறுப்பினர்; பாப்பா பாப்பா என்று மரியாதையாக முதலாளி மகளை அழைக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அண்ணன் பரத் பாரதி நூலகத்தில் வேலை பார்க்கிறார்; சைக்கிளில், பாப்பா கேட்கும் ஜெயகாந்தன், சுஜாதா புத்தகங்களைக் கொடுத்து வருகிறார், அடுத்தடுத்த காட்சிகளில் ஆ.வி. பிரசுரத்தின் காதல் படிக்கட்டுக்கள், (பாத்து தம்பி, வழுக்கிவிழுந்துராதே- அறிவுரை கொடுக்கும் இளவரசு (குழு உறுப்பினர்- வேலை படம் முழுதும் போஸ்டரும் கோந்துமாய்த் இருப்பது- படம் முடிந்த பின்னும் நினைவில் நிற்கிறார். ) ஒரு புளியமரத்தின் கதை (சு.ரா)எல்லாம் கொடுக்கிறார், தம்பி அக்கறையுடன் கோடிட்டு காட்டுவதை அசட்டை செய்கிறார், அவர்தான் அம்மா மெச்சும் நல்ல பிள்ளை, தம்பி போல் குடி கிடையாது, படம் முழுக்க சாதுவாகவே இருக்கிறார், எதிர்குழுவினர் ஆட்கள் காதலியை கலாட்டா செய்ய வரும்போது அவள் கைபிடித்து வேகமாகத் தப்பி ஓடி காப்பாற்றுகிறார்; சிறிது நேரத்தில் அவர்கள் நெருங்கி வரவும் ஒரு குடிசை வாசலில் கிடக்கும் அம்மிக்குழவியை தூக்கி ஆவேசத்துடன் காட்டுகிறார், இது நம்பும்படியாக இருக்கிறது. ஆண்கள் (காதலர்கள்) காலரை தூக்கிவிட்டுக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கதாநாயகி பாவனாவின் லட்சியம், நன்றாகப் படித்து (அப்படித்தான் தேவர் மகனில் கமல் சொல்லுவார் என்று ஆசிரியரிடம் சொல்லுகிறார்) சிறந்த ஆசிரியராக திகழவேண்டும், மிளிரவேண்டும், விளங்கவேண்டும் என்று அவ்வப்போது சொல்லுவதாகக் காட்டியிருப்பது நன்றாக இருக்கிறது. (பல படங்களில் எதுக்குடி படிப்பு ,....ஐக் கட்டிக்கிட்டா போதும் என்று கதாநாயகி தோழிகளிடம் சொல்லுவதாக வரும்)&lt;br /&gt;கையைப்பிடித்த ஒருவனின் கரத்தை ஆள் வைத்து காலிசெய்த அப்பாவின் எதிர்வினையையும் மீறி ( இதையும் முன்பே பார்த்திருக்கிறோம்- அதுதான் காதல் என்பதா) காதலிக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்பா, பைக், சைக்கிள் , எதிலும், எங்கும் போகக்கொடுக்கும் சுதந்திரத்தை நன்றாகப் பயன்படுத்திக்கொள்கிறார். தம்பிப்பாப்பாவிடம் உயிரை வைத்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா கவனிக்கவில்லை என்று சொல்லக்கூடாது, அம்மாவுக்கு கைக்குழந்தையைப் பார்த்துக்கொள்ளவேண்டும்.&lt;br /&gt;இதெல்லாம் எல்லாபடத்திலும் பார்ப்பதுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணவீட்டில் சந்தியா பரத் சந்திப்பும், சந்தியாவின் அலம்பலும் சும்மா கலக்குது. சந்தியா கிடைச்ச ரோலை அளவா, மிடுக்கா செஞ்சிருக்காங்க. சந்தியா அப்பா (தம்பி பரத்தின் சக ஊழியர்) மனதில் நிற்கிறார், 18 வருசமா அப்பன் குடியினால அவதிப்பட்டிருக்கேன், நீ குடிப்பியா, எவ்வளவு காசு வச்சிருக்கே, எனக்கு கவரிங் நகை, பகட்டு எதுவும் வேணாம்,....சும்மா சுத்தி வராதே, நான் மோசமானவ, நிறைய பேத்த வெளக்கமாத்தால விளாசிருக்கேன், உனக்கு இங்கிலீசு தெரியுமாயாஅ,...( கோ, கோ, அப்புறம் கோஓஓஓ,... தம்பி பரத், திருப்பரங்குன்றத்தில் வந்து வழி கேட்கும் வெளிநாடுகாரர்களிடம்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தம்பி பரத், அ. வாதியின் அடியாட்கள் (அண்ணன் பரத் என்று நினைத்து) வேற்றுமை தெரியாமல் அடிக்க, அண்ணனுக்காக அ. வா. யிடம் அவனை ஒண்ணும் பண்ணிடாதீங்க என்று கேட்டபின்பும், அவனை அ. வா போட்டுத்தள்ளிவிட ( பரத்தும், பாவனாவும் ஓடிப்போகும் பாதிவழியிலேயே மடக்கி, பாவனா, முதலில் அதிர்ச்சியடைந்து பின்னர் தானே தூக்கில்,...) அண்ணன் பரத்தின் உடல் பிணக்கிடங்குக்கு வருகையில் துடித்து அவரை சந்திக்க அனுமதி கேட்டு (தன்னை மறைமுகமாக ஆயுதங்களுக்காக சோதனை செய்வதை அறிந்து) எதிர்கட்சிக்காரங்க, நானுன்னு நெனச்சு போட்டுத்தள்ளிடாங்கண்ணே (இவர் எதிர்கட்சிகார ஆள் ஒருவரை செருப்பால் முன்பொருதரம் அடித்திருக்கிறார்) குமுறி, பிணக்கிடங்கிற்கு அவர் ஆறுதல் சொல்ல வருகையில் சந்தியா உள்ளறைக்கதவை வெளிப்பக்கம் தாள்போட அவரையும் இரண்டு அ. ஆ (அடியாட்களை) யும் போட்டுத்தள்ள, இறுதியில் காவல்துறை அவரை வேனில் அழைத்துச்செல்வதுடன் முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;strong&gt;ஒரு ஆறுதல்:&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தப்படத்தில் அரசியல்வாதி தன் மனைவியை/மகளை பளிரென்று அடித்து, உதைத்து, பிடித்து தள்ளிவிட்டு, நீ உள்ளே போ தலையிடாதே என்றெல்லாம் கத்துவதில்லை.&lt;br /&gt;காத்து கருப்பை நம்பும் பாவனாவின் பாட்டி அப்பாவியாக இருக்கிறார். நிஜப்பாட்டி இன்னும் கொஞ்சம் சுட்டியாக இருந்திருப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா ஏட்டறிவு இருப்பவராக காட்டப்படுவதில்லை; பளிச்சென்று பேசுகிறார், காதலினிடம் காதல் இருந்தாலும் தெளிவுடன் இருக்கிறார். குடிகார அப்பனை ஆவேசத்துடன் அடிக்கிறார், ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார், சம்திங் கேட்கும் சிப்பந்தியிடம், எங்களுக்கும் இங்க ஆளு இருக்காங்க, (கம்பவுண்டர் என்று பீலா விட்ட பரத்) தெனாவட்டாக இருக்கிறார் ( அதற்காக ஆளை ஏமாற்றுவதாகவோ, கெட்டவார்த்தைகளை சரளமாக பேசுபவராகவோ அவரைச் சித்தரிக்காததற்கு நன்றி- ) மிக நாகரிமாக பேசுகிறார், எந்த பிரச்சனையும் எதிர்கொள்கிறார், இறுதிக்கட்டத்தில் தம்பி பரத் அண்ணனைபோல் பிணமாக படுத்துகொள்ள, அ.வா, அ. ஆ நுழைந்தவுடன் வெளிப்பக்கம் தாள் போடுகிறார், காதலை காவல்துறை மதுரைக்கு வேனில் அழைத்துச்செல்லும்போது கூடப்போகிறார். அழவில்லை, தைரியமாக இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கேள்வி ஒன்றுதான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியர் ஆகும் லட்சியத்தையும் அடிக்கடி பரத்திடம் சொல்லும் பாவனா, ( தோழி ஹாஸ்டலுக்கு போய் கம்பைண்ட் ஸ்டடி பண்ணுகிறார்) ஏன் தற்கொலை செய்துகொள்கிறார். அவருக்கு பணம் இருக்கிறது, அப்பாம்மா இருக்கிறார்கள். எல்லார் அன்பும் இருக்கிறது, (காதலனைக்கொன்றார்கள்- அதிர்ச்சியாகத்தான் இருக்கும், கையையே வெட்டிய புண்ணியவான்கள்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியாவிற்கு படிப்பு இருப்பதாகத் தெரியவில்லை, பணம், சுத்தமாக இல்லை, குடிசையில் தன்னுடன் இருக்கும் குடிகார அப்பாவுக்கும் (மகள் என்ற பாசத்துடன் இருக்கிறார்) உடல்நிலை மோசம் என்று மருத்துவர் சொல்லிவிட்டார், அம்மா, பாட்டி, தாத்தா யாரும் கிடையாது, அவரை கல்யாணம் செய்ய ஆசைப்படுபவர் கொலைக்குற்றத்திற்றம் செய்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சந்தியா (கதாபாத்திரம்) எந்த சூழ்நிலையையும் தன்னம்பிக்கையுடன் சமாளிப்பாள். அவளிடம் நாணயம் இருக்கிறது, ( இரவலை உடனே திருப்பித்தருகிறாள்), தைரியம் இருக்கிறது, தனக்கு ஆறுதல் சொல்ல பெண்கள் இல்லையே என்ற கவலை இல்லை, நட்புவட்டம் அமைத்துக்கொள்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படிப்பறிவு பாவனாவிற்கு என்ன வழியைக் காட்டியது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதுதான் யோசிக்கவேண்டியிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;அடுத்தது கால் திரைப்படம். அவ்வளவுதான் பார்க்கக்கிடைத்தது. &lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;strong&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;சமூகசேவையில் நாட்டமுள்ள மென்பொருள் மேலாளர் மாதவன், நண்பன் வீட்டிற்குத் தன் பெற்றோரின் திருமணவிழாவிற்கு அழைப்புவிடுக்கச்செல்கிறார்.&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;/span&gt;&lt;br /&gt;பேசிக்கொண்டிருக்கும்போதே, மாடியிலிருந்து நண்பன் மனைவி வருகிறாr ( வான்னு சொல்லக்கூடாதா? அதான் வந்தாசுல்ல அப்புறம் என்ன? - புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.)&lt;br /&gt;விழா நாளன்று முதியோர் இல்லத்தில் மாதவன் . ஓரத்து அறையில் ஒளிந்துகொண்டு நண்பனின் பெற்றோர்.&lt;br /&gt;&lt;br /&gt;தனிமையில் மாதவனிடம் விக்கி விக்கி நடந்ததைச்சொல்லி அழும் நண்பன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நண்பன்&lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;நீ ஒன்பது மணிக்குதான் எழுந்துக்குற, எங்கம்மாதான் சமையல், வீட்டுவேலை எல்லாம் (கூட்டி மெழுகி) , அப்பா நம்ப குழந்தையை பார்த்துக்குறார், என்ன உனக்கு)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;அவன் மனைவி:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதெல்லாம் தெரியாது, ஒன்னு அவங்க இருக்கணும் இல்ல நான்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்னும் வலுவான காரணம் இருக்கறதா தெரியல; அவங்க இருக்கும் வீடு, பெரிய மாடி பங்களா; நண்பனுக்கு வேலை வாங்கிக்கொடுத்ததே மாதவன்தான் என்று சொல்கிறார்கள். அப்படியானால் வீடு?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொலைக்காட்சியில் பெண்கள் தினம் கொண்டாடுகிறார்கள். சிறப்பு நிகழ்ச்சியில் பெண் முன்னேற்றத்தை, சிறிய பாடலுடன் சின்னத்திரையில் காட்டுகிறார்கள். முதலில் கனிமொழி வருகிறார், அடுத்தது சல்மா, பிறகு தமிழச்சி. அடுத்து விவசாயக்கல்லூரி மாணவி பாவனாவின் நேர்காணல் ( அவர் துறையில் சிறப்பான சாதனை செய்ததற்காக)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பேட்டியின் போது, படிப்பிற்குப்பின் பாவனா, முதலில் கணவனுக்கு நல்ல மனைவியாக இருப்பேன், என் குழந்தைக்கு நல்ல தாயாக இருப்பேன், மாமியார் மாமனாரிடம் நல்ல பெண்ணாக இருப்பேன் என்று சொல்லும்போதே&lt;br /&gt;( பின்னணியில் பிருமாண்டமான பங்களாவில் அம்மா, அப்பா, அண்ணன்கள், அண்ணிகள் (அகல பொற்கரைப்பட்டுசேலைகளுடன்) குழந்தை குட்டிகள் என்று பாசக்கார குடும்பத்தில் வளர்கிறேன் என்று விளக்கத்துடன்) எதேச்சையாக தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்த மாதவனிம் முகத்தில் பரவசம் (இந்த வசனம் அவரைக்கவர்ந்துவிட ) பாவனாவைத் தேடிக் கண்டுபிடித்து, நிழலாய்த் துரத்தி,துரத்தி(கால்கேட் புன்னகை மாறாமல்) பேச ஒரு நிமிடம் என்று கெஞ்சுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவனாவுக்குப் பிடிக்கவில்லை. மாதவன் விடுவாரா, போடு, ஏகப்பட்ட போன்கால்கள் எல்லா நண்பர்களுக்கும். அப்புறம் என்ன, பாவனாவின் வகுப்பறையில் வந்து சொல்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாவனாவிற்கு வந்த கடித மூட்டையை, மன்னிக்கவும் மூட்டைகளை, அவிழ்த்தால் பாஸ்கெட்பால் மைதானம் பரப்பு முழுதும் நிறையும் அளவிற்கு முழநீள வாழ்த்து அட்டைகள். மாதவனுக்காக ஒரு நிமிடம் பேச விண்ணப்பித்து வாழ்த்து அட்டை அனுப்பியிருக்கிறார்கள் நண்பர்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பாவனாவின் தோழிகூட அவரை ஒருமாதிரி பார்க்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் நான் படத்தைப்பார்க்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதனால் என்ன? இரண்டாவது பாதியை முழுதும் ஊகிக்காவிட்டாலும், இந்த மேட்டர் மட்டுமாச்சும் எப்படி போயிருக்கும் என்று கூறுகிறேன். இது முற்றிலும் என் சொந்தக் கற்பனையே.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூழலியல் மீது மிகுந்த அக்கறை கொண்ட பாவனாவிற்கு எ4 அளவு வாழ்த்து அட்டைகள் ஆயிரக்கணக்கில் வந்தது கோபத்தை/வேதனை உண்டுபண்ணியிருக்கும்; அதற்கு விசிறி வீசினால்போல் மாதவன் ஆயிரக்கணக்கான இளைஞர்களை சிபாரிசுக்கு அழைத்து வந்தது, தொடர்ந்து கார்னர் செய்துகொண்டே இருப்பது எரிச்சலைக்கிளப்பி, கா என்று யார் ஆரம்பித்தாலும் ஒரு முறை முறைத்துவிட்டு ஆராய்ச்சித்துறையில் ஈடுபட்டு ஒரு பெரிய விஞ்ஞானியாகி நாட்டிற்கு பெருமை சேர்ப்பார். சரிதானே. அல்லது வேறு புதுமாதிரி ஆனால் வெறுப்பேத்தாத அணுகல் உள்ள வாலிபனை விரும்புவார். தொடர்ந்து தன் துறையிலும் சாதனை புரிவார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரிதானே மக்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தை முழுவதும் பார்த்தவர்கள் முடிந்தால் திரைகதை என்ன என்று சொல்லவும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பார்த்த இந்த திரைப்படத்தில் வசனத்தைப் பற்றிச்சொல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு உதாரணம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாதவன் அம்மா&lt;/strong&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;எப்படா திருமணம் செஞ்சுக்கப்போறெ, இன்னும் நாலு வருஷம் போனா, பொண்ணுங்க, அண்ணேன்னு கூப்பிடப்போறாங்க&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;மாதவன்:&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்ப எனக்குத் திருமணம் வேண்டாம்மா (இன்னும் பாவனாவைப் பார்க்காததால்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு காட்சியில் குப்பாயக்கனவான்களுடன் (அதாங்க கோட் சூட்) உரையாடுகிறார்;&lt;br /&gt;&lt;br /&gt;பிரும்மாண்டமான ஐந்து நட்சத்திர மென்பொருள் அலுவலகத்தில் ( கண்ணாடித்தரை) உதவியாளர் மாதவனிடம், இதோ உங்கள் பயணச்சீட்டு என்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படத்தில் ஒரு வார்த்தை மன்னிக்கவும் ஒரு சொல் கூட ஆங்கிலம் இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்த்துக்கள் படத்தை எடுத்தவர்களே!&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(இதுதான் படத்தின் பெயர்)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு ஆங்கிலச்சொல்கூட இல்லை. இது செயற்கையாக இருக்கிறதே, என்று எண்ணும்படியாகத்தான் இருக்கு படத்தைப்பார்க்கையில். ஆனால், ஒரு சொல்லை உள்ளே விட்டால், அது டெங்கி கொசுபோல் பல்கிபெருகிவிடும். அப்புறம் தமிழ் நிகழ்ச்சிகளில், மற்று தமிழ் உரையாடல்களில் ஒரு பத்தி பேச்சுக்கு ஒரு வார்த்தை தமிழ் என்று ஆகிவிடும், அப்புறம் அப்படிப் பேசுபவர்களை இந்தப் படத்தை முதலில் பார்க்கச்சொல்லலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;எங்கெங்கோ சென்ற நம் தமிழும் நம் தமிழர்களின் நிலையையும் பற்றிப் பார்ப்போமா?&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#990000;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சும்மா சொல்லவில்லை. கரீபியன் கடலும் கயானாவும் புத்தகத்தைப் படித்த பின் இப்போதாவது படிக்க எடுத்தேனே என்று நினைத்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் தாய்மொழி ஆனால் எழுதப்படிக்கத் தெரியாது என்பவர்கள் தயவுசெய்து தெரிந்த யாரையாவது பிடித்து வாசிக்கச் சொல்லுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(மாணவர்கள் கூடப்படித்துக்காட்டலாம்)&lt;br /&gt;&lt;br /&gt;எளிய நடை, ஆழமான ஆய்வு இரண்டும் கைக்கோர்க்காது என்று யார் சொன்னது.&lt;br /&gt;&lt;br /&gt;ஆனால் இது தமாஷ் பண்ணும் நேரமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;பஹாமாத் தீவுகள், ஜமைக்கா, பிரிட்டிஷ் கயானா, கரீபியன் தீவுகள் இங்கெல்லாம் சென்று ஆய்வு செய்து எழுதப்பட்ட பயணநூல்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பஞ்சம் பிழைக்கப்போய் அடிமையான தமிழர்களின் நிலை குலை நடுங்குகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;(ஏமாற்றி/ வலுக்கட்டாயமாக)&lt;br /&gt;பிரிட்டன், பிரான்ஸ் இங்கெல்லாம் இருந்த வெள்ளை முதலாளிகள் அட்லாண்டிக் மற்றும் பசிபிக் பெருங்கடல்களில் தீவுகளையே சொந்தமாக வைத்திருந்தார்களாம். அடிமை வேலை, விவசாயம் செய்ய வரவழைக்கப்பட்ட கறுப்பர்கள், சீனர்களால் தாக்கு பிடிக்க முடியவில்லையாம், (12 கப்பல்களில் அழைத்துச் செல்லப்பட்ட சீனஅடிமைகளில் %90 தற்கொலை செய்துகொண்டார்களாம்) கடுமையான குளிர், பூச்சிகளின் தொல்லை, ரத்தம் உறிஞ்சும் அட்டைகள்) உடனே இந்தியர் மீது பார்வையைத் திருப்பினார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகுதிகள்: எழுதப்படிக்கத் தெரிந்திருக்கக்கூடாது, ஆரோக்கியமான உடற்கட்டு வேண்டும், கலகம் செய்யக்கூடாது- இதற்கு முற்றிலும் பொருந்தியவர்கள் தமிழர்கள். வங்காளிகள்கூடப் போயிருக்கிறார்கள் போலிருக்கு ஆனால் தமிழர்கள்தான் அதிகம்.&lt;br /&gt;&lt;br /&gt;காய்ச்சலிலும் வேலைசெய்யாவிட்டால் கசையடி, எந்த நாட்டில் இருக்கிறோம் என்று கூடத் தெரியாது. பெண்கள் நிலை படுபயங்கரம், குழந்தைகள் நிலை கேட்கவே வேண்டாம். குடும்பத்தினரை வெவ்வேறு தீவுகளுக்குப் பிரித்து அனுப்புவது, அடையாளங்களை அழிப்பது, (பெயர் மாற்றப்படுவது, நம்பிக்கைகளை அழிப்பது) பின் மாற்றங்கள் வந்து அவர்கள் தாயகம் திரும்பிவர நினைத்தபோது தந்திரங்களை கையாள்வது,...&lt;br /&gt;குழம்பை இன்னும் கொளம்போ என்கிறார்களாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயணம் என்றால் ஏதோ உல்லாசப்பயணம் போல் அல்லாமல் வலுக்கட்டாயமாக மறுநடவு செய்யப்பட்ட வேர்களைத் தேடி 1953 ஆம் ஆண்டு ஆறுமாதங்கள் ஆய்வுப்பயணம் செய்த திரு ஏ.கே. செட்டியார் இன்னும் பல பயணநூல்கள்,&lt;br /&gt;.&lt;br /&gt;ஆய்வுப்படங்கள ஆக்கியிருக்கிறார். இவருக்கு தகுந்த அங்கீகாரம் கிடைத்ததா, தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரீபியன் கடலும் கயானாவும்-&lt;br /&gt;வெளியீடு-அகல்&lt;br /&gt;&lt;br /&gt;342, டி.டி.கே.சாலை,&lt;br /&gt;&lt;br /&gt;இராயப்பேட்டை,&lt;br /&gt;சென்னை 600 014&lt;br /&gt;தொலைபேசி 28115584&lt;br /&gt;&lt;br /&gt;ஆங், புக்கர் விருது என்று எழுதியிருந்தேனே, அது இங்கே எங்கே வந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;புக்கர் குடும்பத்தினர், பிரிட்டிஷ் கயானாவில் ஆயிரக்கணக்கான அடிமைகளை வைத்து கரும்புப்பண்ணை நடத்தி வந்தார்களாம். எப்படியிருக்கு பாருங்கள்.&lt;br /&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-4463899785098502442?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/4463899785098502442/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=4463899785098502442' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4463899785098502442'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4463899785098502442'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/04/blog-post_24.html' title='வியாழன் விசிட்- ஒன்றேகால் திரைப்படங்கள், புக்கர்விருது, கரீபியன் கடலும் கயானாவும்,  கொளபொ'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-4168569980315640759</id><published>2008-04-22T05:07:00.000-07:00</published><updated>2008-04-27T07:54:43.951-07:00</updated><title type='text'>கவிதை</title><content type='html'>&lt;a href="http://bp1.blogger.com/_Emz0cUO41ZQ/SBSTlssBqyI/AAAAAAAAADQ/c7vW_C25zlc/s1600-h/Forest.jpg"&gt;&lt;img id="BLOGGER_PHOTO_ID_5193938546125286178" style="FLOAT: left; MARGIN: 0px 10px 10px 0px; CURSOR: hand" alt="" src="http://bp1.blogger.com/_Emz0cUO41ZQ/SBSTlssBqyI/AAAAAAAAADQ/c7vW_C25zlc/s320/Forest.jpg" border="0" /&gt;&lt;/a&gt;&lt;br /&gt;&lt;div&gt;&lt;strong&gt;&lt;span style="color:#009900;"&gt;அச்சடிக்கப்பட்டச் சொற்கள்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;மெல்ல ஆடத் துவங்கி&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒவ்வொன்றாகக் &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;கீழே விழுந்தன&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;அவித்தவை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;பொறித்தவை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;வதங்கியவை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;வெதுப்பியவை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;வறுத்தவை&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;என குழுக்களாய்ப் பிரிந்து&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;பயணம் செய்தன&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;பாதி வழியில்&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;தட்பவெப்பத்தால் அழுகிப் போயின&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;சமைக்காத சொற்கள் &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;இன்னும் உயிரோடு இருக்கின்றன&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;இயற்கை வர்ணம் பூண்டு&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#000099;"&gt;குழந்தைகளின் சொற்களைப் போல &lt;/span&gt;&lt;/em&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-4168569980315640759?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/4168569980315640759/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=4168569980315640759' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4168569980315640759'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/4168569980315640759'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/04/blog-post_22.html' title='கவிதை'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://bp1.blogger.com/_Emz0cUO41ZQ/SBSTlssBqyI/AAAAAAAAADQ/c7vW_C25zlc/s72-c/Forest.jpg' height='72' width='72'/><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1662913619554000473</id><published>2008-04-09T19:53:00.000-07:00</published><updated>2008-04-10T22:56:23.918-07:00</updated><title type='text'>வியாழன் விசிட் ,...</title><content type='html'>நன்றி Bee Morgan, ஜோதிபாரதி, பாண்டித்துரை.&lt;br /&gt;&lt;br /&gt;பயணத்தை நீட்டித்தார் என்று வரக்கூடாதாம், பணியை நீட்டித்தார் என்று வரவேண்டுமாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வாரம் நடந்த சில நிகழ்ச்சிகள்&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூரில் தமிழ் மொழி விழாவை ஏப்ரல் 5 முதல் ஏப்ரல் 27 வரை பத்து அமைப்புகள் இணைந்து கொண்டாடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் துவக்க விழா கதோலிக் தொடக்க கல்லூரி உள்ளரங்கில் சனிக்கிழமை 5 ஏப்ரல் மாலை 6-40 க்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிறப்பு விருந்தினர் மூத்த துணை அமைச்சர் திரு .ஈஸ்வரன் .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்சரா நடனக்குழுவினர், சிங்கப்பூர் இந்திய நுண்கலை நடனக்குழுவினர், ரவீந்திரன் நாடகக்குழுவினர் ( நகைச்சுவை நாடகம் -அதில் சந்தனசாமி சாம் சந்தானம் ஆன கதை) தெமாசெக் தொடக்கல்லூரி நாடகக்குழுவினர்(அரங்கம் நாடகப்போட்டியில் முதல் பரிசு பெற்ற நாடகம்), பாடும் பறவைகள் இசைக்குழுவினர், கச்சிதமாக தங்கள் படைப்புகளை அளித்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வளர்தமிழ் இயக்கம், தமிழ்மொழி பண்பாட்டு கழகம், லிட்டில் இந்திய வர்த்தகர் மற்றும் மரபுடமை சங்கம், சிங்கபூர் தமிழ் எழுத்தாளர் கழகம், தமிழர் பேரவை, மக்கள் கழக நற்பனி பேரவை, தேசிய நூலக வாரியம் மற்றும் தாய் மொழி கற்றல் வளர்ச்சிக்குழு ஆகியவையே இந்த பத்து அமைப்புக்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;6.4.08 ஞாயிறு காலாங் சமூக மன்றத்தில் கவிஞர் திரு இலந்தை ராமசாமி மிகச் சிறப்பாகப் பேசினார். கலித்தொகை, திருக்குறள் முதலியவற்றில் சில பாக்களில் புதைந்து கிடக்கும் அர்த்தங்களை அடையாளம் காட்டியது புதிய செய்தி.&lt;br /&gt;&lt;br /&gt;சர்க்கரை, சீனி தமிழ்ச்சொல் அல்ல, வெல்லம் மட்டுமே தமிழ்ச்சொல் என்று அன்று தெரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;மற்றொரு பேச்சாளர் இலங்கைத் தமிழ் எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளரான திரு பாலன் அவர்கள் திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து நூல் வெளியிட்டிருக்கிறார். இதில் புதுமை என்ன- அப்படியே இரண்டு வரி ஆங்கிலமாக மொழிபெயர்க்காமல், கூட கொஞ்சம் வரிகளில் ஒவ்வொரு திருக்குறளையும் மொழிபெயர்த்திருப்பதைச் சொன்னார்.&lt;br /&gt;(A path to purposeful living- V. P. Palan)&lt;br /&gt;&lt;br /&gt;தமிழைப் பற்றிய நிறைய செய்திகள் பார்த்தோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்து ஒரு கதை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;எ·ப். கெ. லிம்மின் மூன்றாவது கண்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜேனட்டின் முன்குறிப்பு:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கதையில் வரும் எ·ப்.கெ. லிம் அவர்களை நான் நேர்காணலுக்காகச் செல்லும்வரை அவர் யார் என்றே எனக்குத் தெரியாது.&lt;br /&gt;&lt;br /&gt;நேரில் பார்த்தபோது அவர் எல்லோரையும் போலவே இருந்தார். மத்திம உயரம், சுத்தமாக வெட்டப்பட்ட தலைமுடி, சிறிய ஆனால் ஊடுறுவும் கண்கள், சுத்தமான கசங்கலில்லா ஆடைகள் ,பளபளக்கும் காலணிகள்.&lt;br /&gt;&lt;br /&gt;அவர் வீட்டில் உரையாடினோம். அவர் நடத்தும் பேக்கரியின் கிளமெண்ட்டிக் கிளையைச் சுற்றிக்காட்டினார்.&lt;br /&gt;&lt;br /&gt;ரா·பிள்ஸ் கல்விக்கூடத்தின் முன்னாள் மாணவர், பள்ளி,கல்லூரி படிப்பில் தங்கப்பதக்கங்கள் வாங்கியவர். சிங்கப்பூரின் பிரபல பெரிய உணவு தயாரிப்பு நிறுவனத்தின் ஆராய்ச்சிக்கூடத்தில் ஆராய்ச்சி விஞ்ஞானியாகப் பத்தாண்டுகள் இருந்த பின் கடந்த ஐந்து ஆண்டுகளாக சொந்தமாக பேக்கரி நடத்துகிறார். அவரை நேர்காணல் செய்ய வேண்டும் - என் தலைமையதிகாரி எனக்கு இவ்வளவே கூறியிருந்தார். நான் உற்சாகத்துடன் திரு எ·ப்.கெ.லிம்மைத் தொடர்பு கொண்டபோது, மிகுந்த தயக்கத்திற்குப்பின்னர்தான் ஒப்புதல் தந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;மிக மிக நிதானமாகப் பேசினார். நிதானம் என்றால் இதுவரை இத்துணை நிதானத்தை நான் பார்த்ததில்லை. நானும் பத்திரிகைக்கு கொடுக்கவேண்டிய நேர்காணலின் ஒரு நகலை மின்மடல் மூலம் அனுப்பியிருந்தாலும் என்னை ஒரு கேள்வி உறுத்திக்கொண்டிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;அவருடன் நான் நடந்து சென்றபோது, அவர் பெரும்பாலும் தன் காலணியைப் பார்த்தவாறு நடந்தார். ஒருவேளை அதன் பளபளப்பை உறுதி செய்துகொள்கிறாரோ என்று முதலில் நினைத்தேன். ஆனால் காரணம் அதுவன்று வேறு ஏதோ ஒன்று என்று மனதில்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;அதுகுறித்து தனியாக அவரிடம் பேசநினைத்து மீண்டும் அவரைச் சந்தித்தேன். இதை அவர் விரும்பினால் ஒழிய வெளியேசொல்லமாட்டேன் என்று சொன்னேன்.&lt;br /&gt;&lt;br /&gt;என் கைபேசியை அணைத்துவிட்டு கைப்பையில் வைக்கும்போது என் வாலட் (பர்ஸ்) கீழே விழுந்தது. இது உங்கள் ஆண்ட்டி கொடுத்தது அல்லவா என்றார். யு.எஸ்ஸில் லாரா ஆண்ட்டி எனக்கு பரிசளித்த வாலட் அது. ஆண்ட்டி இப்போது உயிரோடு இல்லை. பல மாதங்களுக்குப் பிறகு சென்றவாரம்தான் அதை உள்ளிருந்து எடுத்துப் பயன்படுத்தத் துவங்கியிருந்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவரிடம் கேட்டேன். நீண்ட மௌனத்திற்குப் பின் பேசத்துவங்கினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3366ff;"&gt;இனி கதைக்குச் செல்லலாம்&lt;/span&gt;:&lt;br /&gt;&lt;br /&gt;இதோ அவர் வார்த்தைகளில்:&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் இளமைக்காலம், அச்சம், குழப்பம், துணிவு, தனிமை,பாசம் இவற்றின் கலவையாகவே இருந்தது. அப்பா அரசுப்பணியில் முதனிலை அதிகாரி, அம்மா சட்டம் பயின்று சொந்தமாக சட்ட ஆலோசனை நிறுவனம் நடத்திக்கொண்டிருந்தார். என் ஆ-மா தான் (பாட்டி) வீட்டில் என்னைப்பார்த்துக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டில் பணிப்பெண் யாருமில்லை. பெற்றோர் இரவு உணவு மட்டும்தான் வீட்டில் உண்பார்கள், அதுவும் சில நாட்கள் மட்டுமே. படிப்பில் முதல் மாணவன், பாட்டியின் செல்லப்பேரன், வெரி கொயட் என்று பள்ளியிலும், அக்கம்பக்கத்தினரும் சொல்வார்கள். மிகக் குறைவான நண்பர்கள். இப்படித்தான் என் இளம் பருவம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு அப்போது பத்து வயது இருக்கும். ஒரு முறை என் ஆமாவுடன் அவர் தோழி ஒருவர் வீட்டிற்கு போயிருந்தேன். அவர் வீட்டிற்கு ஆமா பலமுறை சென்றிருந்தாலும் நான் அவர்கள் வீட்டிற்குப்போவது அதுவே முதல் முறை. நான் ஒரு புத்தகத்தைக் கையில்எடுத்துக்கொண்டு நகர்ந்தேன்.ஆ-மா தோழியுடன் மாஜோங் விளையாட்டு ஆடத் துவங்கியிருந்தார். இனி சில மணி நேரங்களுக்கு அவர்கள் அதிலேயே மூழ்கிவிடுவார்கள் என்பதை நான் அறிந்திருந்தேன். அவர்கள் வீட்டு பின்புறத்தில் தோட்டம் இருந்தது. வேலி போட்டு வைத்திருந்த அந்த தோட்டத்தைப் பார்க்க எனக்கு ஆவலாக இருந்தது. சிறிய இடமாயிருந்தாலும் ஆமாவின் தோழி அதை மிகச் சுத்தமாக வைத்திருந்தார். பப்பாளி மரத்தில் பல காய்கள் கொத்தாகத் தொங்கிக்கொண்டிருந்தன. அவற்றை எண்ணத்துவங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏதோ பேச்சுக்குரல் கேட்க, ஆமா அழைக்கிறாரோ என்று திரும்பினேன். பழுப்பு நிற 'சியோங்சாம்' அணிந்த இரு பெண்மணிகள் ஏதோ சுருக்குப் பைகளைக் காணோம் என்று கூறிக்கொண்டிருந்தார்கள். என் அம்மா வயது இருக்கலாம். அவர்கள் தலையலங்காரம் மிகவும் பழங்காலத்ததாக எனக்குத் தோன்றியது. இருவரில் இடது பக்கம் நின்றிருந்த பெண்மணி மிகவும் கவலையுடன் இருந்தார், என்னைப் பார்த்து, கொஞ்சம் தேடித் தருமாறு வேண்டிக்கொண்டார். சரியென்று, நானும் தேடுகிறேன் என்று கூறியவாறு பின்புறம் இருந்த துடைப்பான், முறம் இவற்றையெல்லாம் திருப்பிப் பார்த்து நானும் தேடத்துவங்கினேன். செடிகளுக்கு உரமிடும் உரக்கூடை, வீடு கழுவும் உதவும் பக்கெட்டுகள், துடைக்கும் துணிகள், தட்டுமுட்டுபொருள்களை போன்றவைதான் அங்கங்கே தட்டுப்பட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமாவிடன் கேட்டு உதவச்சொல்லலாமே என்று தோன்றியது. ஓடிப்போய் ஆமாவிடம் சொல்ல ஆமா, தோழியுடன் வந்தார்.&lt;br /&gt;அந்தப் பெண்மணிகள் இன்னும் தேடிக்கொண்டிருந்தனர். அவர்களைச் சுட்டிக்காட்டினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பப்பாளிகளை எண்ணிக்கொண்டிருநதபோது பார்த்தேன் என்றேன். ஆமாவும் தோழியும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை உள்ளே அழைத்துச்சென்று ஆமாவின் தோழி உள்ளிருந்து ஒரு தட்டில் துரியான் பழங்களையும், ஒரு கச்சாங் (கடலை) பொட்டலத்தையும் வைத்துக்கொடுத்தார். ஆமா என்னை தன் பக்கத்திலேயே இருத்திக்கொண்டார். என்னிடம் சில கேள்விகள் கேட்டார். ஆமாவிற்கு விளையாட்டில் கவனம் செல்லவில்லை. என்னை அழைத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்பிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்ணுக்குத் தெரிந்த பெண்மணிகள் ஆமாவிற்கு அவர்தோழிக்கும் தெரியவில்லை என்பதை பின்னர் அறிந்து கொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் இரண்டொருமுறை அந்த தோழி வீட்டிற்குப் போகும் வழியில் சில நேரங்களில் முழு உருவமாகவோ, நிழல் உருவமாகவோ, சில மனிதர்கள் என் கண்ணில் தென்படத் துவங்கினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சில நாட்களுக்குப் பின்னர், என் ஆமா என்னை ஒரு சோதிடரிடம் அழைத்துச் சென்றிருந்தார். நான் மருத்துவர் ஆவேனா, ( என் தாத்தா அந்த காலத்து சீன பாரம்பரிய மருத்துவராம்) என் வருங்காலம் எப்படி இருக்கும், எனக்கு எத்தனை பிள்ளைகள், மனைவி, எப்படிப்பட்டவளாக அமைவாள், என்று பற்பல கேள்விகளை தயார்செய்துகொண்டு, என்னையும் அழைத்துக்கொண்டு கிளம்பினார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று நான் அணிந்திருந்த உடை எனக்கு நினைவில்லை, ஆனால் ஆமா மூங்கில்தண்டு நிறத்தில் 'கெபயா' அணிந்திருந்தார். அவருக்குப் பாசாரில் (சந்தையில்) வாங்கிய வேலைப்பாடுகள் கொண்ட மரத்தாலான கொண்டை ஊசியை ஓடிவந்து எடுத்துக்கொடுத்ததுகூட நினைவிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த சோதிடர் கிரேட்டா ஆயர் பகுதியில் இருந்தார். போகும் வழியில் ஆமா வுடன் பேசிக்கொண்டே வந்தேன். முன்பு அந்த இடத்தில், தூய்மையான தண்ணீர் ஊற்றுக்கள் நிறைய இருந்ததால் சுற்றுவட்டாரத்தில் நிறைய பல இனத்தவரின் வழிபாட்டுத்தலங்கள் இருந்தன என்றும், வண்டியோட்டிகள், மாட்டுவண்டிகளில் நீர் நிரம்பிய அண்டாக்களை ஏற்றி, மற்ற பகுதிகளில் இருந்த மக்களுக்கு விநயோகித்தனர், என்று ஆமா சொல்லிக்கொண்டே வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆங், சோதிடர் என்ன சொன்னார் என்று சொல்கிறேன், அவர் ஒன்றும் சொல்லமுடியாது என்று கூறி, கிட்டத்தட்ட எங்களை விரட்டிவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா சோர்ந்து போகவில்லை, என்னை இன்னொரு சோதிடரிடம் அழைத்துச்சென்றார். அவர் ஆமாவிடம் அன்பாகப் பேசினார். ஆனால் எனக்கு சோதிடம் பார்க்க பணிவுடன் மறுத்துவிட்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆமா, மௌனமாக என்னை அழைத்துக்கொண்டு வீடு திரும்பினார். இரவு அம்மா அப்பாவிடம் சொன்னேன். அவர்கள் நாத்திகர்கள் என்றபடியால் இது அவர்களை பாதிக்கவேயில்லை. ஆனால் அன்பின் காரணமாக அவர்கள் ஆமாவிடம் இதுகுறித்து ஏதும் கேட்கவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கோ அப்போதே பள்ளிக்கு ஓடிப்போய் என் யாரிடமாவது சொல்லவேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போதோ என் அவசரத்தை நினைத்தால் எனக்கே சிரிப்பாக இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நீண்டதூரம் காரோட்டிக்கொண்டு செல்வது என் அன்னைக்கு மிகவும் பிடிக்கும். ஆமாவும், நானும் என் பெற்றோருடன் எங்கள் வீட்டு காரிலேயே அண்டை நாடுகளுக்கு போய் வருவோம்.&lt;br /&gt;&lt;br /&gt;கல்லூரி சென்றபின் நானும் ஓட்டத்துவங்கினேன். ஆமா என் பக்கத்திலும் என் பெற்றோர் பின்பக்கமும் அமர்ந்துகொள்வர். என் அம்மா, அப்பா, நான் என்று மாற்றி மாற்றி ஒட்டுவோம்.&lt;br /&gt;மலாக்கா, சிங்மாய், டோக்கியோ, எங்கு சென்றாலும் இறந்தவர்கள் என் கண்களில் பட்டுக்கொண்டேதான் இருந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் கண்ணுக்குப் புலப்பட்ட எந்த ஆவியுமே என்னை எந்த விதத்திலும் இதுநாள்வரை தொந்தரவு செய்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நான் ஆராய்ச்சித்துறையில் பணிபுரிந்த காலகட்டத்தில் எங்கள் மூத்த அதிகாரி ஒருவர்மூலம், ஆமாவின் தோழி குடியிருந்த பகுதிக்குச் செல்லும் வழி, சிங்கப்பூர், ஜப்பான் ஆதிக்கத்தில் இருந்த காலத்தில், பிணக்கிடங்காக இருந்தது என்ற செய்தியைத் தெரிந்துகொண்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் அவதானிப்புகள் அதிகமாக ஆக , என் நண்பர்கள் குறைந்துகொண்டே வந்ததுதான் நடந்தது. ஏற்கனவே எனக்கு மிக மிக குறைவான நண்பர்களே, பல்கலையில் இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;போததற்கு, முதுகலை இறுதியாண்டில் பயிலும்போது உடன் பயின்ற மாணவனின் தந்தை மாண்டு போனார். விடுப்பு எடுத்துக்கொண்டு அவனுடனே அன்று முழுவதும் இருந்தேன். முக்கியமான சில பத்திரங்களின் தகவல்களும் அவை எங்கே வைக்கப்பட்டிருந்தன என்பதும் தெரியாமல் அவன் தாயார் திண்டாடுவதாகக் கூறினான். மறுநாள் பின் அவன் தந்தையாரை நான் என் சோதனைகூட அறை முகப்பில் பார்த்தேன். அவர் பெட்டகச்சாவி இருக்கும் இடத்தை என்னிடம் கூறியதால், என் நண்பனை உடனே அழைத்து விவரத்தைச் சொன்னேன். நான் சொன்னது சரியான விவரமே என்று அவன் வீடு சென்றதும் உறுதி செய்து எனக்கு நன்றி தெரிவித்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் பின் அவன் தந்தையாரின் வேக் நிகழ்விற்குக்கூட (இறந்தவர்களுக்கு செய்யும் சடங்கில் உறவினர் நண்பர் கலந்துகொள்ளும் நிகழ்வு) என்னை அழைக்கவில்லை. நான் தொலைபேசியில் ஓரிருமுறை அழைத்தபோது இணைப்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. ஒருவேளை என்னுடன் நட்பு பாராட்டுவது அவனுக்கு அச்சமாக இருந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நெடுஞ்சாலையோரம் நிற்பவர்களையோ, நடப்பவர்களையோ கொஞ்சம் போக்குவரத்தை கவனித்துச்செல்லுமாறு கூறியிருக்கிறேன். அதன் மூலம் அவர்களுக்கு ஏற்படப்போகும் விபத்துக்களைக்கூடத் தவிர்த்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மருத்துவமனைகளுக்குச் செல்லும்போதுகூட என் கண்களில் நிழல் உருவங்கள் தென்பட்டுக்கொண்டே இருந்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;இதில் வேடிக்கை என்னவென்றால் சிலர் தாங்கள் இறந்ததைக்கூட அறியாமல் இருந்தனர். சிலர் ரோட்டிப்பராட்டா சாப்பிட்டுக்கொண்டோ, பீர் அருந்திகொண்டோ இருப்பார்கள். உனக்கு எதாவது சாப்பிட வேண்டுமா என்றுகூட கேட்டிருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு மட்டும் ஏன் இப்படி இருக்கிறது என்று எனக்கு சலிப்போ, பெருமிதமோ ஏற்பட்டதில்லை. எனக்கு எப்படி இப்படி ஆகிறது என்றோ, மருத்துவரைச் சந்திக்கவேண்டும் என்றோ , நான் நேரம் செலவழித்து ஆராய்ந்ததுமில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இதை உலகுக்கு அறிவிக்கவேண்டும் என்றோ புகழுக்கோ, பணத்துக்கோ நான் ஆசைப்பட்டதுமில்லை. ஏதோ ஒரு காரணத்திற்காக நான் படைக்கப்பட்டிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பிறந்த தேதி 6-6-1966 மாலை ஆறு மணி ஆறு நிமிடங்கள், நிறைய ஆறு வருகிறது. பதினைந்து வயதிலிருந்து யோகப்பயிற்சி செய்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;தனியாக நடக்கும் போது சிலசமயம் எனக்குள் நான் பேசிக்கொள்வேன். இப்போது சின்னஞ்சிறு கைபேசியை வைத்துக்கொண்டு பலர் தனியே பேசிக்கொண்டே நடப்பதால், என்னையும் அவ்வாறே எண்ணிக்கொள்ளலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை ஒரு பெண் டேட் செய்தாள், எங்கள் பணியிடத்தின் வேறொரு பிரிவில் வேலை செய்து வந்தாள். முதல் சந்திப்பு ஒரு உணவகத்திலும், அடுத்த சந்திப்பு புக்கிட் திமா பூங்காவிலும் நிகழ்ந்தது. என் அமைதியான குணம் தன்னைக் கவர்ந்ததாகச் சொன்னாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் புத்திசாலித்தனமான ஒரு காரியம் செய்தேன். என் முன் தென்படும் நிழல்மனிதர்களைப் பற்றிஅவளிடம் சொன்னேன். அவர்கள் என்னைத் தொந்தரவு செய்யாவிட்டாலும், அவர்களைத் தவிர்க்க தரையைப் பார்த்து நடக்கும் பழக்கத்தை மேற்கொண்டிருக்கிறேன் என்றும் இன்னும் சில நற்செய்திகளையும் சொன்னேன். அந்த சந்திப்பிற்குப்பின் அவள் என்னோடு தொடர்புகொள்வதை நிறுத்திவிட்டாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த 2008 ஆம் ஆண்டில் அறிவியல் தொழில்நுட்ப சாதனங்களில் உச்சப்பயன்பாட்டை அறிந்து வைத்து பயன்படுத்தும் சிங்கப்பூரில் இப்படியும் ஒரு பிரகிருதியா என்று நினைத்தாளோ என்னவோ. அவள் ஜூரோங் அறிவியல் பூங்கா வளாகத்தில் வேறு வேலைக்குப் போய் விட்டாள் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எனக்கு எந்தப் பெண்ணையும் பார்த்து காதல் உண்டாகவில்லை. காதல் என்பதே ஹார்மோன்களின் சேட்டை என்று ஒரு எழுத்தாளர் கூறியிருந்ததாகப் படித்தேன். மேலும், முழுக்க முழுக்க பாட்டியின் கவனிப்பிலும், வெளியுலகில், ஆம் , இல்லை போன்ற அத்தியாவசியமான பேச்சுக்களிலும், தனிமையிலும் இருந்ததாலோ என்னவோ, பெண்களிடம் பழகும் முறையை நான் அறியவில்லையோ என்னவோ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஐந்து ஆண்டுகளுக்கு முன், பாட்டி இறந்தபின்னர், ஆராய்ச்சித்துறை வேலையிலிருந்து விலகிக்கொண்டு, பேக்கரி ஒன்றைத்துவங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அதன் ஆரம்பக் காலகட்ட பணிகளில் நான் சந்தித்த ஒரு பெண் நல்லதொரு தோழியானாள். அவள் என்னைத் திருமணம் செய்துகொள்ளவும் விரும்பினாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னைப் பற்றி சொன்னபோது அவள் குதூகுலம் அடைந்தாள்.அவள் பெயர் ஆ ஹ¤வே. என் ஆமாவின் பெயர். என் கண்களுக்கு அவள் என் ஆமாவைப்போலத் தோன்றினாள். அதனால் அவளை நான் திருமணம் செய்துகொள்ளவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பேக்கரியின் ஏழு கிளைகளிலும் பணிபுரிய அனுபவமுள்ள பணியாளர்களுக்கு விண்ணப்பித்துத் தேர்ந்தெடுத்தபோது, ஆட்டிசம், உடல் ஊனம், முதலியவற்றால் பாதிக்கப்பட்ட இளையர் சிலரையும் பணியில் சேர்க்கபோகிறேன் அவர்களுக்கு கொஞ்சம் கொஞ்சமாய் பயிற்சி கொடுத்து வாழ்வில் காலூன்றவைக்க ஆசைப்படுகிறென் அவர்களுடன் இணைந்துபணிபுரிய வேண்டும் என்றபோது பெரும்பாலானோர் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னப்பையனாக நான் வாழ்ந்த காலத்தில் ஆ-மா அவர்கள் அங் கூ குவே, நிலவப்பம் போன்ற பலகாரங்களைச் செய்யும்போது கூட இருந்து, கழுவுவது, பொடிப்பது, அரைப்பது போன்ற வேலைகளை கூடமாட ஒத்தாசை செய்திருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என் பெற்றோர் எப்படி இறந்தார்கள் என்று கேட்கிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு விடுமுறை நாளில் பெற்றோருடன் ஜொஹ¤ருக்குக் கிளம்பினேன். நான் தான் ஓட்டினேன். பின் இருக்கையில் என் பெற்றோர் அமர்ந்திருந்தனர். சிங்கப்பூர் எல்லையைக் கடக்கும் முன் கனரக லாரி ஒன்று எங்கள் காரை மோத எனக்குச் சில சிராய்ப்புக்கள். காரின் பின்புறம் நொறுங்கிவிட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கப்பூர் இலக்கிய இதழ் 'நாம்' 2008 மார்ச்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1662913619554000473?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1662913619554000473/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1662913619554000473' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1662913619554000473'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1662913619554000473'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/04/blog-post_09.html' title='வியாழன் விசிட் ,...'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-5005435797949820345</id><published>2008-04-03T17:37:00.000-07:00</published><updated>2008-04-03T17:38:45.274-07:00</updated><title type='text'>தொடரும் புன்னகை</title><content type='html'>விருந்தினர்&lt;br /&gt;தலை&lt;br /&gt;மறைந்த பின்பும்&lt;br /&gt;வழியனுப்ப வந்த குழந்தை&lt;br /&gt;வாயிலில் நின்று&lt;br /&gt;புன்னகைத்துக் கொண்டிருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;போதும் சிரித்தது&lt;br /&gt;அவர்கள் போய்விட்டார்கள்&lt;br /&gt;இவர்கள் சொன்னபோது&lt;br /&gt;சுவிச்சு எங்கே&lt;br /&gt;என்று கேட்டாள்.&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-5005435797949820345?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/5005435797949820345/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=5005435797949820345' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5005435797949820345'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/5005435797949820345'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/04/blog-post_03.html' title='தொடரும் புன்னகை'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-2007297341444284456</id><published>2008-04-02T23:43:00.001-07:00</published><updated>2008-04-03T00:17:51.204-07:00</updated><title type='text'>இந்த வியாழன் -நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்</title><content type='html'>நன்றி, கமலாவின் மூலத்தைக் கண்டுபிடித்து அறிவித்த ஆயில்யன், சொல்லையும், சொல்லை பொருளோடு இணைத்தும் ஆய்வு செய்து ஆர்வம் காட்டிய ஜோதிபாரதி, சூரி, ரசித்த வைகை, கீதா.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;'நாம்'  என்ற தமிழ்க் காலாண்டிதழ் சிங்கப்பூர் தாவரவியல் பூங்காவில்  மார்ச் 23 ஆம் தேதி வெளியிடப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt; நான் என்பது தனிமை, நாம் என்பதே பெருமை என்று தலையங்கத்தின் இறுதியில் ஆசிரியர் குழுவினர் எழுதியுள்ளனர்.&lt;br /&gt;&lt;br /&gt;சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நூல் அறிமுகங்கள், நேர்காணல் (புதிய மாதவியின் பளிச் பதில்களுடன்) சில கலை இலக்கிய நிகழ்வுகள் பற்றிய செய்திகளுடனும், அழகான அட்டைப்படத்துடன் இதழைப் பார்த்தேன். (பார்க்க - வார்ப்பு இணையதளம்)&lt;br /&gt;&lt;br /&gt;நாமுடன் கைகோர்த்து நம்பிக்கை தந்த படைப்பாளிகள் மும்பை, சிங்கப்பூர், துபாய், உப்பிலிக்குடி, கீழப்பெரும்மலை, புதுப்பட்டி, சிவகங்கை, காளாப்பூர், சென்னை, நெம்மக்கோட்டை, குஜராத், கல்பூண்டி, பெங்களூர், செங்குணம் மற்று புலிக்கண்மாய் என்று பல ஊர்களில் இருக்கிறார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நீங்களும் உங்கள் படைப்புகளை யூனிகோட் வழியாக அனுப்ப&lt;br /&gt;&lt;a href="mailto:naaamagazine@gmail.com"&gt;naaamagazine@gmail.com&lt;/a&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நாமிலிருந்து இரண்டு கவிதைகள்&lt;br /&gt;&lt;br /&gt;தோன்றி மறைகிறதென்றாலும்&lt;br /&gt;மறக்கமுடியாத&lt;br /&gt;வானவில்லின் வண்ணங்களைப்போல்&lt;br /&gt;ஒவ்வொரு நாளும்&lt;br /&gt;எனக்காக காத்திருந்து&lt;br /&gt;சென்ற இடங்களிலெல்லாம்&lt;br /&gt;உனது வாசனையை உணர்ந்தேன்&lt;br /&gt;எதிர்பாராமல் நிகழ்ந்ததைவிட&lt;br /&gt;நிகழ்விலிருந்தகாட்சிகள்&lt;br /&gt;ஒவ்வொன்றும்&lt;br /&gt;எனக்குள் ஆழமாக இறங்கிவிட்டன&lt;br /&gt;அந்த இடத்தில் நிற்கும்போதெல்லாம்&lt;br /&gt;நானாக இல்லாமல் நீயாகிறேன்&lt;br /&gt;தேய்ந்துவிடாமல் என்னை விட்டு&lt;br /&gt;அகலமறுத்து&lt;br /&gt;கைரேகையாய் இணைந்திருக்கும்&lt;br /&gt;அந்தக் கணத்தில்&lt;br /&gt;கொஞ்சம் கொஞ்சமாய்&lt;br /&gt;தீர்ந்துகொண்டிருக்கிறேன்&lt;br /&gt;ஒளித்து வைக்கமுடியாத&lt;br /&gt;அந்த நிமிடங்கள்&lt;br /&gt;தூக்கத்தையும் கலைத்த நிலையில்&lt;br /&gt;மீண்டும் மலர்ந்துகொண்டேயிருக்கிறது&lt;br /&gt;புதிய மலர்களாய்&lt;br /&gt;-&lt;br /&gt;சுகுணா பாஸ்கர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;2. அம்மா&lt;br /&gt;நம் வறுமைதான்&lt;br /&gt;உன்னை பிழைக்கவைத்தது&lt;br /&gt;இல்லையெனில்&lt;br /&gt;மம்மியாகியிருப்பாய்-&lt;br /&gt;&lt;br /&gt;கோட்டை பிரபு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;A father's instructions for life (to his son) , 42 (அறிவுரைகள்) படிக்கக்கிடைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt; ஆண்டுக்கொருமுறையாவது சூரிய உதயத்தைப்பார், வாழ்க்கையை வியாபாரம் ஆக்காதே, மனைவியுடன் சண்டைபோட்டுவிட்டு walkout பண்ணாதே,  கண்களைப்பார்த்து பேசு, அனைவரையும் சமமாக மதி, சிரித்தமுகத்துடன் இரு, ஏமாற்றாதே, தவறை ஒத்துக்கொள், கோபத்தில் முடிவெடுக்காதே வகைகள் ஏராளம், ஏராளம்,&lt;br /&gt;&lt;br /&gt;42 ஆவது அறிவுரை phone your mother என்று முடிகிறது&lt;br /&gt;&lt;br /&gt;மகனுக்கு கொடுத்த அறிவுரைகள் மகள்களுக்கும் பொருந்தும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மகள்கள் எனும்போது பாரிமகளிர் நினைவுக்கு வருகின்றனர். &lt;br /&gt;&lt;br /&gt;பாரிமகள்கள் என்று சொல்கிறோமா இல்லையே, பாரிமகளிர்தான்.  பேருந்தைத் தவிர வேறு எங்கும் மகளிர் என்ற பதத்தைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி இந்த மகனும், மகளும் தத்தம் வாழ்க்கையைச் சிக்கலில்லாமல் வாழ தமிழிலக்கியத்தில் ஏதேனும் சொல்லப்பட்டிருக்கிறதா என்று பார்த்தபோது கண்ணில் பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;தலைமக்கட்காகாத குணங்கள் ( தலைவனுக்கும் தலைவிக்கும்)&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;&lt;em&gt;நிம்பிரி கொடுமை வியப்பொடு புறமொழிவன்சொல் பொச்சாப்பு மடிமையடு குடிமைஇன்புறல் எழைமை மறப்போ டொப்புமைஎன்றிவை இன்மை என்மனார் புலவர்&lt;/em&gt;&lt;/p&gt;&lt;em&gt;&lt;p&gt;&lt;br /&gt;- தொல்காப்பியம்&lt;/p&gt;&lt;/em&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;strong&gt;நிம்பிரி&lt;/strong&gt; என்றால் பொறாமை&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;கொடுமை&lt;/strong&gt; என்பது பிறருக்கு கேடு செய்தல்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வியப்பு&lt;/strong&gt;- தன்னையே தான் வியந்து பெருமைப்படுதல்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;புறமொழி&lt;/strong&gt;- புறங்கூறுதல்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;வன்சொல்&lt;/strong&gt;- கடுமையான சொல்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;பொச்சாப்பு&lt;/strong&gt;-  தம்மைத்தம் நிலையில் வைத்துக்கொள்ளாமல் சோர்வுபடுதல், மறதியும் கூட - depression என்று சொல்லலாமா?&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மடிமை&lt;/strong&gt;- முயற்சியின்றி இருத்தல்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;குடிமை இன்புறல்&lt;/strong&gt; - தன் குலத்தினாலும், தன்குடிப்பிறப்பினாலும் தன்னை உயர்வாக மதித்து இன்புறுதல்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஏழைமை&lt;/strong&gt;- நுண்ணறிவில்லாத பேதைமை நிலை &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;மறப்பு-&lt;/strong&gt;  கற்றது, கேட்டது , பயின்றது ஆகியவற்றை மறத்தல்&lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ஒப்புமை&lt;/strong&gt;- பெரிய விளக்கமே கொடுத்திருக்கிறார்கள் , இணையை (spouse) comparison செய்யாமல் இருப்பது&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;em&gt;பள்ளிக்கூடத்தில் காதில் விழுந்த ஆங்கில உரையாடலின் ஒரு பகுதி&lt;/em&gt;&lt;/p&gt;&lt;em&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/em&gt;ஒன்றாம் வகுப்பு&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;சிறுவன் 1 :  ஏன் இன்னைக்கு சயின்ஸ் மாஸ்டர் வரல&lt;/p&gt;&lt;p&gt;சிறுவன் 2 : ஸிக்காம் , வேறு எதுவும் யாரும் சொல்லல&lt;/p&gt;&lt;p&gt;சிறுவன் 1 : ஆப்பரேஷனா இருக்கலாம், சிறுவன்2:  முதல்ல எக்ஸ்ரே எடுக்கணும், எடுத்துகிட்டாரோ என்னவோ&lt;/p&gt;&lt;p&gt;சிறுவன் 1 : அப்புறம் ஸ்கான், பண்ணுவாங்க, ஜெல்லி தடவி, மானிட்டரில் போட்டுகாட்டுவாங்க&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;ஒரு குட்டிக்கதை&lt;/p&gt;&lt;p&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;strong&gt;ட் ராபிக் ஜாம்&lt;/strong&gt;&lt;/p&gt;&lt;strong&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/strong&gt;"லேட்டானாலும் பரவாயில்லை  இந்த ஹைவே எடுக்கணுமா ட்ராப்பிக்கைப் பார்த்தால் பயமாயிருக்கு" &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"அம்மா, அம்மா இன்னும் வேகமா போங்க;  பாருங்க நமக்கு பிறகு கிளம்பிய வண்டி தாண்டி இப்ப எங்கயோ போயாச்சு, அனிக்குட்டி கார்சீட் பெல்ட்டுடனே  குதித்தாள்".&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"அப்படியோ இப்ப நான் யார் சொல்லுவதைக் கேட்கறது? அப்பாவா பெண்ணா?" புன்னகையுடன் கேட்டாள்.&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"போங்கம்மா அப்பா இந்த ரூட்ல ஓட்டவே மாட்டாங்க அதான் பயப்படறாங்க"&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;"அப்பாதான் இன்னிக்கு வின்னர்; கியரை மாற்றி காரை ஐந்நூறு மீட்டர் உயரத்திலிருந்து  தரையில் இறக்கி ஓட்டினாள்.&lt;br /&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;em&gt;இந்த வாக்கியத்தைப் படித்துப்பாருங்கள்&lt;/em&gt;:&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;கோ·பி அன்னன் தமது பயணத்தை ஒருநாள் நீடித்தார்&lt;br /&gt;இதில் பிழை இருக்கிறதாம். என்ன பிழை/பிழைகள்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-2007297341444284456?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/2007297341444284456/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=2007297341444284456' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2007297341444284456'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2007297341444284456'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/04/blog-post.html' title='இந்த வியாழன் -நாம் புதிய இதழ், ஒரு தந்தையின் கடிதம், கணவன் மனைவிக்கு இருக்கக்கூடாத குணங்கள், ஆசிரியர் ஏன் வரவில்லை, கோ·பி அன்னான் பயணம்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1880867961563210817</id><published>2008-03-26T17:35:00.000-07:00</published><updated>2008-03-26T21:57:13.425-07:00</updated><title type='text'>வியாழன் விசிட் ,...</title><content type='html'>&lt;em&gt;வியாழன் விசிட் என்று போடலாமா, ம்,. வியாழன் விருந்து அல்லது மருந்து,...எல்லோரும் ஓடிப்போய்விடும் முன் இந்த வியாழன் என்று துவங்கிவிட்டேன்&lt;/em&gt;.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;strong&gt;&lt;span style="color:#990000;"&gt;ஒரு புதினம், ஒரு கவிதை, கமலா ஆரஞ்சு, மூல்யம்&lt;/span&gt;&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;'கிடங்குத் தெரு' நாவல் படித்தேன். முழுக்க முழுக்க சென்னை கோடவுன் தெருவின் வியாபார நுணுக்கங்களும், அதன் பின் உள்ள மனித மனங்களின் நிழலாட்டமும் இணைந்த வித்தியாசமான பின்னணியில் எழுத்தப்பட்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;எழுதியவர் ஜெகதீஷ்- தமிழினி பதிப்பகத்தின் வெளியீடாக வந்துள்ளது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;'ஹவாலா பற்றிய விவரங்கள்-' அட இவ்வளவு விவரமாகவா' என்று ஆச்சரியப்படவைக்கின்றன. இதுவரை யாரும் எழுதாத, பாகிஸ்தானிலிருந்து தமிழகத்திற்கு வசிக்க வந்த சிந்திக்குடும்பங்களின் கதை மிகவும் இயல்பான மொழியில் பின்னப்பட்டிருக்கிறது. தமிழ் படிக்கத் தெரிந்த அனைவரும் படிக்க வேண்டியது. பெண்களின் நிலை சொல்லிக்கொள்ளும்படி இல்லை. ஒரே ஆறுதல் ஒரு 85 வயது தாயாரின் பாத்திரம். சும்மா கலக்கியிருக்காங்க.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எனக்குப் பிடித்த கவிதை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;குழந்தையின் தோசை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;எதனாலோ அந்த தோசையைப்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;பிடித்துப்போனது அந்தக் குழந்தைக்கு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;அப்பாவின் கையில் உட்கார்ந்துகொண்டு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;அந்த தோசையைச் சுட்டிக்காட்டி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;அது தன்னுடையது என்று&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;முன்பதிவு செய்துகொண்டது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;இதை கவனிக்காமல் அந்த தோசையை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;என் பார்சலில் வைத்துக்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;கட்டிக் கொடுத்தார் கடைக்காரர்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;மீதிச் சில்லறை வாங்கிக்கொண்டு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;வெளியே வரும்வரை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;திருட்டுப் பொருளை வைத்திருப்பதைப் போல்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;என் கை நடுங்கிக்கொண்டிருந்தது.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;-முகுந்த் நாகராஜன்(ஒரு இரவில் 21 செண்டிமீட்டர் மழை பெய்தது)உயிர்மை பதிப்பகம்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;ஒரு மேற்கோள்: ஓடாத கடிகாரம் கூட ஒரு நாளைக்கு இருமுறை சரியான நேரத்தைக் காட்டுகிறது,..&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;தொலைக்காட்சியில் ஒரு நேர்காணல் பார்க்க நேர்ந்தது. பேசுபவர் அடிக்கடி, இது மூல்யமா, அது மூல்யமா என்று சொல்லிக்கொண்டிருந்தார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;நர்மதாவின் தமிழ் அகராதியில் மூலம் என்றால், அடிப்பகுதி, கிழங்கு, தொடக்கம்,காரணம், பிற ஒன்று தோன்றுவதற்கான ஆதாரம், மிகுந்தவலியை உண்டாக்கும் சிறு புடைப்புகள், பத்தொன்பதாவது நட்சத்திரம் என்றெல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;மூல்யம் என்ற சொல் மூலையில் கூட இல்லை. (814 பக்கங்கள்)&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;இதைத்தேடும்போது மூங்கா என்ற சொல் கண்ணில் பட்டது, ஒரு வகை கீரியாம். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;எல்லாவகை கீரிகளையும் கீரி என்றுதான் சொல்லிவந்துள்ளேன். கீரியைத் தனியாகப் பார்த்தால் அது கீரி என்று கண்டுபிடிக்கத் தெரியுமா என்பதே தெரியவில்லை. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;பாம்புடன் சண்டை போட்டால், போட வைக்கப்பட்டால், விலங்கியல் தோட்டத்தில் பெயர்பலகை இருந்தால், கீரி என்று கண்டுபிடித்துவிடுவேன்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;மூங்கா வகையின் விலங்கியல் பெயர் தெரியவில்லை. பண்டைய தமிழர்கள் எல்லாவகைகளுக்கு தனித்தனி பெயர் வைத்திருப்பார்கள் என்று வியந்துகொண்டே மூங்காவை மறந்துவிடக்கூடாது என்று நினைத்துகொண்டேன். &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;நகுலம், பிலேசயம், அகிபுக்கு, அராவைரி இந்தச் சொற்களுக்கு அரும்பொருள் கீரி என்று இருக்கிறது. இவற்றில் சில வேறு உயிரினங்களையும் குறிக்கின்றன.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;தமிழில் மூல்யம் என்று ஒரு சொல் இருக்கிறதா?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;தமிழ்ப்பண்டிதர் ஒருவர் அப்படி ஒர் சொல்லே கிடையாது என்று திட்டவட்டமாகச் சொன்னார். ஆனால் பல இடங்களில் இச்சொல்லைக் கேட்டுவருகிறேன். நண்பரிடம் பேசும்போது சொன்னேன். என்னை வினோதமாகப் பார்த்தார். இப்படித்தானே எல்லோரும் சொல்கிறார்கள் என்றார்.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;கொட்டாவி போல் இதுவும் ஒருவரிடமிருந்து ஒருவருக்கு அனுமதி இன்றி தாவிவிடுமோ? இதன் மூலம் தெரிந்துகொண்டேன், அதன் மூலம் செய்யலாம் என்றெல்லாம் சொல்ல ஏன் தயக்கம். காரணம் மிக எளிது, மூலம் என்றால் பைல்ஸ் வந்துவிடும் அச்சத்தில் மூல்யம் என்ற சொல் ஆட்சி பெற்றுவிட்டதோ என்னவோ?&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;சீனப்புத்தாண்டு நெருங்கிவிட்டாலே இங்கு, சிங்கப்பூரில் காய்கனிச் சந்தையில் அட்டைப்பெட்டிகளில் ஆரஞ்சுப்பழங்கள், மாண்டரின் ஆரஞ்சு என்ற பெயரில் அடுக்கிவிடுகிறார்கள். நம் கமலா ஆரஞ்சுபோலவே தான் இருக்கிறது. &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;சீனப்புத்தாண்டின் விவரங்களுக்கும், அன்று செய்ய வேண்டிய/கூடாத செயல்களும் நம்பிக்கைகளும் விக்கிபீடியாவில் ஒரு புத்தகம் போடும் அளவுக்கு இருப்பதால் நான் எழுதவில்லை.&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#000099;"&gt;திருநெல்வேலி அல்வா, மங்களூர் போண்டா, இதெல்லாம் புரிந்துகொள்ள முடிகிறது. யாராவது கமலா ஆரஞ்சின் மூலத்தைச் சொல்லுங்களேன் ப்ளீஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1880867961563210817?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1880867961563210817/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1880867961563210817' title='6 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1880867961563210817'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1880867961563210817'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/03/blog-post_26.html' title='வியாழன் விசிட் ,...'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>6</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-2628025575770757143</id><published>2008-03-17T20:42:00.000-07:00</published><updated>2008-03-21T03:43:28.251-07:00</updated><title type='text'>பத்து மணியும் ஆறுமணியும்</title><content type='html'>&lt;span style="color:#6633ff;"&gt;&lt;em&gt;இறுக்கப்பிடித்த விரலை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;மெல்ல அவிழ்க்கிறாள் அம்மா&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;உடலோடு ஒட்டியிருந்த&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;காதுகளை இழந்த பொம்மையை&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;எடுத்து &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;மேசையில் வைக்கிறாள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;போர்வையைச் சரி செய்துவிட்டுப்படுக்கப்போகிறாள்.&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;கண்விழித்ததும்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;முதல் வேலையாக&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;பொம்மையை &lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;எடுத்து&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;குழந்தையிடம் வைக்கிறாள்&lt;/em&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;em&gt;&lt;span style="color:#6633ff;"&gt;உடலோடு ஒட்டி&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-2628025575770757143?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/2628025575770757143/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=2628025575770757143' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2628025575770757143'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2628025575770757143'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/03/blog-post_17.html' title='பத்து மணியும் ஆறுமணியும்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1954661993327211744</id><published>2008-03-08T18:18:00.000-08:00</published><updated>2008-03-21T03:49:20.477-07:00</updated><title type='text'>வேறொரு வெயில் நாளில்</title><content type='html'>&lt;p&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;உதவி மேலாளரைப்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;பார்த்துக்கொள்ளச் சொல்லிவிட்டு&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;உணவு இடைவேளையில்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;விர்ரென்று ஓட்டி வந்தேன் உன்வீட்டிற்கு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;என்னை எதிர்ப்பார்த்து&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;வரவேற்று&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;சமையலறை அலமாரியிடுக்கில்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;ஒளித்து வைத்திருந்த கவிதையை &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;வாசித்துக்காட்டினாய்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;கவிதையைப் பற்றி ஏதும் தெரியாதபோதும்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;உன் ஆர்வம் கண்டு.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;இரண்டு வாரத்திற்கு ஒருமுறை பூக்கும்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;இந்த ரோஜாச்செடி என்று காட்டி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;இன்று பூத்ததை முகர்ந்துபார்க்கச் சொன்னாய்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;நீ &lt;/span&gt;&lt;/p&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;எழுதிய வாசகர் கடிதம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;பிரசுரமான பத்திரிகையைக் காட்டினாய்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;நல்லதொரு உணவை உண்டவாறே &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;கொடுக்காய்புளி &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;தின்றதையும்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;நீர்ப்பறவைக்கூட்டத்தை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;எதிர்பாராமல் பார்த்த கதையையும் &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;பேசிக்கொண்டோம்.&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;வேறொரு வெயில் நாளில் சந்திக்கலாம் &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;என்று மிக்க நிறைவுடன்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;விடைபெற்ற போது, &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;நீ'&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;சாரி, வீடு சுத்தமாக இல்லை'&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;என்று வருந்தினாய்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;அதை நான் எங்கே கவனித்தேன்?&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;'நான் பார்க்கவந்தது உன்னைத்தான்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;உன் வீட்டையில்லை' &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;என்றபோது உன் கண்ணில் தெரிந்த &lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;பரவசம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;பத்துநாட்களுக்குப் போதுமானதாக&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;உனக்கு இருக்கலாம்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;span style="color:#6633ff;"&gt;இப்போது நான் யோசிக்கிறேன்&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;உறுத்தாத மௌனங்களின் மொழியை&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;நிழலின் அடியில் அசைபோட்டபடி&lt;/span&gt;&lt;/p&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#6633ff;"&gt;உன் பயங்களைக் களைவது எப்படியென்று&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/p&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1954661993327211744?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1954661993327211744/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1954661993327211744' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1954661993327211744'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1954661993327211744'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/03/blog-post.html' title='வேறொரு வெயில் நாளில்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-7621531791349750995</id><published>2008-02-25T18:33:00.000-08:00</published><updated>2008-02-25T18:40:35.307-08:00</updated><title type='text'>இசையும் நடிப்பும்</title><content type='html'>&lt;span style="color:#993399;"&gt;இசை நிகழ்ச்சிக்குத்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;துள்ளி வந்தாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;இசை கற்றுக்கொள்ளும்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;ஏழு வயது மகள்;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;மூன்று மணி நேரம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;முழுதாய் முடிந்தபின்னர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;விரும்பும் பாட்டொன்றைச்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;சீட்டெழுதிக் கேட்டாள்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;நானும் பெரியவளானால்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;நிகழ்ச்சி செய்து &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;குழந்தைகளின் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;சீட்டுக்கெல்லாம் பாடுவேன் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;என்றாள் என்னிடம்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;தொடர்ந்து பலர் கொடுக்க &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;அவரும் பாடினார்;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;நேரம் பதினொன்றாயிற்று&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;தூங்கிப்போனாள்.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;அவள் கேட்டபாட்டைப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;பாடகர் பாடவேயில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;மறுநாள் காலை,&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;அடடா, பாடினாரா&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;கேட்டாள்&lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;சீட்டுக் கொடுத்த&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;சின்னப்பொண்ணுக்குப் &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;பாடாமல்போவாரா- &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;நீதான்தூங்கிட்ட கண்ணு&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#993399;"&gt;என்றேன்.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-7621531791349750995?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/7621531791349750995/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=7621531791349750995' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/7621531791349750995'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/7621531791349750995'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/02/blog-post_25.html' title='இசையும் நடிப்பும்'/><author><name>மாதங்கி</name><uri>http://www.blogger.com/profile/05371396582929698425</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1456626775152425353</id><published>2008-02-09T02:03:00.000-08:00</published><updated>2008-02-22T12:55:17.168-08:00</updated><title type='text'>உங்களுக்கு வயதாகிவிட்டது</title><content type='html'>&lt;span style="color:#330033;"&gt;டப்பாவிலிருந்து&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#330033;"&gt;எங்களைத் தூக்கி எறிந்தார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;ஏற்கனவே எதிர்பார்த்திருந்ததால்&lt;br /&gt;&lt;br /&gt;எலும்புமுறிவு இன்றி&lt;br /&gt;&lt;br /&gt;கைக்கோர்த்தவாறு&lt;br /&gt;&lt;br /&gt;இறங்கி அமர்ந்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#330033;"&gt;புள்ளிகளாய்&lt;br /&gt;&lt;br /&gt;எங்களைப் பிரித்துக்கொண்டு,&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் இடைவெளிகளை&lt;br /&gt;&lt;br /&gt;நாங்களே தீர்மானித்தோம்&lt;br /&gt;&lt;br /&gt;கோடுகளும் வளைவுகளுமாய்&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் உடல்களைநீட்டிக்கொண்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;வளைத்துக்கொண்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;கைகளால் இணைத்துக்கொண்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;தள்ளாதவர்களைத் தூக்கிக்கொண்டோம்&lt;br /&gt;&lt;br /&gt;யாவரும் வியக்கும் வண்ணம்&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் பறக்கத் துவங்கினோம்&lt;br /&gt;&lt;br /&gt;எங்களுடன் பறந்து வந்தது&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் வளர்த்த&lt;br /&gt;&lt;br /&gt;அவர்கள் மகிழ்ச்சியும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1456626775152425353?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1456626775152425353/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1456626775152425353' title='4 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1456626775152425353'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1456626775152425353'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/02/blog-post.html' title='உங்களுக்கு வயதாகிவிட்டது'/><author><name>மாதங்கி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>4</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-8516085330610931402</id><published>2008-01-03T16:52:00.000-08:00</published><updated>2008-02-22T04:57:10.396-08:00</updated><title type='text'>ஒரு உடனடி கதை</title><content type='html'>&lt;span style="color:#cc0000;"&gt;அம்மாவுக்கு காது கேட்கவில்லை&lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கொஞ்ச நாட்களாகவே எனக்கு மனசு சரியில்லை; &lt;a href="http://bp2.blogger.com/_YPTVJLeyBCA/R61n-tbt6vI/AAAAAAAAAAU/6Nq371-itzk/s1600-h/thumbnail4.jpg"&gt;&lt;/a&gt;அம்மாவுக்கு வரவர காது சரியாக கேட்பதேயில்லை; &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தனியாகப் போகாதே எதாவது வண்டி கிண்டி மோதிவிடப்போகிறது என்று சித்தி எச்சரித்துக்கொண்டே இருக்கிறார்.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என் அப்பா பிரிந்ததிலிருந்து அம்மா தனியாகவே துணிந்து நின்று என்னை வளர்த்து வருகிறார். யாரிடமும் எதுவும் எதிர்பார்த்தது கிடையாது. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அம்மா தைரியசாலி, கடும் உழைப்பாளி.&lt;br /&gt;காது கேட்பது குறைந்து வருவதுதான் எனக்கு கொஞ்சம் கவலை தருகிறது. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அம்மா வெளியே செல்லும்போது வண்டிகள் உரக்க ஹாரன் அடித்தாலும் அல்லது ஓட்டுனர்கள் கூவினாலும் அம்மாவுக்கு காதில் சரியாக விழுவதில்லையே. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நான் கவலைப் பட்டதற்கு ஏதுவாக ஒரு முறை வெளியே செல்லும்போது வழிதவறி போய்விட்டார். ரொம்ப நாழி வரவேயில்லை; ஒரு பக்கம் கவலைப்பட்டேன், மறுபக்கம் என்னையே நான் கொஞ்சம் திட்டிக்கொண்டேன். &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;மதிய உணவுக்கு எனக்கு மீன் ரொம்பப் பிடித்திருந்தது, அதுவும் சாதாரண மீன் இல்லை; இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகை, அதை அவ்வப்போது புதிசாக வாங்கி வரத்தான் அம்மா அடிக்கடி வெளியே போகவேண்டியிருக்கிறது. அது தின்பதற்கு சுவையாகவும் மென்மையாகவும் இருக்கும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சித்தி சொல்லிக்கொண்டிருந்தார், "இங்கே பக்கத்தில் கிடைக்கும் மீனை பிள்ளைக்கு வாங்கிக்கொடுத்தால் போதாதா, எதற்கு தினமும் தள்ளிப் போய் வாங்கி வரவேண்டும்? ஏ குட்டி, இதெல்லாம் உன் வேலையா?" என்னைச் செல்லமாக முறைத்துப் பார்த்தார். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;ஒரு முறை கடற்கரை அருகில் ஒரு இடத்தில் புதிதாகக் கிடைக்கிறது என்று யாரோ தெரியாமல் சொன்னதைக் கேட்டு வெறும் வயிற்றில் பட்டப்படைக்கிற வெய்யிலில் ஓடி, புடைக்கும் சூரிய ஒளியில் கண்கள் கூசி, காலருகில் இருந்த மீன் வலை கவனிக்காது போய் காலை இசைகேடாக மாட்டிக்கொண்டு காலை விடுவிக்க முடியாமல் திண்டாடி, பின் சில நல்லவர்கள் உதவியாக அம்மா தப்பித்துவிட்டார்.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இன்றும் அம்மாவைக் காணோம். கடவுளே இந்த ஒரு முறை என் அம்மாவைக் காப்பாற்றி விடப்பா. இதோ என்னைப் பார்த்துக்கொள்ள வந்த சித்தி புதுசுபுதுசாக ஏதோ சொல்லி என்னை வேறு கிலி படுத்துகிறார்.&lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;காலம் கெட்டுக்கிடக்கிறதாம், பசி மயக்கத்தில் அம்மா சுருண்டுவிட்டால் யாராவது நாதியற்றவள் என்றோ பிணம் என்றோ நினைத்து அம்மாவின் உடல் உறுப்புக்களை யாராவது எடுத்துவிடாமல் இருக்க வேண்டுமாம். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கடவுளே இப்படியுமா இருப்பார்கள் இவ்வுலகில்?&lt;br /&gt;சே சே இருக்காது, இருக்கக்கூடாது, இந்தச் சித்தி அனாவசியமாக பீதி அடைகிறார் என்று எனக்கு அடிக்கடி தோன்றும் என்றாலும் அம்மா பத்திரமாக இருக்கவேண்டும் சாமி என்று கடவுளை வேண்டிக்கொண்டேன். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;சாமி எனக்கு இனி அந்த மீன் வேண்டாம் எதுவும் வேண்டாம் என் அம்மாதான் எனக்கு வேண்டும். இந்த ஒரு முறை அம்மா பத்திரமாகத் திரும்ப வேண்டும். சீக்கிரமாக நான் பெரியவனாக வேண்டும். அம்மா வந்து விடணும் சாமி என்று கண்ணை மூடிக்கொண்டு வேண்டிக்கொண்டேன். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;என் பிரார்த்தனை பலித்துவிட்டது. அம்மா பத்திரமாக வந்துவிட்டார். கடவுள் எவ்வளவு நல்லவர். என்னைப் போன்ற சின்னப் பையனின் பிரார்த்தனையை ஏற்றுக்கொண்டு விட்டார். அம்மா என்னைத் தடவிக்கொடுத்தார். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அம்மா வழக்கம்போல் முதலில் சாப்பாடு கண்ணு என்றார். அம்மா, நீங்களும் என்னோடு சாப்பிடுங்கள் என்றேன். சித்தி என் அம்மாவுக்கு வழக்கம்போல் அறிவுரை சொல்லிவிட்டு தன் வீட்டுக்கு போய்விட்டார். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;அம்மா எனக்கு சாப்பாடு ஊட்டி முடித்தபிறகு அம்மாவின் முதுகைக் கட்டிக்கொண்டேன். முதுகில் காயத்தின் தழும்புகள். எப்போது பட்டுக்கொண்டார் என்று தெரியவேயில்லை. ஓவென்று அழுதேன். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;கண்ணா அழாதே, என்னை யாரும் அடிக்கவில்லை கொஞ்ச நாளைக்கு முன்வெளியே போன போது தேடப்போனபோது ஒரு வண்டியில் துருத்திக்கொண்டிருந்த கூர் பிளாச்சு என்னைக் குத்திவிட்டது என்றார். &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;வண்டிகளைப் பார்த்தால் என் நண்பன் ராசு குதிப்பான் குதூகலிப்பான், எனக்கோ கோபம் கோபமாக வருகிறது. "மருந்து போட்டீங்களா அம்மா?" என்றேன். அம்மா சிரித்தார். "சே இப்போதே நான் பெரியவனாகி அம்மாவுக்கு உதவி செய்ய முடியாதா. அம்மாவை தூக்கக்கூட என்னால் முடியவில்லை. &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இயற்கை உபாதைகளைத் தவிர அம்மாவுக்கு பிரச்சனையே அம்மாவின் பருத்த உடம்புதான்; &lt;br /&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;இரண்டு மூன்று நாள் கரையோரமாக விழுந்து கிடந்தால் தன் உடல் எடையாலேயே நசுங்கி திமிங்கிலங்கள் இறந்துவிடும் என்று நீங்கள் படித்திருப்பீர்களே.&lt;/span&gt;&lt;br /&gt;&lt;p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt; &lt;/p&gt;&lt;p&gt;&lt;br /&gt;&lt;/p&gt;&lt;span style="color:#3333ff;"&gt;நன்றி&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#3333ff;"&gt;தமிழ்சி·பி.காம்2008 புத்தாண்டு மலர்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;span style="color:#3333ff;"&gt;&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-8516085330610931402?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/8516085330610931402/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=8516085330610931402' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/8516085330610931402'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/8516085330610931402'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2008/01/blog-post.html' title='ஒரு உடனடி கதை'/><author><name>மாதங்கி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-1626059412264121737</id><published>2007-12-10T16:57:00.000-08:00</published><updated>2007-12-10T17:04:31.157-08:00</updated><title type='text'>இரண்டு கடிதங்கள்</title><content type='html'>&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;சிங்கப்பூர் வந்த புதிதில், (1993) ஹெச்.டி.பி. அடுக்ககக் கீழ்த்தளத்தில் உள்ள குடியிருப்பாளர்களின் அஞ்சல் சேமிக்கும் பெட்டியில் நாள்தோறும் வரும்அஞ்சல்களை எடுக்கப் பெட்டியைத் திறக்கும்போது, அதில் ஏராளமான துண்டுபிரசுரங்கள் (flyers)  குவிந்திருக்கும்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt; வங்கிக் கடிதங்கள், மின்சாரம் மற்றும் தண்ணீர் கட்டணஅறிவிப்புகள், வீட்டுவசதி வாரியத்திலிருந்து வரும் கடிதங்கள், இதர கடிதங்கள்,   சின்னஞ்சிறு அறிவிப்புகளைத் தாங்கிய தாள்கள், காணாமல் போன ஒரு வயது ஜிம்மி- பழுப்பு நி¢ற நாய்க்குட்டியைக் கண்டு பிடித்தால் தக்க சன்மானம் கிடைக்கும் ( நீல வண்ணச் சொக்காயும் இளம்பச்சைநிற காலுறையையும் அணிந்திருக்குமாம், உணவுவேளைக்கு முன்பே காணாமல் போயிற்றா , பற்கள் எத்தனை என்ற விவரங்களை குறிப்பிடவில்லை)   மகனுக்குப் பள்ளியில் வீட்டுப்பாடம் அதிகமில்லையாம்; கூடுதல் பாடங்கள் ஆங்கிலம், தாய்மொழி, கணக்கு முதலியவை சொல்லித் தர ஆசிரியர் வேண்டுமாம் (ஐந்து வயது சிறுவனுக்கு இதை இன்னும் தெரிவிக்காதலால் அவன் இன்னமும் பந்தடித்துகொண்டிருக்கிறான்)&lt;br /&gt;வீட்டிற்கு சன்னல் மாற்றுகிறோம், சமையலறை அலமாரிகளைப் புதுப்பிப்போம், மேலும், வீட்டின் தரையின் மேற்பகுதி பார்க்கே (மரம்), பளிங்கு, எப்படி வேண்டுமோ நவீனப்பாணியில் மாற்றித்தருவோம், சமையலறை அலமாரிகளை புதுப்பிப்போம், ஐரோப்பிய அடுப்பு, பாத்திரம் கழுவும் தொட்டி, குளியலறைத் தொட்டி, கழிவுக்கோப்பை, வழுகாத தரை, முன்னறை மேல் உள்கூரையழகு (cornice), குளிரூட்டும் பெட்டி, மின் இணைப்புகள், மின்விசிறிகள், நுரைமெத்தைகள், இத்தாலிய ஆசனங்கள், துணி துவைக்கும் ஐப்பான் இயந்திரம், உள்ளறைகளில் சுவரோடு உள்ளொட்டிய அலமாரிகள் என்று வீட்டைத்தவிர சகலத்தையும் சகாய விலையில் மாற்ற உத்திரவாதம் தரும் அங்காடிக்காரர்களின் அன்பும், (வீட்டை வாங்குவதற்கும் விற்பதற்கும் குவியும் விளம்பரங்கள்  பற்றியும்  எடையைக்குறைக்கும், மேனி எழிலூட்டும் விளம்பரங்கள் பற்றியும் தனியாக பின்னொரு பொழுதில் எழுதுகிறேன்)நாம் விரோதமாகத் தூக்கிப்போட்டாலும் நம் தபால் பெட்டியை தேடிவந்து வந்தனம் செய்யும் அன்பர்கள், அடுத்து கணினி வாங்கு, பியானோ வாங்கு, சாப்பாடு வாங்கு, என்று இரத்த அழுத்தம் வரவழைக்கக் கூடிய %50 தள்ளுபடியில் இன்றே கடைசி என்று நல்லெண்ணத்துடன் நமக்கு நினைவூட்டும் காகிதத்துண்டுகள் தேடிவந்து நம் அஞ்சல்பெட்டியில் அமர்ந்துகொள்ளும்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;இப்போது துண்டுச் சீட்டுகள் வருவதை வரவேற்காத கலகக்காரர்களுக்காக,  தடுக்க  சிறுகதவு செய்தாலும் (வேண்டுமானால் அதைப்பூட்டிக்கொள்ளலாம்) தடுக்க முடியாத சில அஞ்சல்கள் உள்ளன.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;உறவினர், நண்பர்களிடமிருந்து வரும் கடிதங்கள் அருகிவிட்டது,&lt;br /&gt;எல்லாம் மின் அஞ்சலின் உபயம். அஞ்சலில் தவறிவிட்டது என்று யாரும் கதைகூற இயலாது, வேண்டுமானால் இணையப்பக்கத்தை திறக்க இயலவில்லை, கணினிக்கு உடல்நலம் இல்லை எனலாம்.  அதற்குத் தடையில்லை.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;கடிதங்களைப்பார்ப்பது என்பது ஒரு சுவையாரமான செயல்தான் கட்டணம் கட்டச்சொல்லும் கடிதங்களைத் தவிர.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;இவற்றிற்கெல்லாம் முத்தாய்ப்பு வைத்தாற்போல சில துண்டுபிரசுரங்கள் பிடிவாதமாக வந்து கொண்டிருக்கின்றன.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;நான் பள்ளிமாணவராக இருந்தகாலத்தில் வரும்.  அனேகமாக தெரிந்தவர்கள் எல்லோருக்கும் வரும்.  மஞ்சள் நிற தபால் அட்டையில் எழுதப்பட்டிருக்கும்.  இது நான் கடவுள் எழுதச்சொல்லி எழுதுவது, இதைப்போல் உடனடியாக 50 கடிதங்கள் கையால் எழுதி ( என் மீது உள்ள கருணையினால் எனக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கை என்பதை பின்னர்  தெரிந்துகொண்டேன்)  எல்லோருக்கும் அனுப்பினால் தேர்வில் முதல்வகுப்பில் வெற்றிதான்,  மீறி அலட்சியப்படுத்தினால், இந்த வருடம் தோற்றுவிடுவீர்கள் என்று பாசம் கலந்த கண்டிப்புடன் வரும்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;இவ்வாறாக வரும்  மஞ்சள் வண்ண அஞ்சல் அட்டைகள் குப்பை, தூசு அள்ளவும், சரிசமமாக நிலத்தில் அமர மறுக்கும் நாற்காலிகளுக்கும், முக்காலிகளுக்கும் உறுதுணையாக இருக்கும் என்பதைக் கண்டுபிடித்த பின் என் மனம் உவகையடைந்தது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;பள்ளியில் உடன் பயிலுபவர்களை வினவியதில் அவர்களுக்கும் அக்கறை மடல்கள் வந்துசேர்ந்ததை உறுதிசெய்துகொண்டேன்.  சிலர் அச்சம்கொண்டு ஞாயிறு முழுவதும் அமர்ந்து எழுதி திங்கள் காலையில் பள்ளிக்கு எதிரில் இருந்த அஞ்சல் பெட்டியில் சேர்த்துவிட்டு, வகுப்பில் முதல்பிள்ளையாக வரும் இன்பக்கனவைக் கண்டவாறே பள்ளியில் வந்து அமர்ந்துவிட்டு அன்று மதியம் நடந்த கணிதத் தேர்வில் கண்களை அடிக்கடி மலர்த்தி  கனவைத்தொடர்ந்தனர்.  &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;சொன்னதைக் கேட்காவிட்டாலும் அட்டையை தூக்கி எறியாமல் அதை பயன்படுத்த புதியமுறைகளைப் பற்றி யோசித்து செயல்பட்டதால் என்னிடம் கருணை காட்டப்பட்டது என்பதை என் கணிதத்தேர்வு மதிப்பெண்கள் உறுதிசெய்தன. &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;பிற்காலத்தில் கல்லூரி படிப்பிற்காக தென் தமிழகத்திலிருந்து நடுவண் தமிழகத்திற்கு நான் குடிபெயர்ந்தாலும் இத்தகைய கருணை மடல்கள் மூன்று மாதங்களுக்கு ஒருமுறையாகவும் (புதிய முகவரியை சிலரே கண்டுபிடிக்கும் திறமை பெற்றதால்) மெல்ல ஆண்டுக்கு ஒரு முறையாகி, பின் அதுவும்  நின்று போனபோது,  என் வளர்ச்சியில் நல்லெண்ணம் கொண்ட முகம் தெரியாத அன்பர் என்னை தன் நினைவேட்டிலிருந்து நீக்கிவிட்டதை எண்ணி வருந்தினேன். &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;சிலபல ஆண்டுகள் கழித்து சிங்கப்பூருக்கு வந்தபோது இந்த இனிய நினைவுகள் உதித்தது எங்ஙனம் என்று கேட்பவருக்கு நேற்று வந்த இரண்டு கடிதங்களைப் பற்றி கூறக்கடமைப்பட்டிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;ஒன்று தட்டச்சு செய்த முகவரியைத் தாங்கிய பிரபல பொரிம்பு (brand) பெயரால்அலங்கரிக்கப்பட்ட உயர்ரக உறை.  மற்றொன்று பாலர்பள்ளி  மாணவர், பேனாவில் முகவரி எழுதுவதன் மூலம் அவர் ஆங்கிலஅறிவு மற்றும் எழுதும் பயிற்சியும் மேற்கொள்ளவைக்கப்பட்டிருந்தது தெரியும்படியாக ஒரு கடிதம்.  இதற்கு பொரிம்பு பெயரிட்ட உறை கிடைக்கவில்லை போலும். அதனால் ஒரு தாளில் எழுதி, நான்காக மடித்து மெல்லிய உலோக கம்பியால் அங்கங்கே கவ்வப்பட்டு மூடப்பட்டிருந்தது.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;உள்ளடக்கம் ஏறத்தாழ ஒன்றுதான்.&lt;br /&gt;அவசர உலகம் அல்லவா, கையால் எழுதி 50, 100 பேருக்கு அனுப்பsசொல்லுவதன் நேரவிரயத்தை அறிந்திருந்த உத்தமர்கள்.&lt;br /&gt;நகலெடுத்து 30 பேருக்கு அனுப்பினால் போதும் என்று கருணையுள்ளத்துடன் எழுதியிருந்தார்கள்.  எங்களுக்கு அலுவலகப்பணி நிலைக்கவேண்டும், வாந்தி, பேதி, பீதி வராமல் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும் என்று மிகுந்த அக்கறை கொண்டவர்கள் இவர்களைவிட வேறு யாராக இருக்க இயலும். (இந்த வேண்டுகோளைப் புறக்கணித்ததால்,  பிற்பகலிலேயே வீண்பழி சுமத்தப்பட்டு சிறைக்குச் சென்றவர், குடும்ப உறவுகள் சிதைக்கப்பட்டவர் பற்றிய சிறுகுறிப்பை கனிவோடு சேர்த்திருந்தனர்)&lt;br /&gt;அனுப்புநர் அடுத்தவரை உற்சாகப்படுத்துவதிலும் ஆர்வம் கொண்டவர் என்பது கடிதத்தின் இறுதி பத்தியில் தெரிந்தது.  உடனே செயலில் இறங்கிய ஒரு கனவான் லாட்டரி ஒன்றில் சில மில்லியன்கள் வென்ற நற்செய்தியை மறக்காமல் குறிப்பிட்டிருந்தார்.  &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt; இவ்வுலகத்தினர் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்தும் வகையில் உலக நன்மைக்காகவே இதை அனுப்புவதாகவும், தெரிந்தவர்களுக்கெல்லாம் அனுப்புமாறு  தெரிவித்திருந்தார். &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;நண்பர், உறவினர் போன்றோருக்குப் பண்டிகை நாள்,  பிறந்தநாள், மணநாள், இன்னும் பல சிறப்புடைய நாட்களில் வாழ்த்து அட்டைமட்டுமே அனுப்பவேண்டும் என்று எண்ணிக்கொண்டிருப்பவர்களை உய்விப்பவர் வேண்டுமல்லவா.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;இதை எண்ணி மகிழும்போதே இதனினும் குதூகலம் அளிக்கும் ஒன்றை நான் கவனிக்கத் தவறியதை அறிந்தேன்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;இரண்டிலுமே உள்ளூர் அஞ்சலுக்கு மட்டும் என்று எழுதப்பட்ட அஞ்சல்தலைகள் கவனமாக ஒட்டப்பட்டிருந்தன. &lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt; நல்லெண்ண விரும்பிகள் சிங்கப்பூரில் எனக்கு வாய்த்திருப்பதை எண்ணி பூரிப்படைந்தேன்.  மாசுகட்டுப்பாடு மீது உள்ள கரிசனம் காரணமாக தாளின் வெற்றுப்பகுதியை எழுத பயன்படுத்துகிறேன்.&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;நன்றி: சிங்கப்பூர் தமிழ்முரசு 2000 செப்டம்பர் 19&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;&lt;/span&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;span style="color:#333399;"&gt;பின்குறிப்பு:&lt;br /&gt;இக்கட்டுரையை எழுதி ஆண்டுகள் ஏழு ஆகியபின் ஒரு நன்னாளில் நண்பர் ஒருவர் மின்மடல் அனுப்பியிருந்தார்.  அவரது கைபேசியில் குறுந்தகவல்கள் வந்தவண்ணம் இருக்கிறதாம்.  உள்ளடக்கம் மேற்குறிப்பிட்ட செய்திதான். 10 பேருக்கு குறுந்தகவல் அனுப்பச்சொல்லுகிறார்களாம்.&lt;br /&gt; &lt;/span&gt;&lt;/em&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-1626059412264121737?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/1626059412264121737/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=1626059412264121737' title='2 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1626059412264121737'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/1626059412264121737'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2007/12/blog-post.html' title='இரண்டு கடிதங்கள்'/><author><name>மாதங்கி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>2</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-409831651245842658</id><published>2007-09-01T00:29:00.000-07:00</published><updated>2008-02-22T12:53:17.069-08:00</updated><title type='text'>தேக்கா வெட்டவெளியில்</title><content type='html'>ஞாயிறு இரவுகளில்&lt;br /&gt;&lt;br /&gt;விரவியிருக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;வெளிநாட்டு ஊழியர்களின்&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளின் காலடித்தடம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விடுமுறையிலும் கூடுதல் பணி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடல்தாண்டி வந்த உடலைச்&lt;br /&gt;&lt;br /&gt;சுமந்தபடி&lt;br /&gt;&lt;br /&gt;தேங்கி நிற்கும்&lt;br /&gt;&lt;br /&gt;குடும்பத்தின் குரல்களைக்&lt;br /&gt;&lt;br /&gt;கேட்டவாறு அமரும்&lt;br /&gt;&lt;br /&gt;புல்வெளியில்&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர்களுடன்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓவர்ஸ்டே, வொர்க் பர்மிட்,&lt;br /&gt;&lt;br /&gt;எஸ்பாஸ், சுய பாகம்,&lt;br /&gt;&lt;br /&gt;முகவர் வாங்கிய முன் பணம்,&lt;br /&gt;&lt;br /&gt;ஏமாந்து போன நண்பன்,&lt;br /&gt;&lt;br /&gt;நெருங்கிய உறவின் மரணம்,&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவின் திருமணம்,&lt;br /&gt;&lt;br /&gt;மனைவியின் பிரசவம்,&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தை இப்போது பேசுகிறதாம்,&lt;br /&gt;&lt;br /&gt;எல்லாச் சொற்களும்&lt;br /&gt;&lt;br /&gt;புல்வெளிதாண்டி&lt;br /&gt;&lt;br /&gt;சாலைகளிலும்&lt;br /&gt;&lt;br /&gt;நடக்கும்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எவ்வளவு பெரிய மழை&lt;br /&gt;&lt;br /&gt;வந்தாலும்&lt;br /&gt;&lt;br /&gt;கனவுத் தடங்களை மட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;அவை&lt;br /&gt;&lt;br /&gt;அழிப்பதேயில்லை&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கனவுகளெல்லாம்&lt;br /&gt;&lt;br /&gt;நனவாகட்டும்&lt;br /&gt;&lt;br /&gt;என்ற நினைப்பில்&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-409831651245842658?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/409831651245842658/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=409831651245842658' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/409831651245842658'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/409831651245842658'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2007/09/blog-post.html' title='தேக்கா வெட்டவெளியில்'/><author><name>மாதங்கி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-2081536980310232837</id><published>2007-06-02T01:26:00.000-07:00</published><updated>2007-06-02T01:32:24.203-07:00</updated><title type='text'>வரவேற்பறையில் ஒரு நிரந்தர பூதம்</title><content type='html'>அலுத்துக் களைத்து அலுவலகத்திலிருந்து வருகிறீர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;வீட்டிற்குள் நுழைந்தவுடன் விரல்களால் பொத்தானை அமுக்குகிறீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt; உங்கள் வீட்டில் ஒருவர் மற்றொருவருடன் அன்றைய நிகழ்ச்சிகளையோ, அனுபவங்களையோ குறித்துப் பேசும் போது வீட்டில் பின்னனி சத்தத்துடன்தான்  பேசுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;  வீட்டில் பிள்ளைகள் எதாவது ஐயங்களையோ, செய்திகளையோ சொல்லவரும்போது அல்லது சொல்லும்போது அடிக்கடி அப்புறம் ஆகட்டும் என்றோ அல்லது அவர்கள் கண்களைப் பார்க்காமல் தலையை மட்டும் அசைத்து வாயைத் திறந்து வார்த்தைகள் மட்டும் கூறுவீர்களா?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒவ்வொரு பாட்டிற்கும் பின்னணி இசை இருப்பது போல் உங்கள் வீட்டில் எல்லா நடவடிக்கைகளும் ஒளித்திரை பின்னணியில்தான் நடக்குமா?&lt;br /&gt;&lt;br /&gt;சொல்லமறந்தேவிட்டேன், எடை கூடிக்கொண்டே போகிறது, வரவர கவனமே இல்லை, இந்த வாக்கியங்கள் அடிக்கடி உங்கள் வீட்டில் ஒலிக்கின்றனவா?&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் கேள்விகளில் ஒரு சிலவற்றிற்கே ஆம் என்று பதில் சொல்லிவிட்டீர்கள் என்றால் பணம், நேரம், பாசம், அக்கறை, மகிழ்ச்சி இவற்றையெல்லாம் உங்களை அறியாமலேயே/அறிந்தே விற்று ஆபத்தை தினந்தோறும் வாங்கி வருகிறீர்கள் என்று அர்த்தம்.  இச்செய்தி ஆண், பெண் இருபாலார்க்கும் ஆகும்.&lt;br /&gt;&lt;br /&gt;பழங்கதை ஒன்றைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.  எங்கேயோ கிடந்த புட்டியை ஒருவன் தெரியாமல் திறந்துவிட அதிலிருந்து வெளிப்பட்ட பூதம் வேலை தருவதை நிறுத்தினாய் உன்னை விழுங்கிவிடுவேன் என்று தன்னை விடுவித்தவனைப் பார்த்துக் கூறும்.  பூதம் நொடியில் வேலைகளை முடித்துவிட்டு தொந்தரவு தர இறுதியில் அலைகளை எண்ணச் செய்தானாம் அந்த மனிதன்.&lt;br /&gt;&lt;br /&gt;நம் வீட்டிலும் ஒரு பெரிய மலை விழுங்கி பூதம் இருக்கிறது.  தெரிந்தே ஆசையாய் விலை கொடுத்து வாங்கி பற்பல இணைப்புக்களும் கொடுத்து ஆதரித்து வருகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;நமக்கு சொந்த வேலை எதாவது பிள்ளைகள் தொந்தரவின்றி செய்ய வேண்டுமா?  வெகு சுலபம். பெட்டி எதிரில் சுட்டிகளை உட்கார்த்திவிட்டு நேரத்தினை வெட்டிச் செலவு செய்யக்கூடாது என்று நிகழ்ச்சி முடிந்தபின் சொல்லலாம்.  இது சரியா?&lt;br /&gt;&lt;br /&gt;கதையில் பூதமாவது என்னைப் பயன்படுத்து என்று பயமுறுத்திக் கொண்டிருந்தது.  தொலைக்காட்சிப் பெட்டி தேமேன்னென்று இருந்து கொண்டு சிறுவர் முதல் பெரியவர் வரை எல்லோர¨யும் இருந்த இடத்திலிருந்தே எப்படி ஆட்டிக் வைக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;   அது பாட்டுக்கு ஓடிக்கொண்டிருக்கும்.  வீட்டுப்பணிகள் (ஆண் பெண் இருபாலாரும்தான்) நிகழ்ச்சிகளுக்கு இடையே (விடுமுறை என்றால் இன்னும் சிறிது கூட) நடக்கும்.  நடுவில் விளம்பரங்கள் வரும்போது தண்ணீர் குடிப்பதற்கோ அல்லது வேறு எதற்காகவாவதோ போவது நடக்கும்.  விளம்பர இடைவெளியில் இவர்கள் ஒருவருக்கு ஒருவர் அப்போதுதான் பேசிக்கொள்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குழந்தைகள் பார்ப்பார்கள்; சரிதான் பேசாமல் நாமும் இதில் என்னதான் இருக்கிறதென்று பார்க்கலாம் என்று முடிவுசெய்வார்கள்.  அவர்கள் ஒரு நொடி தயங்கினாலும் திரையில் வரும் காட்சி அல்லது குரல் அவர்களை நல்ல பிள்ளையாய் இழுத்து உட்கார்த்தி வைத்துவிடும்.&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் பிள்ளைகளைச் சொல்லிக் குற்றமில்லை.  அவர்கள் நம்மைப் பின்பற்றுவார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;பிள்ளைகள் சதா தொலைக்காட்சி பார்க்கிறார்கள் என்றால் அவர்களுக்கு வேறு நல்ல பொழுதுபோக்கு அமையவில்லை என்று அர்த்தம் (it means they are not properly engaged otherwise)&lt;br /&gt;பிள்ளையைப் புத்தகம் படிக்கச் சொல்லிவிட்டு நீங்கள் தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருந்தால் அவர்களுக்கு கவனம் சிதறிப் போகும்.&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் வீட்டில் அப்படியெல்லாம் இல்லை என்பவர்கள் மிகக் குறைவே.இவர்களுக்கு இந்தக் கட்டுரை தேவையில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;இதற்கு என்ன செய்யலாம் என்று யோசிப்பவர் மட்டும் தொடர்ந்து படிக்கவும்.  பிடிக்காதவர்கள் என்னைத் திட்டிவிட்டு உங்கள் பணியைத் தொடரவும்.&lt;br /&gt;&lt;br /&gt;என்ன செய்யலாம்?&lt;br /&gt;&lt;br /&gt;1.  தொலைக்காட்சியா?  தாராளமாகப் பாருங்கள்/&lt;br /&gt;2.  பார்க்கவேண்டிய நிகழ்ச்சிகளைத் தேர்ந்தெடுங்கள்.  உங்களுக்குப் பயன் தரும் நிகழ்ச்சிகள் ஒரு வாரத்தில் எப்போதெல்லாம் வருகின்றன என்று குறித்து வைத்துக் கொண்டு, அதைக் கட்டாயம் பாருங்கள்.&lt;br /&gt;3.  பிள்ளைகளுக்கும் அவர்கள் விரும்பும் நிகழ்ச்சியைப் பார்க்க அனுமதியுங்கள் (குறிப்பிட்ட நேரத்தில்)&lt;br /&gt;4.  இடையிடையே பிள்ளைகளுடன் நீங்களும் சேர்ந்து பாருங்கள்.  அப்போதுதான் அது பிள்ளைகள் பார்க்கக்கூடிய நிகழ்ச்சியா என்பதை நீங்களும் சிந்திக்கலாம்.  குழந்தைகள் கேலிச்சித்திரம், குழந்தைகளுக்கான தொடர்கள் என்ற பெயரில் வரும் எல்லா நிகழ்ச்சிகளுமே குழந்தைகளுக்கு ஏற்றவையாக அமைவதில்லை.&lt;br /&gt;5.  தரமானதொரு நிகழ்ச்சியை பிள்ளைகளுடன் பார்த்துமுடித்தவுடன் அவரவர் எழுந்து போய் விடாமல் ஓரிரு நிமிடமாவது அது குறித்துப் பேசுங்கள்.  அவர்கள் கருத்தைக் கேளுங்கள்/&lt;br /&gt;6.  நேரமிருந்தால் அவர்களுடன் இன்னும் விரிவாகப் பேசலாம்.  செய்திகள், நல்ல கருத்துப் பரிமாற்றங்கள், அறிவுக்கும் விருந்தாகும் டிஸ்கவரி சானல், நேஷனல் ஜியோக்ராபி·க், பயணச் நிகழ்ச்சிகள் போன்றவற்றைத் தவிர்த்து விடாதீர்கள்.&lt;br /&gt;7.  நிகழ்ச்சி எப்படித் தரப்பட்டது?&lt;br /&gt;8.  அதில் பங்கு பெற்றவர் கூறியவற்றைத் தவிர வேறு ஏதேனும் எண்ணம் எழுகிறாதா?  நடக்குமா? .  எங்காவது இதுபோல் இருக்குமா? உனக்கும் இவற்றைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆசையா?  நூலகத்தில் பார்க்கலாமா?  இதே விஷயத்தை நாம் எப்படி அணுகலாம்?  இதைக் காட்டிலும் புதிய முறை ஏதேனும் இருக்கிறதா?  போன்ற கேள்விகள் சிந்தனையைத் தூண்டும்.&lt;br /&gt;9.  எல்லாக் கேள்விகளையும் ஒரே நேரத்தில் கேட்காமல் சிலவற்றையாவது கேட்கலாம்.  அல்லது உங்களுக்கு புதிதாக எதாவது தோன்றினாலும் கேட்கலாம்.  வன்முறைக் காட்சிகளை அவர்கள் எதிரில் நீங்களும் பார்க்காதீர்கள்.&lt;br /&gt;10.  எலி பூனையை மாட்டிவிட்டு அடிபட வைக்கிறதா?  இந்த கேலிச்சித்திரம் பிள்ளைகளுக்குத்தேவையா?  இது நிஜம் அல்ல என்பதை அவர்கள் பார்க்கும்போதே நீங்களும் பக்கத்தில் இருந்தால்தான் கூற முடியும்.  நிஜ வாழ்க்கையில் எந்தப் பிராணியையும் வதைப்பது அறத்திற்குப் புறம்பானது என்று கூறுங்கள். &lt;br /&gt;சில மாதங்களுக்கு முன் சிங்கை தமிழ் முரசு ஆசிரியர் ஒரு பொது இடத்தில் பூனையை சிறுவர்கள் அடித்து இம்சைப் படுத்துவதைக் கண்டும் அவர்தம் பெற்றோர் கண்டிக்கவில்லையே என்று 'நமக்குள்ளே'யில்  வருத்தப்பட்டிருந்தார்.&lt;br /&gt;நகைச்சுவை என்ற போர்வையில் சில கேலிச்சித்திரங்கள் வன்முறையைக் கற்பிக்கின்றன.  மனிதநேயம், மனிதாபிமானம் முதலியவற்றிற்குச் சவால் விடும் நகைக்ச்சுவையை நாம் ஆதரிக்கலாமா?&lt;br /&gt;அதனால் குழந்தைகள் பார்க்கும் கேலிச்சித்திரங்களைக்கூட தேர்ந்தெடுத்துதான் அவர்களைப் பார்க்கச் செய்யவேண்டும் என்று தோன்றுகிறது  அதனால்தான் அவர்கள் என்ன பார்க்கிறார்கள் என்பதையும் நாம் அறிந்தால்தான் அவர்களை நல்ல முறையில் நாம் வழிகாட்ட இயலும்.&lt;br /&gt;திரையில் காட்சிகளாகப் பார்ப்பவை மனதில் எளிதில் பதிந்துவிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;இது குறித்து உங்கள் கருத்து?&lt;br /&gt;&lt;br /&gt;சிங்கை தமிழ்முரசு 2001&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-2081536980310232837?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/2081536980310232837/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=2081536980310232837' title='5 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2081536980310232837'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/2081536980310232837'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2007/06/blog-post.html' title='வரவேற்பறையில் ஒரு நிரந்தர பூதம்'/><author><name>மாதங்கி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>5</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-117378304889312324</id><published>2007-03-13T04:44:00.000-07:00</published><updated>2007-03-13T07:32:50.750-07:00</updated><title type='text'>விடையென்ன எண்ணி விளி</title><content type='html'>&lt;strong&gt;விடுகதை வெண்பா&lt;/strong&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;மூன்றெழுத்துச் சொல்லின் முதலிரண்டு கற்கியாம்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;ஆன்றநடு நீங்கிடின்  ஆதானே  -- சான்றோர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;கடையிரண்டு நீங்கின் கடுங்காற்று என்பர்&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="color:#000099;"&gt;விடையென்ன எண்ணி விளி&lt;/span&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-117378304889312324?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/117378304889312324/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=117378304889312324' title='3 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/117378304889312324'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/117378304889312324'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2007/03/blog-post.html' title='விடையென்ன எண்ணி விளி'/><author><name>மாதங்கி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>3</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-116929152033091203</id><published>2007-01-20T02:33:00.000-08:00</published><updated>2007-02-11T17:32:44.393-08:00</updated><title type='text'>எழுதாத உன் கவிதை</title><content type='html'>&lt;span style="color:#009900;"&gt; &lt;/span&gt;&lt;span style="color:#333333;"&gt;(தமிழீழப் பெண்களின் கவிதைகள்&lt;/span&gt;)&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுதுங்களேன் - நான்&lt;br /&gt;எழுதாது செல்லும்&lt;br /&gt;என் கவிதையை&lt;br /&gt;எழுதுங்களேன்&lt;br /&gt;&lt;br /&gt;எராளம்... ஏராளம்&lt;br /&gt;எண்ணங்களை - எழுத&lt;br /&gt;எழுந்துவர முடியவில்லை&lt;br /&gt;எல்லையில்&lt;br /&gt;என் துப்பாக்கி&lt;br /&gt;எழுந்து நிற்பதால்&lt;br /&gt;எழுந்துவர என்னால்&lt;br /&gt;முடியவில்லை&lt;br /&gt;எனவே&lt;br /&gt;எழுதாத என் கவிதையை&lt;br /&gt;எழுதுங்களேன்!&lt;br /&gt;&lt;br /&gt;கப்டன் வானதியின் இந்தக்    கவிதையைப் பின் அட்டையில் படித்த எவரும் தமிழீழப் பெண்களின் இந்தக் கவிதைத் தொகுப்பைப் படிக்காமல் இருப்பது கடினம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கேப்டன் வானதியின் இந்தக் கவிதை கிரியாஊக்கியாகச் செயல்பட்டு, போரினிடையே கவிஞர் நாதினிக்கு எழுச்சியூட்டி 'எங்கள் கைக்கு வந்த பேனாவுக்கு இனி ஓய்வே இல்லை' என்ற வேகத்தை அவருக்கும் இந்த வரிகளை வாசிப்பவருக்கு அந்த உணர்வையும்&lt;br /&gt;கொடுக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அலையிசையின் 'புரிதல்' கவிதை போரைப் பற்றிய கவிதை, பெண்களின் அந்தரங்க மௌனக்குமுறல் என்ற நிலைகளையெல்லாம் தாண்டி ஒரு புதிய தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்கிறது என்ற உணர்வு இந்த வரிகளைப் படிக்கும் போது ஏற்படுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கரிய இருட் போர்வையால்/புவி போர்த்தப் பட்டிருக்க/இரையும்/  உயிரினங்களின் /சலனங்கள் ஒடுங்கி/நிசப்தமாகும் புவி மேற்பரப்பின்/வெற்றுக்கோதாக நான்/................   சன்னதம் கொண்ட /ஊழிக்காற்றால் /சுடர் அணைய /செத்தைக் கதவை நீக்கிப் பார்க்கிறேன்/ தண்ணொளி பரப்பி/மதி கடலில் இருந்து/எழுந்து&lt;br /&gt;வருகிறது/&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதுமையான ஒரு பரிமாணத்தைக் காட்டுகிறது.  இந்தத்&lt;br /&gt;தொகுப்பிலுள்ள மிகச் சிறந்த கவிதைகளில் புரிதல் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செந்தணலின் எப்போது விடியும் என் இரவு மிக மிக நேரடியான ஒரு கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; நட்சத்திரங்களை வீட்டினுள்/ இருந்தவாறே எண்ணவல்ல - /மாற்றா முடியா வறுமையும்......,/ சிலுவை சுமப்பது நான் மட்டுமல்ல/   ஆணியிலறையப்பட்டுள்ள என் உணர்வுகளும்தான்/ ,...&lt;br /&gt;&lt;br /&gt; விடியலுக்காக  காத்திருக்கும் உடல், உணர்வு, மனம், பொருளாதாரம் என பன்முகத்தாக்குதல்களுக்கு ஆளாகும் பெண் இலைத்துளிர்களில் பட்டுத்  தெரிக்கும் பனித்துளிகளுடன்  முரண்படும் தன் ஆறாத&lt;br /&gt;பெருந்தணலின் தீய்க்கும் வெப்பத்தை சித்தரிக்கும் கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நான் பறக்கத் துடிக்கிறேன்... ஒடுக்குமுறைகள் என் குரல்வளையை நெரிக்கின்றன, அடக்கு முறைக்கு ஆளான பெண்களின் குமுறல் ஆண்களின் வன்முறைக்கு ஆளான பெண்களின் துயரம், உடலையும் உள்ளத்தையும் மீகாயப்படுத்தினாலும்&lt;br /&gt;&lt;br /&gt;'என்னுள் முகை கொண்டுள்ள/&lt;br /&gt;அசைக்கவியலாத ஒளி பொருந்திய / நம்பிக்கை மீது&lt;br /&gt;மட்டும்/ஆணியறைந்திட/எவற்றாலும் முடியவில்லை,&lt;br /&gt;&lt;br /&gt; சிதைந்த உடலுள்&lt;br /&gt;நீறு பூத்த நெருப்பாய் உள்ள நம்பிக்கை கனலாய் இருப்பதை எதுவும்&lt;br /&gt;தடுக்க முடியாது என்ற உறுதி இந்த சூழ்நிலையிலும் முகிழ்கிறது&lt;br /&gt;'நம்பிக்கை ஒளி'யில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சீரஞ்சீவியின் உயிர்க்கூடொன்றில் உறுதியாய் ஒரு வீடு .&lt;br /&gt;&lt;br /&gt;இக்காலக்கட்டத்தில் அமைதியான குடும்பவாழ்க்கைக்கூட கனவு காணவேண்டிய பெண், கட்டாக்காலிகளுக்கு களமாக இருந்த அவள்  நிலத்தில் அவள் எழுப்பிய கற்பனை வீடு அவள் மனதின்  ஏக்கத்தையும் எல்லோர் நலம்விரும்பும் அவள் கனவையும் மட்டும்   காட்டாமல், பின்னொரு நாளில் வீடு அன்னியரின் கணைகளால்  துளைக்கப்பட்டபோதும் அங்கமிழந்த அவள் காக்கும் பணியில்  தன்னை ஈடுபடுத்திக்கொள்கிறாள். &lt;br /&gt;&lt;br /&gt;சன்னமான உணர்ச்சிகளையும்,   அழகியலுடன் இயைந்த வாழ்வையும் தேடும் சீரஞ்சீவியின் இக்கவிதை&lt;br /&gt;ஈழப்பெண்களின் நிலையைப் பிரதிபலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நாளையும் நான் வாழ வேண்டும்' அம்புலியின் கவிதை சிலவரிகளே   இருந்தாலும் ஈழப்பெண் போராளிகளின் நட்பு, பொறுப்புணர்வு  ஆகியவற்றை நேர்மறை சிந்தனையுடன் கூறுகிறது .&lt;br /&gt;&lt;br /&gt; என் தோழியின்  காவலுக்கு/என்னிழப்பு காரணமாயிருக்கக் கூடாது/நாளையும் நான் வாழ வேண்டும் என்று முடியும்போது மனதை என்னவோ செய்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்புலியின் 'தேடி அடைவாய்' போர்க்கால நிகழ்வுகள் அழுத்த, தன் வசந்த காலத்தையும், வாழ்வில் இனிமையையும் துப்பாக்கிச்  சத்தங்களுக்கிடையில் பிள்ளைக்கு எப்படித்தர இயலும், புதிய வாழ்வு&lt;br /&gt;உன் கரங்களில் பிறக்கட்டும், தாய்மையின் வேதனைக்குரலிலும்  நம்பிக்கை ஒளிர்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அ. காந்தாவின் 'எந்த மகனுக்காய் என் கால்களை நகர்த்த' கவிதை  படிக்கையில் மனம் அதிர்ந்து போகிறது.&lt;br /&gt;சுதாமதியின் 'போரின் நாட்கள்' தாய்மை உணர்வு பொங்கும் மிக மிக மென்மையான ஒரு கவிதை.&lt;br /&gt;&lt;br /&gt;கப்டன் ஜனார்த்தனியின் துப்பாக்கி, நகுலாவின் 'பெயரிடாத நட்சத்திரங்கள்' மிக நேரடியான கவிதைகள்.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;க. கனிமொழியின்  கவிதை,  முன்னே&lt;br /&gt;போனவர்/நினைவழுத்த/பரபரக்க/ அலைகளின் நடுவே/எதிரியைத் தேடி /அவள்,.....&lt;br /&gt;&lt;br /&gt; ஒரு போராளியின் திசையும் நிகழ்வுகளையும்&lt;br /&gt;வரிசையாகக் குறிப்பிட்டுக்கொண்டே கவிதை  வருகையில் ,  சீறும் அலைகளின்/ சிநேகிதம் தொடரும்/ ஆயினும் ஓர் நாள்/   அதிர்வொன்றோடு/சிநேகிதம் முடியும் என்னும்போது படிப்பவரிடம்  தாக்கத்தை உருவாக்குகிறது.&lt;br /&gt;உமாவின் மெழுகுவர்த்தி ஈழப்போரில்  ஈடுபடுத்திக்கொண்டு வண்ணக் கனவுகளைச் சிதைத்துக் கொண்ட ஒரு சிட்டுக்குருவியின் கதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பாரதி கண்ட புதுமைப்பெண்ணாய் ரௌத்திரம் பழகி பகைவனால்   சிறைவைக்கப்பட்ட போதும் சிறிதும் ரகசியங்களை வெளிவிடாது  உருகிய மெழுகுவர்த்தியாக புதிய குருவிகளுக்கு பாதை&lt;br /&gt;காட்டிக்கொண்டிருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எளிமையாகத் தோன்றும் இக்கவிதையில்&lt;br /&gt;சிட்டுக்குருவிக்கு ஆலம்விருட்சத்தின் பலம் இருப்பது ஒரு இறகின்  வருடலாகச் சொல்லப்பட்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மலைமகளின் 'அவள் ஒன்றுக்கும் அசையாள்' 'அம்மா' பெண்களின்  வேதனைக்குரல் மரத்துப் போய்விடாமல், உரமேறி உறுதியாய்  மாற்றுகிறது நம்பிக்கையூட்டும் சிந்தனைக்கோலங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt; இவரின்   'நேசராச்சியம்' கவிதை எத்தகைய சூழலில் எழுந்தது என்பதை  நினைக்கையில் வியக்காமல் இருக்க முடியவில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;செல்வியின் 'தாயகமே தீயெடு' தமிழனுக்கு எழுச்சியூட்டும் குரலாய்  ஒலிக்கிறது.  கி.கிருபாவின் 'உயிர்ப்பு' குறைந்த வரிகளில்  நெழ்ச்சியூட்டும் வரிகள் கொண்டது.&lt;br /&gt;&lt;br /&gt;செ.புரட்சிகாவின் 'உன் கரத்தை  உயர்த்தி எழு' மற்றும் 'ஓயாத அலை மூன்றில்' நேரடியான கவிதைகள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரியநிலாவின் 'காலங்களற்ற கடல் ' இத்தொகுப்பிலுள்ள மிகச்சிறந்த கவிதைகளில் ஒன்று . &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவு அமையானது/... எல்லோரும் சொல்கின்றார்கள் என்பதனால், என்று  அமைதியான குளத்தில்&lt;br /&gt;கல்லெறிந்தாற்போல் துவங்கும் கவிதை இரவே இல்லாதவர்களின்  வாழ்வைக் கூறுகையில் நாமும் உடன் பயணிக்கிறோம்,   வேட்டையாடுவதையும் வேட்டையாடப்படுவதையும் பார்க்கிறோம்,&lt;br /&gt;பயணிக்கிறோம், ...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது இரவு அமைதியானது/.. கடல் அடிக்கும் ஓசை/&lt;br /&gt;காதுகளுக்கு எட்டாத தூரம் இருக்கலாம்/ஆயினும் பூமிப்பந்தின்  பெரும் பகுதி /நீரால் நிறைந்திருக்கின்றது என்பது உண்மை என்று  கவிதை நிறைவுறும்போது&lt;br /&gt;&lt;br /&gt; நம் மனம் இரவே இல்லாதவர்களின்&lt;br /&gt;வாழ்விலிருந்து இன்னும் விடுபடவில்லை என்று உணர்கிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;அதுவே இந்தக் கவிதையின் வெற்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சூரியநிலாவின் 'தீயினால் தீயை' மிக நேரடியான ஒரு கவிதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'மழைக்காலங்கள்' என்ற கவிதையில், மழை வெறுக்கத்தக்கதாகவே இருக்கின்றது/ எனினும்/ மழையை எவரும் வெறுப்பதில்லை என்ற  வரிகள் பளிச்சிடுகின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;மழையை நாங்களும் ரசிக்கக்கூடும், அது எப்போது என்று&lt;br /&gt;கூறும்போது சூரியநிலாவின் விசாலமான மனம் புலனாகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ம. வாசகியின் காலக்கணக்கு கவிதை புதியதொரு உத்தியில்  எழுதப்பட்டிருக்கிறது ஆர்வமூட்டுகிறது.  காலமும் பெண்ணும் நடத்தும் கலந்துரையாடல் மிகவும் சுவாரசியமாக உள்ளது. இது  போன்ற கவிதைகள் இது போன்ற சூழலில்தான் பிறக்குமோ என்று&lt;br /&gt;எண்ணத்தோன்றுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூயவளின் 'விடைபெறுதல் இல்லாத பிரிவுகள்' நட்புக்காக மலர்ந்த  கவிதை.  மிக எளிய வரிகளில் சிந்தனையைத் தூண்டுகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்க்கவியின் 'வல்லவன் துணைவி' வான் நிலாவின் 'இருள்விலகும்',  தமிழவளின் 'வையகமே காத்திரு' எளிய வரிகளில் சொல்லப்பட்ட  கவிதைகள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சண்முகநாதன் கலைமகளின் 'பயணம் தொடர்கிறது' கவிதையில் நேற்று  உன்னைப் போல்/இன்று உன்னருகில் நான்/ பயணத்தின் பாதையைப்   பற்றித் தெரிந்திருந்தும்வலுவான இதயத்துடனும், கந்தகச் சுமையை   கட்டியணைத்தபடி புறப்படும் பெண்ணின் குரல் நம் காதுகளில்   ஒலிக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கப்டன் ஞானமதியின் 'சமர்ப்பணம்' பயணம் இலக்கை அடையும்  என்ற நம்பிக்கை தொனிக்க எழுதி இறுதியில் நமக்கு ஒரு கேள்வியை  முன் வைக்கிறார்.  இதற்கு விடை என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;கனிமொழி பேரின்பராசாவின் 'உனது பெயர் புதுமைப் பெண்'   கவிதையைப் படிக்கையில் ஈழப்பெண்கள் வீரப்பெண்களாய்   உருமாறுவதும் உயருவதும் நிதானமாகக் காட்டப்படுவதை உணர  முடிகிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆதிலட்சுமி சிவகுமாரின் 'ஊழியின் முடிவு'&lt;br /&gt;கலவரம், போர் வெடிக்கும்போது எந்த நாடாக இருந்தாலும் &lt;br /&gt;பெண்கள் மீது பாலியல் வன்முறை நடத்துவது மனித இனத்துக்கு வழக்கமாகிவிட்டது.  what a shame to mankind. பாதிக்கப்பட்டவரின் குரல் செவிப்பறையைக் கிழிக்கும் போது மரத்துப்போனதாய் பாவனை  காட்டமுடியாமல் தவிக்கும் தவிப்பும், அந்த பேய்கள் தின்னும்போது&lt;br /&gt;பெண்ணின் கூக்குரலும்,... வார்த்தைகளால் சொல்லமுடியாத கொடூரம்  அரங்கேறி வரும் காலமிது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தொகுப்பில் கடைசிக்கவிதையாக கப்டன் மனோவின்' கனவல்ல தமிழீழம் நாளை நம் நாடு' அமைந்திருப்பது நல்ல தேர்வு; நல்லதொரு பொழுது ஈழத்திற்கு விடியும்' என்று நேர்மறையாக நம்புகிறது  இக்கவிதை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமீழப்பெண்களின் கவிதைகள்  நேரடியாக அப்பெண்களின் குரல்கள்  பேனாவினால் பதிவு செய்யப்பட்டு நம்மை நோக்கி வருகையில்  சொல்லொண்ணா வேதனை அனுபவித்து, தோழியாய், தாயாய்,  மகளாய், மனைவியாய், சகோதரியாய், தலைவியாய், வெவ்வேறு சூழ்நிலையில் வெவ்வேறு உருக்கொண்டாலும் வீரயுகப் பெண்ணாய்&lt;br /&gt;மலர்ந்திருப்பதையும்  காணமுடிகிறது.  வீரத்திலும் விவேகம்  பொங்கும், நம்பிக்கை ஒளிரும் இவர்களின் குரல்தான் இந்த தமிழீழப்  பெண்களின் கவிதைத் தொகுப்பு. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் குமுறல்கள், வீரம், எழுச்சி, போருக்கு இடையே வாழ்வது, வாழ்வே போராகிப் போனது என்ற செய்திகள் இயல்பாகச்  சொல்லப்பட்டிருந்தாலும், இதில் அழகியல் கூறுகள் இருக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புதிய உத்தி காணப்படுகிறது. &lt;br /&gt;குறிப்பாக 'புரிதல்' 'காலங்களற்ற கடல்' கவிதைகள் சொல்லப்பட்ட   விதமும் அதன் வரிகள் நவீனக்கவிதையின் அடையாளங்கள்&lt;br /&gt;கொண்டுள்ளதை நாம் அறிகிறோம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்களின் போராட்டங்கள், போர்க்காலச் சூழல் இவற்றையும்    தாண்டி அழகியல் கூறுகள், புதிய உத்தி, புதிய பரிமாணங்களைக் காட்டுதல்   முதலியவற்றைக் கொண்டதாகவும்  செயற்கைத்தனம் என்பது&lt;br /&gt;குன்றிமணியளவு கூட இல்லாமல் நிஜத்தின் குரல்கள் இவை என்பதை   மறுக்க முடியாது.  &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புத்தகத்தின் பெயர்: எழுதாத உன் கவிதை(தமிழீழப் பெண்களின் கவிதைகள்)&lt;br /&gt;முதல் பதிப்பு 2001 ஆவணி&lt;br /&gt;கப்டன் வானதி வெளியீடு-01அச்சமைப்பு சந்திரன் பதிப்பகம்புதுக்குடியிருப்புஅட்டையமைப்ப்அந்திவானம் பதிப்பகம்புதுக்குடியிருப்பு&lt;br /&gt;கப்டன் வானதி வெளியீட்டகம்அரசியல்துறை மகளிர்தமிழீழம்விலை உரூபா 125&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/17566523-116929152033091203?l=clickmathangi.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='replies' type='application/atom+xml' href='http://clickmathangi.blogspot.com/feeds/116929152033091203/comments/default' title='Post Comments'/><link rel='replies' type='text/html' href='http://www.blogger.com/comment.g?blogID=17566523&amp;postID=116929152033091203' title='1 Comments'/><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/116929152033091203'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/17566523/posts/default/116929152033091203'/><link rel='alternate' type='text/html' href='http://clickmathangi.blogspot.com/2007/01/blog-post.html' title='எழுதாத உன் கவிதை'/><author><name>மாதங்கி</name><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><thr:total>1</thr:total></entry><entry><id>tag:blogger.com,1999:blog-17566523.post-116553703072297230</id><published>2006-12-07T16:12:00.000-08:00</published><updated>2007-03-04T01:55:51.080-08:00</updated><title type='text'>நான் மிகவும் அதிர்ஷ்டசாலி</title><content type='html'>&lt;span style="color:#990000;"&gt;&lt;em&gt;உற்சாகம் க
